Post by radha on Apr 30, 2013 8:07:32 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
SRI NEELAKANTA DIKSHTAR KRITHAM RAGHUVEERATSVAM--Part--2
டாக்டர் பீ.எஸ்.நடராஜன்
श्रीगुरुभ्यो नमः
राज्याभिषेचनविधिः शिरसि प्रसक्तः
पित्राज्ञया परिहृतोऽप्यसमकृत्त्वयायम् ।
काकुत्स्थ पर्यवसितस्तव पादुकायां
कीर्तिस्तु धीर इति पूरयति त्रिलोकीम् ॥५॥
ராஜ்யாபி4ஷேசனவிதி:4
சிரஸி ப்ரஸக்த:
பித்ராஞயயா பரிஹ்ருதோபி
அயமஸக்ருத்த்வயாயம் |
காகுத்ஸ்த2 பர்யவஸித:
தவபாது3காயாம்
கீர்த்திஸ்து தீ4ர இதி
பூரயதி த்ரிலோகீம் ||5||
விளக்கவுரை:
உன் ராஜ்யாபிஷேகத்திற்கான சடங்குகள் ஹே காகுத்ஸ்த! ஸ்ரீராம! ஆரம்பமாயின. (புண்ணிய நதிகளின் தீர்த்தத்தால்) உன் சிரசில அபிஷேகம் செய்யப்படும் தருணம் உன் தந்தையின் ஆணையால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பின் பல தடவை அதற்கு வாய்ப்பு ஏற்பட்டபோதும் அது உன்னாலேயே தவிர்க்கப்பட்டது. முடிவில் அந்த அபிஷேகம் உன் பாதுகை களுக்கு (பரதனால்) செய்யப்பட்டு நிறைவு பெற்றது. பித்ரு வாக்கிய பரிபாலனத்தின் பொருட்டு நீ செய்த மகத்தான தியாகத்தால் மூவுலகிலும் உன் கீர்த்தி பரவியது.
ஸ்ரீமத் வால்மீகி ரமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் 4-11 காண்டங்களில் இது விவரிக்கப்படுகிறது.
अद्य चन्द्रोऽभ्युपगतः पुष्यात्पूर्वं पुनर्वसू ।
श्वः पुष्ययोगं नियतं वक्ष्यन्ते दैवचिन्तकाः ॥
तत: पुष्येऽभिषिञ्चस्व मनस्त्वरयतीव माम् ।
श्वस्त्वाऽहमभिषेक्ष्यामि यौवराज्ये परन्तप ॥
(அயோ: ஸர்கம் 4 சுலோ:21-22)
தசரதன் கூறுகிறான் “இன்று புனர்வஸூ நக்ஷத்திரம். நாளை புஷ்ய நக்ஷத்திரத்தில் அபிஷேகம் செய்வது உத்தமம் என்று சோதிடர்கள் கூறி உள்ளனர். என் மனதே என்னை துரிதப் படுத்துகிறது. நாளைக்கே உனக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்வேன்.”
மந்தரையின் துர்போதனை கைகேயியை வயமிழக்கச் செய்கிறது. சம்பராஸுர யுத்தத்தின் போது தசரதன் தனக்களித்த இரு வரங்கள் மூலம் அதைத்தடுத்து விடுகிறாள். கைகேயி தசரதனிடம் கேட்கிறாள்:
नव पञ्च च वर्षाणि दण्डकारण्यमाश्रितः
चीराजिनजटाधारी रामो भवतु तापसः
भरतो भजतामद्य यौवराज्यमकण्टकम्
एष मे परमः कामो दत्तमेव वरं वृणे
(அயோ: ஸர்கம் 11 சுலோ:26-27)
“ முன்பே தாங்கள் எனக்களித்த இரு வரங்களையே இப்பொழுது கேட்கிறேன். முதல் வரத்தால் ராமன் ஜடை தரித்து பதினான்கு ஆண்டுகள் மரவுரியணிந்து வனவாசம் புக வேண்டும். இரண்டாம் வரத்தால் பரதனுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்து முடி சூட்ட வேண்டும்.”
மகாகவி காளிதாஸர் இந்நிகழ்ச்சியை தம் ரகுவம்ச மகாகாவியத்தில் மிக அற்புதமாக விளக்குகிறார்.
