Post by radha on May 23, 2015 14:14:30 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக பெருந்திருவிழா 10
நாட்கள் நடைபெறும்.
அதே போல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி 10
நாட்களும் தினமும் அதிகாலையில் சிறப்பு கணபதி ஹோமம் நடக்கிறது.
1-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருக்கொடி ஏற்றமும்
நடந்தது. பின்னர் காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது.
இன்று மாலை 6 மணிக்கு சமய உரை, இரவு 7
மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி, 9 மணிக்கு தேவி பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிழா நாட்களில் தினமும் அம்மன் விதவிதமான வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 7-ம்
திருவிழாவான 29-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பல்லக்கில் தேவி வீதி உலா வருதலும், 8-ம் திருவிழாவான 30-ந் தேதி இரவு 9
மணிக்கு பூப்பந்தல் வாகனத்தில் தேவி வீதி உலா வருதலும் நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9-ம் திருவிழா அன்று காலையில் தேரோட்டம் நடக்கிறது. காலை 7.30 மணிக்கு மேல் 8 மணிக்குள்
தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலைக்கு வருகிறது.
இதனையடுத்து பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு மண்டகப்படியும், இரவு 7.30 மணிக்கு இன்னிசை கச்சேரியும், 8
மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும், 9 மணிக்கு வெள்ளிக்கலைமான் வாகனத்தில் தேவி வீதி உலா வருதலும் நடக்கிறது.
10-ம் திருவிழாவான ஜூன் 1-ந் தேதி காலை 6.30 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும், 10 மணிக்கு சிறப்பு
அபிஷேகமும், இரவு 9 மணிக்கு வாணவேடிக்கையுடன் தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக பெருந்திருவிழா 10
நாட்கள் நடைபெறும்.
அதே போல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி 10
நாட்களும் தினமும் அதிகாலையில் சிறப்பு கணபதி ஹோமம் நடக்கிறது.
1-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருக்கொடி ஏற்றமும்
நடந்தது. பின்னர் காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது.
இன்று மாலை 6 மணிக்கு சமய உரை, இரவு 7
மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி, 9 மணிக்கு தேவி பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிழா நாட்களில் தினமும் அம்மன் விதவிதமான வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 7-ம்
திருவிழாவான 29-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பல்லக்கில் தேவி வீதி உலா வருதலும், 8-ம் திருவிழாவான 30-ந் தேதி இரவு 9
மணிக்கு பூப்பந்தல் வாகனத்தில் தேவி வீதி உலா வருதலும் நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9-ம் திருவிழா அன்று காலையில் தேரோட்டம் நடக்கிறது. காலை 7.30 மணிக்கு மேல் 8 மணிக்குள்
தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலைக்கு வருகிறது.
இதனையடுத்து பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு மண்டகப்படியும், இரவு 7.30 மணிக்கு இன்னிசை கச்சேரியும், 8
மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும், 9 மணிக்கு வெள்ளிக்கலைமான் வாகனத்தில் தேவி வீதி உலா வருதலும் நடக்கிறது.
10-ம் திருவிழாவான ஜூன் 1-ந் தேதி காலை 6.30 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும், 10 மணிக்கு சிறப்பு
அபிஷேகமும், இரவு 9 மணிக்கு வாணவேடிக்கையுடன் தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM