|
Post by radha on Jan 1, 2020 6:25:11 GMT 5.5
Hari Om THIRUPAVAI-17
அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்; கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்; அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்; செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.
Happy new year to alli in this forum Sri Kanchi Maha Periva THIRUVADIGAL Charanam .Subham ASTHU ! Sarve Janaha Sukhino Bhavanthu
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Jan 1, 2020 6:40:41 GMT 5.5
உடுக்கும் உடை, குடிக்கும் தண்ணீர், உண்ணும் உணவு இவற்றை எளியவர்களுக்கு வழங்கும் உயர்ந்த மனம் கொண்ட நந்த கோபாலா! நீ எங்கள் குலத்திற்குத் தலைவன். நீ தூக்கம் நீங்கி எழுந்திருப்பாயாக. கொழுகொம்பைப் போன்ற பெண்களுக்கெல்லாம் கொழுந்து போன்ற யசோதையே! நீ எங்களுக்குத் தலைவி அல்லவா. நீ உனது மகனாகிய கண்ணனை தூக்கம் கலைந்து எழும்படி அறிவுறுத்தமாட்டாயா? ஆகாயத்தின் வழியாக ஓங்கி வளர்ந்த வாமன அவதாரத்தில் உலகை அளந்த கண்ணனே! தேவர்களின் தலைவனே! உறக்கம் நீங்கித் துயில் எழுவாயாக. செம்பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழல் என்னும் அணிகலனை அணிந்த செல்வனே! பலதேவனே! உனது தம்பியாகிய கண்ணனும் நீயும் இனியும் கண்ணுறங்காமல் துயில் எழுவீர்களாக.
|
|
|
Post by radha on Jan 2, 2020 5:46:19 GMT 5.5
THIRUPAVAI-18
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன், நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்; வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்; பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட, செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Jan 2, 2020 6:01:21 GMT 5.5
மதம்பிடித்த யானையைப் போன்று மோதித் தள்ளுகின்ற வலிமை உடையவன், போரில் பகைவர்களைக் கண்டு ஓடாத தோள் வலிமை உடையவன் நந்தகோபன். அப்படிப்பட்ட நந்தகோபனின் மருமகளாகிய நப்பின்னையே! மணம் கமழும் கூந்தலை உடையவளே! கதவைத் திறப்பாயாக. பொழுது புலர்ந்ததற்க்கு அடையாளமாகக் கோழிகள் கூவும் சத்தம் கேட்கின்றது. குருக்கத்திப் பந்தலின் மேல் குயில்கள் பலமுறை விடாமல் கூவுகின்றன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களை உடையவளே உனது கணவனாகிய கண்ணனின் பெயரை நாங்கள் பாட வந்துள்ளோம். நீ உனது செந்தாமரை மலர் போன்ற வளையல்கள் ஒலிக்கும் கைகளால் மகிழ்ச்சியுடன் கதவைத் திறப்பாயாக.
|
|
|
Post by radha on Jan 3, 2020 6:15:46 GMT 5.5
HARI OM ! THIRUPAVAI-19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்; மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண், எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால், தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்.
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Jan 3, 2020 6:30:35 GMT 5.5
மணிமாலை அணிந்த கண்ணனே! குத்து விளக்கு எரிகிறது. யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கால்களையுடைய கட்டிலில் போடப்பட்ட ஐந்து விதமான குணங்களையுடைய படுக்கையில் படுத்திருக்கிறாய். நீ கொத்தான மலர்கள் சூடிய உனது துணைவியாகிய நப்பின்னையின் மார்பில் உறங்குகிறாய் திருவாய் திறந்து எங்களுடன் பேசமாட்டாயா? மை தீட்டப்பட்ட அகன்ற கண்களையுடைய நப்பின்னையே! உனது மணாளனை விடிந்து எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கத்தில் இருந்து எழும்படி விடமாட்டாய். அவனை நீ சிறிது நேரம் கூடப் பிரிந்திருக்க மாட்டாயா? நாங்கள் கூறுவது தத்துவமல்ல, உனக்குத் தகுதியான செயலைச் செய்வாயாக.
|
|
|
Post by radha on Jan 3, 2020 20:42:21 GMT 5.5
HARI OM THIRUPAVAI-20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்; செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்; செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்; உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.
பொருள்: முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.
|
|
|
Post by radha on Jan 5, 2020 6:54:51 GMT 5.5
HARI OM ! THIRUPAVAI-21
ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்; ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்; மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண் ஆற்றாதுவந்து உன்னடிபணியு மாபோலே, போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய். கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக் களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை
The gopis have now secured the assistance of Nappinnai who joins them in arousing the Lord. Godā makes an interesting comparison between the gopis and the vanquished enemies of the Lord. This is said to reflect the total and utter humility of the devotees and the spirit of surrender when one finally gives up the struggle to liberate oneself from the bonds of materialism and surrenders totally to the Lord saying “I am thine”! It also implies that they recognise themselves as fallen sinners and request the Lord’s forgiveness and compassion. Two qualifications are necessary for the acceptance of a prapanna (one who desires to surrender) by the Lord. (1) the prapanna should be free from egoism and (2) should bear no allegiance to any other but the Lord. The gopis declare that they have both these qualifications. Their egoism had been wiped out by contemplating the super-human pastimes of the Lord, and His inestimable qualities.
|
|
|
Post by radha on Jan 5, 2020 19:21:11 GMT 5.5
HARI OM ! THIRUPAVAI-21
பொருள்: கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக் களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.
|
|
|
Post by radha on Jan 5, 2020 19:24:43 GMT 5.5
HARI OM ! THIRUPAVAI-22
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும், தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!
விளக்கம்: இறைவனின் கடைக்கண் பார்வை பட்டால் போதும். சாபங்கள் கருகிப்போகும். எப்படி அவனது பார்வையை நம் மீது திருப்புவது. மிக எளிதாக ஆண்டாள் பாடிய திருப்பாவையின் பாடல்களையும் மார்கழியில் மட்டுமல்ல! எந்நாளும் பக்தியுடன் படித்தால் போதுமே! அதற்கு அவகாசமில்லையா! அவள் சொல்லியிருக்கிறாளே! இந்த பாவையில் கோவிந்தா, விக்ரமா போன்ற எளிய பதங்களை... அவற்றைச் சொன்னாலே போதுமே! அவனது பார்வை பட்டுவிடும். COURTESY:- DINAMALAR SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
|
|
|
Post by radha on Jan 7, 2020 6:40:34 GMT 5.5
THIRUPAVAI PASURAM-23
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து, வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி, மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப், போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன் கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Jan 7, 2020 6:51:20 GMT 5.5
மழைக் காலத்தில் மலைக்குகையில் படுத்துத் தூங்கும் வீரமுள்ள சிங்கம், தூக்கம் தெளிந்து எழும்பொழுது நெருப்புப் போல சிவந்த கண்களைத் திறந்து, பிடரி மயிர் சிலிர்த்து உடம்பை நாலு பக்கமும் அசைத்து, சோம்பல் முறித்து, கர்ஜனை செய்து, வெளியில் வருவது போல காயம்பூ போன்ற நீல நிறமுடையவனே, நீ உன் கோயிலிலிருந்து புறப்பட்டு வந்து அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டறிந்து அருள வேண்டும்.
|
|
|
Post by radha on Jan 8, 2020 5:26:06 GMT 5.5
HARI OM ,! THIRUPAVAI PASURAM-24
அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி, சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி, கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி, குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி, வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி, என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்.
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Jan 8, 2020 6:36:33 GMT 5.5
மகாபலி காலத்தில் இவ்வுலகங்களை அளந்த உன் திருவடிகளைப் போற்றுகிறோம்! தென் இலங்கை சென்று இராவணனை அழித்தாய்! உன் திருத்தோள் வலிமையைப் போற்றுகிறோம்! சகடாசூரனைக் கட்டுக்குலைய உதைத்தாய்! உன் புகழைப் போற்றுகிறோம்! கன்று வடிவில் வந்த வத்ஸாசுரனை எரிகருவியாகக் கொன்றாய்! உன் திருவடிகளைப் போற்றுகின்றோம்! கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து, கோகுலத்தைக் காத்தவனே, உன் குணத்தைப் போற்றுகிறோம்! பகைவர்களை அழிக்கும் உன் கையிலுள்ள வேலைப் போற்றுகிறோம்! இவ்வாறு எப்பொழுதும் உன் வீரத்தைப் பாடி, எங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள இங்கு வந்துள்ளோம். நீ எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்.
|
|
|
Post by radha on Jan 8, 2020 21:05:49 GMT 5.5
THIRUPAVAI PASURAM -25
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
|
|