Post by anusham163 on Apr 3, 2013 23:25:12 GMT 5.5
பதஞ்சலி முனிவர் தமது யோகசூத்திரத்தில் இறைவழிபாட்டில் மொழியின் முக்கியத்தை வற்புறுத்துகிறார். வழிபடுகிறவன் தான் ஓதுகிற மொழியின் பொருளை நன்கு உணர்ந்துகொள்ளும் பொழுது, அவனுடைய ஓதுதலில் ‘மூர்த்திகரம்’ என்னும் இறைமை, வன்மை அடைகிறது. …………………………………………………….எனவே, விநாயகர் அகவலின் மொழியும் அதனுடைய எளிமைப் பொருள்கோளும் இணைந்து, இந்த இறைமைக்கு ஊட்டம் தருகின்றன என்பது மேலும் ஒரு சிறப்பாகும்.
விநாயகர் அகவலை ஓதுகிற ஒரு பக்தனுக்கு இந்தப் பாடலின் தாய்மொழிப் பண்பும் எளிமைப்பாங்கும் இன்னொரு பெரிய நற்பலனைத் தருகின்றன. தான் வணங்குகிற தெய்வத்தின் சிறப்புக்களும் அணிகளும் காட்சியின் கோலங்களும் கண்முன் வந்து நிற்பதால், அவனுடைய ஈடுபாடு அதிகமாவதோடு கூட, உள்ளத்திலே வழிபாட்டுக்கு வேண்டிய உருக்கம் தானாகவே இழையத் தொடங்குகிறது. இதன் காரணமாக வழிபாட்டின் பயன், வேகமும் விரைவும் கொள்கிறது.
மேலே கண்டவாறு வேகமும், விரைவும் ஏற்படும்பொழுது, பக்தனுடைய எண்ணங்களிலே தெள்வு பிறக்கிறது. யாரிடம் எதை எவ்வாறு சொல்லுகிறோம் என்னும் முழு நினைவோடும், முழு உணர்ச்சியோடும், பாடலை ஓதுகிறான் பக்தன்.
இத்தனை பயன்களும் ஒன்று சேர்வதால், வழிபடுகின்ற பக்தனுடைய உள்ளத்திலிருந்து சொற்களோடு சேர்ந்து, தெளிவான எண்ணங்கள் அக உடலின் ஆழத்திலிருந்து எழுந்து வருகின்றன. அப்படி எழுந்து வரும்பொழுது, வழிபாட்டிற்கு இன்றியமையாத ‘உள்ளுதல்’ என்ற உணர்வுநிலையின் ஆட்சி முழுமை பெருகிறது. எனவே, அவன் தன் வழிபாட்டின்பொழுது மனத்தை ஒருமைப்பாட்டுடன் குவியச் செய்வது நன்கு கைகூடுகிறது. உள்ளத்தின் ஆழத்திலிருந்து புகழ்மாலையின் சொற்களும் வேண்டுதலின் எண்ணங்களும் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையிலே, விநாயகரின் திருவடிகளிலே மலர்கள் போன்று தூவப்பெறுகின்றன. எண்ணங்கள் வேறிடத்தில் சிதறுவதில்லை.
………………………………………………………………………..
இனி, மொழியின் இசைப்பண்பு எப்படி அமைந்துள்ளது என்பதைப் பார்த்தால் அவ்வையாரின் கவியாற்றலானது வழிபாட்டுக்கு எங்ஙனம் துடுப்பு வீசுகிறது என்பதை உணரலாம்.
அகவலினுடைய யாப்புமுறை, அதில் பயின்று வந்துள்ள சொற்களைப் போன்றே மிகவும் எளிமையானதாகும். அதனுடைய தாள அமைப்பு எளிய கட்டுக்கோப்பு கொண்டது. அகவுதல் என்ற சொல்லுக்கு ஏற்பப் பின்னுதல், புரட்டுதல், பாய்தல் போன்ற சிக்கல்கள் ஏதுமின்றி, ஓதிக்கொண்டே போகக்கூடிய தாள அமைப்புக் கொண்டதே அகவல் என்னும் பாவினம்! இதனால் விநாயகருடைய பெருமைகளை மேலே மேலே அடுக்கிச் செல்லும்போது ஓதுகிறவனுடைய உள்ளம் அந்த யாப்பின் அமைதியிலே இரண்டறக் கலந்து விடுகிறது. நிஷ்டை என்றும், ஒருமைப்பாடு என்றும், ஒன்றுகூடல் என்றும் சொல்லுகிற மனஒடுக்கம் இந்த இசைப்பண்பினால் சிக்கலின்றிக் கைவந்து விடுகிறது. இது அந்தப்பாடலின் தாள அமைப்பும் தளைகளின் இசைப்பண்பும் சேர்ந்து ஊட்டுவிக்கின்ற ஞானசாதனை.