सा किलाश्वासिता चण्डी भर्त्रा तत्संश्रुतौ वरौ ।
उद्ववाम इन्द्रसिक्ता भूर्बिलमग्नौ इवोरगौ ॥
तयोश्चतुर्दर्शैकेन रामं प्राव्राजयत्समाः ।
द्वितीयेन सुतस्येच्छद्वैधव्यैकफलं श्रियम् ॥
(ரகுவம்சம் காண்டம் 12 சுலோ:5-6)
மிக்க பிடிவாதமாக கைகேயி கேட்ட அந்த இரு வரங்கள், கோடை மழையில், வெப்பம் தாங்காமல் பொந்திலிருந்து வௌக்கிளம்பிய இரு நாகப்பாம்புகள் போல அமைந்தன. ( ஸ்ரீராமனுக்கு முடி சூட்டு விழா என்ற செய்தி மக்களுக்கு கடும்கோடையில் குளிர்ந்த மழை போல் மகிழ்ச்சியை அளித்தது). முதல் வரத்தால் ராமன் பதிநான்கு ஆண்டுகள் துறவரம் பூண்டு வனவாசம் செய்யவேண்டும். இரண்டாம் வரத்தால் பரதனுக்கு ராஜ்யம் வேன்டும் என்று கேட்ட கைகேயி, உண்மையில் தனக்கு மாங்கல்ய இழப்பையே (வைதவ்யத்தையே) வரமாக பெற்றுக் கொண்டாள்.
குலகுருவான வஸிஷ்டர் தர்ம சாத்திரங்களை சான்றாக வைத்து பலவாராக ராமனை அயோத்திக்கு திரும்பி ராஜ்யத்தை எற்று கொள்ளும்படி வற்புறுத்துகிறார். பரதன் எவ்வளவோ முயன்றும், ராமன் சம்மதிக்கவில்லை. பல முறை தன் முடிசூடலுக்கு மீண்டும் வாய்ப்புகள் எற்பட்டும் அவனே அதை தடுத்தது போல் ஆகிறது. ஸ்ரீராமனுக்கு சிரசில் செய்யப்பட வேண்டிய அபிஷேகம், பரதனால் பாதுகா பட்டபிஷேகத்தின் போது ஸ்ரீராமனின் பாதுகைகளுக்கு செய்யப்பட்டு நிறைவு பெறுகிறது.
आज्ञां गुरोरहृदयामपि साधयिष्यन्
सत्यव्रतप्रियतया विपिनं गतत्वम् ।
ब्रह्मार्पणोपहृतकर्मफलोऽपि लोकैः
गृह्णीय नाहमिति किं मुनिमात्थ मिथ्या ॥६॥
ஆஞாம் கு3ரோரஹ்ருதயமபி
ஸாத4யிஷ்யன்
ஸ்த்யவ்ரதப்ரியதயா
விபினம் க3தவான்
ப்ரம்மார்பணோபஹ்ருத-
கர்மப2ல: அபி லோகை:
க்3ருண்ணீய நாஹமிதி
கிம் முனிமாத்த2 மித்2யா ||6||
விளக்கவுரை:
(பரம்பொருளான ஸ்ரீராம!!) தந்தையின் ஆணை மிக்க இரக்கமற்றதாக இருந்தும் ஸத்ய விரதனான நீ தந்தை சொல் காக்க கானகம் சென்றாய். மக்களாலும் முனிஜனங்களாலும் “பிரம்மார்ப்பணம்” என்று அர்ப்பணிக்கப்படும் கர்ம பலன்கள் அனைத்தும் உன்னையே அடைகின்றன. இருப்பினும் ஏன் முனிவர்களிடம் இதில் நான் ஸம்பந்த்தப்படவில்லை என்று தவறாக கூறுகிறாய்?
எல்லா கர்மாக்களிலும் முடிவில் “ஸகலம் பரஸ்மை ஸ்ரீமந்நாராயணாய இதி ஸமர்ப்பயாமி” என்றே அர்ப்பணிக்கப் படுகின்றன.
आकाशात्पतितं तोयं यथा
गच्छति सागरम्
सर्वदेवनमस्कारः
केशवं प्रतिगच्छति
வானிலிருந்து (மழையாக) பொழியும் நீர் முடிவில் கடலிலே எப்படி போய் சேருமோ அதே போல் எந்த தேவதைச்கு செய்யப்படும் நமஸ்காரமும் பரமாத்வான ஸ்ரீமன் நாராயணனையே அடைகிறது.
