|
Post by Sumi on May 10, 2012 8:44:55 GMT 5.5
Source: Maha Periyaval Darisana Anubhavangal Part - 4
ஒருவர், பெரியவாளிடம் பன்னிரெண்டாயிரம் ரூபாய் சமர்பித்தார். மஹா பெரியவாள், "எனக்கு எதுக்குடா பணம்?" என்று சொல்லிவிட்டு. அப்பொழுது சந்தர்ப்பணை சமையற்கட்டில் பணிபுரிந்து வந்த ஒருவரை கூப்பிட்டனுப்பி, "உன் பெண்ணுக்கு கல்யாணம் என்றாய். பணம் வேண்டாமா? இதோ இருக்கு எடுத்துக்கோ! என்றார்கள் - பணம் கொடுத்த அடியாரின் கண் எதிரிலேயே. "மடத்தில் எத்தனையோ சிப்பந்திகள் குறைந்த சம்பளத்தில் மனப்பூர்வமாக உழைக்கிறார்கள். அவர்கள் வீட்டில் கல்யாணம் கார்த்தி என்றல் பணத்துக்கு எங்கே போவார்கள்?" என்றார். அருள் என்றல், வெறும் தூறல் இல்லை. கன (பண) மழை தான்!
|
|
|
Post by krsiyer on May 10, 2012 13:52:41 GMT 5.5
His Greatness, thanks for sharing jaya jaya sankara, hara hara sankara !
|
|