|
Post by kgopalan90 on Dec 15, 2018 13:48:11 GMT 5.5
கார்த்திகை மாதத்தில் ஏற்ற வேண்டிய தீபங்கள் -பலன்கள்.
27 தீபங்களும்அதன் பயன்களும்
தீபஜோதியே நமோ நம :
சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன சம்பதா சத்புத்தி ப்ரகாசாய தீபஜ்யோதிர் நமோநம:
தீபம் ஏற்றுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை பெருகும் எனச் சொல்கிறது மேற்காணும் ஸ்லோகம்.
நம் பாரதத்தின் ஆன்மிகக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது தீபவழிபாடு. விரிவான வழிபாடுகள் தெரியவில்லை என்றாலும், காலை-மாலை இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றிவைத்து, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் ஸித்திக்கும் என்கின்றன ஞான நூல்கள். அப்படியான தீபத்தைச் சிறப்பிக்கும் மாதம்தான் திருக்கார்த்திகை. இந்த மாதத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது அவ்வளவு விசேஷம்.
தினமும்27விளக்குகள்...
கார்த்திகை மாதத்தில், நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டுமாம். அவை எந்தெந்த இடங்கள், எந்தெந்த இடங்களில் எத்தனை தீபங்கள் ஏற்றுவது? என்பது குறித்து விரிவாக அறிவோமா
· கோலமிடப்பட்ட_வாசலில்: ஐந்து விளக்குகள் · திண்ணைகளில்: நான்கு விளக்குகள் · மாடக்குழிகளில்: இரண்டு விளக்குகள் · நிலைப்படியில்: இரண்டு விளக்குகள் · நடைகளில்: இரண்டு விளக்குகள் · முற்றத்தில்: நான்கு விளக்குகள்
இந்த இடங்களில் எல்லாம் தீபங்கள் ஏற்றிவைப்பதால், நமது இல்லம் லட்சுமி கடாட்சத்தை வரவேற்கத் தயாராகி விடும்; தீய சக்திகள் விலகியோடும்.
· பூஜையறையில்: இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றிவைக்கவேண்டும். இதனால் சர்வமங்கலங்களும் உண்டாகும். · சமையல்_அறையில்: ஒரு விளக்கு; அன்ன தோஷம் ஏற்படாது. · தோட்டம்முதலானவெளிப்பகுதிகளில்: யம தீபம் ஏற்றவேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும். · பின்கட்டு_பகுதியில்:நான்கு விளக்குகளை ஏற்றிவைக்க விஷ ஜந்துக்கள் அணுகாது. ஆனால், அபார்ட்மென்ட் மற்றும் மாடி வீடுகள் அதிகம் உள்ள தற்காலத்தில், மேற்சொன்ன முறைப்படி விளக்கு ஏற்ற முடியாது ஆகையால், வசதிக்கு ஏற்ப வீட்டுக்குள்ளேயும் வெளியிலுமாக 27 விளக்குகளை ஏற்றிவைத்து பலன் பெறலாம்.
தீபத்தின்_வகைகள்
தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் `தீபலட்சுமியே நமோ நம' என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தை பலவகையாகச் சொல்லி விளக்குகின்றன ஞானநூல்கள். அவற்றில் சில...
· சித்ர_தீபம்: தரையில் வண்ணப் பொடி களால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபங்கள். · மாலா_தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படுவது. · ஆகாச_தீபம்: வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படுவது, ஆகாச தீபமாகும்.
கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், யம பயம் நீங்கும். · ஜல_தீபம்: நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபங்கள் ஜல தீபம் ஆகும்.
· நௌகா (படகு) தீபம்: கங்கை கரையோரங்களில் வாழும் மக்கள், புண்ணிய யாத் திரையாக கங்கைதீரத்துக்குச் செல்பவர் கள், கங்கை நதிக்கு மாலைவேளையில் ஆரத்தி செய்து, வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்து, அதை கங்கையில் மிதக்கவிடுவர். படகு போன்ற வடிவங் களில் தீபங்கள் தயார் செய்தும் மிதக்க விடுவார்கள். இவற்றையே நெளகா தீபங் கள் என்று அழைப்பர். சம்ஸ்கிருதத்தில் `நௌகா' என்றால் `படகு' எனப் பொருள்.
· சர்வ_தீபம்: வீட்டின் அனைத்து பாகங் களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகும். · மோட்ச_தீபம்: முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, ஆலய கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படுவது.
· சர்வாலய_தீபம்: கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலைவேளையில் சிவாலயங்களில் ஏற்றப்படுவது. அதாவது, பனை ஓலை களால் கூடுபோல் பெரிதாகச் செய்து, அதற்கு பூஜை செய்து தீபாராதனை காட்டி, கற்பூரத்தின் ஜோதியை அதில் ஏற்றுவது, சர்வாலய தீபம் ஆகும்.
· அகண்ட_தீபம்: மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம்.திருவண்ணாமலை, பழநிமலை, திருப் பரங்குன்றம் முதலான திருத்தலங்களில், அகண்ட தீபத்தைத் தரிசிக்கலாம்.
· லட்ச_தீபம்:ஒரு லட்சம் விளக்குகளால் ஆலயத்தை அலங்கரிப்பது லட்சதீபமாகும். திருமயிலை, திருக்கழுக்குன்றம் (12 ஆண்டுகளுக்கு ஒருமுறை) முதலான பல ஆலயங்களில் லட்சதீபம் ஏற்றுவது உண்டு.
· மாவிளக்கு_தீபம்:அம்மன் ஆலயங்களில் நோய் தீர வேண்டிக்கொண்டு மாவிளக்கு ஏற்றுவார்கள். அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டை யாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரி போட்டு ஏற்றுவது மாவிளக்கு ஆகும்.
· விருட்ச_தீபம்: ஒரு மரத்தைப்போன்று கிளைகளுடன் அடுக்கடுக்காக அமைக்கப் படும் தீப ஸ்தம்பங்களில் விளக்கேற்றும்போது, விருட்சத்தைப் போன்று காட்சித் தரும்.சிதம்பரம், திருவண்ணாமலை, குருவாயூர் ஆலயங்களில் விருட்ச தீபத்தைக் காணலாம்.
காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு கச்சபேஸ்வரர் ஆலயத்தில், கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை களில், இவ்வகை தீபத்தை தலையில் வைத்துக்கொண்டு ஆலயத்தை வலம் வந்து வழிபடும் வழக்கம் உண்டு. இதை, `#மண்டை_விளக்கு பிரார்த்தனை' என்கிறார்கள்.
|
|
|
Post by kgopalan90 on Dec 13, 2018 16:12:25 GMT 5.5
தனுர் மாத பூஜை. 17-12-2018 முதல் 14-01-2019 வரை.
தேவர்களுக்கு தக்ஷிணாயனம் இரவு நேரம். உத்தராயணம் பகல் நேரம். . மார்கழி மாதம் விடியற்காலை போது தேவர்களுக்கு.. இந்த விடியற்காலையில் மஹா விஷ்ணுவை எழுப்பி 16 உபசாரம் பூஜை செய்து பொங்கல் படைத்து தினந்தோறும் மிகுந்த பக்தியுடன்
சூரிய உதயத்திற்கு முந்தி ஆராதித்து வருவதால் விஷ்ணு பதவியை பெறுகிறான். இம்மாதத்தில் சிவ பூஜையும் சிறந்ததாகும்.
