Post by anusham163 on Mar 21, 2013 14:41:59 GMT 5.5
‘நீலமேனி’ என்பதைப்போலவே, ‘மெய்த்தொண்டர்குழாம்’ என்பதற்குப் பொருள் சொல்லுகிற யோகிகள், நம்மோடு வாழ்கின்ற மெய்யடியார்களாகிய தொண்டர் குழாத்தை இச்சொற்றொடர் குறிக்கவில்லை என்று கூறி, மிக நுட்பமான உட்பொருள் தருகிறார்கள்.
இந்த உலகத்தில் ஞானப்பயிற்சி செய்யப்புகும் ஒரு மாணவனை ஞானகுரு ஆட்கொள்ளும்பொழுது,, அவனைத் தம்மோடு கூடவே மெய்த்தொண்டர் குழாத்தையும் சேர்த்து இணைத்துக் கொள்கிறார். இந்த இணைப்புத்தான் அவனுடைய ஆன்ம வளர்ச்சிக்கு இரவும் பகலும் உறுதுணையாக அமைகிறது. குருநாதன் இவ்வாறு மாணவனை இணைக்கின்ற மெய்த்தொண்டர் குழாமானது, ஆதி குருவான பரம குருவிலிருந்து தொடங்கி, நேர் நின்று உணர்த்துகின்ற குருநாதன் வரை வழி வழியாக விளங்கி வருகின்ற ஞானியர் குழுவாகும்.
இந்த குருஞானக் குழுவானது அன்றிலிருந்து இன்று வரை மாறுதலோ, மறைதலோ இல்லாது என்றென்றும் நிலைபெற்று நின்று வருகின்றது. இந்த மெய்த்தொண்டர் குழாமானது ஞானப் பயிற்சியில் ஈடுபடுகிற மாணவனுக்கு அவனுடைய உள்ளுடம்பில் புகுந்து துணை செய்கிற மாபெரும் ஞானத் திருக்கூட்டமாகும்.
உலக நாடுகள் அனைத்திலும் உள்ள மஹான்களும் ஞானிகளும் இந்தத் திருக்கூட்டத்தை ‘UNSEEN MASTERS’ என்றும், ‘INVISIBLE HELPERS’ என்றும் அழைக்கிறார்கள். இந்த மெய்த்தொண்டர் குழாத்து ஞானிகள், உருவத்தில் அல்லது அருவத்தில் நின்று மாணவனுக்கு உதவி செய்கிறார்கள். எல்லா வகையிலும் உறுதுணையாக நிற்கிறார்கள்.
ஞானம் பயில்கின்ற ஒரு மாணவனை இத்தகைய மெய்த்தொண்டர் குழாத்திலேதான் ஒப்படைக்கிறார்கள் குருமார்கள்! நேருக்கு நேராகத் தாங்கள் உதவி செய்வதோடு, அருவ நிலையிலும் ஞான உதவி அந்த மாணவனுக்கு எய்துகின்ற முறையில் அந்த மெய்த்தொண்டர் குழாத்திலே கூட்டுகிறார்கள் ஞானாசிரியர்கள். இந்த உண்மை சித்தர் உலகத்தில் வழி வழியாக வழங்கி வருகின்ற ஒரு பெரிய இரகசியமாகும். இந்த இரகசியத்தைத்தான் ‘மெய்த்தொண்டர் குழாம்’ என்ற சொற்றொடர் உணர்த்துகின்றது என்பது சித்தர் கருத்தாகும்.
எனவே, விநாயகர் அகவல் என்ற நூலானது, மேலாகப் பார்க்கும்பொழுது ஒரு தோத்திர நூலைப் போன்று காட்சி தரினும், அதன்கண் பயின்று வந்துள்ள சொற்றொடர்களிலே குறட்பாலில் கூறப்பட்டுள்ள சித்தர் ஞானத்தின் உட்பொருள் அனைத்தும் பொதிந்துள்ளது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதே சமயம், ஞானத்தை உபதேச முறையில் அல்லாமல், உணர்ச்சியின் நெகிழ்வோடு குழைத்துச் சொல்கிற கவி அமைப்புக் கொண்டதாக அகவல் அமைந்துள்ளதால், ஞானம் அறிவிலிருந்து உணர்வுக்குள் பாய்ந்து விடுகிறது.