இந்த இசைப்பண்பினால் விளைகிற இன்னொரு பயன் அதனுடைய ஒலி அதிர்வாகும்.
மொழிக்கு முதற்காரணம் இலக்கண ஆசிரியர்கள் கூறியவாறு ஒலியின் அணுத்திரளே ஆகும். அந்த நிலையிலே ஆராய்ந்து பார்த்தோமானால் அகற்பாவின் இசைப்பண்பு எளிமையோடு பொலிவையும் உள்ளடக்கிய ஒலி அதிர்வாகும். ஆற்றொழுக்காகச் செல்கிற ஒலி அலைகளை எழுப்புகிற தாள அமைப்பு வெண்தளைக்கு இருப்பதால், இந்தப் பாடலை ஓதும்பொழுது உணர்ச்சியின் செறிவானது அலை அலையாக எழுந்து பெருகுகிறது. அப்படிப் பெருகும் பொழுது, உள்ளத்தின் உணர்ச்சி அலைகள் நம் உடம்பைச் சுற்றி நிற்கின்ற வான அணு உடலின் அலைகளை அசைக்கத் தொடங்குகின்றன. அப்போது அகமும் புறமும் இணைந்து ஒலிக்கத் தொடங்குகின்றன.
ஒரே கதியில் சேர்க்கப்பெற்ற இரண்டு இசைக்கருவிகளில் ஒன்று ஒலிக்கத் தொடங்கியதும் எவ்வாறு அடுத்ததும் தானாகவே ஒலிக்கத்தொடங்குகிறதோ, அவ்வாறே, இணை ஒலி என்ற இயற்பியல் விதியின்படி, அகமும் புறமும் விநாயகர் வழிபாட்டிலே இணைந்து ஓதத் தொடங்குகின்றன. இப்படி இணைவதுதான் சித்தர்கள் கூறுகிற ஒடுக்கநிலை என்பது.
யோகத்தில் அமரும்போது சமாதி என்னும் ஒடுக்கநிலை எப்படி ஒரு சித்தனுக்குக் கூடுகிறதோ, அவ்வாறே ஒரு பக்தனுக்கு அவனுடைய வழிபாட்டின்போது மன மண்டலத்திலே ஒடுக்கநிலை கூடவேண்டும். அப்படிக் கூடினால்தான் அவனுடைய வழிபாடு முழுமை பெறுகிறது. இந்த முழுமை பெறும் நெறிக்கு விநாயகர் அகவலின் இசைப்பண்பு பக்தனை ஆற்றுப்படுத்தி விநாயகரின் திருவடிகளிலே மனத்தை ஒடுங்கும்படி செய்கிறது.
தொடரும்……….
விநாயகர் அகவலை ஓதுகிற ஒரு பக்தனுக்கு இந்தப் பாடலின் தாய்மொழிப் பண்பும் எளிமைப்பாங்கும் இன்னொரு பெரிய நற்பலனைத் தருகின்றன. தான் வணங்குகிற தெய்வத்தின் சிறப்புக்களும் அணிகளும் காட்சியின் கோலங்களும் கண்முன் வந்து நிற்பதால், அவனுடைய ஈடுபாடு அதிகமாவதோடு கூட, உள்ளத்திலே வழிபாட்டுக்கு வேண்டிய உருக்கம் தானாகவே இழையத் தொடங்குகிறது. இதன் காரணமாக வழிபாட்டின் பயன், வேகமும் விரைவும் கொள்கிறது.
மேலே கண்டவாறு வேகமும், விரைவும் ஏற்படும்பொழுது, பக்தனுடைய எண்ணங்களிலே தெள்வு பிறக்கிறது. யாரிடம் எதை எவ்வாறு சொல்லுகிறோம் என்னும் முழு நினைவோடும், முழு உணர்ச்சியோடும், பாடலை ஓதுகிறான் பக்தன்.
இத்தனை பயன்களும் ஒன்று சேர்வதால், வழிபடுகின்ற பக்தனுடைய உள்ளத்திலிருந்து சொற்களோடு சேர்ந்து, தெளிவான எண்ணங்கள் அக உடலின் ஆழத்திலிருந்து எழுந்து வருகின்றன. அப்படி எழுந்து வரும்பொழுது, வழிபாட்டிற்கு இன்றியமையாத ‘உள்ளுதல்’ என்ற உணர்வுநிலையின் ஆட்சி முழுமை பெருகிறது. எனவே, அவன் தன் வழிபாட்டின்பொழுது மனத்தை ஒருமைப்பாட்டுடன் குவியச் செய்வது நன்கு கைகூடுகிறது. உள்ளத்தின் ஆழத்திலிருந்து புகழ்மாலையின் சொற்களும் வேண்டுதலின் எண்ணங்களும் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையிலே, விநாயகரின் திருவடிகளிலே மலர்கள் போன்று தூவப்பெறுகின்றன. எண்ணங்கள் வேறிடத்தில் சிதறுவதில்லை.
………………………………………………………………………..
இனி, மொழியின் இசைப்பண்பு எப்படி அமைந்துள்ளது என்பதைப் பார்த்தால் அவ்வையாரின் கவியாற்றலானது வழிபாட்டுக்கு எங்ஙனம் துடுப்பு வீசுகிறது என்பதை உணரலாம்.
அகவலினுடைய யாப்புமுறை, அதில் பயின்று வந்துள்ள சொற்களைப் போன்றே மிகவும் எளிமையானதாகும். அதனுடைய தாள அமைப்பு எளிய கட்டுக்கோப்பு கொண்டது. அகவுதல் என்ற சொல்லுக்கு ஏற்பப் பின்னுதல், புரட்டுதல், பாய்தல் போன்ற சிக்கல்கள் ஏதுமின்றி, ஓதிக்கொண்டே போகக்கூடிய தாள அமைப்புக் கொண்டதே அகவல் என்னும் பாவினம்! இதனால் விநாயகருடைய பெருமைகளை மேலே மேலே அடுக்கிச் செல்லும்போது ஓதுகிறவனுடைய உள்ளம் அந்த யாப்பின் அமைதியிலே இரண்டறக் கலந்து விடுகிறது. நிஷ்டை என்றும், ஒருமைப்பாடு என்றும், ஒன்றுகூடல் என்றும் சொல்லுகிற மனஒடுக்கம் இந்த இசைப்பண்பினால் சிக்கலின்றிக் கைவந்து விடுகிறது. இது அந்தப்பாடலின் தாள அமைப்பும் தளைகளின் இசைப்பண்பும் சேர்ந்து ஊட்டுவிக்கின்ற ஞானசாதனை.
இந்த இசைப்பண்பினால் விளைகிற இன்னொரு பயன் அதனுடைய ஒலி அதிர்வாகும்.
மொழிக்கு முதற்காரணம் இலக்கண ஆசிரியர்கள் கூறியவாறு ஒலியின் அணுத்திரளே ஆகும். அந்த நிலையிலே ஆராய்ந்து பார்த்தோமானால் அகற்பாவின் இசைப்பண்பு எளிமையோடு பொலிவையும் உள்ளடக்கிய ஒலி அதிர்வாகும். ஆற்றொழுக்காகச் செல்கிற ஒலி அலைகளை எழுப்புகிற தாள அமைப்பு வெண்தளைக்கு இருப்பதால், இந்தப் பாடலை ஓதும்பொழுது உணர்ச்சியின் செறிவானது அலை அலையாக எழுந்து பெருகுகிறது. அப்படிப் பெருகும் பொழுது, உள்ளத்தின் உணர்ச்சி அலைகள் நம் உடம்பைச் சுற்றி நிற்கின்ற வான அணு உடலின் அலைகளை அசைக்கத் தொடங்குகின்றன. அப்போது அகமும் புறமும் இணைந்து ஒலிக்கத் தொடங்குகின்றன.
ஒரே கதியில் சேர்க்கப்பெற்ற இரண்டு இசைக்கருவிகளில் ஒன்று ஒலிக்கத் தொடங்கியதும் எவ்வாறு அடுத்ததும் தானாகவே ஒலிக்கத்தொடங்குகிறதோ, அவ்வாறே, இணை ஒலி என்ற இயற்பியல் விதியின்படி, அகமும் புறமும் விநாயகர் வழிபாட்டிலே இணைந்து ஓதத் தொடங்குகின்றன. இப்படி இணைவதுதான் சித்தர்கள் கூறுகிற ஒடுக்கநிலை என்பது.
யோகத்தில் அமரும்போது சமாதி என்னும் ஒடுக்கநிலை எப்படி ஒரு சித்தனுக்குக் கூடுகிறதோ, அவ்வாறே ஒரு பக்தனுக்கு அவனுடைய வழிபாட்டின்போது மன மண்டலத்திலே ஒடுக்கநிலை கூடவேண்டும். அப்படிக் கூடினால்தான் அவனுடைய வழிபாடு முழுமை பெறுகிறது. இந்த முழுமை பெறும் நெறிக்கு விநாயகர் அகவலின் இசைப்பண்பு பக்தனை ஆற்றுப்படுத்தி விநாயகரின் திருவடிகளிலே மனத்தை ஒடுங்கும்படி செய்கிறது.
தொடரும்……….