Post by anusham163 on Jul 4, 2013 17:56:15 GMT 5.5
Dear Mahaperiava Bakthas!
I had not been visiting this forum for quite some time now due to a lot of family engagements. All went off well by the Grace of Mahaperiava. I am once again resuming my duty.
I have started from where I left in 'VINAYAKAR AKAVAL---NOOL VILAKKAM.
Thanking you all.
anusham163
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்.
பேழை வயிறு என்பது உலகனைத்தையும் தன்னுள் அடக்கிய பரம்பொருள் நிலையைக் காட்டுகிறது.
அண்டங்கள் அனைத்தும் ஆண்டவனுக்குள்ளும், ஆண்டவன் அண்டங்களுக்குள்ளும் அமைந்து நிற்பதுதான் பரம்பொருளின் தத்துவ நிலையாகும், பேரறிஞர் ராஜாஜி ‘கடவுள்’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு ஈடாக இறைவனைப் பற்றிய சொல் வேறு எந்த மொழியிலும் இத்தனை அழகோடு கிடையாது என்று அழுத்தமாக அடிக்கடி கூறுவதுண்டு. அண்டங்களைக் கடந்து நிற்கும் நிலையையும், அண்டங்களுக்குள் அடங்கி நிற்கும் நிலையையும் ஒருசேர உணர்த்தக் கூடிய ஒப்பற்ற ஒரு சொல் ‘கடவுள்’ என்ற சொல் ஒன்றுதான்; இத்தனை அழகிய சொல்லை, இத்தனை விரிந்து பரந்து பொருள் தருகிற சொல்லைத் தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் தான் அறிந்த வரை கண்டதே இல்லை என்று அவர் வியந்து வியந்து சொல்வது இந்த இடத்தில் எனக்கு நினைவு வருகிறது. ‘கடவுள்’ என்ற இந்த அழகிய சொல்லுக்குரிய உருவகமே பேழை வயிறு!
‘பெரும்பாரக் கோடு’ என்பது ஞான உடம்பிலே யோகப்பயிற்சியில் செய்யப்படுகிற ஒரு இரகசிய உத்தியை உணர்த்துகிறது என்று சிவயோகி இரத்தினசபாபதியார் தமது உரையிலே வற்புறுத்திக் கூறுகிறார். அவருடைய விளக்க உரை வருமாறு:
‘பல்லிலேதான் ருத்திரக் கிரந்தி பேதனம் செய்யும் ஆற்றல் உள்ளது. பழையன கழிந்தால்தான் புதுவீடு கட்டமுடியும். பழைய ஆசைகளின் இருப்பாகிய பெட்டகத்தின் சாவி இங்குள்ளது. அறிந்து திறந்தவர் தேகமற்ற ஜீவ ஒளிக்குப் போகமுடியும். அதனால் கடைவாய்ப்பல் யானையாகிய பிரணவத்தின் வியட்டிப் பிரணவமான அ, உ, ம வையும் விந்து நாதங்களையும் எல்லை பிரிக்கும் இடமாயிற்று, பாரம்---எல்லை.’
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்.
மனித உடம்பு பருப்பொருள் நிலையிலே தன்னியல்பில் இயங்கும்போது அது இருள் வடிவாக இருக்கிறது. சித்தர்களின் யோக ஞான முறைப்படி ஆன்மப் பயிற்சியில் இந்த உடம்பு தோயும்போது அது ஒளிமயமாகிறது. முன்பிருந்த இருளை ஞானமாகிய கை வெருட்டி விடுகிறது. தும்பிக்கை என்பது இதுவே. ஞானக்கண்கொண்டு பார்க்கும் மாணவனுக்கு முகத்தின் முன்பு ஒளிமண்டலம் வாய்க்கிறது. இந்த ஒளிமண்டலமானது யானை தனது தும்பிக்கையை நீட்டுவது போன்ற பாங்கிலே காண்கிறது என்பது சித்தர்களின் அனுபவ வாக்காகும்.
இந்த ஞானவிளக்கத்தோடு சிந்தித்தோமானால், வேழமுகம் என்பதன் உட்பொருள் ஞானக்கல்வி என்ற சித்தர் பயிற்சியின் உருவகம் என்பது நமக்குப் புலனாகும்.
ஞானக்கல்வியின் பாதையிலே ஒரு மாணவன் முன்னேறும்போது, அக்கினி கலை என்ற தத்துவமானது மேல் எழுந்து செவ்வொளியுடன் சுடரத் தொடங்குகிறது. அந்த ஒளியானது நெற்றிக்கு நேரே புருவ நடுவின் எதிரிலே தோன்றுவதால் அதைத் திலகம் என்றும், செந்தூரத் திலகம் என்றும் அழைப்பது சித்தர்கள் மரபாகும். இத்தகைய செஞ்சுடர் குருவின் அருளினால் ஒரு மாணவனுக்குத் தோன்றும்பொழுது அவனுடைய ஆணவம் அழிந்து அவன் சிவத்தன்மை பெறுகிறான். சீவன் சிவனாவது இந்த ஞான அனுபவமே!.
‘அங்குச பாசம்’ என்பது அடக்கத்தின் உருவகம். இதுவே அங்குசமாகும். அதாவது உடம்பின் ஆற்றலைக் கட்டுப்படுத்தும் ஞானக்கருவி. இனி பாசம் என்பது அடங்கி நிற்கும் மனித உடம்பின் வினையாற்றலை மீண்டும் மேலெழாதவாறு பிணைத்துக் கட்டும் ஆற்றலாகும். பாசங்களை அடக்குவதோடு, அடங்கிய பாசங்கள் மீண்டும் பொங்கி வ்ழாதவாறு இறுக்கிப் பிணைத்து, அவற்றைக் கட்டிப் போடுகிற யோக முறையையே அங்குசமும் பாசமும் உணர்த்துகின்றன.
‘அஞ்சுகரம்’ என்பது ஐம்புலனையும் ஒடுக்குகின்ற ஞான ஆற்ற்லேயாகும்.
இன்னும் வரும்……………………………..
I had not been visiting this forum for quite some time now due to a lot of family engagements. All went off well by the Grace of Mahaperiava. I am once again resuming my duty.
I have started from where I left in 'VINAYAKAR AKAVAL---NOOL VILAKKAM.
Thanking you all.
anusham163
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்.
பேழை வயிறு என்பது உலகனைத்தையும் தன்னுள் அடக்கிய பரம்பொருள் நிலையைக் காட்டுகிறது.
அண்டங்கள் அனைத்தும் ஆண்டவனுக்குள்ளும், ஆண்டவன் அண்டங்களுக்குள்ளும் அமைந்து நிற்பதுதான் பரம்பொருளின் தத்துவ நிலையாகும், பேரறிஞர் ராஜாஜி ‘கடவுள்’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு ஈடாக இறைவனைப் பற்றிய சொல் வேறு எந்த மொழியிலும் இத்தனை அழகோடு கிடையாது என்று அழுத்தமாக அடிக்கடி கூறுவதுண்டு. அண்டங்களைக் கடந்து நிற்கும் நிலையையும், அண்டங்களுக்குள் அடங்கி நிற்கும் நிலையையும் ஒருசேர உணர்த்தக் கூடிய ஒப்பற்ற ஒரு சொல் ‘கடவுள்’ என்ற சொல் ஒன்றுதான்; இத்தனை அழகிய சொல்லை, இத்தனை விரிந்து பரந்து பொருள் தருகிற சொல்லைத் தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் தான் அறிந்த வரை கண்டதே இல்லை என்று அவர் வியந்து வியந்து சொல்வது இந்த இடத்தில் எனக்கு நினைவு வருகிறது. ‘கடவுள்’ என்ற இந்த அழகிய சொல்லுக்குரிய உருவகமே பேழை வயிறு!
‘பெரும்பாரக் கோடு’ என்பது ஞான உடம்பிலே யோகப்பயிற்சியில் செய்யப்படுகிற ஒரு இரகசிய உத்தியை உணர்த்துகிறது என்று சிவயோகி இரத்தினசபாபதியார் தமது உரையிலே வற்புறுத்திக் கூறுகிறார். அவருடைய விளக்க உரை வருமாறு:
‘பல்லிலேதான் ருத்திரக் கிரந்தி பேதனம் செய்யும் ஆற்றல் உள்ளது. பழையன கழிந்தால்தான் புதுவீடு கட்டமுடியும். பழைய ஆசைகளின் இருப்பாகிய பெட்டகத்தின் சாவி இங்குள்ளது. அறிந்து திறந்தவர் தேகமற்ற ஜீவ ஒளிக்குப் போகமுடியும். அதனால் கடைவாய்ப்பல் யானையாகிய பிரணவத்தின் வியட்டிப் பிரணவமான அ, உ, ம வையும் விந்து நாதங்களையும் எல்லை பிரிக்கும் இடமாயிற்று, பாரம்---எல்லை.’
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்.
மனித உடம்பு பருப்பொருள் நிலையிலே தன்னியல்பில் இயங்கும்போது அது இருள் வடிவாக இருக்கிறது. சித்தர்களின் யோக ஞான முறைப்படி ஆன்மப் பயிற்சியில் இந்த உடம்பு தோயும்போது அது ஒளிமயமாகிறது. முன்பிருந்த இருளை ஞானமாகிய கை வெருட்டி விடுகிறது. தும்பிக்கை என்பது இதுவே. ஞானக்கண்கொண்டு பார்க்கும் மாணவனுக்கு முகத்தின் முன்பு ஒளிமண்டலம் வாய்க்கிறது. இந்த ஒளிமண்டலமானது யானை தனது தும்பிக்கையை நீட்டுவது போன்ற பாங்கிலே காண்கிறது என்பது சித்தர்களின் அனுபவ வாக்காகும்.
இந்த ஞானவிளக்கத்தோடு சிந்தித்தோமானால், வேழமுகம் என்பதன் உட்பொருள் ஞானக்கல்வி என்ற சித்தர் பயிற்சியின் உருவகம் என்பது நமக்குப் புலனாகும்.
ஞானக்கல்வியின் பாதையிலே ஒரு மாணவன் முன்னேறும்போது, அக்கினி கலை என்ற தத்துவமானது மேல் எழுந்து செவ்வொளியுடன் சுடரத் தொடங்குகிறது. அந்த ஒளியானது நெற்றிக்கு நேரே புருவ நடுவின் எதிரிலே தோன்றுவதால் அதைத் திலகம் என்றும், செந்தூரத் திலகம் என்றும் அழைப்பது சித்தர்கள் மரபாகும். இத்தகைய செஞ்சுடர் குருவின் அருளினால் ஒரு மாணவனுக்குத் தோன்றும்பொழுது அவனுடைய ஆணவம் அழிந்து அவன் சிவத்தன்மை பெறுகிறான். சீவன் சிவனாவது இந்த ஞான அனுபவமே!.
‘அங்குச பாசம்’ என்பது அடக்கத்தின் உருவகம். இதுவே அங்குசமாகும். அதாவது உடம்பின் ஆற்றலைக் கட்டுப்படுத்தும் ஞானக்கருவி. இனி பாசம் என்பது அடங்கி நிற்கும் மனித உடம்பின் வினையாற்றலை மீண்டும் மேலெழாதவாறு பிணைத்துக் கட்டும் ஆற்றலாகும். பாசங்களை அடக்குவதோடு, அடங்கிய பாசங்கள் மீண்டும் பொங்கி வ்ழாதவாறு இறுக்கிப் பிணைத்து, அவற்றைக் கட்டிப் போடுகிற யோக முறையையே அங்குசமும் பாசமும் உணர்த்துகின்றன.
‘அஞ்சுகரம்’ என்பது ஐம்புலனையும் ஒடுக்குகின்ற ஞான ஆற்ற்லேயாகும்.
இன்னும் வரும்……………………………..