Post by radha on Apr 20, 2013 10:24:45 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
Source:- Amman Daesanam
ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாசாரிய ஸ்வாமிகள் ஷண்மத ஸ்தாபனம் செய்த உயர்ந்த குருவாகப் போற்றப்படுகிறார்.
அத்வைத ஸ்தாபனாசாரியரான ஸ்ரீ ஆதி சங்கரர், உபநிஷத்துக்கள் கூறியுள்ளபடி உருவமற்ற நிலையில் எல்லையே இல்லாத ஒளியும் அறிவும் ஆனந்த முகமாக எங்கும் நிறைந்து நிற்கும் பரப்ரம்ம தத்துவத்தை தான் செய்துள்ள ப்ரஸ்தான த்ரய பாஷ்யாதி கிரந்தங்களில் பலவாறு விளக்கிக் கூறியுள்ளார்.
ஆனாலும், உருவ வழிபாடு என்பது அத்வைத மதத்திற்குப் புறம்பானதல்ல; ஏன் தெரியுமா? பரப்பிரம்மத்தை அருவமாக விவரிக்கின்ற வேதங்களே உருவ நிலையிலும் அந்த ப்ரம்மம் வந்து நமக்குக் காட்சி தருவதாகவும் குறிப்பிடுகின்றன.
எனவே அத்வைதம் - அதாவது ஒரே ஒரு பரம்பொருள் அருவமான நிலையில் எப்போது உள்ளது என்ற போதிலும் அதே பரம்பொருள் பல உருவங்களைத் தாங்கி, பக்தர்களைப் பரிபாலிக்கிறது என்பது வேதங்கள் அனைத்திலும் கூறப்பட்ட உட்கருத்தாகும்.
பரப்பிரம்மத்தின் இந்த இரண்டு நிலைகளை நிர்குணப்ரம்மம் - ஸகுணப்ரம்மம் என்ற வகையில் வேதாந்தம் கூறுகிறது.
ஆகவே அத்வைத மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இறை வழிபாடு என்பது தெய்வங்களிடத்தில் உயர்வு - தாழ்வு என்ற எண்ணமில்லாதபடி எல்லா தெய்வங்களையுமே பரமாத்ம பாவனையில் பூஜித்துப் பயன் பெறும்படியாக அமைந்துள்ளது.
அத்வைதம் அல்லாத மற்ற மதக்காரர்களுக்கோவென்றால் தங்களுக்கு விருப்பமான குறிப்பிட்ட ஓர் உருவம் கொண்ட தெய்வத்தையே உயர்வாகச் சொல்லி வழிபடுவதும் மற்ற பல உருவங்களில் உள்ள தெய்வங்களைக் குறைவாகப் பேசுவதும் நடைமுறையில் இருந்து வருகிறதல்லவா?
ஸாமான்ய மனிதர்களான நம்மால் உருவமற்ற பரம்பொருளை அந்த நிலையிலேயே மனதால் எண்ணி உபாஸனை செய்ய இயலாது என்ற காரணத்தினாலேயே தொன்று தொட்டக் காலங்களாகவே உருவ வழிபாட்டு முறை என்பது. நமது பாரத தேசத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உருவமேயில்லாத பரம்பொருளை உருவத்தோடுதான் நாம் வழிபட முடியும் என்பது ஒரு புறம் உண்மையென்றாலும், அந்த பிரம்மத்திற்கு ஒரே ஒரு உருவம் மட்டும் இருந்தால் போதாதா? என்று கேட்பவர்களுக்கு இதுதான் விடை.
பசியைப் போக்குவதற்கு ஒரே வகையான அன்னமே போதுமென்ற போதிலும் நாம் என்ன செய்கிறோம்? அந்த அன்னத்தையே புளியஞ்சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சம் சாதம், எள்ளு சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், பொங்கல், சர்க்கரைப் பொங்கல் என்று பல வகைகளைத் தயார் செய்துதானே சாப்பிடுகிறோம்!
அது மட்டுமல்ல! விருந்து சாப்பாட்டிலும் பல விதமான கறிகாய் வகைகளையும், பல விதமான பட்சண வகைகளையும் அல்லவா நாம் தயார் செய்கிறோம்! அவற்றை மற்றவர்களுக்கும் பரிமாறி விட்டு நாமும் சாப்பிடுகிறோமல்லவா?
