Post by Sumi on May 31, 2012 9:58:08 GMT 5.5
Source: Maha Periyavaal Darisana Anubhavangal
Part 6
"என் பெண்ணுக்கு இருதயத்தில் ஓட்டை இருக்கிறதாம். டாக்டர்கள் சொல்வதை கேட்டாலே குலை நடுங்குறது" என்று முறையிட்டார் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர்.
"அதாவது, ஹார்ட், ஹோலா இல்லை; அதில் ஹோல் இருக்கு என்கிறே?"
ஆசிரியருக்கு புரியவில்லை. கேள்வி கேட்டு பழக்கம். கேள்வி கேட்கப்பட்டு பழக்கம் இல்லை.
"ஹார்ட், W-H-O-L-E ஆக (முழுமையாக, பூரணமாக) இல்லை; அதில், H-O-L-E இருக்கு என்கிறே?"
ஆசிரியர் பெருமூச்சு விட்டார். (அவரை பெஞ்சு மேல் நிற்க சொல்லவில்லை, பெரியவா!)
"வேறே என்ன வேலை பண்றே?"
ஆசிரியர் விழித்தார். "நான் ஆசிரியத் தொழிலை தவிர வேறு வேலையும் செய்கிறேன்' என்பது பெரியவாளுக்கு எப்படி தெரியும்? "வேறு வேலை எதுவும் இல்லை" என்று சொல்லிவிட்டால் போகிறது! பெரியவாள் குடைந்து கொண்டா இருக்க போகிறார்கள்?
அந்த தெய்வ சந்தியில் பொய்சொல் வெளியே வர அஞ்சியது போலும்!
"தங்கம், வைரம்... வியாபாரம்..." என்று மென்று விழுங்கினார்.
பெரியவாள் கனிவுடன் சொன்னார்கள்:
"பெரிய பெரிய வியாதியெல்லாம் கூட, தான - தர்மங்கள் செய்தால் போய்விடும் என்று சொல்லியிருக்கு. இங்கே ஏழைகள் வந்து, கல்யாணத்துக்குத் திருமாங்கல்யம் கேட்கிறார்கள். நூற்றெட்டு திருமாங்கல்யம் செய்து வந்து கொடு. கேட்பவர்களுக்கு கொடுக்கலாம்..."
அடுத்த மாதமே நூற்றெட்டு திருமாங்கல்யம் கொண்டு வந்து சமர்பித்தார், ஆசிரியர் பணி செய்யும் தங்க வியாபாரி.
"Good - hearted ன்னு இங்கிலிஷ்லே சொல்லுவா. நீயும் உன் புத்திரியும் good - hearted!" என்றார்கள் பெரியவாள்.
அப்புறம், பெரியவாள் வாக்குக்கு மேலே என்ன மருந்து வேண்டும்?
தேவாமிர்தம் பருகியவனுக்கு பாயசம் எதற்கு?
ஆசிரியரின் பெண் சௌபாக்யவதியாக இருக்கிறாள் - whole hearted ஆக!
Part 6
"என் பெண்ணுக்கு இருதயத்தில் ஓட்டை இருக்கிறதாம். டாக்டர்கள் சொல்வதை கேட்டாலே குலை நடுங்குறது" என்று முறையிட்டார் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர்.
"அதாவது, ஹார்ட், ஹோலா இல்லை; அதில் ஹோல் இருக்கு என்கிறே?"
ஆசிரியருக்கு புரியவில்லை. கேள்வி கேட்டு பழக்கம். கேள்வி கேட்கப்பட்டு பழக்கம் இல்லை.
"ஹார்ட், W-H-O-L-E ஆக (முழுமையாக, பூரணமாக) இல்லை; அதில், H-O-L-E இருக்கு என்கிறே?"
ஆசிரியர் பெருமூச்சு விட்டார். (அவரை பெஞ்சு மேல் நிற்க சொல்லவில்லை, பெரியவா!)
"வேறே என்ன வேலை பண்றே?"
ஆசிரியர் விழித்தார். "நான் ஆசிரியத் தொழிலை தவிர வேறு வேலையும் செய்கிறேன்' என்பது பெரியவாளுக்கு எப்படி தெரியும்? "வேறு வேலை எதுவும் இல்லை" என்று சொல்லிவிட்டால் போகிறது! பெரியவாள் குடைந்து கொண்டா இருக்க போகிறார்கள்?
அந்த தெய்வ சந்தியில் பொய்சொல் வெளியே வர அஞ்சியது போலும்!
"தங்கம், வைரம்... வியாபாரம்..." என்று மென்று விழுங்கினார்.
பெரியவாள் கனிவுடன் சொன்னார்கள்:
"பெரிய பெரிய வியாதியெல்லாம் கூட, தான - தர்மங்கள் செய்தால் போய்விடும் என்று சொல்லியிருக்கு. இங்கே ஏழைகள் வந்து, கல்யாணத்துக்குத் திருமாங்கல்யம் கேட்கிறார்கள். நூற்றெட்டு திருமாங்கல்யம் செய்து வந்து கொடு. கேட்பவர்களுக்கு கொடுக்கலாம்..."
அடுத்த மாதமே நூற்றெட்டு திருமாங்கல்யம் கொண்டு வந்து சமர்பித்தார், ஆசிரியர் பணி செய்யும் தங்க வியாபாரி.
"Good - hearted ன்னு இங்கிலிஷ்லே சொல்லுவா. நீயும் உன் புத்திரியும் good - hearted!" என்றார்கள் பெரியவாள்.
அப்புறம், பெரியவாள் வாக்குக்கு மேலே என்ன மருந்து வேண்டும்?
தேவாமிர்தம் பருகியவனுக்கு பாயசம் எதற்கு?
ஆசிரியரின் பெண் சௌபாக்யவதியாக இருக்கிறாள் - whole hearted ஆக!