மனிதனாக அவதரித்து, அவதார லக்ஷியத்திற்காக ஸ்ரீராமன, மனிதனாகவே வாழ்ந்தபோதிலும் அவனைப் பரம்பொருள் என்ற கோணத்திலேயே காண்கிறார் மகாகவி.
शत्रो: स्वसारमुपलब्धवतः स्फुटं प्राक्
शङ्के तवाजनि कियानयमित्यवज्ञा ।
नो चेच्चतुर्दशसहस्रिकया भटानाम्
प्राप्तं द्विषं व्यजयताः कथमेक एव ॥७॥
சத்ரோ: ஸ்வஸாரமுபலப்த4வத:
ஸ்பு2டம் ப்ராக்
சங்கே தவாஜனி கியானயம்
இதி அவஞா
நோசேத் சதுர்த3ச-
ஸஹஸ்ரிகயா ப4டானாம்
ப்ராப்தம் த்3விஷம் வ்யஜயதா:
கத2மேக ஏவ ||7||
விளக்கவுரை:
சத்ருவின் சகோதரி உன்னிடம் மையல் கொண்டு தகாத முறையில் நடந்து கொண்டதை நன்கு அறிந்தது எந்த அளவிற்கு உன் மனதில் வெறுப்பையும் த்வேஷத்தையும் மூட்டியள்ளது என்பது தெளிவாகிறது. இல்லையெனில் நீ தன்னந்தனியாகவே பதினான்காயிரம் அரக்கர்களை வென்று வதம் செய்தது எங்ஙனம்?
एको दाशरथी रामो यतुधानाः सहस्रशः ।
तेतु यावन्त एवाजौ तावांश्च ददृशे स तैः ॥
तस्मिन् रामशरोत्कृत्ते बले महति रक्षसां ।
उत्थितं ददृशेऽन्यच्च कबन्धेभ्यो न किंचन ॥
(ரகுவம்சம் காண்டம் 12 சுலோ:45,49)
மேலே குறிப்பிட்டுள்ள சுலோகங்களில் மகாகவி காளிதாஸர் விவரிக்கிறார. ரணகளத்தில் ஸ்ரீ ராமன் தனித்து நிற்கிறான். அரக்கர்கள் பதிநான்காயிரம் பேர். ராமன் மோகனாஸ்திரத்தை பிரயோகம் செய்ய ஒவ்வொரு அரக்கனுக்கும் மற்றவன் ராமன் போல் காணப்படுகிறான். ஒருவனை ஒருவன் தாக்க, அனைவரும் வெட்டுண்டு சிரமற்ற முண்டங்களாக கபந்தராக வீழ்கிறார்கள்.
கரன், தூஷணன், திரிசிரஸ் முதலான பதிநான்காயிரம் ராக்ஷஸர்கள் இந்த ஜனஸ்தான வதத்தில் மடிகிறார்கள்.
வால்மீகிராமாயணம் அரண்ய காண்டம்
17-30 ஸர்கங்களில் இந்த விருத்தாந்தம் விஸ்தாரமாக விவரிக்கப்படுகிறது.
नेतुस्तवापि जगतामभवत् कदाचित्
नेता विराध इति नाथ यथा तथैव ।
व्यामोहयन्नपि जगन्निजमायया त्वं
व्यामोहितोऽसि हरिणेन हिरण्मयेन ॥८॥
நேதுஸ்தவாபி ஜக3தாம்
அப4வத் கதா3சித்
நேதா விராத4 இதி
நாத2 யதா2 ததை2வ
வ்யமோஹயன்னபி ஜக3த்
நிஜமாயயா த்வம்
வ்யாமோஹிதோஸ்மி
ஹரிணேன ஹிரண்மயேன ||8||
விளக்கவுரை:
உலகங்கள் அனைத்திற்கும் வழி காட்டி நடத்திச்செல்லும் உனக்கு ஒரு சமயம், விராதன் என்ற ராக்ஷஸன் வழிகாட்டியானான். உன் (அம்சமான) யோகமாயையால் இந்த பிரபஞ்சமே மூழ்கி, மயங்கிவிடுகிறது. இருப்பினும் ஒரு பொன்மய மானிடம் மயங்கிவிட்டாய் அன்றோ?
