|
Post by Sumi on May 10, 2012 8:41:08 GMT 5.5
As narrated by a devotee Source: Maha Periyavaal Darisana Anubhavangal Part - 4 ஒரு சமயம் என் நண்பருடன், அவர் குடும்ப பாகப் பிரிவினை சம்பந்தப்பட்ட தகராறு விஷயமாக மஹா பெரியவாளிடம் தெரிவித்து, தீர்வு காண்பதற்காக சென்றிருந்தேன். தரிசனம் முடிந்தது. நாங்கள் பேச வந்த விஷயத்தை பற்றி இன்னும் தெரிவிக்கவில்லை. ஸ்ரீ பெரியவாள், பக்கதிலிருந்த உதவியாளரிடம் "முசிரியிலிருந்து அண்ணன் - தம்பி சண்டை சம்பந்தமாக வந்த லெட்டரை கொண்டு வா" என்று ஆக்ஞாபித்தார்கள். அதை படிக்க சொல்லி கேட்ட பிறகு, "தம்பியை, அண்ணா கேட்டதை கொடுத்து சௌஜன்யமாக போக சொல்லி எழுது" என்று கூறினார்கள். எங்களுக்கும் விடை கிடைத்துவிட்டது! என் நண்பர் தன்னுடைய சங்கடத்தை ஸ்ரீ மஹா பெரியவாளிடம் தெரிவிக்கவேயில்லை. ஜட்ஜ்மெண்ட் வந்த பிறகு கேஸ் எதற்கு?
|
|
|
Post by krsiyer on May 10, 2012 12:09:32 GMT 5.5
correct. thanks for sharing jaya jaya sankara, hara hara sankara
|
|