|
Post by Sumi on Mar 27, 2012 8:35:22 GMT 5.5
* மனம் தூய்மை பெறவும், முன்வினைப் பயனைத் தாங்கிக் கொள்ளவும், புதிதாக பாவச்சுமையை ஏற்படுத்தாமல் இருக்கவும் தியானம் உற்ற துணையாக விளங்குகிறது.
* அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகிறபோது இடுக்கு வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்துவிட்டு, அடுத்த நிமிடமே நிழல் வந்து மூடிக் கொள்வது போல, உலகத்தின் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் சுகம் தலையை எட்டிப்பார்த்துவிட்டு ஓடிவிடுகிறது.
* பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வதால் போட்டி மறையாது. ஞானத்தை வளர்த்துக் கொண்டால் மனதிலும், உலகிலும் போட்டி மறையும். பூரண அமைதி தழைக்கும்.
* பாவம் செய்தவர்களை வெறுப்பதிலும், கோபப்படுவதிலும் பயனில்லை, அவர்களுடைய மனமும் நல்ல வழியில் திரும்பி நல்லவர்களாக வாழவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
* நம் தவறுகளைப் போக்கிக் கொள்ள இறைவனிடம் அழ வேண்டிய நிலையில் இருக்கும் போது, பிறருடைய தவறுகளைக் கண்டு கோபப்படுவது சரியல்ல. -காஞ்சிப்பெரியவர்
|
|
|
Post by krsiyer on Mar 27, 2012 11:40:05 GMT 5.5
Great Message ! thanks for sharing Jaya jaya sankara, hara hara sankara !
|
|