மார்கழி மாதத்தில் திருவாதிரை நக்ஷத்திரதன்று சிவனையும் வழிபடுகின்றோம்.
மார்கழி மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி வைகுண்ட ஏகாதசி..இன்று வேத பாராயணத்துடன் விஷ்ணுவிற்கு உத்ஸவம் செய்ய வேண்டும் . திருவோணம், ஏகாதசி, அமாவாசை, பெளர்ணமி. ஜன்ம நக்ஷத்திரம், மாச நக்ஷத்திரம், ஹரி தினங்களிலும், பக்தர்கள் வரும் போதும் துர்நிமித்தம், , துஸ் ஸ்வப்னம், மஹாபயம் வரும் போதும் மஹா விஷ்ணுவை ஆராதிக்க வேண்டும்.
விஷ்ணு பூஜையை விட வேறு விசேஷ வைதீக கர்மாவே கிடையாது. விஷ்ணு ஸூக்தம், புருஷ ஸுக்தத்தை விட வேறு சிறந்த வேத மந்திரம் கிடையாது. ஆகையால் திருமாலை தினந்தோறும் ஆராதிக்க வேண்டும். இதில் அஷ்டாக்ஷரம் பிரதியுப சாரத்திற்கும் உபசார மந்திரமாகும்.
திருமாலை பூஜித்து நமஸ்கரித்து ஆத்ம நிவேதனம் பண்ண தகுந்ததாகும்..
பஞ்சாக்ஷர மந்திரத்தால் பரமேஸ்வரனை ருத்திர மந்திரத்தோடு விஷ்ணு பூஜையில் சொல்லப்பட்டது போல் செய்ய வேண்டியது.
பூமியை பசுஞ் சாணத்தால் மெழுகி முன்னே ப்ரும, விஷ்ணு, சிவலிங்கத்தையும் , தெற்கில் கணபதி, சுப்பிரமணியரும், மேற்கில் சூலமும், வடக்கில் நந்திகேஸ்வரரையும், ஸ்தாபித்து, அர்க்கியம், பாத்யம் கொடுத்து நிர்மால்யத்தை நீக்கி வடக்கே சண்டிகேசுவரரிடம் சேர்ப்பித்து
அதன் பிறகு ஸ்நானம், , அலங்காரம், வஸ்த்ரம், தூப தீப நைவேத்ய உபசாரங்கள் எல்லா தேவதைகளுக்கும் செய்து மந்திர புஷ்பம், ஸ்தோத்ரம் ,மற்ற உபசாரங்கள் செய்ய வேண்டியது.. இப்படி செய்வது இஹ பர ங் களுக்கு நன்மை உண்டாகும்..
சிவ லிங்கத்தை தரிசிப்பதே புண்யமானது. . ஸ்பர்சம், அர்ச்சனம், த்யானம் இதை விட ஒவ்வொன்றும் மேலானது. நூறு முறை பாலாபிஷேகமும், இருபத்தைந்து முறை எண்ணைய் அபிஷேகமும் பழ ரஸங்களால் ஆயிரம் முறை அபிஷேகம் செய்வது மஹா அபிஷேகம் எனப்பெயர்.
வாஸனை சந்தன அபிசேகத்திற்கு கந்தர்வ லோகமும்,, பன்னீர் அபிஷேகத்திற்கு குபேர லோகமும் ,பஞ்சாம்ருத அபிஷேகத்திற்கு முக்தியும் பலனாகும்.
புதிய பட்டு வஸ்த்ரங்களையும். , மூன்று இழையுள்ள தாமரை நூல்களால் இயற்றப்பட்ட பூணலையும்,சாற்றுகிறவன் வேதாந்தத்தின் கரையை காண்பான் .வாசனை சந்தனம் லேபனம் செய்பவன் அநேக கோடி வருஷங்கள் சிவ லோகத்தில் வசிப்பான் .நெய் தீபம் ஏற்ற வேண்டும். அகிற்புகை யூட்டுபவர் யம வாதனை பட மாட்டார்கள்.
பாத்திரத்தில் எவ்வளவு அன்னம் நிவேதிக்க படுகிறதோ அவ்வளவு ஆயிரம் யுகங்கள் ஸ்வர்கத்தில் ஆனந்தம் அநுபவிப்பர். வரகு, கேழ்வரகு, (ராகி) சுரைகள் உதவாது. தாழை, குருக்கத்தி, குருந்தை,, மா, முல்லை பூக்கள் சிவபூஜைக்கு ஆகாது.
விநாயகர், சூரியன், விஷ்ணு , சிவலிங்கம், அம்பாள் இந்த ஐவரையும் பூஜிப்பவர்,, சூரிய மண்டலத்திலோ, ஹிருதயத்திலோ , ஒரு மேடையிலோ, பிம்பத்திலோ பூஜிக்க வேண்டியது. கிழக்கு முகமான தேவனை, வடக்கு முகமாயிருந்து பூஜிக்க வேண்டும்.
பூஜை அறையில் சென்று நமஸ்கரித்து ஒரு தடுக்கு மேல் அமர்ந்து சுக்லாம்பரதரம், ப்ராணாயாமம், சங்கல்பம் செய்து பாத்திரத்திலும், சங்கிலும் நீர் நிரப்பி. புஷ்பாக்ஷதைகள் போட்டு காயத்ரி மந்திரத்தால் அபிமந்திரித்து தீர்தங்களை ஆவாஹனம் பண்ணி ஆப்போஹி என்ற மந்திரத்தால் தன்னையும், பூஜா அறை; பூஜா த்ரவ்யங்களையும் ப்ரோக்ஷித்து 16 உபசார பூஜை செய்ய வேண்டியது.
பதார்தங்கள் குறைவாய் இருந்தாலும் மனதினால் அதிகமாக் இருப்பதாய் த்யானம் செய்து கொள்ள வேண்டியது. கடைசியில் நமஸ்கரித்து அபராத மன்னிப்பு கேட்க வேண்டியது. இப்படி செய்வதால் ஸர்வாபிஷ்டங்களையும் பெறுவான்..
பூஜையில் நிவேதனம் ஆன அன்னத்தால் வைஸ்வ தேவம் செய்யக்கூடாது.
ஆசாரியனிடத்தில் மனிதன் என்ற புத்தி வரக்கூடாது.பிம்பத்தில் கல், தாமிரம், என்ற புத்தியும்,மந்திரத்தில் ஏதோ ஒரு சப்தம் என்கிற புத்தியும் வைப்பவன் ப்ருஹ்மஹத்தி செய்தவனாகிறான்.
குருவை அவமதிப்பதால் மரணத்தையும்,மந்திரத்தை தூஷிப்பதால் தாரித்ரத்தையும் அடைந்து நரகத்தில் அவதி படுவான் என பராசர, வசிஷ்டர் முதலியோர் கூறுகின்றனர்.
வைத்தினாத தீக்ஷிதீயம் ஆஹ்நீக கான்டம் பக்கம் 242 ல் தனுர் மாத பூஜையை அதிகாலையில் ஸ்நானம் செய்து சூர்ய உதயத்திற்கு முன் முடித்து வி ட வேண்டும் .சூர்ய உதயத்திற்கு பிறகு சந்தியாவந்தனம், ஜபம், ஒளபாசனம் செய்து விட்டு, தினசரி செய்யும் பூஜையை தனியாக செய்ய வேண்டும்.