தும்புரு என்ற கந்தர்வன், குபேரனால் சபிக்கப்பட்டு விராதன் எனும் ராக்ஷஸ ஜன்மத்தை அடைகிறான். அவன் சாப விமோசனம் வேண்ட, “ஸ்ரீராமனால் வதம் செய்யப்படும் போது சுய உருவத்தை அடைவாய்” என்று குபேரன் அருளுகிறார். அவ்வாறே ராமனால் கொல்லப் பட்டபோது திவ்ய ரூபத்தை திரும்ப பெறுகிறான். அவன் ராமனை வணங்கி, “ஸ்ரீராமா! நீ சரபங்க மஹரிஷியின் ஆச்ரமத்திற்கு விரைவில் சென்று அவரை சந்திப்பாயாக. உனக்கு வெற்றி கிட்டும். சகல மங்களமும் உண்டாகும்.” என்று கூறி விடை பெறுகிறான். அரண்ய காண்டம் நான்காம் ஸர்கத்தில் இந்த வரலாறு இடம் பெறுகிறது. இங்கே விராதன் ரமனுக்கு வழிகாட்டி ஆகிறான்.
ஸ்ரீமத் பாகவதத்தில், கண்ணன, பிரம்ம தேவர் அபகரித்துக்கொண்டு சென்ற பாலகர்களையும், பசுக்கள் மற்றும், கன்றுகளையும், நொடிப் பொழுதில் தத்ரூபமாக ஸ்ருஷ்டித்து, பிரம்மாவையே மாயையில் மயங்கச் செய்கிறார்.
விச்வாமித்திர மகரிஷியின் யாக ஸம்ரக்ஷணத்தின் போது, மாரீசனைக் கொல்லாமல் விடல், மந்தரையின துர் போதனையால் கைகேயி வரம் கேட்டது, மாயமானை ராமன் தேடிச்சென்றது, ராமனைத்தேடி லக்ஷ்மணன் சென்றது முதலான அனைத்தும் தன் அவதார லக்ஷியமான ராவண ஸ்ம்ஹாரத்தை நிறைவேற்ற ஸத்தியஸங்கல்பனான பகவான் ஸ்ரீராமனால், திட்டமிட்டு செயல் படுத்தப்பட்டவையாகும்.
மகாகவி ஸ்ரீ நீலகண்டதீக்ஷிதர் அருளிய ரகுவீரஸ்தவம் தொடரும்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM.
SRI NEELAKANTA DIKSHTAR KRITHAM RAGHUVEERATSVAM--Part--2
டாக்டர் பீ.எஸ்.நடராஜன்
श्रीगुरुभ्यो नमः
राज्याभिषेचनविधिः शिरसि प्रसक्तः
पित्राज्ञया परिहृतोऽप्यसमकृत्त्वयायम् ।
काकुत्स्थ पर्यवसितस्तव पादुकायां
कीर्तिस्तु धीर इति पूरयति त्रिलोकीम् ॥५॥
ராஜ்யாபி4ஷேசனவிதி:4
சிரஸி ப்ரஸக்த:
பித்ராஞயயா பரிஹ்ருதோபி
அயமஸக்ருத்த்வயாயம் |
காகுத்ஸ்த2 பர்யவஸித:
தவபாது3காயாம்
கீர்த்திஸ்து தீ4ர இதி
பூரயதி த்ரிலோகீம் ||5||
விளக்கவுரை:
உன் ராஜ்யாபிஷேகத்திற்கான சடங்குகள் ஹே காகுத்ஸ்த! ஸ்ரீராம! ஆரம்பமாயின. (புண்ணிய நதிகளின் தீர்த்தத்தால்) உன் சிரசில அபிஷேகம் செய்யப்படும் தருணம் உன் தந்தையின் ஆணையால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பின் பல தடவை அதற்கு வாய்ப்பு ஏற்பட்டபோதும் அது உன்னாலேயே தவிர்க்கப்பட்டது. முடிவில் அந்த அபிஷேகம் உன் பாதுகை களுக்கு (பரதனால்) செய்யப்பட்டு நிறைவு பெற்றது. பித்ரு வாக்கிய பரிபாலனத்தின் பொருட்டு நீ செய்த மகத்தான தியாகத்தால் மூவுலகிலும் உன் கீர்த்தி பரவியது.
ஸ்ரீமத் வால்மீகி ரமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் 4-11 காண்டங்களில் இது விவரிக்கப்படுகிறது.
