பெரியவா சூக்ஷ்மமா சொல்லுவா – நாம்தான் புரிஞ்சுக்கணும்
Sept 21, 2014 12:37:10 GMT 5.5
kahanam likes this
Post by varagooran on Sept 21, 2014 12:37:10 GMT 5.5
நாரங்க பலம் vs ஷட்பஞ்ச பலம்
(நெட்டில் படித்தது)
எண்ணூர் அருகே கார்வேட் நகர் என்று ஓரிடம். அங்கு நவராத்திரி பூஜை. அந்த இடத்துக்கு போகணும்னா எண்ணூர் போய் அங்கிருந்து போட்டில் கயிறு கட்டி இழுத்து செல்வார்கள். தனிமையான இடம், ஒரு பெரிய வனாந்திரம் மாதிரி, இயற்கையின் எழில் கொஞ்சும்.
பெரியவா அந்த நவராத்திரியில் காஷ்ட மௌனமாயிருந்தார். அதாவது ஒன்பது நாளும் உபவாசம். கூடவே மௌனம். சைகையால் கூட விருப்பத்தை வெளியிடமாட்டார். நாங்கள் தரிசனத்துக்காக அங்கு சென்றிருந்தோம்.
அப்போது, பெரியவா ஒரு மரத்தடியிலே உட்கார்ந்து கொண்டிருந்தா. அன்றுதான் ஒன்பது நாள் மௌன விரதத்தை கலைத்தார். எங்கள் அருகாமையில் ஸ்ரீ ராமமூர்த்தி சர்மா என்ற பிரவசனம் செய்பவர்களும், ஒரு வருமானவரி துறையில் உள்ள முக்கிய நபரும் அமர்ந்திருந்தார்கள்.
பெரியவா சிரிச்சுண்டே ஸ்ரீ ராமமூர்த்தி சர்மாவைப் பார்த்து ”உனக்கு மாதம் எவ்வளவு வருமானம் வரும்”என்று கேட்டார்.
“சுமார் ரூ 300/- வரை வரும்”.
“நீ கடன் வாங்குவியா?” .
“அப்பப்போ ரூ 10, 20ன்னு வாங்குவேன்”
உடனே அருகிலிருந்த வருமானவரி ஆபிசரை நோக்கி, “உனக்கு எவ்வளவு சம்பளம்?” என்று கேட்டார்
“ரூ 10,000/- வரும். அதுவும் போராததால் அப்பப்போ ரூ 3000/- கடன் வாங்குவேன். குடும்பத்துலே இது சகஜம் தானே” என்றார்.
“எவ்வளவு இருந்தாலும் போறாதுதான். ஏன்னா நம் தேவைகளை பெருக்கிக் கொண்டே போகிறோம். போதும் என்று எண்ணம் எப்போ வருதோ அப்போதான் நல்ல கார்யம் செய்ய முடியும்” என்று உபதேசித்தார்.
பேசிக்கொண்டே, கையில் ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து உரித்தார். பெரியவா தோலை தன் கையிலேயே வைத்துக்கொண்டு பழத்தை வருமானவரி ஆபிஸரிடம் கொடுத்தார்.
கொடுத்ததோடு இல்லாமல், “அதில் எத்தனை சுளை இருக்கு?” என்று கேட்டார்.
அந்த ஆபிஸர் அந்த பழத்தை இரு பிளவாக செய்து “எண்ணி 6 + 5 மொத்தம் 11” என்று சொன்னார்.
பெரியவா கேட்டார், “இந்த பழத்தை ’ஷட் பஞ்ச பலம்’ (ஷட் = 6 , பஞ்ச = 5) என்று சொல்லலாம் இல்லியா?என்றார்.
உடனே ஸ்ரீ ராமமூர்த்தி சர்மாவும், வருமானவரி ஆபிஸரும் எழுந்து கீழே விழுந்து நமஸ்காரம் செய்தனர். எனக்கோ ஒன்னும் புரியவில்லை.
