Post by radha on Aug 13, 2015 3:52:12 GMT 5.5
OM Sri GURUPYO NAMAHA,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA .
நவக்கிரக தோஷம் நீக்கும் மகாளய
விரதங்களும், பண்டிகைகளும் இந்துக்களின் 2 கண்களாக விளங்குகின்றன. பண்டிகைகள் குறிப்பிட்ட மாதங்களில், திதி அல்லது நட்சத்திரங்களை முதலாக கொண்டு கொண்டாடப்பட்டு வருகின்றன. சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் தன் பயணத்தை தொடருவார். புரட்டாசி மாதத்தில் அவர் கன்னி ராசியில் செல்வதால், இந்த மாதத்திற்கு ‘கன்னியா மாதம்’ என்று பெயர்.
மகாளய பட்சம்
புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதத்தில்தான் மகாளய அமாவாசை வருகிறது. அன்று பித்ருக்களான நமது மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது விசேஷம். மகாளய பட்சம் என்பது 15 நாட்கள் ஆகும். இது புரட்டாசி மாதம் பவுர்ணமி திதியில் தொடங்கி அமாவாசையில் நிறைவு பெறுகிறது. ‘மறந்து விட்டதை மகாளயத்தில் விடு’ என்பது பழமொழி. நமது மூதாதையர்கள் இறந்து போன தேதி தெரியாதவர்கள், மகாளய பட்சத்தில் தர்ப்பணம் செய்தால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.
மரணமடைந்த நமது முன்னோர்களின் ஆவியானது, ஒரு குறிப்பிட்ட காலம் வரை பூமியில் சுற்றிக்கொண்டு இருக்குமாம். பின்னர் விண்ணுலகம் நோக்கி செல்லும். பித்ருக்கள் உலகம் என்று ஒன்று உள்ளது. இது சூரிய, சந்திர மண்டலத்திற்கும் அப்பால் உள்ளது. சொர்க்கலோகம் போன்று காட்சியளிக்கும். அங்கு பித்ருக்கள், ஆதி என்பவர் கட்டுப்பாட்டில் வசிக்கின்றனர். அனைத்து வசதிகள் அங்கு இருந்த போதிலும் அவர்களுக்கு வேண்டிய உணவு வகைகளை தாங்களே எடுத்துக் கொள்ள முடியாது. தங்கள் பிள்ளைகள், உறவினர்களுக்கு சேர்த்து வைத்த சொத்துக்களுக்கு கைமாறு தர வேண்டும் என அவர்கள் கேட்டனர்.
15 நாள் விடுப்பு
பித்ருக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன் வந்த எமதர்மராஜன், அவர்களுக்கு 15 நாட்கள் விடுப்பு கொடுத்து பிள்ளைகளிடம் வேண்டியதை பெற்றுக்கொள்ளும்படி கூறி பூமிக்கு அனுப்பி வைக்கிறார். அந்தக்காலம் மகாளய பட்சம்.
இந்த நாட்களில் நமது மூதாதையர்கள் அவரவர் உறவினர்கள் வீட்டுக்கு வந்து வாசலில் நிற்பார்களாம். அந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு முதலில் பித்ருக்களை திருப்தி செய்ய வேண்டும். மகாளயபட்சம் வரும் நாட்களில் அமாவாசையன்று ஏதேனும் ஒரு கோவிலில் உள்ள புனித தீர்த்தம், நதிக்கரை குளக்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்று செய்கின்ற தர்ப்பணத்தில் விடுகின்ற தண்ணீரை, ஸ்வேதாதேவி என்பவள் இறந்து போன நமது மூதாதையர்களின் கையில் சேர்த்து விடுகிறாள்.
நமது வீட்டு வாசல் முன்பு நிற்கும் பித்ருக்களுக்கு எள் தர்ப்பணம் செய்து பிண்டம் சமர்ப்பிக்க வேண்டும்.
பொதுவாக மாதந்தோறும் வரும் அமாவாசையன்று இறந்து போன மூதாதையர்களுக்கு திதி கொடுத்தால் யாரை நினைத்து திதி கொடுக்கிறோமோ அவர் மட்டும் வந்து திதியை பெற்றுக்கொள்வார். ஆனால் மகாளயபட்ச காலத்தில் திதி கொடுத்தால் நம் மூதாதையர்கள் அனைவரும் ஒன்றாக வந்து திதியை பெற்றுக்கொள்வதாக ஐதீகம்.
இதனால் நமது முன்னோர்களும், சிறுவயதில் இறந்தவர்களும், துர்மரணம் அடைந்தவர்களும், நல்ல கதி அடைவார்கள். நம்மை பெற்று வளர்த்து உயர்த்திய பெற்றோர்களுக்கு திதி கொடுப்பது நமது கடமை.
அவதார புருஷர்களான ஸ்ரீராமன், கிருஷ்ணர் ஆகியோர் கூட தங்கள் முன்னோர்களுக்கு திதி செய்தார்கள் என புராணம் கூறுகிறது.
பித்ருக்களின் ஆசீர்வாதம் நமது குலத்தைக் காக்கும் என்பார்கள். அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு முதலில் பித்ருக்களை திருப்தி செய்ய வேண்டும். மகாளய பட்சக் காலத்தில் ஏதேனும் ஒரு கோவிலில் உள்ள புனித தீர்த்தம், நதிக்கரை, குளக்கரைகளில் அமர்ந்து தர்ப்பணம் செய்வதால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து நேரடியாக நாம் வழங்குவதை பெற்றுக்கொண்டு ஆசி வழங்குவார்கள். தேவர்களின் வருடக் கணக்குப்படி அவர்களுக்கு புரட்டாசி மாதம் நடுராத்திரி வேளையாகும்.
இந்த நேரத்தில் அமைதியாக இருக்கும், நிசப்தம் நிலவும். எனவே தேவர்களை ஆராதிப்பதற்கும், பித்ருக்களை உபசரிப்பதற்கும் இதுவே சிறந்த காலமாக கருதப்படுகிறது.
நோன்பு இருப்பது எப்படி?
மகாளய அமாவாசையன்று காலையில் எழுந்து வீட்டை சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் குளித்து முடித்து அருகில் உள்ள கோவில்களில் இருக்கும் நீர்நிலைகளிலோ அல்லது கடற்கரைப் பகுதியிலோ சென்று பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருந்து முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை நைவேத்தியமாக படைத்து இறைவனை வணங்க வேண்டும். மேலும் அன்றைய தினத்தில் இறை அடியவர்களுக்கு முடிந்தவரை அன்னதானம் வழங்குவது சிறப்பான பலனை தரும். தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் கடற்கரை, கோடியக்கரை, பவானி, ஆடுதுறை, குமரி துறை, திருதலங்காடு, திலதர்ப்பனபுரி, திருவையாறு, மன்னார்குடி, வேதாரண்யம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ஆகிய இடங்கள் குறிப்பிடத்தக்கவை.
உடல்நிலை சரி இல்லாதவர்கள் தர்ப்பணத்தை இல்லத்தில் வைத்து கொடுக்கலாம். இந்த தர்ப்பணத்தால் பித்ருக்களுக்கு பசியும், தாகமும் தீரும். இந்த நாட்களில் மாட்டு தொழுவத்தில் பித்ருபூஜை செய்தால் வம்சா வழி தோஷம் நீங்கும், ஆயுள்பலம் கூடும். முன்னோர்களுடைய பரிபூரண ஆசியும், புண்ணியமும் கிடைக்கும். பசுவுக்கு அகத்திக்கீரை அளித்தாலும் பலன் உண்டு.
பித்ருக்கள் மனம் மகிழ்ச்சி அடையும் போது அவர்கள் வழங்கும் ஆசிகள் திருமணத் தடை, குழந்தை இல்லா கவலை, நவக்கிரக தோஷங்கள் ஆகியவற்றை நீக்கி மனஅமைதியையும், நிம்மதியையும் அளிக்கும். தர்ப்பணத்துக்கு பின்னரே வீட்டில் பூஜைகள் செய்ய வேண்டும். நமது பித்ருக்களை திதி நாளில் திருப்திப்படுத்தாத காரணத்தினால் நமக்கு துன்பங்கள் வருகின்றன. பித்ருக்களை சாந்தப்படுத்த திலஹோமம் செய்வது அவசியம்.
‘மாத்ருதேவோபவ, பித்ருதேவோபவ’ என நம் பெற்றோருக்கு நாம் நன்றிக் கடன்பட்டு இருக்கிறோம். நமக்கு நல்வாழ்வு வழங்கிய பித்ருக் களுக்கு தர்ப்பண பூஜை செய்வது அவசியம்.
கர்ணனின் தான தர்மம்
மகாபாரதத்தின் பிரபல வீரனான கர்ணன் மரணத்துக்குப் பின்னர் சொர்க்கம் சென்றான். அதுவரை அவன் செய்த தருமங்கள் நூறு மடங்காக பெருகின. ஆனால் அது அத்தனையும் வெள்ளியும், தங்கமுமாக இருந்தன. உணவாக இல்லை. இதனால் அவன் உணவுக்காக கஷ்டப்பட்டான். இது குறித்து அவன் எமதர்மராஜனிடம் கூறி வருத்தப்பட்டான். அதற்கு அவர் நீ பூமியில் வாழ்ந்த காலத்தில் பிறருக்கு பொன்னும், பொருளும், தானமாக வழங்கினாய். அவை அனைத்தும் இங்கு உள்ளன. ஆனால் யாருக்கும் அன்னதானம் வழங்காததால் இந்த நிலை ஏற்பட்டது எனக்கூறி இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு 14 நாட்கள் அவனை பூமிக்கு அனுப்பி வைத்தார். அதன்படியே பூமிக்கு வந்த கர்ணன் 14 நாட்கள் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினான். பிறகு மேலுலகத்திற்கு சென்றான். அங்கு அவனுக்கு உணவு அதிகமாக இருந்தது. புரட்டாசி மாதம் மகாளய பட்சத்தில் இந்த 14 நாட்கள் அவன் அன்னதானம் செய்தான். எனவே இந்த மாதத்தில் வழங்கப்படும் தானங்கள் எல்லா பித்ருக்களுக்கும் நலம் தருகின்றன.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
DINATHANTHI- ANMEEKAM SECTION
நவக்கிரக தோஷம் நீக்கும் மகாளய
விரதங்களும், பண்டிகைகளும் இந்துக்களின் 2 கண்களாக விளங்குகின்றன. பண்டிகைகள் குறிப்பிட்ட மாதங்களில், திதி அல்லது நட்சத்திரங்களை முதலாக கொண்டு கொண்டாடப்பட்டு வருகின்றன. சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் தன் பயணத்தை தொடருவார். புரட்டாசி மாதத்தில் அவர் கன்னி ராசியில் செல்வதால், இந்த மாதத்திற்கு ‘கன்னியா மாதம்’ என்று பெயர்.
மகாளய பட்சம்
புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதத்தில்தான் மகாளய அமாவாசை வருகிறது. அன்று பித்ருக்களான நமது மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது விசேஷம். மகாளய பட்சம் என்பது 15 நாட்கள் ஆகும். இது புரட்டாசி மாதம் பவுர்ணமி திதியில் தொடங்கி அமாவாசையில் நிறைவு பெறுகிறது. ‘மறந்து விட்டதை மகாளயத்தில் விடு’ என்பது பழமொழி. நமது மூதாதையர்கள் இறந்து போன தேதி தெரியாதவர்கள், மகாளய பட்சத்தில் தர்ப்பணம் செய்தால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.
மரணமடைந்த நமது முன்னோர்களின் ஆவியானது, ஒரு குறிப்பிட்ட காலம் வரை பூமியில் சுற்றிக்கொண்டு இருக்குமாம். பின்னர் விண்ணுலகம் நோக்கி செல்லும். பித்ருக்கள் உலகம் என்று ஒன்று உள்ளது. இது சூரிய, சந்திர மண்டலத்திற்கும் அப்பால் உள்ளது. சொர்க்கலோகம் போன்று காட்சியளிக்கும். அங்கு பித்ருக்கள், ஆதி என்பவர் கட்டுப்பாட்டில் வசிக்கின்றனர். அனைத்து வசதிகள் அங்கு இருந்த போதிலும் அவர்களுக்கு வேண்டிய உணவு வகைகளை தாங்களே எடுத்துக் கொள்ள முடியாது. தங்கள் பிள்ளைகள், உறவினர்களுக்கு சேர்த்து வைத்த சொத்துக்களுக்கு கைமாறு தர வேண்டும் என அவர்கள் கேட்டனர்.