अद्य चन्द्रोऽभ्युपगतः पुष्यात्पूर्वं पुनर्वसू ।
श्वः पुष्ययोगं नियतं वक्ष्यन्ते दैवचिन्तकाः ॥
तत: पुष्येऽभिषिञ्चस्व मनस्त्वरयतीव माम् ।
श्वस्त्वाऽहमभिषेक्ष्यामि यौवराज्ये परन्तप ॥
(அயோ: ஸர்கம் 4 சுலோ:21-22)
தசரதன் கூறுகிறான் “இன்று புனர்வஸூ நக்ஷத்திரம். நாளை புஷ்ய நக்ஷத்திரத்தில் அபிஷேகம் செய்வது உத்தமம் என்று சோதிடர்கள் கூறி உள்ளனர். என் மனதே என்னை துரிதப் படுத்துகிறது. நாளைக்கே உனக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்வேன்.”
மந்தரையின் துர்போதனை கைகேயியை வயமிழக்கச் செய்கிறது. சம்பராஸுர யுத்தத்தின் போது தசரதன் தனக்களித்த இரு வரங்கள் மூலம் அதைத்தடுத்து விடுகிறாள். கைகேயி தசரதனிடம் கேட்கிறாள்:
नव पञ्च च वर्षाणि दण्डकारण्यमाश्रितः
चीराजिनजटाधारी रामो भवतु तापसः
भरतो भजतामद्य यौवराज्यमकण्टकम्
एष मे परमः कामो दत्तमेव वरं वृणे
(அயோ: ஸர்கம் 11 சுலோ:26-27)
“ முன்பே தாங்கள் எனக்களித்த இரு வரங்களையே இப்பொழுது கேட்கிறேன். முதல் வரத்தால் ராமன் ஜடை தரித்து பதினான்கு ஆண்டுகள் மரவுரியணிந்து வனவாசம் புக வேண்டும். இரண்டாம் வரத்தால் பரதனுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்து முடி சூட்ட வேண்டும்.”
மகாகவி காளிதாஸர் இந்நிகழ்ச்சியை தம் ரகுவம்ச மகாகாவியத்தில் மிக அற்புதமாக விளக்குகிறார்.
सा किलाश्वासिता चण्डी भर्त्रा तत्संश्रुतौ वरौ ।
उद्ववाम इन्द्रसिक्ता भूर्बिलमग्नौ इवोरगौ ॥
तयोश्चतुर्दर्शैकेन रामं प्राव्राजयत्समाः ।
द्वितीयेन सुतस्येच्छद्वैधव्यैकफलं श्रियम् ॥
(ரகுவம்சம் காண்டம் 12 சுலோ:5-6)
மிக்க பிடிவாதமாக கைகேயி கேட்ட அந்த இரு வரங்கள், கோடை மழையில், வெப்பம் தாங்காமல் பொந்திலிருந்து வௌக்கிளம்பிய இரு நாகப்பாம்புகள் போல அமைந்தன. ( ஸ்ரீராமனுக்கு முடி சூட்டு விழா என்ற செய்தி மக்களுக்கு கடும்கோடையில் குளிர்ந்த மழை போல் மகிழ்ச்சியை அளித்தது). முதல் வரத்தால் ராமன் பதிநான்கு ஆண்டுகள் துறவரம் பூண்டு வனவாசம் செய்யவேண்டும். இரண்டாம் வரத்தால் பரதனுக்கு ராஜ்யம் வேன்டும் என்று கேட்ட கைகேயி, உண்மையில் தனக்கு மாங்கல்ய இழப்பையே (வைதவ்யத்தையே) வரமாக பெற்றுக் கொண்டாள்.
குலகுருவான வஸிஷ்டர் தர்ம சாத்திரங்களை சான்றாக வைத்து பலவாராக ராமனை அயோத்திக்கு திரும்பி ராஜ்யத்தை எற்று கொள்ளும்படி வற்புறுத்துகிறார். பரதன் எவ்வளவோ முயன்றும், ராமன் சம்மதிக்கவில்லை. பல முறை தன் முடிசூடலுக்கு மீண்டும் வாய்ப்புகள் எற்பட்டும் அவனே அதை தடுத்தது போல் ஆகிறது. ஸ்ரீராமனுக்கு சிரசில் செய்யப்பட வேண்டிய அபிஷேகம், பரதனால் பாதுகா பட்டபிஷேகத்தின் போது ஸ்ரீராமனின் பாதுகைகளுக்கு செய்யப்பட்டு நிறைவு பெறுகிறது.
