Post by anusham163 on Apr 5, 2013 8:24:26 GMT 5.5
மொழியும், இசைப்பண்பும் இத்தனை சிறப்பியல்புகள் கொண்டு திகழ்வதோடு கூட, அவ்வையின் விநாயகர் அகவலிலே இன்னொரு மாபெரும் சிறப்பு வியக்கத்தக்க விதத்தில் அமைந்து பொலிகிறது! அதுதான் அதனுடைய மந்திர ஆற்றல் என்பது.
மொழியும் இசையும் மன உலகத்தின் பாற்பட்டவை. மந்திர ஆற்றல் என்பதோ ஆன்ம உலகின்பாற் பட்டது.
உள்ளத்தின் அதிர்வுகள் அகமும் புறமும் இணைந்து ஒடுங்கச் செய்வது போலவே, தனி உயிரையும், பரம்பொருளாகிய பேருயிரையும் இணைக்கவல்ல ஆற்றல் செயற்படுகிற களம், ஆன்ம உலகமே ஆகும்.
மொழியும், இசையும் உள்ளத்தில் அதிர்வை உண்டாக்கி உணர்ச்சி அலைகளை எழுப்புகின்றன. அவ்வாறே ஒரு சொற்றொடரின் மந்திர ஆற்றலானது, ஆன்ம உலகிலே நுண் அதிர்வுகளை விளைத்துத் தனி ஆன்மாவையும் பேரான்மாவையும் ஒருமைப்பாடு என்னும் ஒடுக்க நிலைக்கு உய்க்கிறது. இது பிற ஆற்றல்களைப்போல் அல்லாது, மிகவும் நுண்ணிய முறையிலே இயங்குகின்ற நுட்பமான ஒலி ஆற்றலாகும்.
எல்லா மொழிகளிலும் ஒலி, அலைகளை எழுப்புகின்றன. ஆனால் அவையெல்லாம் மந்திர ஒலிகள் ஆகா.நிறைமொழியும், மறைமொழியும் தருகின்ற ஆணையிற்கிளக்கும் அதிர்வுகள் ஒப்ப்ற்ற தனியாற்றல் கொண்டவை. அந்த ஆற்றலுக்குத்தான் மந்திர ஆற்றல் என்று பெயர்.
ஒரு சாதாரணச் செய்யுளில் விளைகின்ற ஒலி அலைகளுக்கும், ஒரு மந்திரத்தில் விளைகின்ற ஒலி அலைகளுக்கும் ஓர் அடிப்படையான வேறுபாடு என்னவென்றால், முந்திய ஆற்றல்கள் அறிவும் உணர்ச்சியும் சேர்த்து தொழிற்படுபவை. மந்திர ஆற்றலோ, அறிவினாலும் உணர்ச்சியினாலும் அளக்க முடியாததும் ஆராய்ந்து பார்த்துப் புரிந்துகொள்ள முடியாததுமான ஓர் இணையற்ற இறையாற்றலாகும். உள்ளத்தையும், உணர்வையும் கடந்த ஆற்றலாக இருப்பதால் சித்தர்கள் இதை இறையாற்றல் என்று அழைத்தார்கள்.
இந்த இறையாற்றலானது புரிந்துகொள்ளக் கூடியதும் அளவை சொல்லக் கூடியதுமான மொழிக்குள்ளேதான் உறைகிறது. ஆனால் அந்த இரண்டையும் கடந்து நிற்கிறது அது. கட்டுப்பாட்டுக்குள் அடங்கிய உடம்பிலும் உள்ளத்திலும் இருக்கும் இறைவன், எப்படி இந்தக் கட்டுப்பாடுகளைக் கடந்தவனாக இருக்கிறானோ, அவ்வாறே இந்த மந்திர ஆற்றலும் மொழிக்குள்ளே பதித்தபோதிலும், மொழியின் எல்லையைக் கடந்து இயங்குகிறது. இதுவே, தனி உயிரை பேருயிரோடு இணைக்க வல்ல மாபெரும் உயிராற்றலாகும்.
அவ்வையின் விநாயகர் அகவலிலே, இந்த மந்திர ஆற்றலானது கம்பியில் ஓடுகின்ற மின்சாரம் போன்று அகவலின் ஒவ்வொரு வரியிலும் ஓடுகிறது. இந்த ஆற்றலினால், இதை ஓதுகின்ற மனிதனின் உள்ளம் மின்குமிழ் (BULB) போன்று ஒளிர்கிறது. அவனுடைய உடலைச் சுற்றியுள்ள ஒளி, உடம்புக்குள்ளே ஓடிக் கலக்கிறது. இந்த இரண்டும் இணைந்து விநாயகராகிய பேரொளிப் பிழம்பிலே ஒடுங்கக்கூடிய நெறியிலே அகவல் செல்கிறது. இந்த மின் ஆற்றலே விநாயகர் அகவலின் மாபெரும் வழிபாட்டு மாண்பாகும்.
ஆன்ம ஒலி அதிர்வு என்றும், ஆன்ம ஒளிவீச்சு என்றும், செவிப்புலனோடும், கட்புலனோடும் இணைந்த முறையிலே சித்தர்கள் ஞான ஆற்றலை விளக்குவது உண்டு. தொண்டு நெறியின் வாயிலாகவும், நன்மகவு நெறியின் வாயிலாகவும், நட்பு நெறியின் வாயிலாகவும், செந்நெறியின் வாயிலாகவும் இந்த ஞான ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்குச் சித்தர் இலக்கியங்கள் எத்தனையோ பல பயிற்சிகளை எடுத்துச் சொல்கின்றன. இந்தப் பயிற்சிகளில், கடினமானவை, மிகக் கடினமானவை என்றும், எளியவை, மிகவும் எளியவை என்றும் அழைக்கப் பெறுகிற பல பயிற்சிகளை நாம் காணலாம். இவை அனைத்திலும் மிகவும் எளிமையான முறைகளிலே ஒன்றுதான் தோத்திர நூல்களை ஓதுவதாகும்.
அப்படி எளிய முறையிலே ஞான ஆற்றலைப் பெருக்குவதற்கு என்று தோன்றிய நூல்களிலே விநாயகர் அகவலானது மிக எளிமையிலும் எளிமையான ஒரு மாண்பார்ந்த நூலாகும்.. ஏனென்றால், ஞானப் பெருமைகளைத் தன்னுள் அடக்கியதோடு, மொழி எளிமையும், இசை எளிமையும் கொண்டு திகழ்கிறது இந்த அரிய நூல். அதனோடு கூட, மின்கலத்தில் நிறைந்துள்ள மின் ஆற்றலைப் போன்று இந்த நூலின்கண் மந்திர ஆற்றல் கரந்து நிற்பதால், எளிமையான் வழிபாட்டின் மூலம் மிகவும் கடினமான ஞானப் பயிற்சிகளிலே விளைகின்ற நற்பலன் நமக்குக் கிட்டிவிடுகின்றது.
மந்திர ஆற்றல் என்ற மாபெரும் வல்லமையானது எளிமையான சொற்களின் வழியாக நம்மை விநாயகரின்பால் ஈர்த்துப் பிணைக்கின்ற மின்தொடர்பாக இயங்குகிறது. இக்காரணம் பற்றியே பெரிய பெரிய பயிற்சிகளிலே ஈடுபட்டுள்ள ஞானயோக சித்தர்களும் அவ்வையாருடைய விநாயகர் அகவலை மிகுந்த ஆர்வத்துடன் போற்றிப் பேணி வந்துள்ளதோடு, மாணவர்களுக்கும் அவர்களுடைய தோத்திரப் பயிற்சிக்கு உறுதுணை என்று சொல்லி வழங்கி வந்துள்ளார்கள்.
அவ்வையின் குறளைப்போலச் சித்தர் உலகில் ஆர்வத்திற்கும் பயிற்சிக்கும் நிலைக்களனாக நிலவி வந்துள்ள இந்த அரும்பெரும் நூலின் வழிபாட்டுச் சிறப்பு இங்ஙனம் திகழ்கிறது. இனி இந்த நூலின் உட்கிடையான ஞான உட்பொருளை, விநாயக் தத்துவத்தை ஆராய்ந்து பார்ப்போம்.