ஸ்ரீ ராமமூர்த்தி சர்மா தான், அந்த வருமானவரி ஆபிஸர் வீட்டுக்கு புரோஹிதம் செய்வது வழக்கம். ஒரு சமயம் அவசரத்தில் ஆரஞ்சு பழத்துக்கு சமஸ்கிருதத்தில் நாரங்க பலம் என்பதற்கு பதிலாக ஷட்பஞ்ச பலம் என்று சொல்லி விட்டதால், அதிகாரியிடம் வசை வாங்கிக் கட்டிண்டார்.
அது வேதவாக்கு பொய்யாகாது என்பதை காண்பிக்கவே இந்த திருவிளையாடலை பெரியவா நடத்தியிருக்கிறார் என புரிந்தது.
பெரியவா சூக்ஷ்மமா சொல்லுவா – நாம்தான் புரிஞ்சுக்கணும்.
பின் குறிப்பு
மேற்படி போஸ்டை நான் இன்று முகநூலில் பதிவு செய்தேன். சூக்ஷ்மம் எனக்கு சரியாய் விளங்கவில்லை. திரு.கார்த்தி நாகரத்தினம் மிக அழகாக விளக்கினார். கீழே அந்த கமென்ட்.
கட்டுரையிலேயே தெளிவாக இருக்கிறதே மாமா...
வேதவாக்கு பொய்யாகாது என்பதை காண்பிக்கவே இந்த திருவிளையாடலை பெரியவா நடத்தியிருக்கிறார்...
வேதவாக்கு பொய்யாகாது...
வேதம் சொன்னவர் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் ஷட்பஞ்ச பலம் என்று தானே?
எங்கேயோ ஓர் ஆபிஸர் வீட்டில் அந்த ஆபிஸருக்கும் அவர் வீட்டு வைதீகத்துக்கு வரும் ஸ்ரீ ராமமூர்த்தி ஷர்மா அவர்களுக்கும் நடந்த சம்பாஷணை எப்படி ஐயனுக்கு தெரியவந்தது? ---> இது முதல் சூக்ஷமம்...
வேதம் படித்தவர்களிடம் இருந்து(வேத வித்துக்கள்) வரும் வார்த்தைகள் வேதவாக்கு...பொய்க்கவே பொய்க்காது, சத்தியம். நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் யார் அதனை உறுதிப் படுத்தமுடியும்? நம்மில் யாராலும் முடியாது அல்லவா? அப்பொழுது எங்கே போவது?
அந்த வேதங்கள் யாரை முடிந்த முடிவாகச் சொல்கின்றன?
'வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே' என்ற மாணிக்க வாசகர் கூற்றுப் படி அந்த 'ஐயா' விடம் தானே போகமுடியும்?
அந்த ஐயா தானே நம் ஐயன்? ---> இது இரண்டாவது சூக்ஷமம்...
மூன்றாவது சூக்ஷமம் - அறிவு, KNOWLEDGE தளத்தில் இருந்து பார்க்கலாம்.
அந்தகாலத்தில் ஆரஞ்சு கிடையாது. பின்னர் வந்த பலம். நம்மிடம் இருந்தது சாத்துக்குடி தான். அது நம் நாரத்தங்காய் வகையை சார்ந்தது. அதனால் அதற்கு நாரங்க பலம் என்று பெயர்.
ஆரஞ்சு க்கு ஐயன் விளக்கம் தந்தது போல ஷட்பஞ்ச பலம் என்று தான் சொல்லவேண்டும். அவசர கதி உலகத்தில் நாம் நாரங்க பலம் என்று சொல்லி, ஷட்பஞ்ச பலம் என்று சரியாக சொல்பவர்களையும் முந்திரிகொட்டை போல திருத்த முற்படுகிறோம். அதற்கும் ஐயன் வைத்த குட்டு...
ஆகக் கூடி எப்படிப் பார்த்தாலும் ஷட்பஞ்ச பலம் என்பதே ஆரஞ்சுக்கு...நாரங்க பலம் என்பது சாத்துக்குடி பழத்துக்கு...
