|
Post by Sumi on Apr 2, 2012 8:33:31 GMT 5.5
விநாயகர் அகவல் பற்றி காஞ்சிப் பெரியவர் கருத்துமற்ற கிழமைகளில் மறந்து விட்டாலும் விநாயகரை வெள்ளிக் கிழமை மற்றும் சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வணங்க வேண்டும். அவ்வாறு, விநாயகரை வணங்கும்போது உங்கள் நினைவிற்கு வரவேண்டிய இன்னொருவர் அவ்வையார். அவர் "சீதக்களப செந்தாமரைப்பூம்' என்று துவங்கும் "விநாயகர் அகவல்' என்னும் பாமாலையை எழுதியவர். இதை சதுர்த்தியன்று பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால், அவர் இரட்டிப்பாகத் தருவார். விநாயகர் அகவல் படிப்பது வீட்டுக்கும், நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே நல்லது. காஞ்சிப்பெரியவர் இது பற்றி கூறும்போது, ""நமக்கும், நாட்டுக்கும், உலகத்துக்கும் நன்மை உண்டாவதற்கு அவ்வையார் மூலம் பிள்ளையாரைப் பிடிப்பதே வழி,'' என்கிறார்.
|
|
|
Post by krsiyer on Apr 2, 2012 12:27:52 GMT 5.5
Great! thanks for sharing jaya jaya sankara, hara hara sankara !
|
|