ஆனால் சிலர் ஆசாரத்தில் விடியற்காலை தனுர் மாத பூஜையை அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை வரை நிறுத்திக்கொண்டு ஸந்தியாவந்தனம் காயத்ரி ஜபம் செய்து விட்டு, தூபம், தீபம், நிவேதனம், கற்பூர ஹாரத்தி முதலியன செய்து தனுர் மாத பூஜை .நித்ய பூஜை இரண்டும் சேர்த்து ஒரே பூஜையாக செய்கிறார்கள். இம்மாதிரியும் செய்யலாம்..
சூரிய உதயத்திலிருந்து தான் இன்றைய கணக்கு. சூரிய உதயத்திற்கு முன்பு நிவேதனம் செய்துவிட்டால் அது நேற்று செய்ததாக ஆகிவிடுகிறது. நேற்று செய்ததை இன்று ப்ரசாதமாக சாப்பிடுவது பழயது ஆகி விடுகிறது.
ஆதலால் சூரிய உதயத்திற்கு பிறகு வெண்பொங்கல் குக்கரில் தயாரித்து தூபம், தீபம், நைவேத்யம் கற்பூரம் காண்பித்து சாப்பிடுவதால் பழயது ஆன தோஷம் கிடையாது.
“உஷஹ்காலே து ஸம்ப்ராப்தே போதயித்வா ஜகத்பதிம் ஸமர்ப்யர்ச்சய பஜேத் விஷ்ணும் ஜகதாம் தோஷ சாந்தயே “என்ற தர்ம சாஸ்திர வாக்கியப்படி மார்கழி மாதம் விடியற்காலையில் மஹா விஷ்ணுவிற்கு, அபிஷேகம், அர்ச்சனை செய்து வெண் பொங்கல் படைத்து பூஜை செய்வதால்
அந்த கிராமத்திற்கும், அங்கு வசிக்கும் மக்களுக்கும், மற்ற ப்ராணிகளுக்கும் அனைத்து தோஷங்களும் விலகி நன்மை உண்டாகும். என்பதால் எல்லா கோயில்களிலும் மார்கழி மாதத்தில் மக்களின் நன்மை கருதி விடியற்காலையில் பூஜை செய்ய படுகிறது.
ஆதலால் விடியற்காலையில் எழுந்திருந்து இதயத்தில் பிள்ளையார், சூரியன் விஷ்ணு, சிவன், அம்பாள் ஐவரையும் 16 உபசாரங்களால் மானசீக பூஜை செய்து பலன் பெறலாமே.. ,
|
|
|
Post by kgopalan90 on Dec 10, 2018 5:10:07 GMT 5.5
13-12-2018. மார்கசீர்ஷ சஷ்டி திதி சிவலிங்கம் தரிசனம் செய்ய வேண்டும் என்கிறது ஸ்ம்ருதி கெளஸ்துபம் பக்கம் 430.
மார்கசீர்ஷே (அ)மலே பக்ஷே சஷ்டியாம் வாரே (அ) ம்ஸு மாலின: சத தாரா கதே சந்த்ரே லிங்கம் ஸ்யாத் த்ருஷ்டி கோசரம்
மார்கசீர்ஷ மாத சுக்ல பக்ஷ சஷ்டி திதியன்று நூறு நக்ஷதிரங்கள் ஒன்றாக சேர்ந்ததால் சத தாரா என்ற பெயருடைய சதய நக்ஷத்திரத்தில் சிவாலயத்தில் முறையாக ப்ரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்க படும் சிவலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும்.
இதனால் குடும்பத்தில் முன்னோர் காலத்து நிகழ்ந்த சிவாபசார தோஷங்கள் நீங்கும். குடும்பத்திலுள்ளவர்களின் மனோ புத்தி தோஷங்கள் விலகும். மனநிம்மதி அறிவு திறன் வளரும்…
14-12-2018;- சூரிய வ்ருதம்.- மித்ர ஸப்தமி அல்லது நந்த ஸப்தமி..
மார்கசிர மாதம் சுக்ல பக்ஷ ஸப்தமி திதியில் தான் அதிதிக்கும் கச்யப மஹரிஷிக்கும் ஶ்ரீ ஸூர்யன் புத்ரனாக பிறந்தார். அதித்யாம் கச்யபாஜ் ஜக்ஞே மித்ரோ நாம திவாகர: ஸப்தம்யாம் தேந ஸாக்யாதா லோகேஸ்மின் மித்ர சப்தமி. ஸ்ம்ருதி கெளஸ்துபம்-பக்கம்-430.
பகல் முழுவதும் பூமிக்கு வெளிச்சம் கொடுப்பதால் திவாகரன் எனப்பெயர். அனைவருக்கும் நெருங்கிய நண்பனாவதால் மித்ரன் எனப்பெயர்.
இன்றைய தினம் பலவித புஷ்பங்களால் சூரியனை பூஜை செய்ய வேண்டும் சூரிய காயத்ரி, சூரிய நமஸ்காரம், ஆதித்ய ஹ்ருத்யம், கோளறு பதிகம். போன்ற ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்யலாம்.
“”நாநா குஸும ஸம்பாரைர் பக்ஷ்யை: பிஷ்டமயை: சுபை: மது நா ச ப்ரசஸ்தேந ---போஜயேத்….தீநாநாதாம்ஸ்ச மாநவான் என்பதாக ஸூர்யனின் ப்ரீதிக்காக மாவினால் நெய்யுடன் சேர்ந்து செய்யப்பட்ட பக்ஷணங்களை ஸூர்யனுக்கு தேனுடன் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு கொடுத்து சாப்பிட செய்து ஸந்தோஷிக்க செய்ய வேண்டும்.
இதனால் ஆரோக்கியம் பாஸ்கராதிச்சேத் என்பதாக தீராத அனைத்து நோய்களும் தீரும். ,ஆரோக்கியம், ஆயுஸும் ஏற்படும்.
|
|
|
Post by kgopalan90 on Dec 9, 2018 17:02:40 GMT 5.5
பவிஷ்யோத்திர புராணம்--பெளம சதுர்த்தி.
எந்த மாதத்தில் சுக்கில பட்ச சதுர்த்தி செவ்வாய் கிழமை யன்று வருகிறதோ அன்று இம்மாதிரி பூஜை செய்ய வேண்டும் எங்கிறது.11-12-2018.
இந்த விரதம் பெண்களுக்கு ஸெளபாக்கியம், உத்தமமான பேரழகு சுகம் ஆகியவைகளை கொடுக்கும். பகவான் பரமசிவன் பார்வதியுடன் இணைந்து பூமா தேவி மூலம் சிகப்பு வர்ணம் கொண்ட மங்கள சொரூபனை உற்பத்தி செய்தார்.
அதனால் அவன் பூமி குமாரன், குஜன், ரக்தன், விரன், அங்காரகன் என்ற பெயரில் உலகில் அழைக்கப்படுகிறான் .சரீரத்தில் அங்கங்களை பாதுகாப்பதால் அங்காரகன் என்றும் மங்களங்களை தருபவன் ஆதலால் மங்களன் என்றும் அழைக்கபடுகிறான்.
செவ்வாய் கிழமையுடன் கூடிய சுக்ல சதுர்த்தியில் ஆணோ அல்லது பெண்ணோ உபவாசத்துடன் கணேசரையும், அங்காரகனையும் சிவப்பு பூக்கள், சிகப்பு சந்தனம் ஆகியவைகளால் பூஜை செய்தால் சகல செளபாக்கி யங்க ளையும் பெறுவர்.
முதலில் குளித்து சங்கல்பம் செய்து கணேசரை மனதால் நினைத்து , கையிலே சுத்தமான மண்ணை எடுத்துக்கொண்டு மந்திரத்தை சொல்ல வேண்டும்..
இஹ த்வம் வந்திதா பூர்வம் கிருஷணோ னோத்தரதா கிலா தஸ்மான் மே தஹ பாப்மானம் யன்மயா பூர்வ சஞ்சிதம்..
அதன் பின் மண்ணை சுத்தமான ஜலத்துடன் கலந்து சூரியன் முன்னால் வைத்து கீழ் கண்ட மந்திரம் சொல்ல வேண்டும்.
த்வம் ஆபோ யோனி: சர்வேஷாம் தைத்ய தாவைத் யோகஸாம். ஸ்வேதாண்டஜோதபிதாம் சைவ ரஸானாம் பதாயே நம:
இதன் பிறகு குளிக்க வேன்டும். .பிறகு பவித்ரம் தரித்து வீட்டுக்குள் செல்ல வேண்டும். அதன் பின் அறுகம்புல் ,வன்னி இலை, அரசு இலை, மாவிலை போன்றவற்றை மந்திரம் உச்சரித்து சமர்பிக்க வேண்டும்.பிறகு பசுமாடு ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்.,
கோபி சந்தனம் அணிந்துகொண்டு சமித்துகளால் கொழுந்து விட்டெறியும் அக்னியில் பால், பார்லி, எள், போன்றவைகளால் செய்த பதார்த்தங்களை போட வேண்டும். அப்போது
அடியிற் கண்ட மந்திரத்தை சொல்லவும் .ஓம். சர்வாய ஸ்வாஹா; ததா ஓம் லோஹிதாங்காய ஸ்வாஹா என்ற ப்ரத்யேக மந்திரத்தை 108 தடவை சொல்லி ஆகுதி அளிக்க வேண்டும். .
பிறகு தங்கம் அல்லது வெள்ளி , சந்தனம் அல்லது தேவதாரு மரத்தினால் செவ்வாயின் மூர்த்தியை செய்து ஆவாஹனம் செய்ய வேண்டும். நெய்.குங்குமம் சிகப்பு சந்தனம், சிகப்பு புஷ்பம், நைவேத்யம் என்று வரிசையாக பூஜை செய்ய வேண்டும். பிறகு அக்னெள மூர்த்தெள என்று தொடங்கும் யஜுர் வேத மந்திரத்தை சொல்ல வேண்டும். பூஜை முடிந்த பிறகு செவ்வாயின்
மூர்த்தியை பிராமணருக்கு தானம் செய்ய வேண்டும். அத்துடன் அரிசி, வெல்லம், நெய், பால், கோதுமை ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும்.கருமிதனமாக இருக்க கூடாது.
நான்கு முறை பூஜை செய்தபின் ஒரு தூய்மையான சத்தான பிராமணருக்கு இந்த கணபதி, செவ்வாய் மூர்த்தியை தானம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் விரதம் பூர்த்தியானதாகும்.
அதன் பின் அந்த பக்தன் சந்திரனை விட சாந்தியாகவும், சூரியனை விட தேஜஸாகவும், வாயுவை விட பலவானாகவும் இருப்பான். கணபதி அருளால் நீண்ட ஆயுள் பெறுவான். மிகுந்த செல்வத்துடன் செல்வாக்குடன் இருப்பான்..
|
|
|
Post by kgopalan90 on Dec 8, 2018 15:50:25 GMT 5.5
11-12-=2018 பெளம சதுர்த்தி.
செவ்வாய் கிரஹத்திற்கு பெளமன் என்ற ஒரு பெயரும் உண்டு. செவ்வாய் கிழமையன்று சதுர்த்தி திதி வந்தால் அதற்கு பெளம சதுர்த்தி என்று பெயர்.
இன்று ஒரே படத்திலிருக்கும் முருகன், பிள்ளயார் படத்தினில் இவர்கள் இருவரையும் சேர்த்து 16 உபசார பூஜை செய்து கொழுக்கட்டையும் துவரம் பருப்பு சுண்டலும் நைவேத்யம் செய்து
ஸ்தோத்ரங்கள் சொல்லி பிரார்தித்து கொள்ளவேண்டும்.இதனால் கடன் கொடுத்தவர்கள் தொல்லை தீரும். தீராத கடனும் தீரும்.
|
|
|
Post by kgopalan90 on Dec 8, 2018 13:06:11 GMT 5.5
9-12-2018 கார்த்திகை கடைசி ஞாயிறு.
“”ஆஸீனம் அம்பிகாம் துர்காம் அபயங்கர ஷண்முகெள வாஸுதேவம் ச வாஞ்சேஸம் மங்களாக்யாம் நமாம்யஹம்”
அமர்ந்த நிலையில் உள்ள மங்களாம்பாளையும், அபய ஹஸ்த துர்கை யையும் ஆறுமுகத்தனையும், வஸுதேவனையும் வாஞ்சேஸ்வர ரையும் நமஸ்கரிக்கிரேன் என்கிறது இந்த ஸ்லோகம்.
நன்னிலம் அருகில் உள்ள ஶ்ரீ வாஞ்சியத்தில் கார்த்திகை கடை ஞாயிறு உத்ஸவம் குப்த கங்கையில் தீர்த்த்வாரியுடன் சிறப்பாக நடை பெறும்.
முக்தி தரும் க்ஷேத்ரம் ஶ்ரீ வாஞ்சியம்.. பித்ரு கர்மாக்கள் செய்ய காசி ராமேஸ்வரம் போல் சிறந்த க்ஷேத்ரம் ஶ்ரீ வாஞ்சியம்..
திந்திரிணி கெளரி வ்ரதம்:-- மார்க சீர்ஷ சுக்ல பக்ஷ துவிதீயை 9-12-2018.
திந்திரிணி என்றால் புளி. புளிய மரத்தின் அடியில் அம்பாளை பூஜிக்க வேண்டும். புளியஞ்சாதம் மற்றும் புளிப்பு பொருட்கள் அம்பாளுக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.
இதனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை ஏற்படும்..
கணவன் மனைவிக்குள் ஒற்றுமை, அன்பு, பாசம் ஏற்படவேண்டும் என்றால் பார்வதி என்னும் கெளரீயை பூஜிக்க வேன்டும் என்கிறது ஶ்ரீ பாகவதம்.கெளரி என்றால் வெண்மை அல்லது தூய்மை எனப்படும்.
ஜாதகத்தில் சுக்ரன் நீசமாக கன்னியா ராசியில் இருந்தாலோ அல்லது கெடுதலான இடங்களில் சுக்ரன் இருந்தாலோ காலத்தில் திருமணம் நடைபெறாது. திருமணம் ஆனவர்களுக்குள் கருத்து வேற்றுமை,
ஒற்றுமை யின்மை. பிரிவு போன்றவை ஏற்படலாம்.. தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவும், நோய்கள் நீங்கி ஆரோக்கியம் ஏற்படவும் இந்த கெளரீ விரதம் தக்க பரிஹாரமாகும்.