எனவே அவரவர்களின் பசிக்கு ஒரு வகையான உணவே போதுமென்றாலும், பல வகையான உணவைச் செய்வதற்கு என்ன காரணம்? விருப்பம் தானே காரணம்! அதே போல், நாவிற்கு ஒரு சுவையே போதுமானதாக இருப்பதில்லை. நம் விருப்பம்போல் அறுசுவையையும் நமது நாக்கிற்கு நாம் அளித்து மகிழ்கிறோமல்லவா?
இந்த உதாரணத்தை நாம் மனதில் கொள்வோமானால், பல விதமான உருவங்களைக் கொண்ட தெய்வங்களை நாம் வழிபடுவதும், அந்தந்த பக்தர்களின் மனோநிலையில் தோன்றிய விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் என்பது புலப்படும்!
அத்வைத ஸ்தாபனம் செய்த ஆதி சங்கரரும், மேலே கூறிய கருத்தின்படியே “ஷண்மத ஸ்தாபனம்” என்ற பெயரோடு பல தெய்வங்களையும் நாம் வழிபடுவதற்கு வகை செய்துள்ளார். உயர்வு - தாழ்வு என்பது போன்ற பேதமில்லாத நிலையில் எல்லா தெய்வங்களையுமே பரம்பொருளாக வர்ணித்துப் பாடல்களைச் செய்துள்ள பெருமையும் ஆதி சங்கரருக்கு மட்டுமே உண்டு.
இந்த கருத்தை இத்தனை தூரம் இங்கே விளக்கியதன் நோக்கம் என்ன தெரியுமா?
ஸ்ரீ மஹாவிஷ்ணுவை உயர்ந்த பரம்பொருளாக வைத்து ஆதி சங்கரர் “ஷ்ட்பதீ ஸ்தோத்திரம்” என்ற ஓர் அழகான பாடல் தொகுப்பைச் செய்துள்ளார் என்பதுதான்.
அந்த ஸ்தோத்திரத்திற்கான விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன்பாக, அந்தப் பாடல்களின் வரிசையை முதலில் பார்ப்போம்:
1. அவிநயம் அபநய விஷ்ணோ தமய மன: சமய விஷயம்ருக த்ருஷ்ணாம்
பூத தயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத: |
2. திவ்யதுனீ மகரந்தே பரிமளபரிபோக ஸச்சிதானந்தே |
ஸ்ரீபதி பதாரவிந்தே பவபயக்கேதச்சிதே வந்தே ||
3. ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் ந மாமகீனஸ் த்வம் |
ஸாமுத்ரோ ஹி தரங்க: க்வசன ஸமுத்ரோ ந தாரங்க : ||
4. உத்த்ருதநக நகபிதநுஜ தநுஜகுலாமித்ர மித்ர சசித்ருஷ்டே |
த்ருஷ்டே பவதி ப்ரபவதி ந பவதி கிம் பவதிரஸ்கார: ||
5. மத்ஸ்யாதிபிரவதாரை ரவதாரவதாவதா ஸதா வஸுதாம் |
பரமேச்வர பரிபால்யோ பவதா பவதாப பீதோsஹம் ||
6. தாமோதர குணமந்திர ஸுந்தர வதனாரவிந்த கோவிந்த |
பவஜலதி மதனமந்தர பரமம் தரம் அபநய த்வம் மே ||
7. நாராயண கருணாமய சரணம் கரவாணி தாவகௌ சரணௌ |
இதி ஷட்பதீ மதீயே வதனஸரோஜ ஸதா வஸது ||
முதல் பாடலில் உள்ள ப்ராஸமாகும், இரண்டாவது பாடலில், ஐந்து முறைகள் கூறப்பட்டுள்ளன. ‘தே’ என்ற எழுத்தினாலும், பரி - பரி என்ற தொடராலும், ப்ராஸம் இருப்பதை அறியலாம்.
மூன்றாவது பாடலில், ஸமுத்ர - ஸாமுத்ர, தரங்க - தாரங்க போன்ற பதங்களினால் ப்ராஸம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறே, இதற்கடுத்த பாடல்களிலெல்லாம் வருகின்ற ப்ராஸத்தை நாம் பல முறை அந்தப் பாடல்களை உச்சரித்துப் பார்க்கும்போதே தெரிந்து கொள்ள முடியும்.
