Post by anusham163 on Apr 9, 2013 9:51:07 GMT 5.5
விநாயகர் அகவலைப் புரிந்துகொள்வதற்கு முன், விநாயகர் உருவத்தில்
பொதிந்துள்ள தத்துவங்களை ஆராய்ந்து பார்த்துக்கொள்வது பயனுடையதாகும். ஏனென்றால் அவ்வையார் தமது அகவலிலே ஞானப் பேருண்மைகளை எடுத்துக் கூறும்பொழுது, விநாயகர் உருவத்தை உறுப்பு உறுப்பாக அலகு பிரித்து அந்த நுட்பங்களை உருவக மொழிகளில் கூறுகிறார். எனவே, விநாயகரின் அங்கங்களிலே முக்கியமானவற்றின் ஞான உட்பொருளை உணர்ந்துகொள்வது அவசியமாகும்.
இறைவனுடைய உருவங்களிலே எல்லா வடிவங்களுக்கும் பொதுவாக உள்ளது திருவடியின் தத்துவமாகும். திருவடிஞானம் என்றே இதைப் பாடுகிறார் திருமூலர். நாடுகின்ற அடியார்களின் அல்லல்களை நீக்குவதற்குத் தக்க புகலிடமாக விளங்குவது இறைவனுடைய திருவடியே ஆகும். இதனால்தான் திருவடியை நாடுதல் என்றும், திருவடியில் நம்மை ஒப்புவித்தல் என்றும் பக்தி நூல்கள் ஒரு மரபை நமக்கு உணர்த்துகின்றன. ‘Grace’ என்று ஆங்கில ஞான நூல்கள் உணர்த்துகின்ற திருவருளுக்கு நிலையமாக விளங்குவது இறைவனுடைய திருவடியே ஆகும்.
விநாயகர் உருவத்தில் இந்தத் திருவடிக்கு வேறொரு சிறப்பைச் சித்தர்கள் கூறுகிறார்கள். குமரகுருபர சுவாமிகள் ஞானத்தின் உருவமாக இறைவனைக் கண்டு பாடும்பொழுது ‘ஞானம் திருவடியா’ என்றே பாடுகிறார். ஞானத்தின் உருவமாக அமைந்த விநாயகருக்கு ஞானமே திருவடியாகிறது. ஞானமுறையிலே பூசை செய்கின்ற சித்தர்கள் மரபிலே, ஞானமே திருவருளாகவும், திருவருளே ஞானமாகவும் கூடு விட்டுக் கூடு பாய்வதால் விநாயகரின் திருவுருவிற்கு ஞானத்தின் சின்னமாக விளங்குவது திருவடியாகும்.
விநாயகரின் உறுப்புகளிலே நம் கண்முன் முதன்மையாகத் தோன்றுவது அவருடைய பெருவயிறாகும் எல்லாவற்றையும் தன்னுள் அடக்குவதும், தன்னுள் எல்லாம் அடங்குவதுமாக விளங்குகின்ற பரம்பொருள் நிலையை, அந்த மாபெரும் விசுவரூப நிலையைப் பெருவயிறு உருவகிக்கிறது.
விநாயகருக்கு ஐந்து கரங்கள். கரங்கள் என்பன செயலின் உருவகம். அவருடைய கரத்திலே இருக்கும் பாசம் மனிதர்களின் பிறவிக்குக் காரணமாகிய பற்றுள்ளதைக் குறிக்கிறது. அதாவது பிறவிக்குக் காரணமாகி அதனைப் பிணித்து நிற்கிறது. இந்தப் பிணிப்பே பிறவிக்குத் தோற்றுவாய். ஆகவே அவருடைய பாசம் விளங்கும் கரமானது படைப்புத் தொழிலைக் குறிக்கிறது.
இன்னொரு கரத்திலே அங்குசத்தைக் காண்கிறோம். அங்குசமானது அழிக்கும் கருவி. ஆகையால் அங்குசம் ஏந்திய விநாயகரின் கரம் அழிக்கும் தொழிலை உருவகிக்கிறது.
இன்னொரு கரம் ‘அபயகரம்’ என்னும் அமைந்த கரமாகும். இது தன்னை நாடி வருகின்ற தொண்டனை ‘அஞ்சேல்’ என்று புகல் தருகிறது. பிறவியின் வினைச் சுழலிலே சிக்குண்டு தவிக்கும் பிறவிக்கு இந்தக் கரம் அஞ்சாமையை உணர்த்துகிறது. ஆதலால் இதுவே ‘திதி’ ஆகி வல்லமையை உணர்த்துகிறது.
வரதமும் மோதகம் ஏந்தியதுமாகிய இன்னொருகரம், கீழ்நோக்கி இருப்பது சிறந்த ஞானக் குறியாகும். வினைத்துயருக்கு அஞ்சித் தஞ்சம் புகுந்த உயிரின் குறிக்கோள் திருவடியாகிய முக்திப்பேறு என்பதை இது குறிக்கிறது. பிறவித் துயருக்கு அஞ்சி வந்த உயிர் அதன் பக்குவத்திற்கு ஏற்ப அடைகின்ற திருவருளை வரதகரம் உணர்த்துகிறது. மோதகத்தை ஏந்திய கரம், வரதகரத்தையும் அடுத்து, சுட்டாமல் சுட்டிக்காட்டுவதன் குறிப்பு, திரோதானமாகிய மறைப்புத் தொழிலை உணர்த்துவதாகப் பெரியோர்கள் கூறியுள்ளார்கள்.
தொடரும்.......
பொதிந்துள்ள தத்துவங்களை ஆராய்ந்து பார்த்துக்கொள்வது பயனுடையதாகும். ஏனென்றால் அவ்வையார் தமது அகவலிலே ஞானப் பேருண்மைகளை எடுத்துக் கூறும்பொழுது, விநாயகர் உருவத்தை உறுப்பு உறுப்பாக அலகு பிரித்து அந்த நுட்பங்களை உருவக மொழிகளில் கூறுகிறார். எனவே, விநாயகரின் அங்கங்களிலே முக்கியமானவற்றின் ஞான உட்பொருளை உணர்ந்துகொள்வது அவசியமாகும்.
இறைவனுடைய உருவங்களிலே எல்லா வடிவங்களுக்கும் பொதுவாக உள்ளது திருவடியின் தத்துவமாகும். திருவடிஞானம் என்றே இதைப் பாடுகிறார் திருமூலர். நாடுகின்ற அடியார்களின் அல்லல்களை நீக்குவதற்குத் தக்க புகலிடமாக விளங்குவது இறைவனுடைய திருவடியே ஆகும். இதனால்தான் திருவடியை நாடுதல் என்றும், திருவடியில் நம்மை ஒப்புவித்தல் என்றும் பக்தி நூல்கள் ஒரு மரபை நமக்கு உணர்த்துகின்றன. ‘Grace’ என்று ஆங்கில ஞான நூல்கள் உணர்த்துகின்ற திருவருளுக்கு நிலையமாக விளங்குவது இறைவனுடைய திருவடியே ஆகும்.
விநாயகர் உருவத்தில் இந்தத் திருவடிக்கு வேறொரு சிறப்பைச் சித்தர்கள் கூறுகிறார்கள். குமரகுருபர சுவாமிகள் ஞானத்தின் உருவமாக இறைவனைக் கண்டு பாடும்பொழுது ‘ஞானம் திருவடியா’ என்றே பாடுகிறார். ஞானத்தின் உருவமாக அமைந்த விநாயகருக்கு ஞானமே திருவடியாகிறது. ஞானமுறையிலே பூசை செய்கின்ற சித்தர்கள் மரபிலே, ஞானமே திருவருளாகவும், திருவருளே ஞானமாகவும் கூடு விட்டுக் கூடு பாய்வதால் விநாயகரின் திருவுருவிற்கு ஞானத்தின் சின்னமாக விளங்குவது திருவடியாகும்.
விநாயகரின் உறுப்புகளிலே நம் கண்முன் முதன்மையாகத் தோன்றுவது அவருடைய பெருவயிறாகும் எல்லாவற்றையும் தன்னுள் அடக்குவதும், தன்னுள் எல்லாம் அடங்குவதுமாக விளங்குகின்ற பரம்பொருள் நிலையை, அந்த மாபெரும் விசுவரூப நிலையைப் பெருவயிறு உருவகிக்கிறது.
விநாயகருக்கு ஐந்து கரங்கள். கரங்கள் என்பன செயலின் உருவகம். அவருடைய கரத்திலே இருக்கும் பாசம் மனிதர்களின் பிறவிக்குக் காரணமாகிய பற்றுள்ளதைக் குறிக்கிறது. அதாவது பிறவிக்குக் காரணமாகி அதனைப் பிணித்து நிற்கிறது. இந்தப் பிணிப்பே பிறவிக்குத் தோற்றுவாய். ஆகவே அவருடைய பாசம் விளங்கும் கரமானது படைப்புத் தொழிலைக் குறிக்கிறது.
இன்னொரு கரத்திலே அங்குசத்தைக் காண்கிறோம். அங்குசமானது அழிக்கும் கருவி. ஆகையால் அங்குசம் ஏந்திய விநாயகரின் கரம் அழிக்கும் தொழிலை உருவகிக்கிறது.
இன்னொரு கரம் ‘அபயகரம்’ என்னும் அமைந்த கரமாகும். இது தன்னை நாடி வருகின்ற தொண்டனை ‘அஞ்சேல்’ என்று புகல் தருகிறது. பிறவியின் வினைச் சுழலிலே சிக்குண்டு தவிக்கும் பிறவிக்கு இந்தக் கரம் அஞ்சாமையை உணர்த்துகிறது. ஆதலால் இதுவே ‘திதி’ ஆகி வல்லமையை உணர்த்துகிறது.
வரதமும் மோதகம் ஏந்தியதுமாகிய இன்னொருகரம், கீழ்நோக்கி இருப்பது சிறந்த ஞானக் குறியாகும். வினைத்துயருக்கு அஞ்சித் தஞ்சம் புகுந்த உயிரின் குறிக்கோள் திருவடியாகிய முக்திப்பேறு என்பதை இது குறிக்கிறது. பிறவித் துயருக்கு அஞ்சி வந்த உயிர் அதன் பக்குவத்திற்கு ஏற்ப அடைகின்ற திருவருளை வரதகரம் உணர்த்துகிறது. மோதகத்தை ஏந்திய கரம், வரதகரத்தையும் அடுத்து, சுட்டாமல் சுட்டிக்காட்டுவதன் குறிப்பு, திரோதானமாகிய மறைப்புத் தொழிலை உணர்த்துவதாகப் பெரியோர்கள் கூறியுள்ளார்கள்.
தொடரும்.......