Post by anusham163 on Mar 24, 2013 21:38:41 GMT 5.5
சாத்திரம், தோத்திரம் ஆகிய இந்த இரண்டும் இணைந்து நம் உள்ளத்தில் செல்லும்போது பக்தியே ஞானமாகவும், ஞானமே பக்தியாகவும் பரிணமித்து இயங்கக் காண்கிறோம். அந்த இயக்கத்தில் விதியும் காலமும் சுழன்றோடுவதும், விதியின் எழுத்து அழிவதும், காலம் என்ற தத்துவம் தனது சுழற்சியை நமக்கு நன்மை பயக்கும் விதத்தில் மாற்றிக்கொண்டு சுழல்வதும் நிகழ்கின்றன……….இந்தத் தவச் செயலுக்கு நம்மை அழைத்துச் செல்வதே அவ்வையின் நூல்கள் எழுந்ததன் குறிக்கோள் ஆகும்.
விநாயகர் அகவல் ஒரு புகழ் நூல். விநாயகரின் பெருமைகளைச் சொல்லிப் புகழ்ந்து துதிக்கின்ற முறையில் அமைந்த நூலாகும்.----------------------------------------------
விநாயகருடைய பெருமைகளை எடுத்துச் சொல்வதோடு, யோகிகள் வழிபடுகின்ற ஞானச் சின்னங்களை வரையறை செய்து வகுத்துக் கூறுவதும், விநாயகர் அகவலின் தனிப்பெரும் சிறப்பாகும்-------------------------------------------------------------
சித்தர்களின் ஞான நுட்பங்களைத் தன்னுள் அடக்கியுள்ள நூல் என்பதோடுகூட, அவ்வையாரின் விநாயகர் அகவல் வேறு சில தனிப்பெருமைகளையும் தன்னுள் பொதிந்து திகழ்கிறது.
முதலாவது சிறப்பு, அகவலின் மொழி எளிமையாகும், இரண்டாவது சிறப்பு, அதனுடைய இசைப்பண்பாகும், மூன்றாவது சிறப்பு அதனுடைய மந்திர ஆற்றலாகும்.-------------------.எந்த மொழியிலும், எந்தக்காலத்திலும் இறவாத சொற்கள் என்று சில அடிப்படையான சொற்கிளவிகள் உண்டு. இந்தச் சொற்கள் மக்களுடைய நாவிலே ஆண்டாண்டுகளாகப் பழகு தமிழாக வழங்கி வழங்கி, அவற்றின் எளிமைக்குள்ளே ஓர் உயிர்ப்பு வேகம் அல்லது உயிரொளி தோன்றுகிறது. எவ்வாறு நெருப்பிலே கங்கு கனலுகிறதோ அவ்வாறு இந்தச் சொல் ஒவ்வொன்றும் ஒரு சொற்கங்காக என்றென்றும் அணையாது, அவியாது கனல்கிறது. எனவே அது ஓதுகிறவனுடைய சொல் மூச்சுக்காற்றிலே அதனுடைய அனல் வேகத்தை அதிகரித்துக் கொள்கிறது. விசிறி வைத்து வீசும்போது எப்படி ஒரு கங்கானது பொறி தெறித்து அனல் உமிழ்கிறதோ, அவ்வாறே, இந்தச் சொற்கங்கும் மொழியாற்றலைத் தீப்பொறி போன்று ஓதுகிறவனுடைய சொற்காற்றினால் கக்குகிறது. இது அந்தப் பாடலின் சொல்லிலே உள்ள எளிமையின் சிறப்பாகும்.
இனி இந்த எளிமைக்கு இன்னொரு வேகமும் இருக்கிறது. ஓதுகின்ற மனிதன் எந்த மூர்த்தியை நினைத்து இந்தப் பாடலை ஓதுகின்றானோ அந்த மூர்த்தியின் முழு வடிவமும் அவனுடைய மனக்கண்ணிலே தோன்றும் வண்ணம் சொற்களின் வருணணை கைகொடுத்து உதவுகிறது. ஓதுகின்ற மொழி அவனுடைய தாய்மொழியாக இருப்பதாலும், ஓதுகின்ற சொற்கள் எளிதிலே பொருள்கொள்ளக் கூடியனவாக இருப்பதாலும், பாடலின் ஒவ்வொரு வரியை ஓதும்போதும் அந்த வரி சித்தரிக்கிற உருவமானது மனக்கண்ணின் முன்னால் படம் போன்று விரிகிறது. விரிகின்ற இந்தப் படத்திலே மனம் கவிவதால், ஓதுகின்ற உள்ளத்தின் ஈடுபாடு மேம்பட்டு உணர்ச்சியிலே முனைந்து கூடுகிறது. அப்படிக் கூடும்பொழுது அந்தத் தோத்திரம் வலிமை பெறுகிறது. இது அந்த எளிமையினால் ஏற்படுகின்ற இன்னொரு பெரிய ஆற்றலாகும்.
