அனுஷ தின கானம் 13.02.2015
(ஜெய் ஜெகதீஷ ஹரே - மெட்டு )
காஞ்சியில் அமர்ந்தவரே - எங்கள்
நெஞ்சில் நிறைந்தவரே
அஞ்சியே வருவோர்க் கபயம் அளித்து
நெஞ்சம் நெகிழச் செய்யும் - எங்கள்
காஞ்சி மஹா ஸ்வாமியே
தும்பை பூப்போல் சிரிக்கும் தூயவா
அம்பலவாணன் நீரே
குருவே அம்பலவாணன் நீரே
நம்பியே வந்தோர்க் கருள்மழை பொழியும்
நம்பியே வந்தோர்க் கருள்மழை பொழியும்
அம்பிகை குணம் கொண்டவா - எங்கள்
காஞ்சியின் சங்கரரே
ரோஜா இதழ் விரித் தாறுதல் சொல்லிடும்
நடராஜன் நீர் அன்றோ
குருவே நடராஜன் நீர் அன்றோ
ஆஜர் ஆகிடும் அன்பருக் கெல்லாம் (2)
ஜோராய் வரமருளும் - எங்கள்
காஞ்சி ராஜ குருவே
சூரிய காந்தியாய் ஒளிரும் முகம்கொண்ட
சந்திர சேகரரே
காஞ்சி சந்திர சேகரரே
கோரிய வரங்களை நொடியில் அருளும் (2)
ஓரிக்கை சற்குருவே - எங்கள்
காஞ்சி வரதராஜனே
குவளை மலர் போன்ற கண்களை காட்டி
கவலைகள் தீர்த்தருள்வீர்
குருவே கவலைகள் தீர்தருள்வீர்
மூவுலகும் ஆளும் முக்கண்ணன் நீரே (2)
குவலயம் காத்தருள்வீர் - எங்கள்
அவலங்கள் போக்கிடுவீர்
வாழை பூப் போன்ற விரல்கள் காட்டி
வாழ வழி வகுப்பீர்
குருவே வாழ வழி வகுப்பீர்
வழி அறியாமல் விழி பிதுங்கிடவே (2)
விழி வழி காட்டிடுவீர் - எங்கள்
வீழிநாத சிவ குருவே
கமல மலர் போன்ற பாதங்கள் பணிய
மும்மலம் அகன்றிடுமே
எங்கள் மும்மலம் அகன்றிடுமே
நிர்மல குருவே நிம்மதி அருள்வீர் (2)
கண்ணீர் மல்கிடவே - எங்கள்
கண் கண்ட தெய்வம் நீரே
ஹர ஹர சங்கரரே - எங்கள்
ஹர சிவ சங்கரரே
ஜெய ஜெய சங்கரரே - எங்கள்
காஞ்சி சங்கரரே...
-தேனுபுரீஸ்வர தாசன் இல.சங்கர்.
மாடம்பக்கம், சென்னை.
A small request. kindly copy the author's name when u copy and paste anywhere...