ஸ்ரீ சங்கரர் மஹாவிஷ்ணுவிடத்தில் பல பிரார்த்தனைகளை முன்வைப்பதாக முதல் பாடல் அமைந்துள்ளது. ஒவ்வொரு மனிதனும் தன்னிலையைப் புரிந்து கொண்டு மிகுந்த பணிவோடு வாழத் தெரிந்து கொண்டால் அவனது வாழ்க்கை சிறந்து விளங்கும்.
அப்படியில்லாமல் அகம்பாவத்திற்கும் அதனால் ஏற்படுகின்ற கோபதாபங்களுக்கும் இடம் கொடுத்துவிட்டால் வீண் சண்டை சச்சரவுகளுடன் நிம்மதியற்ற வாழ்க்கை வாழ வேண்டியிருக்கும்.
எனவே நிம்மதியான/மகிழ்ச்சியானதொரு வாழ்க்கைச் சூழலைப் பெறுவதற்கு, பணிவு என்பது மிகவும் முக்கியமானதாகும். ஆகவே இயற்கையாக மனிதர்களுக்குத் தோன்றும் பணிவற்ற நிலையைப் போக்கும்படி முதலில் வேண்டுகிறார்.
அதன்பிறகு, பண்பட்ட மனதையும் கானல் நீரைப் போன்றதான இவ்வுலக சுகங்களிலிருந்து விலகிய நிலையையும் வேண்டுகின்ற ஆதி சங்கரர் முறையே உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடத்திலும் தயையோடு வாழும் நிலையையும், பிறவிப் பெருங்கடலிலிருந்து கரையேற்றி வைக்குமாறும், அந்த இறைவனை வேண்டுகிறார்.
இவ்வாறு, முதல் பாடலில் ஸம்ஸார ஸாகரத்திலிருந்து கரையேற்றுமாறு வேண்டினாரல்லவா? அப்படிக் கரையேற்றி வைக்கத் தகுதி வாய்ந்தது எது என்பதை இரண்டாவது பாடலில் குறிப்பிடுகிறார். அதாவது மஹா விஷ்ணுவின் திருவடித் தாமரைகளே அத்தகைய தகுதி வாய்ந்தவையென்று இங்கு கூறப்படுகிறது.
ஸ்ரீ மஹாலெக்ஷ்மியின் கணவரான மஹா விஷ்ணுவின் திருவடித் தாமரைகள், மிகுந்த நறுமணம் கொண்ட தேவலோக கங்கையின் பிறப்பிடமானவைகளாம்! ஸத் - சித் - ஆனந்தம் என்ற பிரம்மானுபவத்தைக் கொடுக்கக் கூடியவைகளும் அவையே! மேலும், பிறவியினால் நமக்கு உண்டாகும் பயம், கவலை முதலிய துன்பங்களை அறவே அழித்துவிடும் திறம் கொண்ட அந்த திருவடித்தாமரைகளை, நான் வணங்குகிறேன் என்று கூறுகிறார்.
உபநிஷத்துக்கள் கூறும் அத்வைதக் கோட்பாட்டையும், ஒவ்வொரு ஜீவனும் பிரம்மத்திற்கே சொந்தமானவன் என்ற உண்மை நிலையையும் மூன்றாவது பாடலில் விளக்குகிறார்.
அதாவது நாராயணனாக விளங்கும் பரப்ரம்மத்தைத் தவிர வேறொரு பொருளே இல்லையென்ற அத்வைத நிலையே உண்மையென்ற போதிலும் உலகியல் வாழ்வில் தெய்வமும் நாமும் வேறு போல் தென்படுகிறதல்லவா? இந்த நிலையிலே கூட நாம் அனைவரும் நம் தலைவனாக விளங்கும் நாராயணனைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றோம். மாறாக தெய்வம் நம்மைச் சேர்ந்தது என்று நாம் சொல்வது பொருத்தமாகாது.
