|
Post by pannvalan on Feb 17, 2013 21:18:07 GMT 5.5
என்று அழைத்தாலும் வருவார்
காஞ்சி மாநகரில் கருணை நிலவாகப் பாரை வலம்வந்த ஒருவன் வாஞ்சை மொழியோடு வயது பாராமல் அன்பைப் பொழிகின்ற தலைவன் பூஞ்சை உடல்கொண்டு பக்தி பலசெய்து புவியை ஆள்கின்ற முனிவன் தீஞ்சுவை சேர்ந்தபல தத்துவம் நிலைநாட்டப் பூமியில் பிறப்பெடுத்த இறைவன் 1
கண்ணில் நீர்பெருகக் காலில் வீழ்ந்தவரும் நல்ல விடைகண்டு தெளிவார் நண்பன் இவனென்றும் நாதன் இவனென்றும் அன்னை வடிவென்றும் மொழிவார் மண்ணில் ஓர்தெய்வம் விண்ணில் ஓர்தெய்வம் அனைத்துமே அவனாகக் காண்பார் உண்மை வாழ்கின்ற உருவம் இதுவென்று உணர்ந்தபின் உலகெங்கும் சொல்வார் 2
வந்த பிணியினையும் வாரா இடர்தனையும் வள்ளல் அருட்பார்வை போக்கும் நொந்த உள்ளங்கள் பட்ட துயர்யாவும் சிந்தும் சிறுநகையே தீர்க்கும் முந்தும் பகைநடுங்க அண்ணல் திருவுள்ளம் சூழும் அரணாகிக் காக்கும் பந்தம் பாசமெனும் மாயக் கயிரறுத்து மோட்சநிலை கொண்டுபோய்ச் சேர்க்கும் 3
எந்த வீட்டினிலும் எந்த நாட்டினிலும் பெரியவா விழிநம்மைத் தொடரும் எந்தக் கோலத்திலும் தன்னை நினைப்பார்முன் பெரியவா தரிசனமும் நிகழும் எந்த நாளெனினும் எந்த வேளையிலும் பெரியவா முகதீபம் ஒளிரும் எந்தப் பிறப்பினிலும் என்று அழைத்தாலும் பெரியவா நம்முன்னே வருவார் 4
எந்த மதத்தோரும் எந்த மொழியோரும் பெரியவா பார்வையில் சமமே எந்த நிறத்தார்க்கும் எந்த வகுப்பார்க்கும் பெரியவா தருவாரே நலமே அந்த சங்கரரும் ஆதி சங்கரரும் இந்த சங்கரரும் ஒன்றே எந்த நிலையிலுமே அவரை மறவாமல் அவர்புகழ் பாடுவோம் நன்றே 5
|
|
|
Post by Kanchi Periva on Feb 17, 2013 21:33:12 GMT 5.5
Excellent, thanks for sharing..
|
|
|
Post by Sumi on Feb 18, 2013 8:31:42 GMT 5.5
பிரமாதம்! எத்தனை முறை படித்தாலும் சலிப்பதில்லை. அவ்வளவு அருமையான பாடல்.
The last two stanzas are so apt. Many thanks for sharing.
|
|
|
Post by kramans on Feb 19, 2013 10:42:33 GMT 5.5
நல்ல பாடல் !! அர்த்தம உள்ளது !!
|
|