Post by radha on Apr 17, 2015 9:21:27 GMT 5.5
OM SRi GURKUPYO NAMAHA,RESPECTFULPRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
Q
பிறந்தநாள் அன்று விளக்கேற்றுங்கள்... ஊதி அணைக்காதீர்கள்!
அம்பத்தூர் விவேகானந்தா வித்யாலயாவில் 2ஆம் ஆண்டு ஸ்ரீ வசந்த நவராத்திரி மஹோத்ஸவம் மற்றும் வேதஸம்மேளனம் ஆகிய விழாவை ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ அனுக்ரஹா அறக்கட்டளை நிகழ்த்தியது. 7 நாட்கள் நிகழ்ந்த இந்நிகழ்வில் உலக நன்மை வேண்டி உபன்யாசம், வேத பாராயணம், கணபதி ஹோமம், சண்டி ஹோமம், சுப்ரமண்ய ஹோமம், வனதுர்கை ஹோமம், ருத்ர ஹோமம், தன்வந்திரி ஹோமம், மேதா தட்சினாமூர்தி ஹோமம் ஆகியவை நிகழ்ந்தன.
தினமும் உலகை காப்பாற்றும் வேதத்தை நாம் காப்பாற்றும் வகையில் வேதமும் தற்கால வாழ்க்கையும் என்ற தலைப்பில் ப்ரம்மஸ்ரீ கிருஷ்னமூர்த்தி சாஸ்திரிகள் அவர்களால் உபன்யாஸம் வழங்கப்பட்டது. “வேதங்கள் என்பது மரம், செடி, கொடி, போன்றது. ஆடு, மாடுகளிடமிருந்து செடிகளை பேணுவது போல நமது முன்னோர்கள் அருளிய வேதங்களை நாம் அழித்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்” என்று அனைவரையும் உரிமையுடன் வேண்டினார்.
இந்நிகழ்ச்சியின் நிறைவு நாள் அன்று காஞ்சி ஸ்ரீஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்புரை நிகழ்த்தினார். “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுஷ்டானம் இருந்தாலும் பொதுவாக ஒன்று சேரும் போது அனைவருக்கும் ஒருமித்த கருத்தும், சிந்தையும் நம் மக்களிடையே உண்டு. இந்த ஒற்றுமையை ஆன்மீக வழியிலும், சேவை மனப்பான்மையிலும், பக்தியிலும் இணைத்த மஹான் காஞ்சி மஹா பெரியவா. வேதங்களின் வாசகத்தில் பலரும் கேட்க உள்ள ஐயங்களை தன்னிடம் தானே கேட்டு, தானும் தெளிவு பெற்று, பிறரையும் தெளிவு படுத்தியவர் அவர். இன்று நாம் பின்பற்றும் பல வேத குறிப்புகளும் நன்னெரிகளும் அவர் போன்றவர்களிடமிருந்தே நமக்கு வந்தது.” என்று மஹா பெரியவா பெருமையை நினைவூட்டினார்.
“கர்மாக்களை மனிதர்கள் விடக்கூடாது, கர்மாக்கள் தான் மனிதர்களை விட வேண்டும். இறைவனே வேதங்களை காப்பாற்றுவதற்குதான் மீனாக முதலில் அவதாரம் எடுத்தார். மனிதர்களாகிய நாம் அதனை தவறாது பின்பற்ற வேண்டும். வீட்டில் பிறந்தநாள் அன்று விளக்கேற்றுங்கள், ஊதி அணைக்காதீர்கள். ஆயுஷ்ஹோமம், நாமகர்மா ஆகிய அனைத்தும் பின்பற்றுங்கள். இல்லத்து ஸ்த்ரீகள் பங்களிப்பும் மிக முக்கியம்” என்று கர்மாவை பின்பற்ற அறிவுரைத்தார்
“நமது நாடு பல இடையூறுகளிடையே இருந்தாலும் இவ்வளவு வளர்ச்சி அடந்துள்ளது என்றால், அதற்கு முக்கிய காரணம் நமது நாடு. முதலில் ஆன்மீக வளர்ச்சி கண்ட பின்பு தான் பிற துறை வளர்ச்சி காண்கிறது. அதற்கு ஆன்மீகமும் உறுதுணையாக இருக்கிறது. ஆகவே இந்த ஆன்மீகம் மக்களிடம் சென்று அடைய வேண்டும்” எனக் கூறி தனது உபன்யாஸத்தை முடித்துக்கொண்டு வித்வான்களை கௌரவிக்கும் வகையில் பட்டமும், விருதுகளும் வழங்கினார்.