இது எது போலத் தெரியுமா ஸமுத்ரத்தில் தோன்றும் அலைகள், கடல் அலைகள் என்று தான் சொல்லப்படுகின்றனவே தவிர அலைகளின் கடல் இது என்று கடலை யாரும் சொல்வதில்லை.
பரப்பிரம்மமான நாராயணன், கிருஷ்ணாவதாரத்தில் கோவர்த்தன மலையைத் தாங்கியவர். வாமனாவதாரத்தில் உபேந்திரனாக இருந்து தேவர்களுக்கு ஸஹாயம் செய்தவர். அசுர குலத்திற்கு எதிரியாக இருப்பவர். சூரிய சந்திரர்களைத் தன் கண்களாகக் கொண்டவர். அப்படிப்பட்ட அந்த நாராயணனை நாம் ஸாக்ஷாத்காரம் செய்து விட்டால் பிறவித் துன்பம் என்பது தொலையாதா என்ன? என்ற கேள்வியைக் கேட்டு அதிலேயே பதிலடங்கியிருப்பது போல் நான்காவது பாடலை அமைத்துள்ளார்.
மத்ஸ்ய - கூர்மாதி அவதாரங்களைச் செய்வதற்காகவே போன்று, இவ்வுலகில் இறங்கி வந்து அந்தந்த அவதாரங்களின் பெருமையினாலேயே எப்போதும் இந்த பூவுலகத்தைக் காப்பாற்றி வருபவரான அவரை “பரமேசுவரா!” என்று அழைத்து பிறவித் துன்பத்தினால் மிகவும் பயப்படுகின்ற நான் உன்னால் காப்பாற்றப் பட வேண்டியவனல்லவா? என்று கூறுகிறார்!
ஆறாவது பாடலின் விளக்கம் இதோ -
எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமான தாமோதரனே! மிக அழகான தாமரை போன்ற முகத்தையுடைய கோவிந்தனே! நீர், பிறவிப் பெருங்கடலைக் கடைவதற்கான மந்த்ர மலை போன்றவரல்லவா? அத்தகைய பெருமை கொண்ட தாங்களே, மிகப் பெரிய துன்பமான எனது இந்த பிறவித் துன்பத்தை போக்கியருள வேண்டும்.
சரணாகதியை வெளிப்படுத்துவதாக ஏழாவது (கடைசி) பாடல் அமைந்துள்ளது. அதன் பொருளை இங்கே பார்ப்போம் -
“கருணையே வடிவான ஹே நாராயண! உம்முடைய திருவடிகளையே சரணமென்று நான் அடைகிறேன்”.
இந்தப் பாடலின் முதல் வரி நாராயண-கருணாமய-சரணம்-கரவாணி-தாவகௌ-சரணௌ-என்பதான ஆறு பதங்களைக் கொண்டது. அந்த ஆறு பதங்களாலேயே மேற்படி சரணாகதியை வெளிப்படுத்திய ஸ்ரீ ஆதிசங்கரர், அதே பாடலின் இரண்டாவது வரியினால் கூறுவது என்ன தெரியுமா? முன்பு சொல்லிய அந்த ஆறு பதங்களும் எனது முகத்தாமரையில்-அதாவது-என்னுடைய வாக்கில் எப்போதுமே நிலைத்து நிற்கட்டும் என்பதேயாகும்.
இதன் உட்கருத்து என்னவென்றால், மேலே கூறியுள்ளபடி கருணைக் கடலாக விளங்கும் நாராயணனை நமது வாழ்நாள் முழுவதும் நான் சரணமடைந்தவாறே இருந்து கொண்டு பகவத் கைங்கர்யாதி பணிகளையே செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதாம்!
ஏழாவது சுலோகத்தின் முதல் வரியிலுள்ள ஆறு பதங்களை “ஷட்பதீ” என்ற சொல்லால் ஸ்ரீ ஆதிசங்கரர் குறிப்பிட்டுள்ளபடியால், ஏழு சுலோகங்களின் தொகுப்பான இந்த ஸ்தோத்திரம் “ஷட்பதீ ஸ்தோத்திரம்” என்ற பெயராலேயே வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளிகொண்ட பரந்தாமனின் திருவடித் தாமரைகள் நமது இதயத் தாமரையில் என்றும் ஒளி வீசட்டும்!!
