Post by radha on Aug 1, 2015 2:21:25 GMT 5.5
OM SRI GURUPYONAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
ஆலயங்களின் அருமையான அங்கம், திருக்குளம். ""நீரின்றி அமையாது உலகு'' என்ற வள்ளவ வரிகளும், ""வரப்புயர'' என்ற ஒளவையின் வாழ்த்தும், ""மாமழை போற்றதும்'' என்ற சிலம்பின் சீறடியும், ""நீராதரத்தில்தான் பொருளாதாரம் அடங்கியிருக்கிறது'' என்று உணர்த்துகின்றன. ""கோயிலும் குளமும்'' என்பதே வழக்கு மொழி. புறந்தூய்மைக்கு திருக்குளமும், அகத்தூய்மைக்கு ஆலயமும் அடையாளம் !
பரிபாடல் காலத்திலிருந்தே புகழ்பெற்ற திருமாலிருஞ்÷õலை என்னும் அழகர்கோயிலில், சிலம்பாறுதான் புனித தீர்த்தம். ""நூபுர கங்கை'' என்று பெருமையாய்ச் சொல்வார்கள். எப்பேர்ப்பட்ட கோடையிலும், நீர் சுரக்கும் ஜீவசுனை அது. காஞ்சிபுரம், அத்திகிரியில் எழுந்தருளியுள்ள வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் திருக்குளம் அனந்தசரஸ். இதற்குள்தான், அத்திமரத்தால் ஆன வரதரின் திருமேனி பாதுகாப்பாய் வைக்கப்பட்டிருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார் இந்த அத்திவரதர்.
4448 நோய்களைத் தீர்க்கும் மிருத்திகையை (மண்ணை) மருந்தாகத் தருபவர் வைத்தியநாத ஸ்வாமி. வைத்தீஸ்வரன் கோயில் என்னும் புள்ளிருக்கும் வேளூரில் உள்ள இந்தக் கோயிலின் ""சித்தாமிர்த தீர்த்தம்'' மிகச் சிறப்பு வாய்ந்தது.
இந்தத் தலத்துக்கு வந்து சேர்ந்தான் நையாண்டிக்குப் பெயர்போன காளமேகம். இங்கே எழுந்தருளியுள்ள பெருமானைப் பார்த்ததும், அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது. என்ன கேள்வி தெரியுமா ?
""கண்ணிலே நெருப்பு (நெற்றிக்கண்); கையிலே நெருப்பு (தாருகாவன முனிவர்கள் ஏவியது) ; சிரிப்பிலே நெருப்பு (திரிபுர சம்ஹாரத்தின்போது வெளிப்பட்டது) ; உடலும் நெருப்பு (அடிமுடி காணமுடியாத அனல் பிழம்பாய், அண்ணாமலையில் வெளிப்பட்டது). இப்படி நெருப்பு மயமாய் இருக்கும் உன்னோடு, இந்தப் பெண் (தையலாள்) எப்படிச் சேர்ந்தாள் ?'' - இதுதான் காளமேகத்தின் கேள்வி.
""தீத்தான் உன் கண்ணிலே ; தீத்தான் உன் கையிலே ;
தீத்தானும் உந்தன் சிரிப்பிலே - தீத்தானுன்
மெய்யெலாம்; புள்ளிருக்கும் வேளூரா ! உன்னையித்
தையலாள் எப்படிச் சேர்ந்தாள் ?
""தையல்'' என்பதற்கு பெண் என்றும் பொருள். அதே சமயம், வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள அம்பிகையின் பெயரும் தையல்நாயகிதான் !
பிரம்மஹத்தி தோஷம், சித்தப்பிரமை உள்ளிட்ட பிணிகளை அகற்றும் சிறப்பு வாய்ந்தது தாமரைத் தடாகம் என்னும் ஸ்வேதபுஷ்கரணி.இந்த திருக்குளத்தில் நீராடி, அண்ணன் பெருமாளை வழிபட்டால், தோஷங்கள் நிவர்த்தியாகின்றன என்பது பக்தர்கள் அனுபவம். இது அமைந்துள்ள தலம், திருவெள்ளக் குளம். ""அண்ணன் கோயில்'' என்றால் பலருக்கும் தெரியும்.
இதே பலனை அளிக்கக்கூடிய பிரம்மதீர்த்தம் என்னும் திருக்குளத்தைக் கொண்டது திருமுருகன்பூண்டி. முருகநாதர் என்ற பெயருடன் சிவபிரான் அருள்பாலிக்கும் தலம் இது. இங்கே சுந்தரருடன் அவர் நடத்திய விளையாட்டு சுவாரஸ்யமானது.
திருக்குளம் என்றால் தவிர்க்க முடியாதது திருநள்ளாற்றின் நளதீர்த்தம். நளன் ஏற்படுத்திய இந்தத் திருக்குளத்தில் நீராடி, தர்ப்பாரண்யேஸ்வரரையும், தேவியையும் வழிபட்டு, தனிச்சன்னதியில் இருக்கும் சனீஸ்வரருக்கு வழிபாடு செய்வது இங்கு விஷேஷம். சனிப்பெயர்ச்சி இங்கு பிரசித்தமான திருவிழா. திருஞான சம்பந்தர், மதுரையில் சமணர்களுடன் நடத்திய அனல் வாதத்தின் போது, நெருப்பில் இட்ட ஏடு ""போகமார்ந்த பூண்முலையாள்'' என்று தொடங்கும் நள்ளாற்றுப் பாசுரம்தான் !
நக்கீரனோடு சிவபிரான் புலமைவாதம் செய்த, திருவாலவாயின் பொற்றாமரைக் குளம், தமிழின் தலைக்குளம் ! ""சங்கப்பலகை இல்லாது போனாலும், மங்காத தமிழுண்டு மகிழ்வதற்கு'' என்று நினைவுறுத்துகிறது மதுரையின் பொற்றாமரைக் குளம் !
தமிகத்தின் புகழ்வாய்ந்த திருக்குளம் என்று சொன்னால், அது கும்பகோணத்தின் மகாமகத் திருக்குளம்தான். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, இங்கே நடக்கும் கும்பமேளா மிகப்பிரபலமானது. இங்கு மட்டுமல்ல, வட இந்தியாவில் பிரயாகை (அலகாபாத்), ஹரித்வார், உஜ்ஜையினி, நாசிக் என்று நான்கு இடங்களில் இந்தக் கும்பமேளா நடக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனக்கூட்டம் சேர்கின்ற, சமயம் சார்ந்த வைபவம் இது.
கும்பமேளா சமயத்தில சகல நதி தேவதைகளும் அங்கே எழுந்தருள்கிறார்கள் என்பது புராணம். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில், சப்த நதி தேவதைகளும் சிலா ரூபத்தில் தனிக்கோயில் கொண்டுள்ளனர்.
திருவாரூரில் இருந்து திருக்கோளிலி என்னும் திருக்குவளை செல்லும் வழியில் உள்ளது திருநெய்ப்பேறு (இன்றைய பெயர் ஏமப்பேரூர்). இங்கே பிறந்த நமிநந்தியடிகள், சமணர்களின் ஏளனத்தைப் பொறுக்கமாட்டாமல், திருக்குளத்தின் நீரையே ஊற்றி விளக்கேற்றினார் என்கிறது பெரிய புராணம். பார்வையற்றரான தாண்டியடிகள் நாயனார், நீளமான கயிற்றைப் பிடித்தபடி திருக்குளத்தில் இறங்கித் தூர்வாரினார் என்றும் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார். கோயில்களின் சிறப்புக்காக மட்டுமல்ல; ஊரின் நன்மையையும் முன்னிருத்தி அமைந்தவை திருக்குளங்கள்.
