Post by anusham163 on Feb 9, 2015 23:19:30 GMT 5.5
On the Shivarathri evening, in the ‘Pradhosha Kalam’, in the year 2012, Sri Ra.Ganapathy anna reached the lotus feet of MahaPeriava. Sri Ra.Ga. anna, as everyone knows, was instrumental to bringing lakhs and lakhs of devotees to MahaPeriava’s ‘Sannidhi’ (sanctum sanctorum), through his writings including the seven volumes of HIS pravachanams (Dheyvathin Kural), and other books, such as ‘Maithreem Bajatha’, ‘Mahaperiaval virunhdhu’, ‘Sankarar endra Sangeetham’, and many more titles.
As MahaPeriava had taken care of devotees like Dr.Sundararaman in their ‘Loukeekam’ (worldly life), He had nurtured the treasure of ‘Anmeekam’ in Ra.Ga. Anna, and made him the gem he was. He had confided in him a lot of matters very dear to Him, and to no one else. Sri Ra.Ga. Anna writes about one such incident in his book, ‘Sankarar Endra Sangeetham’, which brings about the intensity of ‘Periava’s Anugraham towards him.
As a tribute to Ra.Ga.Anna’s memory, I am posting this article as a six—part series.
சங்கரர் என்ற சங்கீதம்.
பெரியவாள் ஒவ்வொரு பக்தருக்கும் பிரஸாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
என்னைப் பார்த்து, “வா, கச்சேரிக்காரா!” என்றார்.
ஏன் அந்தப் பெயர் என்று எனக்குப் புரியவில்லை.
அருகு சென்று ஆவலுடன் திருமுகம் பார்த்து நின்றேன்.
ஆஹா! என்ன முகம் அம்மா அது !
என்ன தேஜஸ், என்ன அன்பு, அதோடு என்ன குறும்பு!
பிறிதொரு பக்தரிடம், “இவர் தெரியுமா ? கச்சேரி!” என்றார்.
‘இவர்’ என்று பன்மையில் சொன்னதும் குறும்பாகவே இருந்தது. அது அடியேன் முப்பதுகளில் இருந்த காலம்.
அவர், “தெரியும், ரா.கணபதிதானே ? எம். எஸ்………” என்னும்போதே பெரியவாள் இடை மறித்தார்.
ஸ்ரீமதி எம்.எஸ் அவர்களின் குடும்ப அங்கத்தினர் போலவே இருந்து அந்தப் பெருமாட்டியின் இசைத் தொண்டுக்கு என்னால் இயன்ற சிறு ஸஹாயம் செய்து வந்த காலம் அது. அதைத்தான் பெரியவாள் “கச்சேரி” என்று கூறியதோடு தொடர்புறுத்தி அந்த பக்தர் சொல்ல வந்திருப்பாராயிருக்கும்.
இடைமறித்த பெரியவாள், “இவரே கச்சேரி, பெரிய கச்சேரி—சக்கை போடா(க)!” என்றார்.
“ஓ! இவர் பாடவும் பாடுவாரா ?” என்றார் பக்தர்.
“பாடினாதான் கச்சேரியா?”-------பெரியவாளின் கேள்வி.
பக்தருக்கு அது புதிராக இருந்திருக்க வேண்டும். பதில் கூறாமல் யோஜிக்கலானார்.
நான் புதிரை அவிழ்ப்பதாக நினைத்துக்கொண்டு, “ஆஃபீஸ், கோர்ட் முதலியவற்றைக்கூடக் கச்சேரி என்று சொல்வதுண்டு” என்றேன்.
“’கூட’ இல்லை, அதுதான் ஒரிஜினல் அர்த்தமே. ‘கச்ஹரீ’ ன்னு அராபியனோ, பெர்சியனோ, ஆகக்கூடி துலுக்காள் பாஷையிலே கோர்ட்டுக்குப் பேர். அவா இங்கே ராஜ்யம் நடத்தினதிலே ‘கச்சேரி’ ன்னு நம்மகிட்ட அந்த வார்த்தை வந்துடுத்து. எப்படியோ இன்னொரு அர்த்தம் ஸங்கீதக் கச்சேரி, டான்ஸ் கச்சேரின்னும் வந்துடுத்து ! நான் சொன்னது கோர்ட் கச்சேரியுமில்லே!” என்று கூறிப் புதிரை அவிழ்க்காமலே பேசாதிருந்தார்.
எனக்கும் மேற்கொண்டு எதுவும் தோன்றாமல் பேசாதிருந்தேன்.
பெரியவாளே மௌனத்தைக் கலைத்து உடனிருந்த பக்தரிடம், “எழுத்தாளர்கள்தான் விஷயத்தைச் சொல்லாம மர்மம் பண்ணி, படிக்கறவாளோட ஆர்வத்தைத் தூண்டி விடறது. இன்னிக்கு நான் ஒரு எழுத்தாளர் கிட்டேயே அவரோட யுக்தியைத் திருப்பறேன்” என்று கூறி என்னைப் ‘பெருமித’த்துடன் பார்த்தார்.
“ஒரு ‘க்ளூ’ குடுக்கறேன். இப்பவானும் புரியறதா பாரு ! என் கச்சேரியைப் பத்தி நீ கச்சேரி பண்ணலை?” என்றார்.
பலமான ‘க்ளூ’வாகவே கொடுத்து விட்டாராதலால் பட்டென்று புரிந்தது.
தலையைக் குனிந்து கொண்டேன், ஒருவிதமான பெருமிதத்தில்தான் !
என்னதான் தலை குனிந்தாலும், அந்த மோஹன மூர்த்தியைத் திருட்டுத்தனமாகப் பார்க்காமலிருக்க முடியுமா?
