|
Post by Sumi on May 18, 2012 10:17:03 GMT 5.5
ஒரு கணவன் - மனைவி காஞ்சி காமாட்சிக்கு விலை உயர்ந்த பட்டு புடவையுடன் தரிசனத்துக்கு வந்தார்கள். அந்த சமயத்தில் மஹா சண்டிஹோமம் நடந்து கொண்டிருந்தது. காஞ்சி மகான் முன்னிலை வகித்தார். ஹோமம் நடக்கும் இடத்துக்கு அருகே வந்த அந்த தம்பதி ஒரு தட்டில் பட்டுப்புடவையை வைத்து பெரியவா அருகில் நகர்த்தினார்கள். ஹோமத்தில் பூரணஅஹுதி நடந்த போது. இந்த விலை உயர்ந்த பட்டு புடவையும் குண்டத்தில் விழுந்தது. காமாட்சி அம்மனுக்கு உடுத்த வேண்டும் என்று தாங்கள் கொண்டுவந்த விலை உயர்ந்த பட்டு புடவை ஹோம குண்டத்தில் விழுந்தது கண்டு அதிர்ச்சியுற்ற அந்த தம்பதி மிகுந்த வேதனை அடைந்தனர். ஆனாலும், அதை எப்படி வெளியே சொல்ல முடியும்? ஏன் இப்படி செய்தீர்கள் என்று மஹா பெரியவாளிடம் கேட்க முடியுமா? ஹோமம் முடிந்தது. காமாட்சிக்கு அலங்காரம் நடந்துகொண்டிருந்தது. முன்னால் திரை சீலை போட்டிருந்தார்கள். தம்பதியும் காமாட்சிக்கு முன்னால் உட்கார்ந்திருந்தார்கள். தாங்கள் மனதில் என்ன நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்பது அந்த மகானுக்கு தெரியாதா என்ன? சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு திரைசீலை விலக்கப்பட்டது, கண்களை கொள்ளை கொள்ளும் அலங்காரத்தோடு காமாட்சி ஜொலித்தாள். மகா பெரியவா அந்த தம்பதி பக்கம் திரும்பி 'அம்பாளை பாருங்கள்' என்பதாக புன்னகை தவழும் முகத்துடன் ஜாடை காட்டினார். அவர்களும் அம்பாள் பக்கம் திரும்பினார்கள். இவர்கள் கொண்டு வந்த அந்த பட்டு சேலை அம்பாளின் திவ்ய சொருபத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறது!! வியப்படைந்த தம்பதி மகானின் திருவடி பணிந்து ஆசி பெற்றனர். யார் எதை கொண்டுவந்தாலும், அதை எப்படி ஏற்று கொள்ள வேண்டும் என்று அந்த மகானுக்கு தெரியாதா? .
|
|
|
Post by mahajadam on May 18, 2012 14:33:15 GMT 5.5
Yet an another thrilling experience!!!
|
|
|
Post by krsiyer on May 20, 2012 13:22:04 GMT 5.5
The saree reached its destination via aahuti. thanks for sharing. jaya jaya sankara, hara hara sankara !
|
|