தொடரும்………..
மொழியும் இசையும் மன உலகத்தின் பாற்பட்டவை. மந்திர ஆற்றல் என்பதோ ஆன்ம உலகின்பாற் பட்டது.
உள்ளத்தின் அதிர்வுகள் அகமும் புறமும் இணைந்து ஒடுங்கச் செய்வது போலவே, தனி உயிரையும், பரம்பொருளாகிய பேருயிரையும் இணைக்கவல்ல ஆற்றல் செயற்படுகிற களம், ஆன்ம உலகமே ஆகும்.
மொழியும், இசையும் உள்ளத்தில் அதிர்வை உண்டாக்கி உணர்ச்சி அலைகளை எழுப்புகின்றன. அவ்வாறே ஒரு சொற்றொடரின் மந்திர ஆற்றலானது, ஆன்ம உலகிலே நுண் அதிர்வுகளை விளைத்துத் தனி ஆன்மாவையும் பேரான்மாவையும் ஒருமைப்பாடு என்னும் ஒடுக்க நிலைக்கு உய்க்கிறது. இது பிற ஆற்றல்களைப்போல் அல்லாது, மிகவும் நுண்ணிய முறையிலே இயங்குகின்ற நுட்பமான ஒலி ஆற்றலாகும்.
எல்லா மொழிகளிலும் ஒலி, அலைகளை எழுப்புகின்றன. ஆனால் அவையெல்லாம் மந்திர ஒலிகள் ஆகா.நிறைமொழியும், மறைமொழியும் தருகின்ற ஆணையிற்கிளக்கும் அதிர்வுகள் ஒப்ப்ற்ற தனியாற்றல் கொண்டவை. அந்த ஆற்றலுக்குத்தான் மந்திர ஆற்றல் என்று பெயர்.
ஒரு சாதாரணச் செய்யுளில் விளைகின்ற ஒலி அலைகளுக்கும், ஒரு மந்திரத்தில் விளைகின்ற ஒலி அலைகளுக்கும் ஓர் அடிப்படையான வேறுபாடு என்னவென்றால், முந்திய ஆற்றல்கள் அறிவும் உணர்ச்சியும் சேர்த்து தொழிற்படுபவை. மந்திர ஆற்றலோ, அறிவினாலும் உணர்ச்சியினாலும் அளக்க முடியாததும் ஆராய்ந்து பார்த்துப் புரிந்துகொள்ள முடியாததுமான ஓர் இணையற்ற இறையாற்றலாகும். உள்ளத்தையும், உணர்வையும் கடந்த ஆற்றலாக இருப்பதால் சித்தர்கள் இதை இறையாற்றல் என்று அழைத்தார்கள்.
இந்த இறையாற்றலானது புரிந்துகொள்ளக் கூடியதும் அளவை சொல்லக் கூடியதுமான மொழிக்குள்ளேதான் உறைகிறது. ஆனால் அந்த இரண்டையும் கடந்து நிற்கிறது அது. கட்டுப்பாட்டுக்குள் அடங்கிய உடம்பிலும் உள்ளத்திலும் இருக்கும் இறைவன், எப்படி இந்தக் கட்டுப்பாடுகளைக் கடந்தவனாக இருக்கிறானோ, அவ்வாறே இந்த மந்திர ஆற்றலும் மொழிக்குள்ளே பதித்தபோதிலும், மொழியின் எல்லையைக் கடந்து இயங்குகிறது. இதுவே, தனி உயிரை பேருயிரோடு இணைக்க வல்ல மாபெரும் உயிராற்றலாகும்.
அவ்வையின் விநாயகர் அகவலிலே, இந்த மந்திர ஆற்றலானது கம்பியில் ஓடுகின்ற மின்சாரம் போன்று அகவலின் ஒவ்வொரு வரியிலும் ஓடுகிறது. இந்த ஆற்றலினால், இதை ஓதுகின்ற மனிதனின் உள்ளம் மின்குமிழ் (BULB) போன்று ஒளிர்கிறது. அவனுடைய உடலைச் சுற்றியுள்ள ஒளி, உடம்புக்குள்ளே ஓடிக் கலக்கிறது. இந்த இரண்டும் இணைந்து விநாயகராகிய பேரொளிப் பிழம்பிலே ஒடுங்கக்கூடிய நெறியிலே அகவல் செல்கிறது. இந்த மின் ஆற்றலே விநாயகர் அகவலின் மாபெரும் வழிபாட்டு மாண்பாகும்.
ஆன்ம ஒலி அதிர்வு என்றும், ஆன்ம ஒளிவீச்சு என்றும், செவிப்புலனோடும், கட்புலனோடும் இணைந்த முறையிலே சித்தர்கள் ஞான ஆற்றலை விளக்குவது உண்டு. தொண்டு நெறியின் வாயிலாகவும், நன்மகவு நெறியின் வாயிலாகவும், நட்பு நெறியின் வாயிலாகவும், செந்நெறியின் வாயிலாகவும் இந்த ஞான ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்குச் சித்தர் இலக்கியங்கள் எத்தனையோ பல பயிற்சிகளை எடுத்துச் சொல்கின்றன. இந்தப் பயிற்சிகளில், கடினமானவை, மிகக் கடினமானவை என்றும், எளியவை, மிகவும் எளியவை என்றும் அழைக்கப் பெறுகிற பல பயிற்சிகளை நாம் காணலாம். இவை அனைத்திலும் மிகவும் எளிமையான முறைகளிலே ஒன்றுதான் தோத்திர நூல்களை ஓதுவதாகும்.
அப்படி எளிய முறையிலே ஞான ஆற்றலைப் பெருக்குவதற்கு என்று தோன்றிய நூல்களிலே விநாயகர் அகவலானது மிக எளிமையிலும் எளிமையான ஒரு மாண்பார்ந்த நூலாகும்.. ஏனென்றால், ஞானப் பெருமைகளைத் தன்னுள் அடக்கியதோடு, மொழி எளிமையும், இசை எளிமையும் கொண்டு திகழ்கிறது இந்த அரிய நூல். அதனோடு கூட, மின்கலத்தில் நிறைந்துள்ள மின் ஆற்றலைப் போன்று இந்த நூலின்கண் மந்திர ஆற்றல் கரந்து நிற்பதால், எளிமையான் வழிபாட்டின் மூலம் மிகவும் கடினமான ஞானப் பயிற்சிகளிலே விளைகின்ற நற்பலன் நமக்குக் கிட்டிவிடுகின்றது.
மந்திர ஆற்றல் என்ற மாபெரும் வல்லமையானது எளிமையான சொற்களின் வழியாக நம்மை விநாயகரின்பால் ஈர்த்துப் பிணைக்கின்ற மின்தொடர்பாக இயங்குகிறது. இக்காரணம் பற்றியே பெரிய பெரிய பயிற்சிகளிலே ஈடுபட்டுள்ள ஞானயோக சித்தர்களும் அவ்வையாருடைய விநாயகர் அகவலை மிகுந்த ஆர்வத்துடன் போற்றிப் பேணி வந்துள்ளதோடு, மாணவர்களுக்கும் அவர்களுடைய தோத்திரப் பயிற்சிக்கு உறுதுணை என்று சொல்லி வழங்கி வந்துள்ளார்கள்.
அவ்வையின் குறளைப்போலச் சித்தர் உலகில் ஆர்வத்திற்கும் பயிற்சிக்கும் நிலைக்களனாக நிலவி வந்துள்ள இந்த அரும்பெரும் நூலின் வழிபாட்டுச் சிறப்பு இங்ஙனம் திகழ்கிறது. இனி இந்த நூலின் உட்கிடையான ஞான உட்பொருளை, விநாயக் தத்துவத்தை ஆராய்ந்து பார்ப்போம்.
தொடரும்………..