""நிலத் தேவைக்காக நீர்க்கால்களை அடைக்காதே. அதனால், உன் வாழ்வாதாரம் அடைபட்டுப் போய்விடும். தூர்வாரப்படாத குளங்கள், பூச்சிகளின் வாழ்விடம்; நோய்க்கு வேர். அத்தகைய தூர்வாராத குளமாக இருக்காதே. உன்னில் கலந்துள்ள அழுக்கு-வெறுப்பு, கோபம், பொறாமை உள்ளிட்ட கசடுகளைத் தூர் எடு. அதனால், குளத்துநீர் பலருக்கும் பயன்படுவதுபோல, நீயும் பலருக்கும் நலம் செய்பவனாக இருப்பாய்.
குளத்துக்கு உண்டான குளிர்ச்சி உன் மனத்திலும் பேச்சிலும் பார்வையிலும் எப்போதும் இருக்கட்டும். உனக்கும் புனிதம் கிடைக்கும்.'' என்று திருக்குளங்கள் சொல்வதுபோலத் தோன்றுகிறது. இது மட்டுமல்ல; திருக்குளத்தில் ஓர் ஆச்சர்யம் உண்டு. சச்சதுரமாக, ஸ்வஸ்திக் வடிவாக, நீள்சதுரமாக,
எண்கோணமாகவும்கூட அமைந்திருக்கின்றன திருக்குளங்கள். இதில் ஆச்சர்யம் என்ன என்று தோன்றுகிறதா ? ""வடிவம் எப்படி இருந்தால் என்ன ? அதனுள் இருப்பதென்னவோ ஒரே தண்ணீர்தான் !
உலகிலுள்ள உயிர்கள் எல்லாம் அதைப் போலத்தான். வடிவங்கள் வெவ்வேறு ; ஆத்மா ஒன்றே !
அட ! அருமையான அத்வைத ஞானத்தைப் பேசுகின்றன இந்தத் திருக்குளங்கள் !
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
ஆலயங்களின் அருமையான அங்கம், திருக்குளம். ""நீரின்றி அமையாது உலகு'' என்ற வள்ளவ வரிகளும், ""வரப்புயர'' என்ற ஒளவையின் வாழ்த்தும், ""மாமழை போற்றதும்'' என்ற சிலம்பின் சீறடியும், ""நீராதரத்தில்தான் பொருளாதாரம் அடங்கியிருக்கிறது'' என்று உணர்த்துகின்றன. ""கோயிலும் குளமும்'' என்பதே வழக்கு மொழி. புறந்தூய்மைக்கு திருக்குளமும், அகத்தூய்மைக்கு ஆலயமும் அடையாளம் !
பரிபாடல் காலத்திலிருந்தே புகழ்பெற்ற திருமாலிருஞ்÷õலை என்னும் அழகர்கோயிலில், சிலம்பாறுதான் புனித தீர்த்தம். ""நூபுர கங்கை'' என்று பெருமையாய்ச் சொல்வார்கள். எப்பேர்ப்பட்ட கோடையிலும், நீர் சுரக்கும் ஜீவசுனை அது. காஞ்சிபுரம், அத்திகிரியில் எழுந்தருளியுள்ள வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் திருக்குளம் அனந்தசரஸ். இதற்குள்தான், அத்திமரத்தால் ஆன வரதரின் திருமேனி பாதுகாப்பாய் வைக்கப்பட்டிருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார் இந்த அத்திவரதர்.
4448 நோய்களைத் தீர்க்கும் மிருத்திகையை (மண்ணை) மருந்தாகத் தருபவர் வைத்தியநாத ஸ்வாமி. வைத்தீஸ்வரன் கோயில் என்னும் புள்ளிருக்கும் வேளூரில் உள்ள இந்தக் கோயிலின் ""சித்தாமிர்த தீர்த்தம்'' மிகச் சிறப்பு வாய்ந்தது.
