|
Post by Sumi on Mar 28, 2012 8:24:43 GMT 5.5
Maha Periyaval Darshana Anubhavangal Part 7
கும்பகோணத்தில் ஒரு நாள் தெருவில் நடந்து போய் கொண்டிருந்தார்கள் பெரியவாள். உள்ளுர்ப் பயணம் ஆனதால் மேனா - பல்லக்கு உபயோக படுத்தவில்லை.
தெருவில் ஏழெட்டு சிறுவர்கள், கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருந்தார்கள். விளையாட்டில் ஆழ்ந்து போனதால், நாலைந்து தொண்டர்களுடன் பெரியவாள் அந்த வழியே வந்துகொண்டிருப்பதை கவனிக்கவில்லை.
கண்களை மூடிக்கொண்டு, மற்ற பையன்களில் ஒருவனையாவது தொட்டுவிட்டுதான் கண்திறக்க வேண்டிய நிலையில் இருந்த பையன், அப்படியே பெரியவாளை கட்டிகொண்டுவிட்டான் ! யாரோ ஒரு பையனை கட்டிக்கொண்டுவிட்ட களிப்பில், தான் ஜெயித்துவிட்ட வெற்றிகளிப்பில், உற்சாகமாக கூச்சலிட்டான்.
கண்ணை திறந்து பார்த்தால்... ஜகத்குரு !
நடு நடுங்கி போய்விட்டான். பேச்சு வரவில்லை. தொண்டர்கள் அவனை சூழ்ந்து கொண்டு துவம்சம் செய்ய தயாராகிவிட்டார்கள்.
பெரியவாள் எல்லோரையும் அடக்கினார்கள்.
பையனுக்கு அரை உயிர் போயிருந்தது. விளையாடி கொண்டிருந்த நண்பர்களில் ஒருவனை கூட கண்ணில் காணவில்லை.
பெரியவாள் கேட்டார்கள்: "உன் பேரென்ன?'
"சி... சிவ... ராமன் ..."
'பயப்படாதே என்னையே கட்டிண்டுண்டே... மடத்திலேயே தங்கிவிடு .."
மடத்து பணியார்களில் ஒருவனாகி விட்டான். ஒருவனாகி விட்டார் - சிவராமன்.
அவரை காசியாதிரைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள் பெரியவாள். பின்னர் பெரியவாளுக்கு பீச்சை பக்குவம் செய்யும் கோஷ்டியில் சேர்த்தார்.
அத்தனை சுத்தம்! கடைசிவரை அதே கைங்கர்யம்.
அடுத்த ஜன்மா கிடையாது.
தன்னை 'கட்டி கொண்டவர்களை' பெரியவாள் ஒருபோதும் கைவிட்டதில்லை.
சிவராமனே சாட்சி.
.
|
|
|
Post by krsiyer on Mar 28, 2012 11:53:26 GMT 5.5
Great ! Thanks for sharing jaya jaya sankara, hara hara sankara
|
|
|
Post by riya on Oct 20, 2013 14:53:42 GMT 5.5
Very nice experience.
|
|
|
Post by padhu on Dec 18, 2018 21:03:44 GMT 5.5
Really a blessed soul.
|
|