|
Post by radha on Jun 2, 2012 8:24:48 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
பெரியவாள் ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் முன்னம்
ஆரியாம்பாள் ஈன்றனள் — ஓர் அழகு மதலை; அவள் – அவ்வாறு ஈன்றெடுத்தது — அவ் ஆதிமுதலை; அதைத்தான் ஆதிசங்கரர் ஆக்கியது — ஓர் ஆற்று முதலை!
காலடி பிறந்தவன் காலடி பதிந்திடாத நாலடி — இந்த நாட்டினில் இல்லை; திரு – மாலடி போற்றி — அவன்
மொழிந்த பஜகோவிந்தம் போல் நூலடியொன்று — பிற நூலோர் ஏட்டினில் இல்லை !
‘அவன்தான் – இவன்; இவன்தான் அவன்!’
எனும்படி — இங்கு எழுந்தருளினான்….
காஞ்சி – காமகோடி — ஸ்ரீ சந்திர சேகரேந்திர – சரஸ்வதி; அந்த இமயநதிக்கு இணையான — ஒரு சமய நதி!
துவராடை தரித்த திருவாசகத்தை; இரு கால்கொண்டு — ஒற்றைக் கோல்கொண்டு — இப் படிமிசை உலவிய — அத்வைதப் பெருவாசகத்தை;
கயிலைநீங்கி காஞ்சிவந்த — ஞான வெயிலை; மன்பதையின் – அவத்தைப் போக்க பவத்தைப் போக்க – தவத்தைப் புரிந்த சிவத்தை;
அரிசிப் பொறி அருந்தி –
அஞ்சு பொறி அவித்த….
நுழைபுலம் மிக்க — ஒரு நூற்றாண்டுக் கிழவனை; நம் நெஞ்சை — ஒரு நஞ்சை நிலமாக்க — விழி நாஞ்சில் கொண்டு நாளும் உழுத உழவனை;
அரசுமுதல் ஆண்டிவரை – அறியும் ‘பெரியவாள்’ என்று; அழுக்கு மனங்களில் அப்பிக் கிடக்கும் – அவலப் புதர்களை அரியும் பெரிய வாள் என்று!
– கவிஞர் வாலி Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam
|
|
|
Post by krsiyer on Jun 2, 2012 11:29:39 GMT 5.5
arunmai thanks for sharing jaya jaya sankara, hara hara sankara !
|
|
|
Post by mahajadam on Jun 2, 2012 13:37:10 GMT 5.5
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடும் மானிட மனம் ........
|
|
|
Post by radha on Jun 2, 2012 15:05:02 GMT 5.5
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடும் மானிட மனம்
|
|
|
Post by hemalathak on Jun 7, 2012 21:50:41 GMT 5.5
SHREE KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM. OH! WHAT AN EXCELLANT POETICAL COMPARISON OF THE SHREE MAHA PERIVAAL AS OUR DEFENDING FORCE LIKE THE SHARPEST AND LONGEST KNIEF (PERIAVAALLL) AZHUKKU MANAMGALIL APPIKIDAKKUM AVALAPPUDARGALAI ARUKKUM PERIAVAALL OH OUR SPIRITUAL AND AS WELL AS HUMANE CAPTAIN OUR BELOVED PERIVA.
|
|