சிவனுடன் கூடிய பார்வதி தேவியை பூஜை செய்யவும். விரத பூஜா விதானம் புத்தகத்தில் ஸ்வர்ண கெளரி விரதம் போல் இப்பூஜையை செய்ய வேண்டும்.
11-12-2018 பதரி கெளரி விரதம்:- மார்க்கசீர்ஷ மாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தி திதி.
பதரி என்றால் இலந்தை பழம். . இலந்தை மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும். இலந்தை பழங்கள் நிவேதனம் செய்து தானும் சாப்பிடவும். பிற குழந்தைகளுக்கும் கொடுக்கவும்.
இதனால் சிறந்த அறிவு ( ஞானம்) கிட்டும். வாழக்கையின் இறுதியில் ஆத்ம தர்சனம் கிடைக்கும் ஆத்மா விஷயமான உபனிஷத் கருத்துக்கள் நன்கு புலப்படும்.
|
|
|
Post by kgopalan90 on Nov 30, 2018 22:06:14 GMT 5.5
செல்வம் குறைவதின் அறிகுறிகள் :-
1. கழுவபடாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது.
2. வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது.
3. தலைமுடி தரையில் உலாவருவது.
4. ஒற்றடைகள் சேருவது.
5. சூரிய மறைவுக்கு பின் வீட்டை பெறுக்குவது துடைப்பது தூங்குவது.
6. எச்சில் பொருள்கள் பாத்திரங்கள் காபி கப்புக்கள் ஆங்காங்கே இருப்பது.
6. பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்களை தவிர மற்றவர்கள் செவ்வாய் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.
7. ஆண்கள் புதன் சனி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.
8. குழாய்களில் தண்ணிர் சொட்டுவது. சுவற்றில் ஈரம் தங்குவது.
9. செல் (கரையான்) சேருவது.
9. பூராண் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது.
9. அதிக நேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது. தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்து இருப்பது. வீணடிப்பது.
10. உணவு பொருள்கள் வீணடிப்பது.
11. உப்பு பால் சர்க்கரை அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது, மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைப்பது.
12. குறைந்த பட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பதாக வெளிச்சங்களை குறைப்பது.
13. மெல்லிசை கேட்காமல் சதா காலம் ராஜச இசையை, அபச இசைகளை கேட்பது.
14. இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிம் உச்சரிப்பது.
15. படுக்கையையும் பூஜை பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது.
16. வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது
|
|
|
Post by kgopalan90 on Nov 29, 2018 12:50:23 GMT 5.5
ramaa ekadasi 3-12-2018.
Yudhisthira Maharaj said, O Janardana, O protector of all beings, what is the name of the Ekadasi that comes during the dark fortnight (Krishna paksha) of the month of Karttika (October - November)? Please impart this sacred knowledge to me.
The Supreme Lord, Sri Krishna then spoke as follows, "O king, please listen as I narrate to you. The Ekadasi that occurs during the dark part of the month of Karttika is called Ramaa Ekadasi.
It is most auspicious, for it at once eradicates the greatest sins and awards one the passage to the spiritual abode. I shall now narrate to you its history and glories. There once lived a famous king of the name Muchakunda, who was friendly to Lord Indra, the king of the heavenly planets, as well as with Yamaraj, Varuna, and Vibhishana, the pious brother of the demon Ravana.
Muchakunda always spoke the truth and constantly rendered devotional service to Vishnu. Because he ruled according to religious principles, there were no disturbances in his kingdom. Muchakunda's daughter was named Chandrabhaagaa, after a sacred river, and the king gave her in marriage to Shobhana, the son of Chandrasena.
One day, Shobhana visited his father-in-law's palace on the auspicious Ekadasi day. This visit made Shobhana's wife Chandrabhaagaa quite anxious, for she knew that her husband was physically very weak and unable to bear the austerity of a daylong fast.
She said to him, My father is very strict about following Ekadasi. On Dasami, the day before Ekadasi, he strikes a large kettledrum and announces nobody should eat on Ekadasi, the sacred day of Sri Hari!
When Shobhana heard the sound of the kettledrum, he said to his wife, O beautiful one, what am I to do now? Please tell me how I can save my life and obey your father's strictness and at the same time satisfy our guests!
Chandrabhaagaa then spoke, My dear husband, in my father's house nobody - not even the elephants or horses, what to speak of consenting human beings - eats on Ekadasi. Indeed, none of the animals are given their ration of grains, leaves, or straw - or even water! - On Ekadasi, the sacred day of Sri Hari.
So how can you escape fasting? My beloved husband, if you must eat something, then you should leave here at once. Now, with firm conviction decide on what you have to do.' Prince Shobhana then said, I have decided to fast on the sacred Ekadasi day.
Whatever my fate is, it will surely come to pass. Deciding thus, Shobhana attempted to fast on this Ekadasi, but he became unbearably disturbed with excessive hunger and thirst. Eventually the sun set in the west and the arrival of the auspicious night made all the Vaishnavas very happy.
O Yudhisthira, all the devotees enjoyed worshipping Me (Sri Hari) and remaining awake all through night, but Prince Shobhana that night became absolutely unbearable. Indeed, when the Sun rose on the Dwadasi, that Prince Shobhana was dead.
King Muchakunda observed his son-in-law's funeral, ordering a large stack of wood be assembled for the fire, but he instructed his daughter Chandrabhaagaa not to join her husband on the funeral pyre.
Thus Chandrabhaagaa, after performing all the purificatory processes and procedures for honoring her deceased husband, continued to live in her father's house. Lord Sri Krishna continued, O best of the kings, Yudhisthira, even though Shobhana died because of observing Ramaa Ekadasi, the merit that he accrued enabled him, after his death, to beco to become the ruler of a kingdom high on the peak of Mandarachala Mountain.
This kingdom was like a city of the demigods; very lustrous, with unlimited jewels set in the walls of its buildings that gave off light. The pillars were made of rubies, and gold inlaid with diamonds shone everywhere. As King Shobhana sat upon a throne beneath a pure white canopy, servants fanned him with yak-tail whisks.
A stunning crown rested upon his head, beautiful earrings adorned his ears, a necklace graced his throat, and bejeweled armlets and bracelets encircled his arms. He was served by Gandharvas (the best of heavenly singers) and Apsaras (celestial dancers). Verily, he resembled a second Indra. One day, a Brahmin named Somasharma, who lived in Muchakunda's kingdom, happened to come to Shobhana's kingdom while travelling to various places of pilgrimage.
The Brahmin saw Shobhana in all his resplendent glory and thought he might be the son-in-law of his own king Muchakunda. When Shobhana saw the Brahmin approaching, he immediately rose up from his seat and welcomed him. After Shobhana had paid his respectful obeisance he asked the Brahmin about his well being and
about the health and welfare of his (Shobhana's) father-in-law, his wife and all the residents of the city. Somasharma then said, O king, all the residents and subjects are well in your father-in-law's kingdom, and Chandrabhaagaa and your other family members are also quite well.
Peace and prosperity reign throughout the kingdom. But there is one thing; I'm quite astonished to find you here! Please tell me about yourself. Nobody has ever seen such a beautiful city as this! Kindly tell me how you obtained it.
King Shobhana then began to tell his story, `Because I observed the Ramaa Ekadasi, I was given this splendid city to rule over. But for all of its grandeur, it is only temporary. I beg you to do something to correct this deficiency. You see, this is only an ephemeral city, a place of this material world.
How may I make its beauties and glories permanent? Kindly reveal this to me by your instructions. The Brahmin then asked, ‘Why is this kingdom unstable and how will it become stable? Please fully explain this to me, and I shall try to help you.’
Shobhana then answered, ‘Because I fasted on the Ramaa Ekadasi without any faith, this kingdom is impermanent. Now hear how it can become permanent. Please return to Chandrabhaagaa, the beautiful daughter of king Muchukunda, and tell her what you have seen and understood about this place and about me.
Surely, if you, a pure hearted Brahmin, tell her this, my city will soon become permanent.’ Thus the Brahmin returned to his city and related the entire episode to Chandrabhaagaa, who was both surprised and overjoyed to hear this news of her husband.
She said, O Brahman, is this a dream you have seen, or is it actually a factual thing? Somasharma the Brahmin replied, O Princess, I have seen your late husband face to face in that wonderful kingdom, which resembles a realm of the denizens of heavens playgrounds. But you former husband has asked me to relate to you that he says that his kingdom is unstable and could vanish into thin air at any moment. Therefore he hope you can find a way to make it permanent.
Chandrabhaagaa then said, O sage among the Brahmins, please take me to that place where my husband resides at once, for I greatly desire to see him again! Surely I shall make his kingdom permanent with the merit that I have acquired by fasting on every Ekadasi throughout my life. Please reunite us at once, again.
It is said that one who reunites separated persons also obtains very great merit. The humble Brahmin Somasharma then led Chandrabhaagaa to Shobhana's effulgent kingdom. Before reaching it, however, they stopped at the foot of Mt. Mandaracala, at the sacred ashrama of Vamadeva. Upon hearing their story,
Vamadeva chanted hymns from the Vedas and sprinkled holy water from his samanya arghya upon Chandrabhaagaa. By the influence of that great Rishi's rites, the merit she had accrued by fasting for so many Ekadasis made her body transcendental. Ecstatic, her eyes beaming in wonder, Chandrabhaagaa continued on her journey.
When Shobhana saw his wife approaching him high on Mount Mandarachala, he was overwhelmed with joy and called out to her in great happiness and jubilation. After she arrived, he seated her on his left side and she said to him, O dearest Patiguru, please listen as I tell you something that will benefit you greatly.
Since I was eight years old I have fasted regularly and with full faith on every Ekadasi. If I transfer to you all the merit I have accumulated, your kingdom will surely become permanent, and its prosperity will grow and Lord Sri Krishna then continued to address
Yudhisthira as follows, O Yudhisthira, in this way Chandrabhaagaa who was beautifully decorated with the finest ornaments and had an exquisitely transcendental body, at last enjoyed peace and happiness with her husband. By the potency of Ramaa Ekadasi, Shobhana found his kingdom on the peaks of Mt. Mandarachala able to fulfill all his desires and bestow upon him everlasting happiness
O greatest of kings, I have thus narrated to you the glories of Ramaa Ekadasi that falls in the dark fortnight of the month of Karttika. Anyone who observes sacred Ekadasi during both the light and the dark fortnight of each month is undoubtedly freed from the reactions to the sin of killing a Brahmin.
One should not differentiate between the Ekadasis of the light and dark parts of the month. As we have seen, both can award pleasure in this world and liberate even the most sinful and fallen souls. So the Ekadasis of the dark fortnight (Krishna paksha) and the light fortnight (shukla or Gaura paksha) award the same high degree of merit and eventually liberate one from the repeated cycle of birth and death.
Anyone, who simply hears this narration of the glories of the sacred day of Ramaa Ekadasi, is freed from all kinds of sin and attains the supreme abode of Lord Vishnu. Thus ends the narration for the glories of the sacred Karttika-krishna Ekadasi, or Ramaa Ekadasi, from the Brahma-Vaivarta Purana of Srila Krishna Dwaipayana Veda Vyaasa.
|
|
|
Post by kgopalan90 on Nov 27, 2018 21:13:03 GMT 5.5
30-11-2018:--காலபைரவாஷ்டமி. சிவன் ஆலயங்களில் வட கிழக்கு மூலையில் நிர்வாணமாக நாய் வாஹனத்துடன் நிற்பவர்..பயத்தை
போக்குபவர் என்பதால் பைரவர் எனப்பெயர் .பரமேஸ்வரரின் ஐந்து குமாரர்கள்:-- கணபதி, முருகன், வீரபத்ரர், சாஸ்தா, பைரவர். எனப் படுவர்.
அந்தகாசுரன் என்னும் அரக்கனை சம்ஹரிக்க , பரமேஸ்வரன் தன்னிடமிருந்து பைரவரை உருவாக்க அது விஸ்வரூபமெடுத்து அறுபத்து
நான்காகி அஸுரர்களை அழித்து தேவர்களுக்கு அமைதி வழங்கியது.. இதனால் தேவர்கள் மகிழ்ந்து 64 யோகினிகளை அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
காலாஷ்டமீதீ விக்ஞேயா கார்திகஸ்ய ஸிதாஷ்டமி தஸ்யா முபோஷணம் கார்யம் ததா ஜாகரணம் நிசி க்ருத்வாச விவிதாம்பூஜாம்
மஹாஸம்பார விஸ்தரைஹி நரோ மார்க ஸிதாஷ்டம்யாம் வார்ஷிகம் விக்ன முத்ஸ்ருஜேத் ( ஸ்ம்ருதி கெளஸ்துபம் பக்கம் 429 ).
கார்த்திக மாதத்திய க்ருஷ்ண பக்ஷ அஷ்டமிக்கு காலாஷ்டமி அல்லது காலபைரவாஷ்டமி எனப்பெயர்.
இன்று முழுவதும் சாப்பிடாமல் உபவாசம் இருந்து மாலையில் மிகவும் விரிவான முறையில் பல விதமான பொருட்களால் பைரவரை பூஜை செய்ய வேண்டும். இரவில் இவரது சரித்ரம் , ஸ்தோத்ரம் கேட்க வேண்டும். கண்
விழித்திருக்க வேன்டும். நிவேத்யம்:- தயிர் சாதம், செவ்வாழைபழம் ; தேன்; அவல் பாயசம் முதலியன பூஜை முடிவில் சுத்த ஜலத்தால் அர்க்கியம் கொடுக்கவும் .சிவனின் படத்தில் பைரவரை பூஜை செய்யலாம்.
பூஜை செய்ய முடியாதவர்கள் அர்க்கியம் மட்டுமாவது விடலாம்.
பைரவார்க்கியம் க்ருஹாணேச பீம ரூப (அ) வ்யயாநக அநேநார்க்கிய ப்ரதானேன துஷ்டோபவ சிவப்ரிய பைரவாய நம: இதமர்க்கியம்.
ஸஹஸ்ராக்ஷி சிரோ பாஹோ ஸஹஸ்ர சரணாஜர க்ருஹாணார்க்கியம் பைரவேதம் ஸ புஷ்பம் பரமேஸ்வர. பைரவாய நம: இத மர்க்கியம்.
புஷ்பாஞ்சலீம் க்ருஹாணேச வரதோ பவ பைரவ புநர் அர்க்கியம் க்ருஹாணேதம் ஸ புஷ்பம் யாதநாபஹ பைரவாய நம: இதமர்க்கியம்..
ஒரு வருஷம் வரை ஒவ்வொரு க்ருஷ்ண பக்ஷ அஷ்டமியிலும் இம்மாதிரி செய்யும் மனிதர்களுக்கு எந்த ஒரு தடங்கலும் ஏற்படாது.
பய உணர்ச்சி, கடன் தொல்லை விலகும்.
|
|
|
Post by kgopalan90 on Nov 20, 2018 8:04:16 GMT 5.5
சர்ப்ப பலி உத்ஸர்ஜனம்.
23-11-2018. ஆவணி மாதம் பெளர்ணமி அன்று ஆரம்பித்து தினமும் மாலை பொழுதில் அரிசி மாவால் ஸர்பங்களுக்கு பலி போட்டு செய்து வந்த ஸர்ப்பபலி இன்று கார்த்திகை பெளர்ணமி அன்று முடிவு அடைகிறது. இன்று மாலை பொழுதில்
பலாச பூக்களாலும் சரக்கொன்றை ஸமித்துகளாலும் ஸ்தாலி பாக ஹோமம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.
|
|
|
Post by kgopalan90 on Nov 20, 2018 7:33:09 GMT 5.5
23-11-2018 ஆ கா மா வை.
ஆஷாடம், கார்த்திகம், மாகம், வைசாகம் ஆகிய நான்கு மாதங்களின் முதல் பெயரே ஆ கா மா வை. .இன்று விடியல் காலை 4-30 மணிக்கு மேல் 6 மணிக்குள் முறையாக ஸ்நானம் செய்ய வேண்டும்
. இதனால் பலம், அழகு, புகழ், தர்மம், ஞானம், ஸுகம், தைர்யம், ஆரோக்கியம் ஆகியவை அடைய முடியும் என்கிறது ஸத்யவ்ரத ஸ்ம்ருதி.
|
|
|
Post by kgopalan90 on Nov 19, 2018 13:17:20 GMT 5.5
கிருத்திகா மண்டல வேத பாராயணம் ஒவ்வொரு வருஷமும் கார்த்திகை மார்கழி மாதங்களில் நடை பெறும்.ஸுமார் 44 நாட்கள் நடைபெறும் 23-11-18 முதல்.06-01- 2019 . ருக்,யஜுர், சாம, வேத பாராயணம் நடக்கும்.
தின சரி மாலை வேத வ்யாச பூஜை செய்து ,பிறகு வேத பாராயணம் ஒரு மணி நேரம், உபன்யாசம் செய்வார்கள்.அந்தணர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு நாள் இதை செய்து தக்ஷிணை கொடுத்து அனுப்பலாம்.
இந்த வருடம் தலைக்கு 750ரூபாயும் உங்கள் வீட்டில் வ்யாஸ பூஜை செய்ய 300 ரூபாயும் கேட்கிறார்கள். 5 பேர் வருவார்கள்.மொத்தம் 4050 ரூபாய் , இந்த ஐவருக்கு சிற்றுண்டி. பூஜை செய்ய பழம், புஷ்பம். இத்யாதிகள். இது தமிழ் நாட்டில் எல்லா ஊர்களிலும் வருடா வருடம் நடக்கிறது. சென்னயில் செல் நர்.80728 92359 மற்றும் 97911 47050.
|
|
|
Post by kgopalan90 on Nov 17, 2018 20:01:37 GMT 5.5
பரணி தீபம். 21-11-2018.
இன்று ஒரு வருடத்திற்குள்ள 365 நாட்களுக்கு 365 பஞ்சு திரிகள் செய்து, அதை 6X 30=180 திரிகள், மற்றும் 6X 31=186 திரிகள் என இரண்டாக கட்டி, இந்த 12 கட்டுகளையும்
ஒரு பெரிய மண் அகலில் வைத்து , நெய் விட்டு, விளக்கேற்றி இதில் மஹா விஷ்ணு லக்ஷ்மி தேவியை த்யானம், ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை செய்து
ஒரு சாஸ்திரிகளுக்கு வடை, பாயசத்துடன் சாப்பாடு போட்டு, தக்ஷிணை பித்தளை விளக்கில் நெய் விட்டு ஏற்றி ஜ்வாலை உங்கள் பக்கம் இருக்கும்படியாக தாம்பூலம், பழம், புஷ்பத்துடன் தானம் செய்ய வேண்டும்.
இம்மாதிரி கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் செய்யலாம். அல்லது ஒரே நாளில் முப்பது பேருக்கு சாப்பாடு போட்டு 30 விளக்குகள் தானம் செய்யலாம். வசதி இல்லாதவர்கள் ஒரு நாள் மட்டுமும் செய்யலாம்.
22-11-2019 . ஸர்வாலய தீபம். இன்று 1000 திரிகள் கட்டி ஒரு பெரிய மண் அகலில் தீபம் ஏற்றி அதில் உண்ணாமுலையம்மன் ஸமேத அருணா சலேஸ்வரர்
த்யானம், ஆவாஹனம் 16 உபசார பூஜை செய்து ஒரு சாஸ்திரிகளுக்கு சாப்பாடு போட்டு எரியும் பித்தளை விளக்கு தக்ஷினை ,தாம்பூலம், பழம், புஷ்பம் தானம் செய்யலாம்.
22-11-2018 . இன்று மாலை வீட்டில் தீபம் ஏற்றியவுடன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்.
கீடா: பதங்கா: மஶகாஸ்ச வ்ருக்ஷா: ஜலே ஸ்தலே யே விசரந்தி ஜீவா: த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்மபாகின: பவந்தி நித்யம் ஶ்வபசாஹி விப்ரா:
இதன் அர்த்தம்:- இந்த தினத்தில் தண்ணீரிலும், தரையிலும் வாழும் புழு, பூச்சிகள் பறவைகள்,, மரங்கள், மனிதர்கள் ,இந்த தீபத்தை காண நேர்ந்தால் அவர்களுக்கு மறு பிறவி உடனே இல்லை . என் மனதில் உள்ள பேராசை, கோபம், லோபம், மதம், மாத்ஸர்யம் ஆகியவைகள் எரிக்கப்பட்டு ஞான ஒளி ஏற்படவேண்டும்.
சொக்கபானை எரியும் இடங்களுக்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் குங்குலியம் வாங்கி சென்று கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி போடலாமே.
உஜ்ஜ்வல ஜ்யோதிராகாசே தீப்யமானே விபாவஸெள குக்லூம் ப்ரக்ஷிபாம்யத்ர ப்ரீதோ பவ மஹாபலே.
|
|
|
Post by kgopalan90 on Nov 16, 2018 14:54:41 GMT 5.5
20-11-2018 துளசி விவாஹம், ப்ருந்தாவன த்வாதசி.
ஐப்பசி மாத சுக்ல பக்ஷ த்வாதசிக்கு ப்ருந்தாவன த்வாதஸி எனப்பெயர். இன்று காலையில் ப்ருந்தாவனம் என்னும் துளசி செடியையும் மஹாவிஷ்ணுவையும் சேர்த்து பூஜிக்க வேண்டும்.
துளசி செடி அருகில் விஷ்ணு படம் அல்லது விக்ரஹம் வைத்து பூஜிக்கலாம். நெல்லிக்காய் கிளையை ஒடித்து துளசி செடிக்கு பக்கத்தில் நட்டும் பூஜிக்கலாம். தம்பதிகளாகவும் பூஜிக்கலாம்.
லக்ஷிமி நாராயண ப்ரஸாத ஸித்தியர்த்தே மஹா விஷ்ணு துளசி பூஜாம் கரிஷ்யே என சங்கல்பித்துக் கொண்டு துளசீம் த்யாயாமி, ஶ்ரீ மஹா விஷ்ணூம் த்யாயாமி
என்று பூஜை செய்து துளசி அஷ்டோத்ரம், க்ருஷ்ணாஷ்டோத்ரம் அர்சித்து தூபம், தீபம், பால் நிவேதனம் செய்து இந்த ஸ்லோகம் சொல்லி துளசியை ப்ரார்த்தித்துக் கொள்ளலாம்
புஷ்பாஞ்சலிம் க்ருஹாணேமம் பங்கஜாக்ஷ.ஸ்ய வல்லபே நமஸ்தே தேவி துளசி நதாபீஷ்ட பல ப்ரதே ஆயுராரோக்கிய மதுலம் ஐஸ்வர்யம் புத்ர ஸம்பதஹ தேஹி மே ஸகலான் காமான் துளஸ்யம்ருத ஸம்பவே.
பிறகு கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு துளசி செடிக்கு முன்பு ஒரு கிண்ணத்தில் பாலால் அர்க்கியம் விடவும்.ஸ்லோகம் சொல்லிக் கொண்டே..
நமஸ்தே தேவி துளசி நமஸ்தே மோக்ஷதாயினி இதமர்க்கியம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதா வரதா பவ. துளஸ்யை நம: இதமர்க்கியம்.
லக்ஷிமிபதே நமஸ்துப்யம் துளசி மால பாரிணே இதமர்க்கியம் ப்ரதாஸ்யாமி க்ருஹாண கருடத்வஜ ஶ்ரீ மஹா விஷ்ணவே நம: இதமர்க்கியம்.
ஸர்வ பாப ஹரே தேவி ஸர்வ மங்கள தாயினி. இதமர்க்கியம் ப்ரதாஸ்யாமி ப்ரஸன்னா பவ சோபனே துளஸ்யை நம: இதமர்க்கியம்.
நமஸ்தே தேவி துளசி மாதவேந ஸமன்விதா ப்ரயஸ்ச ஸகலான் காமான் த்வாதஸ்யாம் பூஜிதா மயா என்று சொல்லி ப்ரார்த்தித்துக் கொண்டு ஒரு வெங்கல பாத்ரத்தில் பாயஸம் வைத்து சிறிது தக்ஷிணையும் சேர்த்து
காம்ஸ்ய பாத்ர மிதம் ரம்யம் பாயஸேன ஸமன்விதம் ததாமி த்விஜ வர்யாய துளசி விஷ்ணு துஷ்டயே இதம் பாயஸம் காம்ஸ்ய பாத்ர ஸ்திதம் க்ஷீராப்தி நாத ப்ரீத்யர்த்தம் ஸம்ப்ரததே என்று சொல்லி யாராவது
ஒருவருக்கு அல்லது வாத்யாருக்கு பாத்ரத்துடன் பாயஸத்தை தானம் செய்து விட வேண்டும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமையும் மங்களங்களும் ஏற்படும்.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது கடலிலிருந்து கற்பக வ்ருக்ஷம், காமதேனு, ஐராவதம், உச்சைஸ்ரவஸ் , கெளஸ்துபம், மஹாலக்ஷிமி, சந்திரன், ஆல கால விஷம், அம்ருதம் எல்லாம் வந்தது
அம்ருத கலசத்திலிருந்து துளசி தோன்றினாள். . மஹா விஷ்ணு கெளஸ்துப மணியையும், மஹா லக்ஷிமியையும், துளசியையும் தான் எடுத்துக்கொண்டார்.
துளசியை பாதம் முதல் சிரஸ் வரை அணிந்து கொண்டார். ,. அந்த நாள் தான் துளசி விவாஹ திருநாள்.
துளசி செடியை பூஜை செய்து நமஸ்கரித்து கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ப்ரார்த்திக்கவும்..
ஸெளமங்கல்யம் தனைஸ்வர்யம் புத்ர பெளத்ராதி ஸம்பதம் துளஸ்யம்ருத ஸம்பூதே தேஹி மே பக்தவத்ஸல.. .
மஹா விஷ்ணு துளசியை புகழ்ந்து போற்றிய பிருந்தா பிருந்தாவனீ, விஸ்வபூஜிதா விஸ்வபாவநி, புஷ்பஸாரா, நந்தினி, துளசி க்ருஷ்ண ஜீவனீ ஏதன் நாமாஷ்டகஞ்சைவ ஸ்தோத்ரம் நாமார்த்தம் ஸம்யுதம் ய: படேத் தாஞ்ச ஸம்பூஜ்ய ஸோஸ்வமேத பலம் லபேத். என்பதையும் சொல்லவும்.,
துளசி பூஜைக்கு ஆவாஹனம் தேவை இல்லை. துளசியின் ஜன்ம தினமான கார்த்திகை மாதம் பெளர்ணமி அன்றும் பூஜை துளசிக்கு செய்யலாம் என்கிறது. தேவி பாகவதம். ஒன்பதாவது ஸ்கந்தம் துளசி பூஜையில்.
பிருந்தை என்பது மரங்கள் நெருங்கி அடர்ந்திருப்பதை குறிக்கும். . துளசி ஓரிடத்தில் நெருங்கி அடர்ந்திருப்பதால் பிருந்தை என கூறுகிறார்கள். எவள் முற்காலத்தில் பிருந்தாவனந் தோறும் இருந்து பிருந்தாவனீ எனப்பெயர்
பெற்றாளோ ; எவள் அகில ப்ரபஞ்சத்தினால் பூஜிக்கப்பட்டு விஸ்வபூஜிதை என பெயர் பெற்றாளோ எவளால் எண்ணற்ற ப்ரபஞ்சமெல்லாம் பரிசுத்தமாகி விஸ்வபாவனீ என ப்பெயர் பெற்றாளோ ; மலர்களின் மீது ப்ரீதியுடைய
தேவர்களும் அவைகளால் ஆனந்தமடையாமல் உன்னாலேயே ஆனந்தமடைவதால் புஷ்பஸாரை என்றும்; பெயர் பெற்றாய். அடைந்ததுமே ஆனந்தத்தை அளிக்கும் தன்மையால் நந்தினி என்ற பெயர் பெற்றாய்;
க்ருஷ்ணன் உன்னால் உருக்கொண்டு வாழ்வதால் கிருஷ்ணஜீவனீ என்ற பெயர் பெற்றாய். துளசி ஸ்தோத்ரம் கண்ணுவ சாகையில் உள்ளது.
|
|
|
Post by kgopalan90 on Nov 16, 2018 13:28:52 GMT 5.5
20-11-2018 சாதுர் மாஸ்ய விரத பூர்த்தி.
சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்தவர்கள் இன்று ஸ்வாமி ஸன்னதியில் கீழ் கண்ட ச்லோகம் சொல்லி விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.
இதம் விரதம் மயா தேவ க்ருதம் ப்ரீத்யை தவ ப்ரபோ ந்யூனம் ஸம்பூர்ணதாம் யாது தவத் ப்ரஸாதாத் ஜனார்தன..
|
|