|
Post by soundaryasatheesh on Aug 16, 2014 7:53:07 GMT 5.5
எண்ணுகின்ற எண்ணமாக நீ இருக்க, என்ன வென்று எழுதிடுவேன் உன்னை பற்றி சத்குருநாதா!! தண்டமோடு நீ நடக்கும் வேகமதை பார்க்கும் பொழுது, தந்தமோடு பவனி வரும் விக்னங்களை களையும் விநாயகனே வருவதைப்போல் காண்கின்றேன் சத்குருநாதா!! கருணை நிரம்பும் உன் கண்களை கண்டால் , மச்சத்தை போல் அழகான கண்களை உடைய மதுராபுரி நாயகியே நிற்பதைப் போல் உணர்கின்றேன் சத்குருநாதா!! திருநீறும், குங்குமமும் இணைந்து இருக்கும் உன் நெற்றியைக் கண்டால், ஒரே இடத்தில் சூரியனும் சந்திரனும் சேர்ந்து பழனி ஆண்டியாய் தெரிந்திடுதே சத்குருநாதா!! கமண்டலத்தோடு நீ செய்யும் ஜபதபங்களை பார்க்க பார்க்க, அமிர்தமதை எடுத்து தேவர்களுக்கு வழங்கிய பரந்தாமன் அம்சமாக தோன்றிடுதே சத்குருநாதா!! ருத்ராக்ஷ மாலை தனை நீ அணிந்து காட்சியளிக்க, கழுத்தில் பாம்பை அணிகலனாக அணிந்திருக்கும் ருத்ரதாண்டவ மூர்த்தியின் ரூபமாக தெரிகின்றாய் சத்குருநாதா!! மேனாவின் மீது அமர்ந்து நீ அருள்மழை பொழியும் பொழுது, அந்த ஆளும் பல்லக்கில் அசைந்தாடி வரும் அரங்கனாகவே சிரிக்கின்றாயே சத்குருநாதா!! கோபங் கொண்டு நீ பார்க்க காளியாகவும், கனிவுடன் நீ பார்க்க பாலதிரிபுரசுந்தரியாகவும் காட்சித் தருகின்றாயே சத்குருநாதா!! எல்லா தெய்வங்களையும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் உன் வடிவமாய் காண காண எல்லை இல்லா ஆனந்த பரவசம் அடைகின்றேன் சத்குருநாதா!! இன்னும் வேறு என்ன இன்பம் வேண்டும், என்றே மகிழ்ச்சியால் மனம் நிறைகின்றேன் சத்குருநாதா!! பெரியவா சரணம்!!
|
|
|
Post by kahanam on Aug 16, 2014 11:13:57 GMT 5.5
"எல்லா தெய்வங்களையும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் உன் வடிவமாய் காண காண எல்லை இல்லா ஆனந்த பரவசம் அடைகின்றேன் சத்குருநாதா!!" Maha Periyava Sarva Dheivya Svarupi! Splendid to visualise! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|
|
Post by anusham163 on Aug 21, 2014 14:12:23 GMT 5.5
மனம் நிறைகின்றது, நிறைகின்றது, நிறைந்து கொண்டே இருக்கிறது, உங்கள் கவிதையைப் படிக்குந்தோறும், சௌந்தர்யா அவர்களே ! நன்றி ! நன்றி ! மிக மிக நன்றி !
அனுஷம்163.
|
|
|
Post by soundaryasatheesh on Aug 21, 2014 17:44:07 GMT 5.5
Humble thanks sir!! Periyava sharanam!!
|
|