ஓம் நமோ நாராயணாய.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Source:- Amman Daesanam
ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாசாரிய ஸ்வாமிகள் ஷண்மத ஸ்தாபனம் செய்த உயர்ந்த குருவாகப் போற்றப்படுகிறார்.
அத்வைத ஸ்தாபனாசாரியரான ஸ்ரீ ஆதி சங்கரர், உபநிஷத்துக்கள் கூறியுள்ளபடி உருவமற்ற நிலையில் எல்லையே இல்லாத ஒளியும் அறிவும் ஆனந்த முகமாக எங்கும் நிறைந்து நிற்கும் பரப்ரம்ம தத்துவத்தை தான் செய்துள்ள ப்ரஸ்தான த்ரய பாஷ்யாதி கிரந்தங்களில் பலவாறு விளக்கிக் கூறியுள்ளார்.
ஆனாலும், உருவ வழிபாடு என்பது அத்வைத மதத்திற்குப் புறம்பானதல்ல; ஏன் தெரியுமா? பரப்பிரம்மத்தை அருவமாக விவரிக்கின்ற வேதங்களே உருவ நிலையிலும் அந்த ப்ரம்மம் வந்து நமக்குக் காட்சி தருவதாகவும் குறிப்பிடுகின்றன.
எனவே அத்வைதம் - அதாவது ஒரே ஒரு பரம்பொருள் அருவமான நிலையில் எப்போது உள்ளது என்ற போதிலும் அதே பரம்பொருள் பல உருவங்களைத் தாங்கி, பக்தர்களைப் பரிபாலிக்கிறது என்பது வேதங்கள் அனைத்திலும் கூறப்பட்ட உட்கருத்தாகும்.
பரப்பிரம்மத்தின் இந்த இரண்டு நிலைகளை நிர்குணப்ரம்மம் - ஸகுணப்ரம்மம் என்ற வகையில் வேதாந்தம் கூறுகிறது.
ஆகவே அத்வைத மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இறை வழிபாடு என்பது தெய்வங்களிடத்தில் உயர்வு - தாழ்வு என்ற எண்ணமில்லாதபடி எல்லா தெய்வங்களையுமே பரமாத்ம பாவனையில் பூஜித்துப் பயன் பெறும்படியாக அமைந்துள்ளது.
அத்வைதம் அல்லாத மற்ற மதக்காரர்களுக்கோவென்றால் தங்களுக்கு விருப்பமான குறிப்பிட்ட ஓர் உருவம் கொண்ட தெய்வத்தையே உயர்வாகச் சொல்லி வழிபடுவதும் மற்ற பல உருவங்களில் உள்ள தெய்வங்களைக் குறைவாகப் பேசுவதும் நடைமுறையில் இருந்து வருகிறதல்லவா?
ஸாமான்ய மனிதர்களான நம்மால் உருவமற்ற பரம்பொருளை அந்த நிலையிலேயே மனதால் எண்ணி உபாஸனை செய்ய இயலாது என்ற காரணத்தினாலேயே தொன்று தொட்டக் காலங்களாகவே உருவ வழிபாட்டு முறை என்பது. நமது பாரத தேசத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உருவமேயில்லாத பரம்பொருளை உருவத்தோடுதான் நாம் வழிபட முடியும் என்பது ஒரு புறம் உண்மையென்றாலும், அந்த பிரம்மத்திற்கு ஒரே ஒரு உருவம் மட்டும் இருந்தால் போதாதா? என்று கேட்பவர்களுக்கு இதுதான் விடை.
பசியைப் போக்குவதற்கு ஒரே வகையான அன்னமே போதுமென்ற போதிலும் நாம் என்ன செய்கிறோம்? அந்த அன்னத்தையே புளியஞ்சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சம் சாதம், எள்ளு சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், பொங்கல், சர்க்கரைப் பொங்கல் என்று பல வகைகளைத் தயார் செய்துதானே சாப்பிடுகிறோம்!
அது மட்டுமல்ல! விருந்து சாப்பாட்டிலும் பல விதமான கறிகாய் வகைகளையும், பல விதமான பட்சண வகைகளையும் அல்லவா நாம் தயார் செய்கிறோம்! அவற்றை மற்றவர்களுக்கும் பரிமாறி விட்டு நாமும் சாப்பிடுகிறோமல்லவா?