-ச.சந்திரமௌலி In AVAL VIKATAN
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Q
பிறந்தநாள் அன்று விளக்கேற்றுங்கள்... ஊதி அணைக்காதீர்கள்!
அம்பத்தூர் விவேகானந்தா வித்யாலயாவில் 2ஆம் ஆண்டு ஸ்ரீ வசந்த நவராத்திரி மஹோத்ஸவம் மற்றும் வேதஸம்மேளனம் ஆகிய விழாவை ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ அனுக்ரஹா அறக்கட்டளை நிகழ்த்தியது. 7 நாட்கள் நிகழ்ந்த இந்நிகழ்வில் உலக நன்மை வேண்டி உபன்யாசம், வேத பாராயணம், கணபதி ஹோமம், சண்டி ஹோமம், சுப்ரமண்ய ஹோமம், வனதுர்கை ஹோமம், ருத்ர ஹோமம், தன்வந்திரி ஹோமம், மேதா தட்சினாமூர்தி ஹோமம் ஆகியவை நிகழ்ந்தன.
தினமும் உலகை காப்பாற்றும் வேதத்தை நாம் காப்பாற்றும் வகையில் வேதமும் தற்கால வாழ்க்கையும் என்ற தலைப்பில் ப்ரம்மஸ்ரீ கிருஷ்னமூர்த்தி சாஸ்திரிகள் அவர்களால் உபன்யாஸம் வழங்கப்பட்டது. “வேதங்கள் என்பது மரம், செடி, கொடி, போன்றது. ஆடு, மாடுகளிடமிருந்து செடிகளை பேணுவது போல நமது முன்னோர்கள் அருளிய வேதங்களை நாம் அழித்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்” என்று அனைவரையும் உரிமையுடன் வேண்டினார்.
இந்நிகழ்ச்சியின் நிறைவு நாள் அன்று காஞ்சி ஸ்ரீஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்புரை நிகழ்த்தினார். “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுஷ்டானம் இருந்தாலும் பொதுவாக ஒன்று சேரும் போது அனைவருக்கும் ஒருமித்த கருத்தும், சிந்தையும் நம் மக்களிடையே உண்டு. இந்த ஒற்றுமையை ஆன்மீக வழியிலும், சேவை மனப்பான்மையிலும், பக்தியிலும் இணைத்த மஹான் காஞ்சி மஹா பெரியவா. வேதங்களின் வாசகத்தில் பலரும் கேட்க உள்ள ஐயங்களை தன்னிடம் தானே கேட்டு, தானும் தெளிவு பெற்று, பிறரையும் தெளிவு படுத்தியவர் அவர். இன்று நாம் பின்பற்றும் பல வேத குறிப்புகளும் நன்னெரிகளும் அவர் போன்றவர்களிடமிருந்தே நமக்கு வந்தது.” என்று மஹா பெரியவா பெருமையை நினைவூட்டினார்.
“கர்மாக்களை மனிதர்கள் விடக்கூடாது, கர்மாக்கள் தான் மனிதர்களை விட வேண்டும். இறைவனே வேதங்களை காப்பாற்றுவதற்குதான் மீனாக முதலில் அவதாரம் எடுத்தார். மனிதர்களாகிய நாம் அதனை தவறாது பின்பற்ற வேண்டும். வீட்டில் பிறந்தநாள் அன்று விளக்கேற்றுங்கள், ஊதி அணைக்காதீர்கள். ஆயுஷ்ஹோமம், நாமகர்மா ஆகிய அனைத்தும் பின்பற்றுங்கள். இல்லத்து ஸ்த்ரீகள் பங்களிப்பும் மிக முக்கியம்” என்று கர்மாவை பின்பற்ற அறிவுரைத்தார்
“நமது நாடு பல இடையூறுகளிடையே இருந்தாலும் இவ்வளவு வளர்ச்சி அடந்துள்ளது என்றால், அதற்கு முக்கிய காரணம் நமது நாடு. முதலில் ஆன்மீக வளர்ச்சி கண்ட பின்பு தான் பிற துறை வளர்ச்சி காண்கிறது. அதற்கு ஆன்மீகமும் உறுதுணையாக இருக்கிறது. ஆகவே இந்த ஆன்மீகம் மக்களிடம் சென்று அடைய வேண்டும்” எனக் கூறி தனது உபன்யாஸத்தை முடித்துக்கொண்டு வித்வான்களை கௌரவிக்கும் வகையில் பட்டமும், விருதுகளும் வழங்கினார்.
-ச.சந்திரமௌலி In AVAL VIKATAN
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM