Post by anusham163 on Apr 11, 2013 17:29:14 GMT 5.5
சித்தர்கள், ஒலி முறை, ஒளி முறை என்று இரண்டு ஞான முறைகளிலே தமது ஞானவழிபாட்டை இயற்றுகிறவர்கள். இந்த இரண்டு வழிபாடுகளையும் விநாயகருடைய திருமுகம் நன்கு உணர்த்துகிறது
ஒலி, ஒளி ஆகிய இரண்டுக்கும் கருவிகளாக அமைவன கண்ணும் நாசியுமாம். இந்த இர்ண்டையும் உணர்த்துகின்ற யானையின் முகமானது, நுட்பமான சிறிய கண்களையும் நீண்டு தொங்குகின்ற நாசியையும் தாங்கி நிற்கிறது. இதனால்தான் திருமூலர் விநாயகரை விரும்பி வணங்கும்பொழுது, அவரை ஞானக்கொழுந்து என்று அழைத்துப் பாடுகிறார். அந்த ஞானக்கொழுந்தை ஞானத்திற்கு இருப்பிடமாகிய அறிவிலே வைத்து வணங்குவதாகத் திருமூலர் தமது நூலைத் தொடங்குவதும் இது பற்றியே.
இத்தனை நுட்பங்களையும் தன்னுள் அடக்கி, அந்த நுட்பங்களின் தத்துவங்கள் அனைத்தையும் தாங்கிய விநாயகராகிய ஞான வடிவுக்கு அகவலாகிய செய்யுள் வடிவைத் தருகிறார் அவ்வையார்.
ஆம், விநாயகர் என்ற மூர்த்தியின் வடிவம் சித்தர்களின் ஒளிமுறையில் அமைந்த வழிபாட்டுக்குரிய காட்சிப் பொருளாகும். இந்தக் காட்சிப் பொருளுக்கு ஒலியினாலாகிய வடிவம் தந்து அமைத்திருப்பதே விநாயகர் அகவல் என்ற நூலாகும். ஒளி, ஒலியைத் தருவதும், ஒலி ஒளியைத் தருவதும் சித்தர்களுடைய ஒளி வழிபாடு, ஒலி வழிபாடு இரண்டுக்கும் உள்ள நுட்பமான ஒருமைப்பாடாகும். எனவே, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல் ஒலிவடிவிலே ஒளியைத் தருவதும், ஒளிவடிவை மனக்கண்முன் நிறுத்தி ஒலியைத் தருவதுமாகிய ஞான சாதனமாகும்.
அவ்வையின் அகவல் தோன்றியது விநாயகராகிய ஒளிவடிவை நோக்கி. அந்த அகவல் வெளிவந்துள்ள அமைப்பு, மொழியாகிய ஒலிவடிவு. இந்த ஒலிவடிவமானது ஒளிவடிவை நோக்கித் தோன்றி, அதனை ஓதுவாருக்கு ஒலியின் அதிர்வினால் ஒளிவடிவின் அனுபவத்தையும் ஒலி ஆற்றலின் அனுபவத்தையும் ஒருங்கே தருகிறது. தொலைக் காட்சியிலே, ஒலியும் ஒளியும் இணைந்து இயங்குவதுபோல், அவ்வையாரின் விநாயகர் அகவலும் ஒளிக்கும், ஒலிக்கும் நிலையமாக அமைந்துள்ளது. அதனால்தான் விநாயகர் அகவல் எல்லா நிலையிலுள்ள மக்களுக்கும் ஒருங்கே பயன் தரக்கூடிய வழிபாட்டு நூலாக விளங்கி வருகிறது. அதை ஒரு பக்திநூல் என்றும் அழைக்கலாம்; ஒரு ஞானநூல் என்றும் அழைக்கலாம். பயன் தருகின்ற முறையிலே அதை நோக்கினால், அதை ஓர் அரிய சித்தர் இலக்கியம் என்றே அழைக்க வேண்டும். தொண்டுநெறி, நன்மகவுநெறி, தோழமைநெறி, செந்நெறி ஆகிய நான்கு துறைகளிலும் வீசிப் படர்கின்ற பேராற்றலுடன் இந்த நூல் அமைந்துள்ளதே இந்த நுட்பத்திற்குச் சான்றாகவும் பயனாகவும் விளங்குகின்றது.
தொடரும்…………… அடுத்து வருவது நூல் விளக்கம்.
ஒலி, ஒளி ஆகிய இரண்டுக்கும் கருவிகளாக அமைவன கண்ணும் நாசியுமாம். இந்த இர்ண்டையும் உணர்த்துகின்ற யானையின் முகமானது, நுட்பமான சிறிய கண்களையும் நீண்டு தொங்குகின்ற நாசியையும் தாங்கி நிற்கிறது. இதனால்தான் திருமூலர் விநாயகரை விரும்பி வணங்கும்பொழுது, அவரை ஞானக்கொழுந்து என்று அழைத்துப் பாடுகிறார். அந்த ஞானக்கொழுந்தை ஞானத்திற்கு இருப்பிடமாகிய அறிவிலே வைத்து வணங்குவதாகத் திருமூலர் தமது நூலைத் தொடங்குவதும் இது பற்றியே.
இத்தனை நுட்பங்களையும் தன்னுள் அடக்கி, அந்த நுட்பங்களின் தத்துவங்கள் அனைத்தையும் தாங்கிய விநாயகராகிய ஞான வடிவுக்கு அகவலாகிய செய்யுள் வடிவைத் தருகிறார் அவ்வையார்.
ஆம், விநாயகர் என்ற மூர்த்தியின் வடிவம் சித்தர்களின் ஒளிமுறையில் அமைந்த வழிபாட்டுக்குரிய காட்சிப் பொருளாகும். இந்தக் காட்சிப் பொருளுக்கு ஒலியினாலாகிய வடிவம் தந்து அமைத்திருப்பதே விநாயகர் அகவல் என்ற நூலாகும். ஒளி, ஒலியைத் தருவதும், ஒலி ஒளியைத் தருவதும் சித்தர்களுடைய ஒளி வழிபாடு, ஒலி வழிபாடு இரண்டுக்கும் உள்ள நுட்பமான ஒருமைப்பாடாகும். எனவே, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல் ஒலிவடிவிலே ஒளியைத் தருவதும், ஒளிவடிவை மனக்கண்முன் நிறுத்தி ஒலியைத் தருவதுமாகிய ஞான சாதனமாகும்.
அவ்வையின் அகவல் தோன்றியது விநாயகராகிய ஒளிவடிவை நோக்கி. அந்த அகவல் வெளிவந்துள்ள அமைப்பு, மொழியாகிய ஒலிவடிவு. இந்த ஒலிவடிவமானது ஒளிவடிவை நோக்கித் தோன்றி, அதனை ஓதுவாருக்கு ஒலியின் அதிர்வினால் ஒளிவடிவின் அனுபவத்தையும் ஒலி ஆற்றலின் அனுபவத்தையும் ஒருங்கே தருகிறது. தொலைக் காட்சியிலே, ஒலியும் ஒளியும் இணைந்து இயங்குவதுபோல், அவ்வையாரின் விநாயகர் அகவலும் ஒளிக்கும், ஒலிக்கும் நிலையமாக அமைந்துள்ளது. அதனால்தான் விநாயகர் அகவல் எல்லா நிலையிலுள்ள மக்களுக்கும் ஒருங்கே பயன் தரக்கூடிய வழிபாட்டு நூலாக விளங்கி வருகிறது. அதை ஒரு பக்திநூல் என்றும் அழைக்கலாம்; ஒரு ஞானநூல் என்றும் அழைக்கலாம். பயன் தருகின்ற முறையிலே அதை நோக்கினால், அதை ஓர் அரிய சித்தர் இலக்கியம் என்றே அழைக்க வேண்டும். தொண்டுநெறி, நன்மகவுநெறி, தோழமைநெறி, செந்நெறி ஆகிய நான்கு துறைகளிலும் வீசிப் படர்கின்ற பேராற்றலுடன் இந்த நூல் அமைந்துள்ளதே இந்த நுட்பத்திற்குச் சான்றாகவும் பயனாகவும் விளங்குகின்றது.
தொடரும்…………… அடுத்து வருவது நூல் விளக்கம்.