அதோடு கூட, ஞானமோனத்திலிருந்து பிறந்த பேருணர்வின் படைப்பாக இந்த நூல் அமைந்துள்ளதால், அந்தச் சொற்களை ஓதும்பொழுதே அவற்றில் ஓர் மந்திர ஆற்றல் மெய்யூடு புகுந்து செல்லக் காணலாம். ‘நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி’யாக இந்த அகவல் அமைந்திருப்பதால், பாராயணம் செய்யும் பொழுதே அவ்வாறு செய்பவருடைய உடம்பில் மந்திர ஆற்றல் பாய்ந்து விம்முகிறது. இது காரணமாக, அருளாற்றல் என்ற ஆன்மசக்தி நாள்தோறும் வளர்ந்து, படிப்படியாகப் பரிபக்குவம் ஏற்படுகிறது.
வழிபடும் அடியார்களுக்கு நாளடைவில் இந்த ஆற்றல் மேலும் மேலும் வளர்ந்து, அவர்களுடைய நீலமேனியும் ஒளியுடம்பும் வளர்கின்றன; உயர்கின்றன. பரம்பொருளின் பேரான்ம அனுபவம் தலைப்படுகிறது. இந்த அனுபவம் விநாயகர் அகவலுக்கே உரிய ஒரு சிறப்புப் பயனாகும்.
ஆம்; அவ்வையின் குறளைக் கற்றுணரும் மாணவன், சித்தர் ஞானத்தின் வகைதொகைகளைத் தெரிந்து பயிலத் தொடங்குகிறான். அகவலை ஓதுகின்ற பாராயணத்திலே அவன் தான் பெற்ற அறிவுக்கு உரிய அனுபவத்தைத் துய்க்கத் தொடங்குகிறான். முந்தையது கல்வியாக அமைகிறது; பிந்தையது அதன் பயனாக அமைகிறது. ஆகையினால்தான், அவ்வையின் குறளுக்கு எத்தனை சிறப்பை யோகிகள் தருகிறார்களோ, அத்தனை சிறப்பையும் அவ்வையின் அகவலுக்கும் தருகிறார்கள்.
இனி, அவ்வையின் அகவலில் உள்ள ஒரு சமுதாயப் பயனை இங்கே குறிப்பிட வேண்டும். அதுதான் பாராயணம் என்ற சாதனத்தில் உள்ள ஒரு பெரிய மாண்பாகும்.
குறளை ஒருவன் கற்கலாம்; பலருக்குக் கற்பிக்கலாம்; அறிவுக்கு ஈடற்ற பயனுண்டு, ஐயமில்லை. ஆனால் அகவலின் செயல் வேறுவிதமானது. ஒருவன் அதைப் பாடலாம்; பலர் அதைக் கேட்கலாம்; அல்லது சேர்ந்து பாடலாம். பயனோ என்றால், அனைவருக்குமே ஒரே சமயத்தில் கிட்டுகிறது.
பாடுபவன், சேர்ந்து பாடுபவன், அல்லது உள்ளம் சேர்ந்து கேட்பவன் ஆகிய அனைவரையும் விநாயகர் அகவலின் மந்திர ஆற்றல் வளைத்து அணைக்கிறது. எல்லாருக்கும் பரவசம் என்ற பெரிய அனுபவத்தை ஒருசேரத் தருகிறது. மந்திரமும் தோத்திரமும் புரிகிற ஆன்ம வினை என்பது இதுவே.
