|
Post by anusham163 on Nov 22, 2014 22:54:49 GMT 5.5
Shared from 'Sage of Kanchi FB Group.
அகர வரிசையில் நம் பெரியவா-----திருமதி நாகி நாராயணன் இயற்றியது. -------------------------------------------------
அபய ஹஸ்தம் காட்டியே அற்புதங்கள் பலப்பல அனுதினமும் செய்கிறார் - நம் அன்பு தெய்வம் பெரியவா !!
ஆயிரம் கரம் கொண்ட ஆதவனின் கதிர்களைப் போல் ஆதரவுக் கரம் நீட்டும் ஆதிமூலம் நம் பெரியவா !!
இன்னல்களைக் களைந்திட இன்முகத்துடன் உதவிட இன்றும் என்றும் இருக்கிறார் இறை நிலை கண்ட பெரியவா !!
ஈரேழு உலகினற்கும் ஈன்றெடுத்த அன்னையைப் போல் ஈரமுள்ள நெஞ்சு காட்டும் ஈசன் எங்கள் பெரியவா !!
உலகில் தர்மம் செழிக்கவே உடலை உருக்கி தவமியற்றி உன்னத நிலை அடைந்திட்ட உத்தமர் நம் பெரியவா !!
ஊரார் நலன் விரும்பி ஊர் ஊராய் நடந்து சென்று ஊழ்வினையைக் குறைத்து - நம்மை ஊக்குவித்த பெரியவா !!
எங்கு சென்று தேடியும் எட்டு திசை நோக்கியும் என்றும் காண முடியாத எளிமை எங்கள் பெரியவா !!
ஏகாம்பர நாதன் வாழ் ஏற்றமிகு காஞ்சியிலே ஏக்கம் தீர்க்க வந்தமர்ந்து ஏற்றம் தந்த பெரியவா !!
ஐங்கரனின் துணையுடனே ஐம்புலன்களை அடக்கியே ஐயமின்றி நம்முடனே ஐக்கியமான பெரியவா !!
ஒவ்வொரு ஆன்மாவும் ஒன்று பட்ட மனதுடனே ஒருமித்து த்யானிக்கும் ஒப்பில்லா பெரியவா !!
ஓர் முறை பார்த்தாலே ஓடிவிடும் நம் பாவம் ஓயா பிறவிக்கடல் கடக்க ஓடம் நம் பெரியவா !!
ஔஷதங்களின் தலைவனாம் அஃறிணையான என்னையும் நல்வழிப்பாதை தன்னில் வழி நடத்தும் பெரியவா !!
மஹா பெரியவா சரணம் !!!
|
|
|
Post by anusham163 on Nov 22, 2014 22:57:39 GMT 5.5
திருமதி நாகி அவர்களின் மனத்தில் உள்ள பக்தி, கவிதைப் பிரவாகமாக பொங்கிப் பெருகிஉள்ளது. அருமை.
|
|