தொடரும்,……..
விநாயகர் அகவல் ஒரு புகழ் நூல். விநாயகரின் பெருமைகளைச் சொல்லிப் புகழ்ந்து துதிக்கின்ற முறையில் அமைந்த நூலாகும்.----------------------------------------------
விநாயகருடைய பெருமைகளை எடுத்துச் சொல்வதோடு, யோகிகள் வழிபடுகின்ற ஞானச் சின்னங்களை வரையறை செய்து வகுத்துக் கூறுவதும், விநாயகர் அகவலின் தனிப்பெரும் சிறப்பாகும்-------------------------------------------------------------
சித்தர்களின் ஞான நுட்பங்களைத் தன்னுள் அடக்கியுள்ள நூல் என்பதோடுகூட, அவ்வையாரின் விநாயகர் அகவல் வேறு சில தனிப்பெருமைகளையும் தன்னுள் பொதிந்து திகழ்கிறது.
முதலாவது சிறப்பு, அகவலின் மொழி எளிமையாகும், இரண்டாவது சிறப்பு, அதனுடைய இசைப்பண்பாகும், மூன்றாவது சிறப்பு அதனுடைய மந்திர ஆற்றலாகும்.-------------------.எந்த மொழியிலும், எந்தக்காலத்திலும் இறவாத சொற்கள் என்று சில அடிப்படையான சொற்கிளவிகள் உண்டு. இந்தச் சொற்கள் மக்களுடைய நாவிலே ஆண்டாண்டுகளாகப் பழகு தமிழாக வழங்கி வழங்கி, அவற்றின் எளிமைக்குள்ளே ஓர் உயிர்ப்பு வேகம் அல்லது உயிரொளி தோன்றுகிறது. எவ்வாறு நெருப்பிலே கங்கு கனலுகிறதோ அவ்வாறு இந்தச் சொல் ஒவ்வொன்றும் ஒரு சொற்கங்காக என்றென்றும் அணையாது, அவியாது கனல்கிறது. எனவே அது ஓதுகிறவனுடைய சொல் மூச்சுக்காற்றிலே அதனுடைய அனல் வேகத்தை அதிகரித்துக் கொள்கிறது. விசிறி வைத்து வீசும்போது எப்படி ஒரு கங்கானது பொறி தெறித்து அனல் உமிழ்கிறதோ, அவ்வாறே, இந்தச் சொற்கங்கும் மொழியாற்றலைத் தீப்பொறி போன்று ஓதுகிறவனுடைய சொற்காற்றினால் கக்குகிறது. இது அந்தப் பாடலின் சொல்லிலே உள்ள எளிமையின் சிறப்பாகும்.
இனி இந்த எளிமைக்கு இன்னொரு வேகமும் இருக்கிறது. ஓதுகின்ற மனிதன் எந்த மூர்த்தியை நினைத்து இந்தப் பாடலை ஓதுகின்றானோ அந்த மூர்த்தியின் முழு வடிவமும் அவனுடைய மனக்கண்ணிலே தோன்றும் வண்ணம் சொற்களின் வருணணை கைகொடுத்து உதவுகிறது. ஓதுகின்ற மொழி அவனுடைய தாய்மொழியாக இருப்பதாலும், ஓதுகின்ற சொற்கள் எளிதிலே பொருள்கொள்ளக் கூடியனவாக இருப்பதாலும், பாடலின் ஒவ்வொரு வரியை ஓதும்போதும் அந்த வரி சித்தரிக்கிற உருவமானது மனக்கண்ணின் முன்னால் படம் போன்று விரிகிறது. விரிகின்ற இந்தப் படத்திலே மனம் கவிவதால், ஓதுகின்ற உள்ளத்தின் ஈடுபாடு மேம்பட்டு உணர்ச்சியிலே முனைந்து கூடுகிறது. அப்படிக் கூடும்பொழுது அந்தத் தோத்திரம் வலிமை பெறுகிறது. இது அந்த எளிமையினால் ஏற்படுகின்ற இன்னொரு பெரிய ஆற்றலாகும்.
தொடரும்,……..