आज्ञां गुरोरहृदयामपि साधयिष्यन्
सत्यव्रतप्रियतया विपिनं गतत्वम् ।
ब्रह्मार्पणोपहृतकर्मफलोऽपि लोकैः
गृह्णीय नाहमिति किं मुनिमात्थ मिथ्या ॥६॥
ஆஞாம் கு3ரோரஹ்ருதயமபி
ஸாத4யிஷ்யன்
ஸ்த்யவ்ரதப்ரியதயா
விபினம் க3தவான்
ப்ரம்மார்பணோபஹ்ருத-
கர்மப2ல: அபி லோகை:
க்3ருண்ணீய நாஹமிதி
கிம் முனிமாத்த2 மித்2யா ||6||
விளக்கவுரை:
(பரம்பொருளான ஸ்ரீராம!!) தந்தையின் ஆணை மிக்க இரக்கமற்றதாக இருந்தும் ஸத்ய விரதனான நீ தந்தை சொல் காக்க கானகம் சென்றாய். மக்களாலும் முனிஜனங்களாலும் “பிரம்மார்ப்பணம்” என்று அர்ப்பணிக்கப்படும் கர்ம பலன்கள் அனைத்தும் உன்னையே அடைகின்றன. இருப்பினும் ஏன் முனிவர்களிடம் இதில் நான் ஸம்பந்த்தப்படவில்லை என்று தவறாக கூறுகிறாய்?
எல்லா கர்மாக்களிலும் முடிவில் “ஸகலம் பரஸ்மை ஸ்ரீமந்நாராயணாய இதி ஸமர்ப்பயாமி” என்றே அர்ப்பணிக்கப் படுகின்றன.
आकाशात्पतितं तोयं यथा
गच्छति सागरम्
सर्वदेवनमस्कारः
केशवं प्रतिगच्छति
வானிலிருந்து (மழையாக) பொழியும் நீர் முடிவில் கடலிலே எப்படி போய் சேருமோ அதே போல் எந்த தேவதைச்கு செய்யப்படும் நமஸ்காரமும் பரமாத்வான ஸ்ரீமன் நாராயணனையே அடைகிறது.
மனிதனாக அவதரித்து, அவதார லக்ஷியத்திற்காக ஸ்ரீராமன, மனிதனாகவே வாழ்ந்தபோதிலும் அவனைப் பரம்பொருள் என்ற கோணத்திலேயே காண்கிறார் மகாகவி.
शत्रो: स्वसारमुपलब्धवतः स्फुटं प्राक्
शङ्के तवाजनि कियानयमित्यवज्ञा ।
नो चेच्चतुर्दशसहस्रिकया भटानाम्
प्राप्तं द्विषं व्यजयताः कथमेक एव ॥७॥
சத்ரோ: ஸ்வஸாரமுபலப்த4வத:
ஸ்பு2டம் ப்ராக்
சங்கே தவாஜனி கியானயம்
இதி அவஞா
நோசேத் சதுர்த3ச-
ஸஹஸ்ரிகயா ப4டானாம்
ப்ராப்தம் த்3விஷம் வ்யஜயதா:
கத2மேக ஏவ ||7||
விளக்கவுரை:
சத்ருவின் சகோதரி உன்னிடம் மையல் கொண்டு தகாத முறையில் நடந்து கொண்டதை நன்கு அறிந்தது எந்த அளவிற்கு உன் மனதில் வெறுப்பையும் த்வேஷத்தையும் மூட்டியள்ளது என்பது தெளிவாகிறது. இல்லையெனில் நீ தன்னந்தனியாகவே பதினான்காயிரம் அரக்கர்களை வென்று வதம் செய்தது எங்ஙனம்?
एको दाशरथी रामो यतुधानाः सहस्रशः ।
तेतु यावन्त एवाजौ तावांश्च ददृशे स तैः ॥
तस्मिन् रामशरोत्कृत्ते बले महति रक्षसां ।
उत्थितं ददृशेऽन्यच्च कबन्धेभ्यो न किंचन ॥
(ரகுவம்சம் காண்டம் 12 சுலோ:45,49)
மேலே குறிப்பிட்டுள்ள சுலோகங்களில் மகாகவி காளிதாஸர் விவரிக்கிறார. ரணகளத்தில் ஸ்ரீ ராமன் தனித்து நிற்கிறான். அரக்கர்கள் பதிநான்காயிரம் பேர். ராமன் மோகனாஸ்திரத்தை பிரயோகம் செய்ய ஒவ்வொரு அரக்கனுக்கும் மற்றவன் ராமன் போல் காணப்படுகிறான். ஒருவனை ஒருவன் தாக்க, அனைவரும் வெட்டுண்டு சிரமற்ற முண்டங்களாக கபந்தராக வீழ்கிறார்கள்.