குழந்தையின் குதூகலத்துடன் உட்கார்ந்திருந்த கிழவனார் பக்தரிடம், “அவர் என்னமோ தலையைத் தொங்கப்போட்டுண்டு எங்கிட்ட பேச மாட்டேங்கறாரே ! நீதான் கேளேன் அவரை, ‘கச்சேரி’ புரிஞ்சுதான்னு !” என்றார்.
என்னே விளையாட்டு ! தூது விடு படலம்!
பக்தர் பெரிதாகச் சிரித்து விட்டார் !
“பெரியவா நடத்தற கச்சேரி—மடத்தை, பக்தாளை, லோகத்தையே பெரியவா ஆண்டு அரசாளற கச்சேரி மஹிமை பத்தி அவர் பாட்டுப் போட்டுக் கச்சேரி பண்ணியிருப்பார் போல இருக்கு”
“தப்பு” என்று அழுத்தந்திருத்தமாகச் சொன்ன பெரியவாள் தொடர்ந்தார். “நான்தான் மொதல்லயே பாடினாதான் கச்சேரியான்னு கேட்டேனே ! அப்புறமும் இவர் கச்சேரின்னா கோர்ட்டுன்னு அர்த்தம் பண்ணினது தப்புன்னேனே ! ஒனக்குப் புரியாது ! ஒன்னை நான் புதிரை அவுக்கச் சொல்லவே இல்லயே ! இவரைக் கேளுன்னுதானே சொன்னேன் ? எங்கிட்டதான் ஸ்வாதீனம் ----பேசமாட்டேங்கறார். மத்தவா கிட்டல்லாம் மரியாதை தெரிஞ்சவர். அதனால, நீ கேளு, சொல்லுவார்.”
பொத்துக்கொண்டு வந்த சிரிப்பைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டேன். கிழவர் குழந்தையாகி நம்மையெல்லாம் விளையாட்டு பொம்மை ஆக்கி என்னெ கூத்து அடிக்கிறார் ? “க்ரீடா ம்ருகாஸ்தே ஜனா:” என்று ஆசார்யாள் சிவபெருமானிடம் பாடியது நினைவு வர அடக்கிய சிரிப்பு அடக்கிய அழுகையாயிற்று ! ஆனந்தத் தழுதழுப்பின் அழுகைதான்!
“எங்கிட்ட ஸ்வாதீனம்” -----என்ன பாக்யம், அப்படி அந்த கோபுரத்திடம் இந்தத் துரும்பு பழகுவதற்கு கோபுரமே இடம் கொடுத்தது?
உடனேயே குறும்புக் குத்தல்; ‘மத்தவா கிட்ட மரியாதை தெரிஞ்சவ’ராம் !
எண் சாண் உடம்பை ஆறு, ஐந்து, நாலாகக் குறுக்கிக்கொண்டு, நிஜமாகவே கைகட்டி, வாயையும் முக்கால் பொத்திப் பேசும் பரம பவ்யமான பக்தர்கள் பெரியவாளுக்கு ஏராளமாக உண்டு. அவருடைய அதி உன்னதமும், அகாத ஆழமும் எனெக்கு வெகு நன்றாகத் தெரியுமாயினும் சில சமயங்களில் அதை நினைத்து வெடவெடத்து விலவிலெத்து நின்றிருகிறேனாயினும், உடல் ஒடுக்கி, கை கட்டி வாய் பொத்தி அவரிடம் பேசும் பா(BHA)வம் எனெக்குப் பொதுவில் வந்ததே இல்லை.
இல்லாத பாவத்தை இருப்பதாகக் காட்டுவது என்னைப் பொறுத்த மட்டில் செயற்கையாக, போலியாகவே தோன்றியது.
பெரும்பாலும் ஸ்ரீசரணாளிடம் நான் எதையும் ஒளித்ததில்லை. என்னவரே என்னவர் என்று (Sankara!) நான் உணர்ந்த அந்த என் ஸ்ரீசரணச் செல்வத்திடம் நான் எதற்கு, எதை ஒளிக்க வேண்டும்? இருப்பினும் இது ‘பெரும்பாலும்’தான்; முற்றிலுமே அல்ல மனுஷ்ய மனக் கிறுக்குகள் முற்றிலும் அகன்று விடுகின்றனவா என்ன ? அதனால் !.
அதிமரியாதை விஷயமாக அவரிடம் ஒளிக்காது சொல்லியிருக்கிறேன்.
அப்போது அவர் ஆனந்தவாரியாகச் சிரித்துக்கொண்டு என்னை வாரி வெய்யிலில் போட்டார் ! “ஒன்னால் இதுக்கு மேல் மரியாதையா இருக்க முடியாது. நீ பாட்டுக்கு இருக்கிறபடி இருந்திண்டிரு !”
வாரிப்போட்டவர் அவரானதால் அந்த வெய்யிலும் பூர்ணிமையாக இனித்தது.
அந்த நினைவு மறவாமல்தான் “மத்தவா கிட்டல்லாம் மரியாதை தெரிஞ்சவர்” என்கிறார் !
பக்தரிடம் குறைப்பட்டுக்கொள்ளும் பொய்க்குரலில் சொன்னார், “அவரானா எங்கிட்ட பேச மாட்டேங்கறார். நீயானா, ‘அவரைக் கேளு’ன்னா கேக்க மாட்டேங்கிறே ! நான் என்ன பண்ணிப்பேன் ?”
அதற்கு மேல் தயங்காமல் பக்தர், “சொல்லுங்கோ கணபதி சார் !” என்றார்.
இன்னும் வரும்………………..