|
Post by Sumi on Mar 13, 2012 8:42:02 GMT 5.5
மவுனம் நல்ல உபாயம்
* மற்ற எந்த உறுப்பையும் விட, வாய்க்குத்தான் வேலை அதிகம். ருசி பார்ப்பது, அதாவது சாப்பிடுவது மற்றும் பேசுவது என்று அதற்கு இரண்டு செயல்கள் இருக்கின்றன. அதனால், நாக்கு இரண்டு செயல்பாடுகளைக் கொண்டதால் முறையாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
* வாயில் வந்ததையும், கண்டதையும் பேசுவது கூடவே கூடாது. பிறரைக் கெடுக்கும் நோக்கத்தில் பேசாமல் பகவத்விஷயத்தையும், நல்ல சத்விஷயங்களை மட்டுமே பேசுதல் வேண்டும்.
* மனதைக் கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு இந்திரியத்தையும் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். அதில் வாயைக் கட்டுவது மிக முக்கியமானது. வாயைக் கட்டுவது என்றால் சாப்பாட்டிலும் கட்டவேண்டும். பேச்சிலும் கட்ட வேண்டும் என்று பொருளாகிறது.
* மவுனம் கலகம் நாஸ்தி என்பார்கள். மவுனத்தை கடைப்பிடித்தால் நமக்கு நல்லது மட்டுமல்ல. இந்த சமூகத்திற்கே மிகவும் நன்மை தருவதாகும். எல்லாவிதமான நன்மைகளையும் பெற்றுத்தரும் நல்ல உபாயம் மவுனமே என்றால் மிகையில்லை.
* வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி என்னும் போதே பேச்சு, சாப்பாடு இரண்டையும் கட்டுப்படுத்துவது அவசியம் என்று தெரிகிறது. ஆனால், நாமோ நேர்மாறாகப் பண்ணுகிறோம். இரண்டு விதங்களிலும் நாக்குக்கு வேலை அதிகமாகக் கொடுக்கிறோம்.
|
|
|
Post by krsiyer on Mar 13, 2012 11:05:09 GMT 5.5
thanks for sharing ! Jaya Jaya Sankara, Hara Hara Sankara !
|
|