எனவே அவரவர்களின் பசிக்கு ஒரு வகையான உணவே போதுமென்றாலும், பல வகையான உணவைச் செய்வதற்கு என்ன காரணம்? விருப்பம் தானே காரணம்! அதே போல், நாவிற்கு ஒரு சுவையே போதுமானதாக இருப்பதில்லை. நம் விருப்பம்போல் அறுசுவையையும் நமது நாக்கிற்கு நாம் அளித்து மகிழ்கிறோமல்லவா?
இந்த உதாரணத்தை நாம் மனதில் கொள்வோமானால், பல விதமான உருவங்களைக் கொண்ட தெய்வங்களை நாம் வழிபடுவதும், அந்தந்த பக்தர்களின் மனோநிலையில் தோன்றிய விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் என்பது புலப்படும்!
அத்வைத ஸ்தாபனம் செய்த ஆதி சங்கரரும், மேலே கூறிய கருத்தின்படியே “ஷண்மத ஸ்தாபனம்” என்ற பெயரோடு பல தெய்வங்களையும் நாம் வழிபடுவதற்கு வகை செய்துள்ளார். உயர்வு - தாழ்வு என்பது போன்ற பேதமில்லாத நிலையில் எல்லா தெய்வங்களையுமே பரம்பொருளாக வர்ணித்துப் பாடல்களைச் செய்துள்ள பெருமையும் ஆதி சங்கரருக்கு மட்டுமே உண்டு.
இந்த கருத்தை இத்தனை தூரம் இங்கே விளக்கியதன் நோக்கம் என்ன தெரியுமா?
ஸ்ரீ மஹாவிஷ்ணுவை உயர்ந்த பரம்பொருளாக வைத்து ஆதி சங்கரர் “ஷ்ட்பதீ ஸ்தோத்திரம்” என்ற ஓர் அழகான பாடல் தொகுப்பைச் செய்துள்ளார் என்பதுதான்.
அந்த ஸ்தோத்திரத்திற்கான விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன்பாக, அந்தப் பாடல்களின் வரிசையை முதலில் பார்ப்போம்:
1. அவிநயம் அபநய விஷ்ணோ தமய மன: சமய விஷயம்ருக த்ருஷ்ணாம்
பூத தயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத: |
2. திவ்யதுனீ மகரந்தே பரிமளபரிபோக ஸச்சிதானந்தே |
ஸ்ரீபதி பதாரவிந்தே பவபயக்கேதச்சிதே வந்தே ||
3. ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் ந மாமகீனஸ் த்வம் |
ஸாமுத்ரோ ஹி தரங்க: க்வசன ஸமுத்ரோ ந தாரங்க : ||
4. உத்த்ருதநக நகபிதநுஜ தநுஜகுலாமித்ர மித்ர சசித்ருஷ்டே |
த்ருஷ்டே பவதி ப்ரபவதி ந பவதி கிம் பவதிரஸ்கார: ||
5. மத்ஸ்யாதிபிரவதாரை ரவதாரவதாவதா ஸதா வஸுதாம் |
பரமேச்வர பரிபால்யோ பவதா பவதாப பீதோsஹம் ||
6. தாமோதர குணமந்திர ஸுந்தர வதனாரவிந்த கோவிந்த |
பவஜலதி மதனமந்தர பரமம் தரம் அபநய த்வம் மே ||
7. நாராயண கருணாமய சரணம் கரவாணி தாவகௌ சரணௌ |
இதி ஷட்பதீ மதீயே வதனஸரோஜ ஸதா வஸது ||
முதல் பாடலில் உள்ள ப்ராஸமாகும், இரண்டாவது பாடலில், ஐந்து முறைகள் கூறப்பட்டுள்ளன. ‘தே’ என்ற எழுத்தினாலும், பரி - பரி என்ற தொடராலும், ப்ராஸம் இருப்பதை அறியலாம்.
மூன்றாவது பாடலில், ஸமுத்ர - ஸாமுத்ர, தரங்க - தாரங்க போன்ற பதங்களினால் ப்ராஸம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறே, இதற்கடுத்த பாடல்களிலெல்லாம் வருகின்ற ப்ராஸத்தை நாம் பல முறை அந்தப் பாடல்களை உச்சரித்துப் பார்க்கும்போதே தெரிந்து கொள்ள முடியும்.
ஸ்ரீ சங்கரர் மஹாவிஷ்ணுவிடத்தில் பல பிரார்த்தனைகளை முன்வைப்பதாக முதல் பாடல் அமைந்துள்ளது. ஒவ்வொரு மனிதனும் தன்னிலையைப் புரிந்து கொண்டு மிகுந்த பணிவோடு வாழத் தெரிந்து கொண்டால் அவனது வாழ்க்கை சிறந்து விளங்கும்.
அப்படியில்லாமல் அகம்பாவத்திற்கும் அதனால் ஏற்படுகின்ற கோபதாபங்களுக்கும் இடம் கொடுத்துவிட்டால் வீண் சண்டை சச்சரவுகளுடன் நிம்மதியற்ற வாழ்க்கை வாழ வேண்டியிருக்கும்.
எனவே நிம்மதியான/மகிழ்ச்சியானதொரு வாழ்க்கைச் சூழலைப் பெறுவதற்கு, பணிவு என்பது மிகவும் முக்கியமானதாகும். ஆகவே இயற்கையாக மனிதர்களுக்குத் தோன்றும் பணிவற்ற நிலையைப் போக்கும்படி முதலில் வேண்டுகிறார்.
அதன்பிறகு, பண்பட்ட மனதையும் கானல் நீரைப் போன்றதான இவ்வுலக சுகங்களிலிருந்து விலகிய நிலையையும் வேண்டுகின்ற ஆதி சங்கரர் முறையே உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடத்திலும் தயையோடு வாழும் நிலையையும், பிறவிப் பெருங்கடலிலிருந்து கரையேற்றி வைக்குமாறும், அந்த இறைவனை வேண்டுகிறார்.
இவ்வாறு, முதல் பாடலில் ஸம்ஸார ஸாகரத்திலிருந்து கரையேற்றுமாறு வேண்டினாரல்லவா? அப்படிக் கரையேற்றி வைக்கத் தகுதி வாய்ந்தது எது என்பதை இரண்டாவது பாடலில் குறிப்பிடுகிறார். அதாவது மஹா விஷ்ணுவின் திருவடித் தாமரைகளே அத்தகைய தகுதி வாய்ந்தவையென்று இங்கு கூறப்படுகிறது.
ஸ்ரீ மஹாலெக்ஷ்மியின் கணவரான மஹா விஷ்ணுவின் திருவடித் தாமரைகள், மிகுந்த நறுமணம் கொண்ட தேவலோக கங்கையின் பிறப்பிடமானவைகளாம்! ஸத் - சித் - ஆனந்தம் என்ற பிரம்மானுபவத்தைக் கொடுக்கக் கூடியவைகளும் அவையே! மேலும், பிறவியினால் நமக்கு உண்டாகும் பயம், கவலை முதலிய துன்பங்களை அறவே அழித்துவிடும் திறம் கொண்ட அந்த திருவடித்தாமரைகளை, நான் வணங்குகிறேன் என்று கூறுகிறார்.
உபநிஷத்துக்கள் கூறும் அத்வைதக் கோட்பாட்டையும், ஒவ்வொரு ஜீவனும் பிரம்மத்திற்கே சொந்தமானவன் என்ற உண்மை நிலையையும் மூன்றாவது பாடலில் விளக்குகிறார்.
அதாவது நாராயணனாக விளங்கும் பரப்ரம்மத்தைத் தவிர வேறொரு பொருளே இல்லையென்ற அத்வைத நிலையே உண்மையென்ற போதிலும் உலகியல் வாழ்வில் தெய்வமும் நாமும் வேறு போல் தென்படுகிறதல்லவா? இந்த நிலையிலே கூட நாம் அனைவரும் நம் தலைவனாக விளங்கும் நாராயணனைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றோம். மாறாக தெய்வம் நம்மைச் சேர்ந்தது என்று நாம் சொல்வது பொருத்தமாகாது.
இது எது போலத் தெரியுமா ஸமுத்ரத்தில் தோன்றும் அலைகள், கடல் அலைகள் என்று தான் சொல்லப்படுகின்றனவே தவிர அலைகளின் கடல் இது என்று கடலை யாரும் சொல்வதில்லை.
பரப்பிரம்மமான நாராயணன், கிருஷ்ணாவதாரத்தில் கோவர்த்தன மலையைத் தாங்கியவர். வாமனாவதாரத்தில் உபேந்திரனாக இருந்து தேவர்களுக்கு ஸஹாயம் செய்தவர். அசுர குலத்திற்கு எதிரியாக இருப்பவர். சூரிய சந்திரர்களைத் தன் கண்களாகக் கொண்டவர். அப்படிப்பட்ட அந்த நாராயணனை நாம் ஸாக்ஷாத்காரம் செய்து விட்டால் பிறவித் துன்பம் என்பது தொலையாதா என்ன? என்ற கேள்வியைக் கேட்டு அதிலேயே பதிலடங்கியிருப்பது போல் நான்காவது பாடலை அமைத்துள்ளார்.
மத்ஸ்ய - கூர்மாதி அவதாரங்களைச் செய்வதற்காகவே போன்று, இவ்வுலகில் இறங்கி வந்து அந்தந்த அவதாரங்களின் பெருமையினாலேயே எப்போதும் இந்த பூவுலகத்தைக் காப்பாற்றி வருபவரான அவரை “பரமேசுவரா!” என்று அழைத்து பிறவித் துன்பத்தினால் மிகவும் பயப்படுகின்ற நான் உன்னால் காப்பாற்றப் பட வேண்டியவனல்லவா? என்று கூறுகிறார்!
ஆறாவது பாடலின் விளக்கம் இதோ -
எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமான தாமோதரனே! மிக அழகான தாமரை போன்ற முகத்தையுடைய கோவிந்தனே! நீர், பிறவிப் பெருங்கடலைக் கடைவதற்கான மந்த்ர மலை போன்றவரல்லவா? அத்தகைய பெருமை கொண்ட தாங்களே, மிகப் பெரிய துன்பமான எனது இந்த பிறவித் துன்பத்தை போக்கியருள வேண்டும்.
சரணாகதியை வெளிப்படுத்துவதாக ஏழாவது (கடைசி) பாடல் அமைந்துள்ளது. அதன் பொருளை இங்கே பார்ப்போம் -
“கருணையே வடிவான ஹே நாராயண! உம்முடைய திருவடிகளையே சரணமென்று நான் அடைகிறேன்”.
இந்தப் பாடலின் முதல் வரி நாராயண-கருணாமய-சரணம்-கரவாணி-தாவகௌ-சரணௌ-என்பதான ஆறு பதங்களைக் கொண்டது. அந்த ஆறு பதங்களாலேயே மேற்படி சரணாகதியை வெளிப்படுத்திய ஸ்ரீ ஆதிசங்கரர், அதே பாடலின் இரண்டாவது வரியினால் கூறுவது என்ன தெரியுமா? முன்பு சொல்லிய அந்த ஆறு பதங்களும் எனது முகத்தாமரையில்-அதாவது-என்னுடைய வாக்கில் எப்போதுமே நிலைத்து நிற்கட்டும் என்பதேயாகும்.
இதன் உட்கருத்து என்னவென்றால், மேலே கூறியுள்ளபடி கருணைக் கடலாக விளங்கும் நாராயணனை நமது வாழ்நாள் முழுவதும் நான் சரணமடைந்தவாறே இருந்து கொண்டு பகவத் கைங்கர்யாதி பணிகளையே செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதாம்!
ஏழாவது சுலோகத்தின் முதல் வரியிலுள்ள ஆறு பதங்களை “ஷட்பதீ” என்ற சொல்லால் ஸ்ரீ ஆதிசங்கரர் குறிப்பிட்டுள்ளபடியால், ஏழு சுலோகங்களின் தொகுப்பான இந்த ஸ்தோத்திரம் “ஷட்பதீ ஸ்தோத்திரம்” என்ற பெயராலேயே வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளிகொண்ட பரந்தாமனின் திருவடித் தாமரைகள் நமது இதயத் தாமரையில் என்றும் ஒளி வீசட்டும்!!
ஓம் நமோ நாராயணாய.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM