Post by radha on Apr 28, 2013 7:18:15 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
Source:- Amman Darsanam-May 2013
SRI GAYATRI MAHA MANTRA MAHAIMA
(யக்ஞோபவீதியான த்விஜர்களின் சிறந்த ஐஸ்வர்யமாக விளங்குவது காயத்ரி மந்த்ரம். இதைவிடச் சிறந்த மந்த்ரம் இல்லை என “ந காயத்ர்யா பரமோ மந்த்ர:” எனக் கூறுவர். ஸ்ரீவித்யோபாஸகர்களும் கூட மந்த்ரராஜமான பஞ்சதஸியை காயத்ரிக்குச் சமானமானதாகவும் அதன் மூன்று பாதங்களும் காயத்ரியின் மூன்று பாதங்களுக்குச் சமானமானதாகவும், மஹாமந்த்ரராஜமான மஹாஷோடஸியை துரீய காயத்ரிக்கு ஈடாகவும் கூறுவர். இந்தக் காயத்ரி மந்த்ரத்தின் வலிமையைக் கூறும் ‘அன்னஸூக்தபடனம்’ ஸ்ரார்த்தத்தில் ப்ராஹ்மணார்த்தம் சாப்பிட விஸ்வேதேவா: மற்றும் வஸு-ருத்ர-ஆதித்ய ஸ்வரூபா: பிரதிநிதிகளாக அமரும் அந்தணர்களுக்கு அவர்கள் போஜனம் செய்யும்போது கர்த்தாவினால் செய்யப்படுகிறது. இதுகாயத்ரி மந்த்ரத்தின் பெருமையைக் கூறுவதுடன், ப்ராஹ்மணார்த்தம் சாப்பிட்ட தோஷம்தீர அவர்கள் குறைந்தது ஆயிரத்தெட்டு காயத்ரியாவது அன்று செய்ய வேண்டியதை ஞாபகப்படுத்துகிறது)
ஸஹவை தேவானாஞ் சாஸுராணாஞ்ச யஜ்ஞௌ ப்ரததௌ... ரக்ஷாப்ஸி ஹவா புரோ(அ)னுவாகே தபோக்ரமதிஷ்டந்த தான் ப்ரஜாபதிர்-வரேணாபாமந்த்ர யத தானிவர-மவ்ருணீதாதித்யோ நோ யோத்தா இதி. தான்ப்ரஜாபதி-ரப்ரவீத்-யோதயத்வமிதி. தஸ்மாதுத்திஷ்ட்டந்தப் ஹவாதானி ரக்ஷாப் ஸ்யாதித்யம் யோதயந்தி யாவதஸ்த-மன்வகாத்-தானி ஹவா ஏதானி ரக்ஷாப்ஸி காயத்ரியா(அ)பிமந்த்ரிதேனாம்பஸா ஸாம்யந்தி, தது ஹவா ஏதே ப்ரஹ்மவாதின: பூர்வாபி முகாஸ் ஸந்த்யாயாம் காயத்ரியா(அ)பிமந்த்ரிதாஆபஊர்த்வம் விக்ஷிபந்தி, தா ஏதா ஆபோ வஜ்ரீபூத்வா தானி ரக்ஷாப்ஸி மந்தேஹாருணே த்வீபே ப்ரக்ஷிபந்தி யத் ப்ரதக்ஷிணம் ப்ரக்ரமந்தி தேன பாப்மான மவதூன்வந்த் யுத்யந்த மஸ்தம் யந்தமாதித்ய-மபித்யாயன் குர்வன் ப்ராஹ்மணோ வித்வான் ஸகலம் பத்ர-மஸ்னுதே(அ)ஸாவாதித்யோ ப்ரஹ்மேதி ப்ரஹ்மைவஸன் ப்ரஹ்மாப்யேதி ய ஏவம் வேத || ஓம் தத் ஸத் ||
“தேவர்களோடு அசுரர்களும் சேர்ந்து யக்ஞங்கள் செய்யத் தொடங்கினார்கள் (நாமும் ஸ்வர்க்கத்துக்கு போவோம் என்னும் எண்ணத்துடன்)” எனத்தொடங்கும் இந்த மந்த்ரபாகம் ‘தேவர்களைத் தோற்கடித்தால்தானே அவர்களின் உலகமான ஸ்வர்க்கத்துக்குப் போகமுடியும்’ என எண்ணி அதற்காக அவர்கள் செய்த செயலையும் அதன் விளைவையும் பின்வருமாறு விளக்குகிறது.
அந்த ராக்ஷஸர்களோ கிழக்கு முகமாக அமர்ந்து உக்ரமாகத் தவம் புரிந்தனர். அவர்களுக்கு முன் தோன்றிய ப்ரஜாபதியானவர் வேண்டும் வரத்தைக் கோரச் சொன்னார். அவர்களும் (தேவர்களில் சிறந்தவனான) ‘சூர்யனுடன் நாங்கள் சண்டையிட வேண்டும்’ என வரத்தைக் கோரினர். ப்ரஜாபதியும் அவர்களிடம் ‘சண்டையிடுங்கள்’ எனக்கூறினார். அதனால் ராக்ஷஸர்கள் உதிக்கின்ற சூர்யனுடன் (குறைந்த கிரணங்களுடன் பால சூர்யனாக அவன் இருக்கும்போது, பலத்தில் குறைந்திருப்பான் என்றெண்ணி) சண்டையிட்டனர். அதே சமயத்தில் காயத்ரி மந்த்ரத்தினால் மந்த்ரிக்கப்பட்ட நீரினை (அர்க்யமாக) இந்த ப்ரஹ்மத்தையே நினைந்திருக்கும் அந்தணர்கள் கிழக்கு முகமாக நின்று ஜபித்து ஸந்த்யா காலத்தில் ஈடுசெய்து விடுகிறார்கள். அந்தக் காயத்ரியினால் மந்திரிக்கப்பட்டு உயரே வீசப்பட்ட நீரானது வஜ்ராயுதம் போல் வலிமை பெற்று அந்த ராக்ஷஸர்களை (தூக்கிப்போய்) சூர்ய வெளிச்சமே மிகக்குறைவாக உள்ள (இன்று அன்டார்டிகா என அழைக்கப்படும் பூமியின் அடிபாகத்திலுள்ள) தீவில் வீசிவிடுகிறது. அவர்களை சுற்றிச் சுற்றி ஓடச் செய்கிறது. உதிக்கும் மற்றும் அஸ்தமிக்கும் சூர்யனை தியானித்து இவ்வாறு செய்கின்ற ப்ராஹ்மணன் அறிஞனாக, எல்லா நலன்களும் (ஸௌபாக்யங்களும்) அடைந்தவனாக இந்த (அதிதியின் மகனான) சூர்யன் தான் பரப்ரஹ்மமென எண்ணியவனாக தானே ப்ரஹ்மஸ்வரூபனாக பரம்பொருளில் லயிக்கிறான் என வேதம் அறுதியிட்டுக் கூறுகிறது. ஓம் அதுதான் உண்மைப்பொருள் எனப் பொருள்படும் இந்த மந்த்ரபாகம் பலத்தில் குறைந்திருக்கும் சூர்யனுக்கும் கூட அந்தணர்களால் தரப்படும் காயத்ரியினால் மந்த்ரிக்கப்பட்ட அர்க்யநீரானது எப்படி வஜ்ராயுதம் போல் வலிமை பெற்று பலம் சேர்க்கிறது எனக்கூறி அந்தக் காயத்ரியை ஜபிப்பவனுக்கு அது எப்படி பலம் சேர்ப்பதுடன், பரமபொருளுடன் ஐக்யத்தை அளிக்கும் எனவும் கூறுகிறது. இந்த மந்த்ரபாகத்தில் இன்னொரு முக்யமான விஷயத்தையும் காண்கிறோம். “ப்ரஹ்மசர்யேண தபஸைவ” எனக் கூறுவதன் மூலம் தவமானது இந்த்ரிய நிக்ரஹமெனப்படும் ப்ரஹ்மசர்யமில்லாது சாத்யமில்லை என்பதை இது வலியுறுத்துகிறது.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Source:- Amman Darsanam-May 2013
SRI GAYATRI MAHA MANTRA MAHAIMA
(யக்ஞோபவீதியான த்விஜர்களின் சிறந்த ஐஸ்வர்யமாக விளங்குவது காயத்ரி மந்த்ரம். இதைவிடச் சிறந்த மந்த்ரம் இல்லை என “ந காயத்ர்யா பரமோ மந்த்ர:” எனக் கூறுவர். ஸ்ரீவித்யோபாஸகர்களும் கூட மந்த்ரராஜமான பஞ்சதஸியை காயத்ரிக்குச் சமானமானதாகவும் அதன் மூன்று பாதங்களும் காயத்ரியின் மூன்று பாதங்களுக்குச் சமானமானதாகவும், மஹாமந்த்ரராஜமான மஹாஷோடஸியை துரீய காயத்ரிக்கு ஈடாகவும் கூறுவர். இந்தக் காயத்ரி மந்த்ரத்தின் வலிமையைக் கூறும் ‘அன்னஸூக்தபடனம்’ ஸ்ரார்த்தத்தில் ப்ராஹ்மணார்த்தம் சாப்பிட விஸ்வேதேவா: மற்றும் வஸு-ருத்ர-ஆதித்ய ஸ்வரூபா: பிரதிநிதிகளாக அமரும் அந்தணர்களுக்கு அவர்கள் போஜனம் செய்யும்போது கர்த்தாவினால் செய்யப்படுகிறது. இதுகாயத்ரி மந்த்ரத்தின் பெருமையைக் கூறுவதுடன், ப்ராஹ்மணார்த்தம் சாப்பிட்ட தோஷம்தீர அவர்கள் குறைந்தது ஆயிரத்தெட்டு காயத்ரியாவது அன்று செய்ய வேண்டியதை ஞாபகப்படுத்துகிறது)
ஸஹவை தேவானாஞ் சாஸுராணாஞ்ச யஜ்ஞௌ ப்ரததௌ... ரக்ஷாப்ஸி ஹவா புரோ(அ)னுவாகே தபோக்ரமதிஷ்டந்த தான் ப்ரஜாபதிர்-வரேணாபாமந்த்ர யத தானிவர-மவ்ருணீதாதித்யோ நோ யோத்தா இதி. தான்ப்ரஜாபதி-ரப்ரவீத்-யோதயத்வமிதி. தஸ்மாதுத்திஷ்ட்டந்தப் ஹவாதானி ரக்ஷாப் ஸ்யாதித்யம் யோதயந்தி யாவதஸ்த-மன்வகாத்-தானி ஹவா ஏதானி ரக்ஷாப்ஸி காயத்ரியா(அ)பிமந்த்ரிதேனாம்பஸா ஸாம்யந்தி, தது ஹவா ஏதே ப்ரஹ்மவாதின: பூர்வாபி முகாஸ் ஸந்த்யாயாம் காயத்ரியா(அ)பிமந்த்ரிதாஆபஊர்த்வம் விக்ஷிபந்தி, தா ஏதா ஆபோ வஜ்ரீபூத்வா தானி ரக்ஷாப்ஸி மந்தேஹாருணே த்வீபே ப்ரக்ஷிபந்தி யத் ப்ரதக்ஷிணம் ப்ரக்ரமந்தி தேன பாப்மான மவதூன்வந்த் யுத்யந்த மஸ்தம் யந்தமாதித்ய-மபித்யாயன் குர்வன் ப்ராஹ்மணோ வித்வான் ஸகலம் பத்ர-மஸ்னுதே(அ)ஸாவாதித்யோ ப்ரஹ்மேதி ப்ரஹ்மைவஸன் ப்ரஹ்மாப்யேதி ய ஏவம் வேத || ஓம் தத் ஸத் ||
“தேவர்களோடு அசுரர்களும் சேர்ந்து யக்ஞங்கள் செய்யத் தொடங்கினார்கள் (நாமும் ஸ்வர்க்கத்துக்கு போவோம் என்னும் எண்ணத்துடன்)” எனத்தொடங்கும் இந்த மந்த்ரபாகம் ‘தேவர்களைத் தோற்கடித்தால்தானே அவர்களின் உலகமான ஸ்வர்க்கத்துக்குப் போகமுடியும்’ என எண்ணி அதற்காக அவர்கள் செய்த செயலையும் அதன் விளைவையும் பின்வருமாறு விளக்குகிறது.
அந்த ராக்ஷஸர்களோ கிழக்கு முகமாக அமர்ந்து உக்ரமாகத் தவம் புரிந்தனர். அவர்களுக்கு முன் தோன்றிய ப்ரஜாபதியானவர் வேண்டும் வரத்தைக் கோரச் சொன்னார். அவர்களும் (தேவர்களில் சிறந்தவனான) ‘சூர்யனுடன் நாங்கள் சண்டையிட வேண்டும்’ என வரத்தைக் கோரினர். ப்ரஜாபதியும் அவர்களிடம் ‘சண்டையிடுங்கள்’ எனக்கூறினார். அதனால் ராக்ஷஸர்கள் உதிக்கின்ற சூர்யனுடன் (குறைந்த கிரணங்களுடன் பால சூர்யனாக அவன் இருக்கும்போது, பலத்தில் குறைந்திருப்பான் என்றெண்ணி) சண்டையிட்டனர். அதே சமயத்தில் காயத்ரி மந்த்ரத்தினால் மந்த்ரிக்கப்பட்ட நீரினை (அர்க்யமாக) இந்த ப்ரஹ்மத்தையே நினைந்திருக்கும் அந்தணர்கள் கிழக்கு முகமாக நின்று ஜபித்து ஸந்த்யா காலத்தில் ஈடுசெய்து விடுகிறார்கள். அந்தக் காயத்ரியினால் மந்திரிக்கப்பட்டு உயரே வீசப்பட்ட நீரானது வஜ்ராயுதம் போல் வலிமை பெற்று அந்த ராக்ஷஸர்களை (தூக்கிப்போய்) சூர்ய வெளிச்சமே மிகக்குறைவாக உள்ள (இன்று அன்டார்டிகா என அழைக்கப்படும் பூமியின் அடிபாகத்திலுள்ள) தீவில் வீசிவிடுகிறது. அவர்களை சுற்றிச் சுற்றி ஓடச் செய்கிறது. உதிக்கும் மற்றும் அஸ்தமிக்கும் சூர்யனை தியானித்து இவ்வாறு செய்கின்ற ப்ராஹ்மணன் அறிஞனாக, எல்லா நலன்களும் (ஸௌபாக்யங்களும்) அடைந்தவனாக இந்த (அதிதியின் மகனான) சூர்யன் தான் பரப்ரஹ்மமென எண்ணியவனாக தானே ப்ரஹ்மஸ்வரூபனாக பரம்பொருளில் லயிக்கிறான் என வேதம் அறுதியிட்டுக் கூறுகிறது. ஓம் அதுதான் உண்மைப்பொருள் எனப் பொருள்படும் இந்த மந்த்ரபாகம் பலத்தில் குறைந்திருக்கும் சூர்யனுக்கும் கூட அந்தணர்களால் தரப்படும் காயத்ரியினால் மந்த்ரிக்கப்பட்ட அர்க்யநீரானது எப்படி வஜ்ராயுதம் போல் வலிமை பெற்று பலம் சேர்க்கிறது எனக்கூறி அந்தக் காயத்ரியை ஜபிப்பவனுக்கு அது எப்படி பலம் சேர்ப்பதுடன், பரமபொருளுடன் ஐக்யத்தை அளிக்கும் எனவும் கூறுகிறது. இந்த மந்த்ரபாகத்தில் இன்னொரு முக்யமான விஷயத்தையும் காண்கிறோம். “ப்ரஹ்மசர்யேண தபஸைவ” எனக் கூறுவதன் மூலம் தவமானது இந்த்ரிய நிக்ரஹமெனப்படும் ப்ரஹ்மசர்யமில்லாது சாத்யமில்லை என்பதை இது வலியுறுத்துகிறது.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM