Post by anusham163 on Mar 23, 2013 21:29:15 GMT 5.5
இந்தக் கோட்படுகளை ஆராய்ந்த ஒரு ஜெர்மன் தத்துவஞானி, இன்னொரு கொள்கையைக் கண்டுபிடித்தார். அதற்கு ‘Theory of Interference’ என்று பெயர்.-------------அதன் உட்கிடை என்னவென்றால், ஒரே நிகழ்ச்சி பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து, மறுபடியும் சுற்றத் தொடங்கும்போது, யாரோ ஒருவர் அல்லது ஒரு சக்தி தலையிட்டு, அதன் சுழற்சிக் கோட்டிலிருந்து அதைச் சற்றே நகர்த்திவிட முடியும். அப்படிச் செய்வதால் அந்த நிகழ்ச்சி வேறுவிதமாக மாறிச் சுழலத்தொடங்கிவிடும். இதுவே ‘தலையீடு’ அல்லது ‘Intereference’ என்பது. ஒருவன் ஒன்று செய்வது இந்தத்தலையீட்டினால் மாறி ஒன்று பிறிதாகலாம் அல்லது ஒன்று நடவாமலே போய்விடலாம்.
-------இந்தத் தலையீட்டு ஆற்றல் செய்கிற செயலினால், அந்த மாறுதல் நல்லதாகலாம்; அல்லது பிறிதொரு தீங்காகலாம்.
ஆனால் நம்முடைய நாட்டுச் சித்தர்கள் இதையே வேறுவிதமாகச் சொன்னார்கள். மாறுதல் என்பது இறைவனுடைய தலையீட்டினால் நல்லதாகவே நடைபெறும் என்றார்கள் நம் ஞானிகள்.
மனித ஆற்றலின் தலையீட்டினால் அல்ல, இறைவனுடைய திருவருளின் தலையீட்டினால், ஏற்படுகிற மாறுதல் பேரின்பப் பெருமாறுதலாகவே அமையும். அவன் கால்பட்டு, நம் தலைமேல் தீய எழுத்து நல்ல எழுத்தாக மாறிவிடும் என்றார்கள் ஞானிகள். இதையே அவர்கள், ‘தலையீடு’ என்று சாமானிய வார்த்தையில் சொல்லாமல், ‘திருவருள்’ என்றார்கள், ‘திருவடிப்பேறு’ என்றார்கள். இதைத்தான் சித்தர் இலக்கியம் வலியுறுத்துகிறது.
விதியையும் அதன் கொடுமையையும் காலத்தையும் அதன் கோலத்தையும் வெல்லுவதற்கு உரிய ஒரே ஆயுதம் சரணாகதி அல்லது அடைக்கலம் என்றார்கள்.
இறைவனிடம் தஞ்சம் புகும்போது, ஒரு பக்தனுக்கு விதி மாறுகிறது; காலத்தை அவன் வெல்கிறான். மார்க்கண்டேயன் சிவனிடம் தஞ்சம் புகுந்தான்; சூலாயுதம் எமனை நோக்கிப் பாய்ந்தது, என்பது புராணம் கூறுகிற ஓர் உருவகக்கதை. இதையே அருணகிரியார் தமது பக்தியின் மேலீட்டால் முருகனுடைய கால் பட்டு அயன் கையெழுத்து அழிந்தது என்று பாடினார்; இது பக்தி மார்க்கம்.
இந்த விதியை மாற்றும் வேலையை யோகிகளும் ஞானிகளும் எவ்வாறு செய்கிறார்கள்? திருமூலர் பாடுகிறார்:
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவனருளாலே.
‘அவன் கால்பட்டு’ என்று அருணகிரிநாதர் பாடியதையே, ‘சென்னியில் வைத்த சிவனருள்’ என்கிறார் சித்தர். அதைக்கொண்டு, முன்னைவினையின் முடிச்சை அவிழ்ப்பதும், பின்னைவினையைப் பிடித்துப் பிசைவதும் சித்தரின் ஞானச் செயல்களாகத் திகழ்கின்றன.
பக்தனுக்கு, எல்லாவற்றையும் இறைவனிடம் ஒப்புக்கொடுத்துவிட்ட நிலையில் ஊழ்வினை தன்வினையாக அழிகிறது. சித்தனோ, தன் ஞானவினையினால் அந்த ஊழ்வினையை அழிக்கிறான். அது ஞானத்தின் செயல். இரண்டுமே, சென்னியில் இயங்குகின்ற திருவருளின் செயல்வினையேயாம்.
இந்த இரண்டு விதமான வெற்றிச் செயல்களின் வகைகளையும் எடுத்துக் கூறுவதே சித்தர்களின் ஞானச் செம்பொருள் இந்தக் செம்பொருளை உட்கொண்டு இயன்றனவே அவ்வையாரின் குறளும் அகவலும்.
வினையின் முடிச்சை அவிழ்க்கும் முறையையும், பின்னை வினையைப் பிடித்துப் பிசையும் முறையையும் பாடநூல் போல எடுத்து விளக்குவது அவ்வையின் குறள்; விநாயகரின் திருவடியிலே நமது தலையை இட்டுச் சென்று அந்தத் திருவடியிலே தோயும் நிலையில் வினைகள் சுழலுமாறு செய்வதே விநாயகர் அகவல்.
சித்தர்கள் கூறுகின்ற நான்கு நெறிகளிலே சகமார்க்கமாகிய யோக நெறியையும், சன்மார்க்கமாகிய ஞானநெறியையும் அறிவியல் முறையிலே பயிற்சிகளாக எடுத்துச் சொல்லி, நமக்கு ஞானக் கல்வியைப் புகட்ட எழுந்ததே அவ்வையின் குறள். நமது இதயத்தில் ஞானத்தையெல்லாம் பக்தியாகக் குழைத்து ஊட்டி, சொல்லும் மனமும் மெய்யும் உருகி ஓடுகிற முறையில் விநாயகனுடைய திருவடியிலே நம்மைக் கூட்டுவிக்கிற துதி நூலே விநாயகர் அகவல். இரண்டும் ஒரே குறிக்கோளீல் எழுந்த இரண்டு வழிகளால் ஆன இருவேறு நூல்கள்.
தொடரும்………
-------இந்தத் தலையீட்டு ஆற்றல் செய்கிற செயலினால், அந்த மாறுதல் நல்லதாகலாம்; அல்லது பிறிதொரு தீங்காகலாம்.
ஆனால் நம்முடைய நாட்டுச் சித்தர்கள் இதையே வேறுவிதமாகச் சொன்னார்கள். மாறுதல் என்பது இறைவனுடைய தலையீட்டினால் நல்லதாகவே நடைபெறும் என்றார்கள் நம் ஞானிகள்.
மனித ஆற்றலின் தலையீட்டினால் அல்ல, இறைவனுடைய திருவருளின் தலையீட்டினால், ஏற்படுகிற மாறுதல் பேரின்பப் பெருமாறுதலாகவே அமையும். அவன் கால்பட்டு, நம் தலைமேல் தீய எழுத்து நல்ல எழுத்தாக மாறிவிடும் என்றார்கள் ஞானிகள். இதையே அவர்கள், ‘தலையீடு’ என்று சாமானிய வார்த்தையில் சொல்லாமல், ‘திருவருள்’ என்றார்கள், ‘திருவடிப்பேறு’ என்றார்கள். இதைத்தான் சித்தர் இலக்கியம் வலியுறுத்துகிறது.
விதியையும் அதன் கொடுமையையும் காலத்தையும் அதன் கோலத்தையும் வெல்லுவதற்கு உரிய ஒரே ஆயுதம் சரணாகதி அல்லது அடைக்கலம் என்றார்கள்.
இறைவனிடம் தஞ்சம் புகும்போது, ஒரு பக்தனுக்கு விதி மாறுகிறது; காலத்தை அவன் வெல்கிறான். மார்க்கண்டேயன் சிவனிடம் தஞ்சம் புகுந்தான்; சூலாயுதம் எமனை நோக்கிப் பாய்ந்தது, என்பது புராணம் கூறுகிற ஓர் உருவகக்கதை. இதையே அருணகிரியார் தமது பக்தியின் மேலீட்டால் முருகனுடைய கால் பட்டு அயன் கையெழுத்து அழிந்தது என்று பாடினார்; இது பக்தி மார்க்கம்.
இந்த விதியை மாற்றும் வேலையை யோகிகளும் ஞானிகளும் எவ்வாறு செய்கிறார்கள்? திருமூலர் பாடுகிறார்:
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவனருளாலே.
‘அவன் கால்பட்டு’ என்று அருணகிரிநாதர் பாடியதையே, ‘சென்னியில் வைத்த சிவனருள்’ என்கிறார் சித்தர். அதைக்கொண்டு, முன்னைவினையின் முடிச்சை அவிழ்ப்பதும், பின்னைவினையைப் பிடித்துப் பிசைவதும் சித்தரின் ஞானச் செயல்களாகத் திகழ்கின்றன.
பக்தனுக்கு, எல்லாவற்றையும் இறைவனிடம் ஒப்புக்கொடுத்துவிட்ட நிலையில் ஊழ்வினை தன்வினையாக அழிகிறது. சித்தனோ, தன் ஞானவினையினால் அந்த ஊழ்வினையை அழிக்கிறான். அது ஞானத்தின் செயல். இரண்டுமே, சென்னியில் இயங்குகின்ற திருவருளின் செயல்வினையேயாம்.
இந்த இரண்டு விதமான வெற்றிச் செயல்களின் வகைகளையும் எடுத்துக் கூறுவதே சித்தர்களின் ஞானச் செம்பொருள் இந்தக் செம்பொருளை உட்கொண்டு இயன்றனவே அவ்வையாரின் குறளும் அகவலும்.
வினையின் முடிச்சை அவிழ்க்கும் முறையையும், பின்னை வினையைப் பிடித்துப் பிசையும் முறையையும் பாடநூல் போல எடுத்து விளக்குவது அவ்வையின் குறள்; விநாயகரின் திருவடியிலே நமது தலையை இட்டுச் சென்று அந்தத் திருவடியிலே தோயும் நிலையில் வினைகள் சுழலுமாறு செய்வதே விநாயகர் அகவல்.
சித்தர்கள் கூறுகின்ற நான்கு நெறிகளிலே சகமார்க்கமாகிய யோக நெறியையும், சன்மார்க்கமாகிய ஞானநெறியையும் அறிவியல் முறையிலே பயிற்சிகளாக எடுத்துச் சொல்லி, நமக்கு ஞானக் கல்வியைப் புகட்ட எழுந்ததே அவ்வையின் குறள். நமது இதயத்தில் ஞானத்தையெல்லாம் பக்தியாகக் குழைத்து ஊட்டி, சொல்லும் மனமும் மெய்யும் உருகி ஓடுகிற முறையில் விநாயகனுடைய திருவடியிலே நம்மைக் கூட்டுவிக்கிற துதி நூலே விநாயகர் அகவல். இரண்டும் ஒரே குறிக்கோளீல் எழுந்த இரண்டு வழிகளால் ஆன இருவேறு நூல்கள்.
தொடரும்………