இந்தத் தலத்துக்கு வந்து சேர்ந்தான் நையாண்டிக்குப் பெயர்போன காளமேகம். இங்கே எழுந்தருளியுள்ள பெருமானைப் பார்த்ததும், அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது. என்ன கேள்வி தெரியுமா ?
""கண்ணிலே நெருப்பு (நெற்றிக்கண்); கையிலே நெருப்பு (தாருகாவன முனிவர்கள் ஏவியது) ; சிரிப்பிலே நெருப்பு (திரிபுர சம்ஹாரத்தின்போது வெளிப்பட்டது) ; உடலும் நெருப்பு (அடிமுடி காணமுடியாத அனல் பிழம்பாய், அண்ணாமலையில் வெளிப்பட்டது). இப்படி நெருப்பு மயமாய் இருக்கும் உன்னோடு, இந்தப் பெண் (தையலாள்) எப்படிச் சேர்ந்தாள் ?'' - இதுதான் காளமேகத்தின் கேள்வி.
""தீத்தான் உன் கண்ணிலே ; தீத்தான் உன் கையிலே ;
தீத்தானும் உந்தன் சிரிப்பிலே - தீத்தானுன்
மெய்யெலாம்; புள்ளிருக்கும் வேளூரா ! உன்னையித்
தையலாள் எப்படிச் சேர்ந்தாள் ?
""தையல்'' என்பதற்கு பெண் என்றும் பொருள். அதே சமயம், வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள அம்பிகையின் பெயரும் தையல்நாயகிதான் !
பிரம்மஹத்தி தோஷம், சித்தப்பிரமை உள்ளிட்ட பிணிகளை அகற்றும் சிறப்பு வாய்ந்தது தாமரைத் தடாகம் என்னும் ஸ்வேதபுஷ்கரணி.இந்த திருக்குளத்தில் நீராடி, அண்ணன் பெருமாளை வழிபட்டால், தோஷங்கள் நிவர்த்தியாகின்றன என்பது பக்தர்கள் அனுபவம். இது அமைந்துள்ள தலம், திருவெள்ளக் குளம். ""அண்ணன் கோயில்'' என்றால் பலருக்கும் தெரியும்.
இதே பலனை அளிக்கக்கூடிய பிரம்மதீர்த்தம் என்னும் திருக்குளத்தைக் கொண்டது திருமுருகன்பூண்டி. முருகநாதர் என்ற பெயருடன் சிவபிரான் அருள்பாலிக்கும் தலம் இது. இங்கே சுந்தரருடன் அவர் நடத்திய விளையாட்டு சுவாரஸ்யமானது.
திருக்குளம் என்றால் தவிர்க்க முடியாதது திருநள்ளாற்றின் நளதீர்த்தம். நளன் ஏற்படுத்திய இந்தத் திருக்குளத்தில் நீராடி, தர்ப்பாரண்யேஸ்வரரையும், தேவியையும் வழிபட்டு, தனிச்சன்னதியில் இருக்கும் சனீஸ்வரருக்கு வழிபாடு செய்வது இங்கு விஷேஷம். சனிப்பெயர்ச்சி இங்கு பிரசித்தமான திருவிழா. திருஞான சம்பந்தர், மதுரையில் சமணர்களுடன் நடத்திய அனல் வாதத்தின் போது, நெருப்பில் இட்ட ஏடு ""போகமார்ந்த பூண்முலையாள்'' என்று தொடங்கும் நள்ளாற்றுப் பாசுரம்தான் !
நக்கீரனோடு சிவபிரான் புலமைவாதம் செய்த, திருவாலவாயின் பொற்றாமரைக் குளம், தமிழின் தலைக்குளம் ! ""சங்கப்பலகை இல்லாது போனாலும், மங்காத தமிழுண்டு மகிழ்வதற்கு'' என்று நினைவுறுத்துகிறது மதுரையின் பொற்றாமரைக் குளம் !
