(ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா - மெட்டு )
ஆலடியில் இறங்கிவந்த தட்சிணா மூர்த்தியே
காலடியில் பிறந்துவந்தாய் ஆதியில் சங்கரா
காஞ்சியில் அருள வந்த காலடி சங்கரா
செஞ்சுடர் சிவனே நீர் காஞ்சியின் சங்கரா
பாலாற்றின் கரையினிலே காஞ்சி மாமுனியே
காலூன்றி அமர்ந்தீரே காஞ்சி மாமுனியே
நால் வேதம் வளர்த்தீரே காஞ்சி மாமுனியே
சொல்லி மகிழ்வோம் உம் புகழே காஞ்சி மாமுனியே
ஓரிக்கை தலத்தினிலே காஞ்சி மாமுனியே
பேரிகை முழங்கிட காஞ்சி மாமுனியே
அபயகை காட்டி அமர்ந்த காஞ்சி மாமுனியே
கூப்பி கை தொழுவோமே காஞ்சி மாமுனியே
சொற்கோயில் தேவாரம் காஞ்சி மாமுனியே
பொற்கோயில் பல கண்டோம் காஞ்சி மாமுனியே
கற்கோயில் கண்டு மகிழ்ந்தோம் காஞ்சி மாமுனியே
நற்கோயில் உன்பாதமே காஞ்சி மாமுனியே
பக்தர்களின் குறைதீர்க்கும் காஞ்சி மாமுனியே
சக்தி சிவ ரூபனே காஞ்சி மாமுனியே
முக்தி தந்தாய் பக்தனுக்கே காஞ்சி மாமுனியே
பக்தியோடு தொழுவோம் உனை காஞ்சி மாமுனியே
விழுப்புரத்தில் பிறந்தவரே காஞ்சி மாமுனியே
முழுப்பரப் பிரம்மமே காஞ்சி மாமுனியே
அழும் முன்னே காப்பவரே காஞ்சி மாமுனியே
அழுவோமே ஆனந்தமாய் காஞ்சி மாமுனியே
ஆதி சங்கரர் வழி வந்த காஞ்சி மாமுனியே
ஆதியந்தம் அறிந்தவரே காஞ்சி மாமுனியே
ஆதங்கம் அறிந்தே காஞ்சி மாமுனியே
ஆதரிப்பீர் அன்புடனே காஞ்சி மாமுனியே
காருண்ய ரூபனே காஞ்சி மாமுனியே
நேரும் துன்பம் தீர்ப்பவரே காஞ்சி மாமுனியே
பாருக்குள்ளே ஜெகத்குருவே காஞ்சி மாமுனியே
யாருமில்லை உனையன்றி காஞ்சி மாமுனியே
-தேனுபுரீஸ்வரதாசன் இல.சங்கர் 02.04.13
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
Pls see my other songs at :
www.songsbyshanks.blogspot.in