இதெல்லாம் விட நமக்கு தான் அந்த 'சிவப் பழம்' நமக்கே நமக்கென்று இருக்கிறதே, வேறு எதற்கு மாமா இன்னொன்று தனியாக
(நெட்டில் படித்தது)
எண்ணூர் அருகே கார்வேட் நகர் என்று ஓரிடம். அங்கு நவராத்திரி பூஜை. அந்த இடத்துக்கு போகணும்னா எண்ணூர் போய் அங்கிருந்து போட்டில் கயிறு கட்டி இழுத்து செல்வார்கள். தனிமையான இடம், ஒரு பெரிய வனாந்திரம் மாதிரி, இயற்கையின் எழில் கொஞ்சும்.
பெரியவா அந்த நவராத்திரியில் காஷ்ட மௌனமாயிருந்தார். அதாவது ஒன்பது நாளும் உபவாசம். கூடவே மௌனம். சைகையால் கூட விருப்பத்தை வெளியிடமாட்டார். நாங்கள் தரிசனத்துக்காக அங்கு சென்றிருந்தோம்.
அப்போது, பெரியவா ஒரு மரத்தடியிலே உட்கார்ந்து கொண்டிருந்தா. அன்றுதான் ஒன்பது நாள் மௌன விரதத்தை கலைத்தார். எங்கள் அருகாமையில் ஸ்ரீ ராமமூர்த்தி சர்மா என்ற பிரவசனம் செய்பவர்களும், ஒரு வருமானவரி துறையில் உள்ள முக்கிய நபரும் அமர்ந்திருந்தார்கள்.
பெரியவா சிரிச்சுண்டே ஸ்ரீ ராமமூர்த்தி சர்மாவைப் பார்த்து ”உனக்கு மாதம் எவ்வளவு வருமானம் வரும்”என்று கேட்டார்.
“சுமார் ரூ 300/- வரை வரும்”.
“நீ கடன் வாங்குவியா?” .
“அப்பப்போ ரூ 10, 20ன்னு வாங்குவேன்”
உடனே அருகிலிருந்த வருமானவரி ஆபிசரை நோக்கி, “உனக்கு எவ்வளவு சம்பளம்?” என்று கேட்டார்
“ரூ 10,000/- வரும். அதுவும் போராததால் அப்பப்போ ரூ 3000/- கடன் வாங்குவேன். குடும்பத்துலே இது சகஜம் தானே” என்றார்.
“எவ்வளவு இருந்தாலும் போறாதுதான். ஏன்னா நம் தேவைகளை பெருக்கிக் கொண்டே போகிறோம். போதும் என்று எண்ணம் எப்போ வருதோ அப்போதான் நல்ல கார்யம் செய்ய முடியும்” என்று உபதேசித்தார்.
பேசிக்கொண்டே, கையில் ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து உரித்தார். பெரியவா தோலை தன் கையிலேயே வைத்துக்கொண்டு பழத்தை வருமானவரி ஆபிஸரிடம் கொடுத்தார்.
கொடுத்ததோடு இல்லாமல், “அதில் எத்தனை சுளை இருக்கு?” என்று கேட்டார்.
அந்த ஆபிஸர் அந்த பழத்தை இரு பிளவாக செய்து “எண்ணி 6 + 5 மொத்தம் 11” என்று சொன்னார்.
பெரியவா கேட்டார், “இந்த பழத்தை ’ஷட் பஞ்ச பலம்’ (ஷட் = 6 , பஞ்ச = 5) என்று சொல்லலாம் இல்லியா?என்றார்.
உடனே ஸ்ரீ ராமமூர்த்தி சர்மாவும், வருமானவரி ஆபிஸரும் எழுந்து கீழே விழுந்து நமஸ்காரம் செய்தனர். எனக்கோ ஒன்னும் புரியவில்லை.
ஸ்ரீ ராமமூர்த்தி சர்மா தான், அந்த வருமானவரி ஆபிஸர் வீட்டுக்கு புரோஹிதம் செய்வது வழக்கம். ஒரு சமயம் அவசரத்தில் ஆரஞ்சு பழத்துக்கு சமஸ்கிருதத்தில் நாரங்க பலம் என்பதற்கு பதிலாக ஷட்பஞ்ச பலம் என்று சொல்லி விட்டதால், அதிகாரியிடம் வசை வாங்கிக் கட்டிண்டார்.
அது வேதவாக்கு பொய்யாகாது என்பதை காண்பிக்கவே இந்த திருவிளையாடலை பெரியவா நடத்தியிருக்கிறார் என புரிந்தது.
பெரியவா சூக்ஷ்மமா சொல்லுவா – நாம்தான் புரிஞ்சுக்கணும்.
பின் குறிப்பு
மேற்படி போஸ்டை நான் இன்று முகநூலில் பதிவு செய்தேன். சூக்ஷ்மம் எனக்கு சரியாய் விளங்கவில்லை. திரு.கார்த்தி நாகரத்தினம் மிக அழகாக விளக்கினார். கீழே அந்த கமென்ட்.
கட்டுரையிலேயே தெளிவாக இருக்கிறதே மாமா...
வேதவாக்கு பொய்யாகாது என்பதை காண்பிக்கவே இந்த திருவிளையாடலை பெரியவா நடத்தியிருக்கிறார்...
வேதவாக்கு பொய்யாகாது...
வேதம் சொன்னவர் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் ஷட்பஞ்ச பலம் என்று தானே?
எங்கேயோ ஓர் ஆபிஸர் வீட்டில் அந்த ஆபிஸருக்கும் அவர் வீட்டு வைதீகத்துக்கு வரும் ஸ்ரீ ராமமூர்த்தி ஷர்மா அவர்களுக்கும் நடந்த சம்பாஷணை எப்படி ஐயனுக்கு தெரியவந்தது? ---> இது முதல் சூக்ஷமம்...
வேதம் படித்தவர்களிடம் இருந்து(வேத வித்துக்கள்) வரும் வார்த்தைகள் வேதவாக்கு...பொய்க்கவே பொய்க்காது, சத்தியம். நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் யார் அதனை உறுதிப் படுத்தமுடியும்? நம்மில் யாராலும் முடியாது அல்லவா? அப்பொழுது எங்கே போவது?
அந்த வேதங்கள் யாரை முடிந்த முடிவாகச் சொல்கின்றன?
'வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே' என்ற மாணிக்க வாசகர் கூற்றுப் படி அந்த 'ஐயா' விடம் தானே போகமுடியும்?
அந்த ஐயா தானே நம் ஐயன்? ---> இது இரண்டாவது சூக்ஷமம்...
மூன்றாவது சூக்ஷமம் - அறிவு, KNOWLEDGE தளத்தில் இருந்து பார்க்கலாம்.
அந்தகாலத்தில் ஆரஞ்சு கிடையாது. பின்னர் வந்த பலம். நம்மிடம் இருந்தது சாத்துக்குடி தான். அது நம் நாரத்தங்காய் வகையை சார்ந்தது. அதனால் அதற்கு நாரங்க பலம் என்று பெயர்.
ஆரஞ்சு க்கு ஐயன் விளக்கம் தந்தது போல ஷட்பஞ்ச பலம் என்று தான் சொல்லவேண்டும். அவசர கதி உலகத்தில் நாம் நாரங்க பலம் என்று சொல்லி, ஷட்பஞ்ச பலம் என்று சரியாக சொல்பவர்களையும் முந்திரிகொட்டை போல திருத்த முற்படுகிறோம். அதற்கும் ஐயன் வைத்த குட்டு...
ஆகக் கூடி எப்படிப் பார்த்தாலும் ஷட்பஞ்ச பலம் என்பதே ஆரஞ்சுக்கு...நாரங்க பலம் என்பது சாத்துக்குடி பழத்துக்கு...
இதெல்லாம் விட நமக்கு தான் அந்த 'சிவப் பழம்' நமக்கே நமக்கென்று இருக்கிறதே, வேறு எதற்கு மாமா இன்னொன்று தனியாக