கரன், தூஷணன், திரிசிரஸ் முதலான பதிநான்காயிரம் ராக்ஷஸர்கள் இந்த ஜனஸ்தான வதத்தில் மடிகிறார்கள்.
வால்மீகிராமாயணம் அரண்ய காண்டம்
17-30 ஸர்கங்களில் இந்த விருத்தாந்தம் விஸ்தாரமாக விவரிக்கப்படுகிறது.
नेतुस्तवापि जगतामभवत् कदाचित्
नेता विराध इति नाथ यथा तथैव ।
व्यामोहयन्नपि जगन्निजमायया त्वं
व्यामोहितोऽसि हरिणेन हिरण्मयेन ॥८॥
நேதுஸ்தவாபி ஜக3தாம்
அப4வத் கதா3சித்
நேதா விராத4 இதி
நாத2 யதா2 ததை2வ
வ்யமோஹயன்னபி ஜக3த்
நிஜமாயயா த்வம்
வ்யாமோஹிதோஸ்மி
ஹரிணேன ஹிரண்மயேன ||8||
விளக்கவுரை:
உலகங்கள் அனைத்திற்கும் வழி காட்டி நடத்திச்செல்லும் உனக்கு ஒரு சமயம், விராதன் என்ற ராக்ஷஸன் வழிகாட்டியானான். உன் (அம்சமான) யோகமாயையால் இந்த பிரபஞ்சமே மூழ்கி, மயங்கிவிடுகிறது. இருப்பினும் ஒரு பொன்மய மானிடம் மயங்கிவிட்டாய் அன்றோ?
தும்புரு என்ற கந்தர்வன், குபேரனால் சபிக்கப்பட்டு விராதன் எனும் ராக்ஷஸ ஜன்மத்தை அடைகிறான். அவன் சாப விமோசனம் வேண்ட, “ஸ்ரீராமனால் வதம் செய்யப்படும் போது சுய உருவத்தை அடைவாய்” என்று குபேரன் அருளுகிறார். அவ்வாறே ராமனால் கொல்லப் பட்டபோது திவ்ய ரூபத்தை திரும்ப பெறுகிறான். அவன் ராமனை வணங்கி, “ஸ்ரீராமா! நீ சரபங்க மஹரிஷியின் ஆச்ரமத்திற்கு விரைவில் சென்று அவரை சந்திப்பாயாக. உனக்கு வெற்றி கிட்டும். சகல மங்களமும் உண்டாகும்.” என்று கூறி விடை பெறுகிறான். அரண்ய காண்டம் நான்காம் ஸர்கத்தில் இந்த வரலாறு இடம் பெறுகிறது. இங்கே விராதன் ரமனுக்கு வழிகாட்டி ஆகிறான்.
ஸ்ரீமத் பாகவதத்தில், கண்ணன, பிரம்ம தேவர் அபகரித்துக்கொண்டு சென்ற பாலகர்களையும், பசுக்கள் மற்றும், கன்றுகளையும், நொடிப் பொழுதில் தத்ரூபமாக ஸ்ருஷ்டித்து, பிரம்மாவையே மாயையில் மயங்கச் செய்கிறார்.
விச்வாமித்திர மகரிஷியின் யாக ஸம்ரக்ஷணத்தின் போது, மாரீசனைக் கொல்லாமல் விடல், மந்தரையின துர் போதனையால் கைகேயி வரம் கேட்டது, மாயமானை ராமன் தேடிச்சென்றது, ராமனைத்தேடி லக்ஷ்மணன் சென்றது முதலான அனைத்தும் தன் அவதார லக்ஷியமான ராவண ஸ்ம்ஹாரத்தை நிறைவேற்ற ஸத்தியஸங்கல்பனான பகவான் ஸ்ரீராமனால், திட்டமிட்டு செயல் படுத்தப்பட்டவையாகும்.
மகாகவி ஸ்ரீ நீலகண்டதீக்ஷிதர் அருளிய ரகுவீரஸ்தவம் தொடரும்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM.