Post by radha on Apr 26, 2014 3:06:04 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
வளமான வாழ்க்கைக்கு அமா சோமவார வழிபாடு!
அமா சோமவாரம் எனப்படும் திங்கள் கிழமையில் வரும் அமாவாசை அன்று அரசமரத்தை வழிபட்டால் அநேக பலன்கள் கிடைக்கும். அரசமரம் இருக்கும் இடத்தில் மும்மூர்த்திகள் வாசம் செய்வதாகவும், இம்மரம் விஷ்ணுவின் வலது கண்ணிலிருந்து தோன்றியதாகவும் புராணங்கள் இயம்புகின்றன.
அரசமரத்திற்கு "அஸ்வத்தா' என்ற பெயரும் உண்டு. அரசமரத்தை எக்காரணம் கொண்டும் வெட்டுவது, அதன் கிளைகளை ஒடிப்பது போன்ற தகாத செயல்களைச் செய்தால், வறுமை, துர்மரணம், எடுத்தக் காரியங்களில் தடை போன்றவை ஏற்படும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.
அரசமரத்தை திங்கள் கிழமையில் வரும் அமாவாசை அன்று பூஜித்தால் வாழ்வில் வசந்தம் வீசும். வளமான வாழ்வு கிட்டும்.
காலை வேளையில் சூரிய உதயத்திற்கு முன்பாக குளித்துவிட்டு, தம்பதியர் சமேதராக 21 தடவைகள் வலம் வந்து வணங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
அரசமர நிழல் படுகின்ற நீர்நிலைகளில் வியாழக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் நீராடினால், திரிவேணி சங்கமத்தில் நீராடுவதால் உண்டாகும் பலன் கிடைக்கும்.
அரசமரத்தைப் பார்த்ததும் வணங்குபவர்களுக்கு ஆயுள் வளரும், செல்வம் பெருகும். கோயில்களில் உள்ள அரசமரத்தடியில் நாகர் சிலைகளுடன் விநாயகரும் எழுந்தருளியிருப்பதால். அங்கு அபரிதமான சக்தி இருக்கும். அரசமரத்தை காலை 7 மணிக்குள் வலம் வருவது நல்லது. சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் அரசமரத்தை தொடக்கூடாது என்பது விதியாகும்.
அமா சோமவாரம் போற்றப்படுவதுபோல், சோமவாரமும் (திங்கள்) பௌர்ணமியும் சேர்ந்து வரும் நாளில் அரசமரத்தடியில் வீற்றிருக்கும் நாக தேவதைகளை 21 தடவைகள் வலம் வந்தால், திருமணத்தடைகள் நீங்கும். குழந்தைச் செல்வம் கிட்டும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
சித்திரை மாதம் 15 ஆம் தேதி அன்று (28.04.2014) அமா சோமவாரம் ஆகும். அன்றைய தினம் விரதம் கடைபிடித்து அரசமரத்தை வழிபட்டால், எடுத்தக் காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறலாம்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
வளமான வாழ்க்கைக்கு அமா சோமவார வழிபாடு!
அமா சோமவாரம் எனப்படும் திங்கள் கிழமையில் வரும் அமாவாசை அன்று அரசமரத்தை வழிபட்டால் அநேக பலன்கள் கிடைக்கும். அரசமரம் இருக்கும் இடத்தில் மும்மூர்த்திகள் வாசம் செய்வதாகவும், இம்மரம் விஷ்ணுவின் வலது கண்ணிலிருந்து தோன்றியதாகவும் புராணங்கள் இயம்புகின்றன.
அரசமரத்திற்கு "அஸ்வத்தா' என்ற பெயரும் உண்டு. அரசமரத்தை எக்காரணம் கொண்டும் வெட்டுவது, அதன் கிளைகளை ஒடிப்பது போன்ற தகாத செயல்களைச் செய்தால், வறுமை, துர்மரணம், எடுத்தக் காரியங்களில் தடை போன்றவை ஏற்படும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.
அரசமரத்தை திங்கள் கிழமையில் வரும் அமாவாசை அன்று பூஜித்தால் வாழ்வில் வசந்தம் வீசும். வளமான வாழ்வு கிட்டும்.
காலை வேளையில் சூரிய உதயத்திற்கு முன்பாக குளித்துவிட்டு, தம்பதியர் சமேதராக 21 தடவைகள் வலம் வந்து வணங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
அரசமர நிழல் படுகின்ற நீர்நிலைகளில் வியாழக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் நீராடினால், திரிவேணி சங்கமத்தில் நீராடுவதால் உண்டாகும் பலன் கிடைக்கும்.
அரசமரத்தைப் பார்த்ததும் வணங்குபவர்களுக்கு ஆயுள் வளரும், செல்வம் பெருகும். கோயில்களில் உள்ள அரசமரத்தடியில் நாகர் சிலைகளுடன் விநாயகரும் எழுந்தருளியிருப்பதால். அங்கு அபரிதமான சக்தி இருக்கும். அரசமரத்தை காலை 7 மணிக்குள் வலம் வருவது நல்லது. சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் அரசமரத்தை தொடக்கூடாது என்பது விதியாகும்.
அமா சோமவாரம் போற்றப்படுவதுபோல், சோமவாரமும் (திங்கள்) பௌர்ணமியும் சேர்ந்து வரும் நாளில் அரசமரத்தடியில் வீற்றிருக்கும் நாக தேவதைகளை 21 தடவைகள் வலம் வந்தால், திருமணத்தடைகள் நீங்கும். குழந்தைச் செல்வம் கிட்டும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
சித்திரை மாதம் 15 ஆம் தேதி அன்று (28.04.2014) அமா சோமவாரம் ஆகும். அன்றைய தினம் விரதம் கடைபிடித்து அரசமரத்தை வழிபட்டால், எடுத்தக் காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறலாம்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM