tks
New Member
Posts: 20
|
Post by tks on Mar 22, 2013 21:35:23 GMT 5.5
கண் கண்ட தெய்வமே பெரியவா அருள் தந்த செல்வமே பெரியவா என்னென்ன செய்தார் என்னென்ன சொன்னார் என்னென்ன செய்வித்தார் என்னென்ன கற்பித்தார் நாடெங்கும் நடந்தார் நலம் பல செய்தார் மதம்தனை வளர்த்தார் மக்களை வாழவைத்தார் அருள்மழை பொழிந்து அடியார் துயர் தீர்த்தார் பசுவுக்கும் யானைக்கும் அன்பு பாம்புக்கும் நாய்க்கும் கருணை ஆடையும் உணவும் மணலளவு ஆசியும் கருணையும் மலையளவு தீராத பிணியையும் தீர்த்துவைப்பார் வாராத மழையையும் வரவழைப்பார் நடக்காதவரை நடக்க வைத்தார் பேசாதவரை பேசவும் வைத்தார் பணியாதவரை பணிய வைத்தார் அறியாதவரை அறிய வைத்தார் கண் கண்ட தெய்வமே பெரியவா அருள் தந்த செல்வமே பெரியவா
|
|
|
Post by Sumi on Mar 22, 2013 22:00:14 GMT 5.5
Beautiful! Yet another treasure.
Thank you Sir.
|
|
|
Post by kramans on Mar 23, 2013 5:16:10 GMT 5.5
Very nicely and aptly compiled!!!
|
|