15 நாள் விடுப்பு
பித்ருக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன் வந்த எமதர்மராஜன், அவர்களுக்கு 15 நாட்கள் விடுப்பு கொடுத்து பிள்ளைகளிடம் வேண்டியதை பெற்றுக்கொள்ளும்படி கூறி பூமிக்கு அனுப்பி வைக்கிறார். அந்தக்காலம் மகாளய பட்சம்.
இந்த நாட்களில் நமது மூதாதையர்கள் அவரவர் உறவினர்கள் வீட்டுக்கு வந்து வாசலில் நிற்பார்களாம். அந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு முதலில் பித்ருக்களை திருப்தி செய்ய வேண்டும். மகாளயபட்சம் வரும் நாட்களில் அமாவாசையன்று ஏதேனும் ஒரு கோவிலில் உள்ள புனித தீர்த்தம், நதிக்கரை குளக்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்று செய்கின்ற தர்ப்பணத்தில் விடுகின்ற தண்ணீரை, ஸ்வேதாதேவி என்பவள் இறந்து போன நமது மூதாதையர்களின் கையில் சேர்த்து விடுகிறாள்.
நமது வீட்டு வாசல் முன்பு நிற்கும் பித்ருக்களுக்கு எள் தர்ப்பணம் செய்து பிண்டம் சமர்ப்பிக்க வேண்டும்.
பொதுவாக மாதந்தோறும் வரும் அமாவாசையன்று இறந்து போன மூதாதையர்களுக்கு திதி கொடுத்தால் யாரை நினைத்து திதி கொடுக்கிறோமோ அவர் மட்டும் வந்து திதியை பெற்றுக்கொள்வார். ஆனால் மகாளயபட்ச காலத்தில் திதி கொடுத்தால் நம் மூதாதையர்கள் அனைவரும் ஒன்றாக வந்து திதியை பெற்றுக்கொள்வதாக ஐதீகம்.
இதனால் நமது முன்னோர்களும், சிறுவயதில் இறந்தவர்களும், துர்மரணம் அடைந்தவர்களும், நல்ல கதி அடைவார்கள். நம்மை பெற்று வளர்த்து உயர்த்திய பெற்றோர்களுக்கு திதி கொடுப்பது நமது கடமை.
அவதார புருஷர்களான ஸ்ரீராமன், கிருஷ்ணர் ஆகியோர் கூட தங்கள் முன்னோர்களுக்கு திதி செய்தார்கள் என புராணம் கூறுகிறது.
பித்ருக்களின் ஆசீர்வாதம் நமது குலத்தைக் காக்கும் என்பார்கள். அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு முதலில் பித்ருக்களை திருப்தி செய்ய வேண்டும். மகாளய பட்சக் காலத்தில் ஏதேனும் ஒரு கோவிலில் உள்ள புனித தீர்த்தம், நதிக்கரை, குளக்கரைகளில் அமர்ந்து தர்ப்பணம் செய்வதால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து நேரடியாக நாம் வழங்குவதை பெற்றுக்கொண்டு ஆசி வழங்குவார்கள். தேவர்களின் வருடக் கணக்குப்படி அவர்களுக்கு புரட்டாசி மாதம் நடுராத்திரி வேளையாகும்.
இந்த நேரத்தில் அமைதியாக இருக்கும், நிசப்தம் நிலவும். எனவே தேவர்களை ஆராதிப்பதற்கும், பித்ருக்களை உபசரிப்பதற்கும் இதுவே சிறந்த காலமாக கருதப்படுகிறது.
நோன்பு இருப்பது எப்படி?
மகாளய அமாவாசையன்று காலையில் எழுந்து வீட்டை சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் குளித்து முடித்து அருகில் உள்ள கோவில்களில் இருக்கும் நீர்நிலைகளிலோ அல்லது கடற்கரைப் பகுதியிலோ சென்று பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருந்து முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை நைவேத்தியமாக படைத்து இறைவனை வணங்க வேண்டும். மேலும் அன்றைய தினத்தில் இறை அடியவர்களுக்கு முடிந்தவரை அன்னதானம் வழங்குவது சிறப்பான பலனை தரும். தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் கடற்கரை, கோடியக்கரை, பவானி, ஆடுதுறை, குமரி துறை, திருதலங்காடு, திலதர்ப்பனபுரி, திருவையாறு, மன்னார்குடி, வேதாரண்யம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ஆகிய இடங்கள் குறிப்பிடத்தக்கவை.
உடல்நிலை சரி இல்லாதவர்கள் தர்ப்பணத்தை இல்லத்தில் வைத்து கொடுக்கலாம். இந்த தர்ப்பணத்தால் பித்ருக்களுக்கு பசியும், தாகமும் தீரும். இந்த நாட்களில் மாட்டு தொழுவத்தில் பித்ருபூஜை செய்தால் வம்சா வழி தோஷம் நீங்கும், ஆயுள்பலம் கூடும். முன்னோர்களுடைய பரிபூரண ஆசியும், புண்ணியமும் கிடைக்கும். பசுவுக்கு அகத்திக்கீரை அளித்தாலும் பலன் உண்டு.
பித்ருக்கள் மனம் மகிழ்ச்சி அடையும் போது அவர்கள் வழங்கும் ஆசிகள் திருமணத் தடை, குழந்தை இல்லா கவலை, நவக்கிரக தோஷங்கள் ஆகியவற்றை நீக்கி மனஅமைதியையும், நிம்மதியையும் அளிக்கும். தர்ப்பணத்துக்கு பின்னரே வீட்டில் பூஜைகள் செய்ய வேண்டும். நமது பித்ருக்களை திதி நாளில் திருப்திப்படுத்தாத காரணத்தினால் நமக்கு துன்பங்கள் வருகின்றன. பித்ருக்களை சாந்தப்படுத்த திலஹோமம் செய்வது அவசியம்.
‘மாத்ருதேவோபவ, பித்ருதேவோபவ’ என நம் பெற்றோருக்கு நாம் நன்றிக் கடன்பட்டு இருக்கிறோம். நமக்கு நல்வாழ்வு வழங்கிய பித்ருக் களுக்கு தர்ப்பண பூஜை செய்வது அவசியம்.
கர்ணனின் தான தர்மம்
மகாபாரதத்தின் பிரபல வீரனான கர்ணன் மரணத்துக்குப் பின்னர் சொர்க்கம் சென்றான். அதுவரை அவன் செய்த தருமங்கள் நூறு மடங்காக பெருகின. ஆனால் அது அத்தனையும் வெள்ளியும், தங்கமுமாக இருந்தன. உணவாக இல்லை. இதனால் அவன் உணவுக்காக கஷ்டப்பட்டான். இது குறித்து அவன் எமதர்மராஜனிடம் கூறி வருத்தப்பட்டான். அதற்கு அவர் நீ பூமியில் வாழ்ந்த காலத்தில் பிறருக்கு பொன்னும், பொருளும், தானமாக வழங்கினாய். அவை அனைத்தும் இங்கு உள்ளன. ஆனால் யாருக்கும் அன்னதானம் வழங்காததால் இந்த நிலை ஏற்பட்டது எனக்கூறி இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு 14 நாட்கள் அவனை பூமிக்கு அனுப்பி வைத்தார். அதன்படியே பூமிக்கு வந்த கர்ணன் 14 நாட்கள் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினான். பிறகு மேலுலகத்திற்கு சென்றான். அங்கு அவனுக்கு உணவு அதிகமாக இருந்தது. புரட்டாசி மாதம் மகாளய பட்சத்தில் இந்த 14 நாட்கள் அவன் அன்னதானம் செய்தான். எனவே இந்த மாதத்தில் வழங்கப்படும் தானங்கள் எல்லா பித்ருக்களுக்கும் நலம் தருகின்றன.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
DINATHANTHI- ANMEEKAM SECTION