தமிகத்தின் புகழ்வாய்ந்த திருக்குளம் என்று சொன்னால், அது கும்பகோணத்தின் மகாமகத் திருக்குளம்தான். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, இங்கே நடக்கும் கும்பமேளா மிகப்பிரபலமானது. இங்கு மட்டுமல்ல, வட இந்தியாவில் பிரயாகை (அலகாபாத்), ஹரித்வார், உஜ்ஜையினி, நாசிக் என்று நான்கு இடங்களில் இந்தக் கும்பமேளா நடக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனக்கூட்டம் சேர்கின்ற, சமயம் சார்ந்த வைபவம் இது.
கும்பமேளா சமயத்தில சகல நதி தேவதைகளும் அங்கே எழுந்தருள்கிறார்கள் என்பது புராணம். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில், சப்த நதி தேவதைகளும் சிலா ரூபத்தில் தனிக்கோயில் கொண்டுள்ளனர்.
திருவாரூரில் இருந்து திருக்கோளிலி என்னும் திருக்குவளை செல்லும் வழியில் உள்ளது திருநெய்ப்பேறு (இன்றைய பெயர் ஏமப்பேரூர்). இங்கே பிறந்த நமிநந்தியடிகள், சமணர்களின் ஏளனத்தைப் பொறுக்கமாட்டாமல், திருக்குளத்தின் நீரையே ஊற்றி விளக்கேற்றினார் என்கிறது பெரிய புராணம். பார்வையற்றரான தாண்டியடிகள் நாயனார், நீளமான கயிற்றைப் பிடித்தபடி திருக்குளத்தில் இறங்கித் தூர்வாரினார் என்றும் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார். கோயில்களின் சிறப்புக்காக மட்டுமல்ல; ஊரின் நன்மையையும் முன்னிருத்தி அமைந்தவை திருக்குளங்கள்.
""நிலத் தேவைக்காக நீர்க்கால்களை அடைக்காதே. அதனால், உன் வாழ்வாதாரம் அடைபட்டுப் போய்விடும். தூர்வாரப்படாத குளங்கள், பூச்சிகளின் வாழ்விடம்; நோய்க்கு வேர். அத்தகைய தூர்வாராத குளமாக இருக்காதே. உன்னில் கலந்துள்ள அழுக்கு-வெறுப்பு, கோபம், பொறாமை உள்ளிட்ட கசடுகளைத் தூர் எடு. அதனால், குளத்துநீர் பலருக்கும் பயன்படுவதுபோல, நீயும் பலருக்கும் நலம் செய்பவனாக இருப்பாய்.
குளத்துக்கு உண்டான குளிர்ச்சி உன் மனத்திலும் பேச்சிலும் பார்வையிலும் எப்போதும் இருக்கட்டும். உனக்கும் புனிதம் கிடைக்கும்.'' என்று திருக்குளங்கள் சொல்வதுபோலத் தோன்றுகிறது. இது மட்டுமல்ல; திருக்குளத்தில் ஓர் ஆச்சர்யம் உண்டு. சச்சதுரமாக, ஸ்வஸ்திக் வடிவாக, நீள்சதுரமாக,
எண்கோணமாகவும்கூட அமைந்திருக்கின்றன திருக்குளங்கள். இதில் ஆச்சர்யம் என்ன என்று தோன்றுகிறதா ? ""வடிவம் எப்படி இருந்தால் என்ன ? அதனுள் இருப்பதென்னவோ ஒரே தண்ணீர்தான் !
உலகிலுள்ள உயிர்கள் எல்லாம் அதைப் போலத்தான். வடிவங்கள் வெவ்வேறு ; ஆத்மா ஒன்றே !
அட ! அருமையான அத்வைத ஞானத்தைப் பேசுகின்றன இந்தத் திருக்குளங்கள் !
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM