Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Jan 8, 2020 22:07:45 GMT 5.5
தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதர்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம், அந்த அருளைத் தந்தாயானால் உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால் துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.
|
|
|
Post by radha on Jan 9, 2020 21:01:48 GMT 5.5
THIRUPAVAI PASURAM-26
மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே, சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே, கோல விளக்கே, கொடியே, விதானமே, ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய். PAVAI PASURAM -26
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Jan 9, 2020 21:48:02 GMT 5.5
திருமாலே! மணிவண்ணா! மார்கழி நீராட்டத்திற்கு பெரியோர்கள் அனுஷ்டித்து வந்தவற்றைக் கேட்பாயாகில் உலகம் நடுங்க ஒலிக்கும் பால் நிறப் பாஞ்சசன்னியம் போன்ற சங்குகளும், மிகப் பெரிய பறைகளும்,பல்லாண்டு பாடுபவர்களும், அழகிய விளக்குகளும், கொடிகளும் அவற்றிற்கு மேல் கட்ட வேண்டிய சீலைகளும் வேண்டும். ஆலிலைமேல் பள்ளி கொண்டவனே, இவையனைத்தும் எங்களுக்குத் தந்தருள வேண்டும்.
|
|
|
Post by radha on Jan 10, 2020 20:44:49 GMT 5.5
THIRUPAVAI PASURAM-27. INTERESTING PASURAM
கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்; நாடு புகழும் பரிசினால் நன்றாக, சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்; ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Jan 10, 2020 22:03:01 GMT 5.5
பகைவர்களை வென்று அடியவர்களின் அன்புக்குக் கட்டுப்படும் சீருடைய கோவிந்தா! உன்னைப் பாடி பயனடைந்து நாங்கள் பெரும் பரிசுகள் யாதெனில் அனைவரும் புகழத்தக்க கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹூவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து முழங்கை வரை நெய் வழிய பால்சோறு உண்போம்.
|
|
|
Post by radha on Jan 11, 2020 17:17:40 GMT 5.5
HARI OM ! THIRUPAVAI PASURAM -28
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்; அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப் பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்; குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது! அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே, இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Jan 11, 2020 21:39:39 GMT 5.5
பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்போம், அறிவொன்றும் இல்லாத மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்த நாங்கள், உன்னை எங்களுடைய குலத்தவனாக பாவிக்கும் புண்ணியத்தைச் செய்துள்ளோம் எந்தக் குறையும் இல்லாத கோவிந்தா! நமக்குள் உண்டான உறவு, உன்னாலோ, எங்களாலோ ஒழிக்க முடியாதது. அறிவற்ற சிறு பிள்ளைகள் நாங்கள். அன்பால் அழைத்ததைப் பொறுத்து, கோபம் கொள்ளாமல் எங்களுக்கு வேண்டியதை நீதான் கொடுக்க வேண்டும்.
|
|
|
Post by radha on Jan 12, 2020 16:55:50 GMT 5.5
HARI OM !
சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
பொருள்: கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.
திருப்பாவை பாடல் 30
வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
பொருள்: அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர். SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
I AM GRATEFUL TO SUDHAN FOR PROVIDING COMMENDABLE COMMENTARY FOR ALL THIRUPAVAI PASURAMS .HOPE READERS HAVE ENJOYED THE POSTINGS.
GOVINDA DHAMODARA, MADHAVA. ACHUTAHA ANANDA KRISHNA PADMANABHA KESAVA NARAYANA VISHNO MADHUSUDANA THRIVIKKRAMA VAMANAYA SRIDHARAN RISHIKESA
Om Namaste astu Bhagavan VishveshvarayaMahadevayaTriambakayaTripurantakayaTrikalagni kalayakalagnirudrayaNeelakanthayaMrutyunjayayaSarveshvarayaSadashivayaShriman Mahadevaya Namaha THIRCHITRABHALAM MY THANKS TO DINAMALAR NEWS PAPER ALSO.
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Jan 12, 2020 21:44:12 GMT 5.5
29 மிக அதிகாலையில் வந்து உன்னைச் சேவித்து தாமரை போன்ற உன் திருவடிகளைத் துதிக்கும் காரணத்தைக் கேட்டுக் கொள்! பசுக்களை மேய்த்து, ஜீவனம் செய்யும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களிடமிருந்து சிறு கைங்கரியமாவது பெற்றுக் கொள்ளாமல் செல்வது கூடாது. நாங்கள் விரும்பியவற்றைப் பெற்றவுடன், உன்னை விட்டு அகல நாங்கள் இங்கு வரவில்லை. ஏழேழு ஜன்மத்துக்கும் உன்னுடன் சேர்ந்தவர்களாகவே இருப்போம், உனக்கே நாங்கள் பணி செய்து கிடப்போம். மற்ற எங்கள் ஆசைகளை அகற்றி அருளவேண்டும்.
30 திருப்பாற்கடலைக் கடைந்த மாதவனான கேசவனை சந்திரன் போல் முகமுடைய பெண்கள் சென்று யாசித்து விரும்பியதைப் பெற்ற வரலாற்றை(பாவை நோன்பு), அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் தோன்றிய தாமரை மாலை அணிந்த பெரியாழ்வாரின் மகள் ஆண்டாளால் அருளிச்செய்த திருப்பாவை முப்பது பாடல்களையும் தவறாமல் பாடுபவர்கள் நான்கு தோள்களையும், செங்கண்களையும் பெற்ற திருமால் திருவருள் பெற்று எப்பொழுதும் பேரின்பத்துடன் வாழ்வார்கள்.
Everything happens out of His will, may our praises be heard by Lord Govindha !
|
|