சொல்லும், அதன் பொருளும், அவற்றின் மந்திர ஆற்றலும் உள்ளங்களையெல்லாம் பிணைத்துப் பேரின்பம் என்கிற மின்சார ஆற்றலைப் பாய்ச்சுகிற வல்லமை இதுவேயாகும். அந்த வல்லமை அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டு மின்கலமாகத் திகழ்கிற ஓர் அரிய நூலே அவ்வையார் அருளிய விநாயகர் அகவலாகும்.
தொடரும்……..
இந்த உலகத்தில் ஞானப்பயிற்சி செய்யப்புகும் ஒரு மாணவனை ஞானகுரு ஆட்கொள்ளும்பொழுது,, அவனைத் தம்மோடு கூடவே மெய்த்தொண்டர் குழாத்தையும் சேர்த்து இணைத்துக் கொள்கிறார். இந்த இணைப்புத்தான் அவனுடைய ஆன்ம வளர்ச்சிக்கு இரவும் பகலும் உறுதுணையாக அமைகிறது. குருநாதன் இவ்வாறு மாணவனை இணைக்கின்ற மெய்த்தொண்டர் குழாமானது, ஆதி குருவான பரம குருவிலிருந்து தொடங்கி, நேர் நின்று உணர்த்துகின்ற குருநாதன் வரை வழி வழியாக விளங்கி வருகின்ற ஞானியர் குழுவாகும்.
இந்த குருஞானக் குழுவானது அன்றிலிருந்து இன்று வரை மாறுதலோ, மறைதலோ இல்லாது என்றென்றும் நிலைபெற்று நின்று வருகின்றது. இந்த மெய்த்தொண்டர் குழாமானது ஞானப் பயிற்சியில் ஈடுபடுகிற மாணவனுக்கு அவனுடைய உள்ளுடம்பில் புகுந்து துணை செய்கிற மாபெரும் ஞானத் திருக்கூட்டமாகும்.
உலக நாடுகள் அனைத்திலும் உள்ள மஹான்களும் ஞானிகளும் இந்தத் திருக்கூட்டத்தை ‘UNSEEN MASTERS’ என்றும், ‘INVISIBLE HELPERS’ என்றும் அழைக்கிறார்கள். இந்த மெய்த்தொண்டர் குழாத்து ஞானிகள், உருவத்தில் அல்லது அருவத்தில் நின்று மாணவனுக்கு உதவி செய்கிறார்கள். எல்லா வகையிலும் உறுதுணையாக நிற்கிறார்கள்.
ஞானம் பயில்கின்ற ஒரு மாணவனை இத்தகைய மெய்த்தொண்டர் குழாத்திலேதான் ஒப்படைக்கிறார்கள் குருமார்கள்! நேருக்கு நேராகத் தாங்கள் உதவி செய்வதோடு, அருவ நிலையிலும் ஞான உதவி அந்த மாணவனுக்கு எய்துகின்ற முறையில் அந்த மெய்த்தொண்டர் குழாத்திலே கூட்டுகிறார்கள் ஞானாசிரியர்கள். இந்த உண்மை சித்தர் உலகத்தில் வழி வழியாக வழங்கி வருகின்ற ஒரு பெரிய இரகசியமாகும். இந்த இரகசியத்தைத்தான் ‘மெய்த்தொண்டர் குழாம்’ என்ற சொற்றொடர் உணர்த்துகின்றது என்பது சித்தர் கருத்தாகும்.
எனவே, விநாயகர் அகவல் என்ற நூலானது, மேலாகப் பார்க்கும்பொழுது ஒரு தோத்திர நூலைப் போன்று காட்சி தரினும், அதன்கண் பயின்று வந்துள்ள சொற்றொடர்களிலே குறட்பாலில் கூறப்பட்டுள்ள சித்தர் ஞானத்தின் உட்பொருள் அனைத்தும் பொதிந்துள்ளது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதே சமயம், ஞானத்தை உபதேச முறையில் அல்லாமல், உணர்ச்சியின் நெகிழ்வோடு குழைத்துச் சொல்கிற கவி அமைப்புக் கொண்டதாக அகவல் அமைந்துள்ளதால், ஞானம் அறிவிலிருந்து உணர்வுக்குள் பாய்ந்து விடுகிறது.
அதோடு கூட, ஞானமோனத்திலிருந்து பிறந்த பேருணர்வின் படைப்பாக இந்த நூல் அமைந்துள்ளதால், அந்தச் சொற்களை ஓதும்பொழுதே அவற்றில் ஓர் மந்திர ஆற்றல் மெய்யூடு புகுந்து செல்லக் காணலாம். ‘நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி’யாக இந்த அகவல் அமைந்திருப்பதால், பாராயணம் செய்யும் பொழுதே அவ்வாறு செய்பவருடைய உடம்பில் மந்திர ஆற்றல் பாய்ந்து விம்முகிறது. இது காரணமாக, அருளாற்றல் என்ற ஆன்மசக்தி நாள்தோறும் வளர்ந்து, படிப்படியாகப் பரிபக்குவம் ஏற்படுகிறது.
வழிபடும் அடியார்களுக்கு நாளடைவில் இந்த ஆற்றல் மேலும் மேலும் வளர்ந்து, அவர்களுடைய நீலமேனியும் ஒளியுடம்பும் வளர்கின்றன; உயர்கின்றன. பரம்பொருளின் பேரான்ம அனுபவம் தலைப்படுகிறது. இந்த அனுபவம் விநாயகர் அகவலுக்கே உரிய ஒரு சிறப்புப் பயனாகும்.
ஆம்; அவ்வையின் குறளைக் கற்றுணரும் மாணவன், சித்தர் ஞானத்தின் வகைதொகைகளைத் தெரிந்து பயிலத் தொடங்குகிறான். அகவலை ஓதுகின்ற பாராயணத்திலே அவன் தான் பெற்ற அறிவுக்கு உரிய அனுபவத்தைத் துய்க்கத் தொடங்குகிறான். முந்தையது கல்வியாக அமைகிறது; பிந்தையது அதன் பயனாக அமைகிறது. ஆகையினால்தான், அவ்வையின் குறளுக்கு எத்தனை சிறப்பை யோகிகள் தருகிறார்களோ, அத்தனை சிறப்பையும் அவ்வையின் அகவலுக்கும் தருகிறார்கள்.
இனி, அவ்வையின் அகவலில் உள்ள ஒரு சமுதாயப் பயனை இங்கே குறிப்பிட வேண்டும். அதுதான் பாராயணம் என்ற சாதனத்தில் உள்ள ஒரு பெரிய மாண்பாகும்.
குறளை ஒருவன் கற்கலாம்; பலருக்குக் கற்பிக்கலாம்; அறிவுக்கு ஈடற்ற பயனுண்டு, ஐயமில்லை. ஆனால் அகவலின் செயல் வேறுவிதமானது. ஒருவன் அதைப் பாடலாம்; பலர் அதைக் கேட்கலாம்; அல்லது சேர்ந்து பாடலாம். பயனோ என்றால், அனைவருக்குமே ஒரே சமயத்தில் கிட்டுகிறது.
பாடுபவன், சேர்ந்து பாடுபவன், அல்லது உள்ளம் சேர்ந்து கேட்பவன் ஆகிய அனைவரையும் விநாயகர் அகவலின் மந்திர ஆற்றல் வளைத்து அணைக்கிறது. எல்லாருக்கும் பரவசம் என்ற பெரிய அனுபவத்தை ஒருசேரத் தருகிறது. மந்திரமும் தோத்திரமும் புரிகிற ஆன்ம வினை என்பது இதுவே.
சொல்லும், அதன் பொருளும், அவற்றின் மந்திர ஆற்றலும் உள்ளங்களையெல்லாம் பிணைத்துப் பேரின்பம் என்கிற மின்சார ஆற்றலைப் பாய்ச்சுகிற வல்லமை இதுவேயாகும். அந்த வல்லமை அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டு மின்கலமாகத் திகழ்கிற ஓர் அரிய நூலே அவ்வையார் அருளிய விநாயகர் அகவலாகும்.
தொடரும்……..