Post by Sumi on Jul 6, 2014 12:40:15 GMT 5.5
Message shared by our respected member Sri gsgk1969
நமஸ்காரம். 2003ம் வருடம். நான் வேலையில் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். வேறு வேலைக்காக கோவையில் இருந்து பரோடவிற்கு பயணம். முதல் நாள்தான் முற்பத்திவு செய்தேன். காலையில் கோவை மும்பை இரையிலில் கிடைக்கவில்லை. பங்களூரு வரையில் எந்த சிரமமும் இல்லை. அங்கிருந்த்து கஷ்டப்பட்டு கூட்டத்தில் பயணித்து மும்பை சென்று அங்கிருந்து பரோடா சென்றேன். நேர்முகத் தேருவில் வெற்றிப் பெறவில்லை.
எதற்க்கும் கூட இருக்கட்டும் என்று ஒரு புத்தகத்த்தை கையில் எடுத்துச்சென்றேன். அது பெரியவரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம். நொந்து போயிருந்த எனக்கு அது அருமருந்தாக இருந்தது. மறுபடியும் நான் மும்பை வழியாக வரவேண்டும். 8 மணிநேரம் இருந்தது. எனவே மாத்துங்காவில் தங்கினேன். அப்பொழுது நான் எடுத்துச்சென்ற புத்தகத்தை முடித்துவிட்டேன்.
பக்கத்தில் கிரி புத்தகநிலயத்தில் ஆதிசங்கரரின் வாழ்வும் வாக்கும் என்ற புத்தகம் படித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நாட்டம் அதிகரித்தது.
மறுபடியும் மூன்று வருடம் கழித்து இதே நிலை. அப்பொழுது என் தம்பி மாமனார் தெய்வத்தின் குரல் அனைத்துப் பகுதிகளையும் அன்பளிப்பாகத் தந்தார். படிக்க ஆரம்பித்தேன். அது எனது சிந்தனையில், மனத் தெளிவில் பெரும் மாற்றத்தைத் தந்தது. அறிவு பெருகியது. பெரியவா தொடாத தலைப்பே இல்லை. அணு விஞ்ஞானத்தை ஆன்மீகத்துடான் கோர்ப்பார். வரலாறு, பூகோளம் என்று எதுவாக இருந்தாலும் ஆன்மீகத்திலோ அல்லது அத்வைத்தம் வந்து இணையும். வேதத்தை ஊன்றிப் படித்தால், மனனம் செய்தால் லௌக்கிகப் பதிப்பு ஒன்றும் இல்லை என்றுப் புரியும். திராவிட மாயை அகன்றுவிடும். ஜாதி மத வேற்றுமைகள் எல்லாம் பொய் எனப் புரிந்தது. ஆனாலும் நாம் தர்மங்களை விடாமல் காக்க வேண்டும் என்று புரிந்தது.
2006ல் ஹைதராபாத்தில் குடி புகுந்தோம். பத்து வருடங்களாகப் பிள்ளை இல்லாதக் குறை தீர்ந்தது. 2008ல் எங்கள் குடும்பத்திருக்கே முதல் வாரிசாக என் மகன் பிறந்தான். என் மனைவி கர்ப்பமாக இருந்த போது தினமும் 20-30 பக்கம் தெய்வத்தின் குரல் படித்துக் காண்பிப்பேன். இப்பொழுது நாங்கள் யாரும் சொல்லித் தராமலேயே என் மகன் எல்லா தெய்வங்களின் சுலோகமும் சொல்வான். குறைந்த பட்சம் ஒரு தேவத்திற்க்கான காயத்திரியாவது தெரியும். இப்போது 6 வயது.
காலப்போக்கில் என் மனைவியும் பெயவரிடம் பக்திக் கொள்ள ஆரம்பித்தாள். ஒருவாரம் முன் எனக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்து இருக்கிறது. இது எதிர்ப்பார்க்காமல் வந்தது. வயது அதிகம் ஆனதால் மருத்துவத்த்துரை எங்களை பயமுறுத்தியது. பெரியவா என் மனைவியில் கனவில் வந்து கர்பபதையும் என் மனைவியையும் ஆசீர்வதித்தார். சென்ற திங்கள் அன்று பூச நட்சதிதிரத்தில் பெண் குழந்தை பிறந்தது.
இதற்கிடையில் மருந்து விற்றுக் கொண்டிருந்த நான் கணிணித்துறையில் மாறி இன்று வேலை நிமித்தமாக சிங்கப்பூர் வந்திருகின்றேன். இதை அங்கிருந்துதான் எழுதுகிறேன். பத்து முறையாவது பெரியவாளை தரிசனம் பண்ணியிருப்பேன். ஆனால் அப்பொழுது வராத பக்தி தெய்வத்தின் குரல் மூலம் வந்தது. இப்பொழுது வருந்துகிறேன்.
இருந்தாலும் என்னை நல்ல பாதைக்குத் திருப்பியிருக்கிறார் பெரியவா. அபார கருணா சிந்தும் ஞானதாம் சாந்த ருபிநும்...ஜெய ஜெய சங்கரா!