|
Post by madambakkamshanks on Feb 7, 2013 6:59:41 GMT 5.5
(நாதர் முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே )
காஞ்சியில் அருள்புரியும் மாமுனியே - உந்தன் காலடி பணிந்தோம் காப்பீரே காஞ்சி மாநகரமது உள்ளவரையில் -உந்தன் காமகோடி பீடம் அது அருள் சுரக்கும்
நெற்றியின் வெண்ணீரை கண்டதுமே - அது வெற்றியை தந்திடுமே வாழ்வினிலே பற்றிட உந்தன் பொற்பாதம் அது பெற்றுத் தந்திடுமே நற்கதியே
அபயத் திருகரத்தினை கண்டதுமே - வாழ்வில்
ஜெயம் வந்து சேர்ந்திடுமே ஜகத் குருவே சகாயம் நீர் புரிந்திடுவீர் சற்குருவே - என் அபயக் குரல் கேட்டு அருள் புரிவீர்
பழி பாவச் செயல்கள் நான் பல புரிந்தேன் - உன் விழி பார்வையால் என்னை வழி நடத்து சுழி போட்டு உன் பெயரை சொல்லி மகிழ்ந்தேன் - என் வழி மாற்றி வழி காட்டு உன் வேல் விழியால்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி சங்கர - தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர். 05.02.2013
|
|
|
Post by Sumi on Feb 7, 2013 8:54:26 GMT 5.5
என்னவென்று சொல்ல !
ஒரு விலை மதிப்பற்ற பொருளை என் மகன் தொலைத்துவிட்டான். இன்று காலை தான் தெரிந்தது. வீடெங்கும், வீட்டின் வெளியிலும் பல மணி நேரம் தேடினோம், கிடைக்கவில்லை.
கதறி அழுதேன் என் தெய்வத்திடத்தில், எப்படியேனும் அதை கண்டுபிடித்து கொடு என்று. அலுவலகத்திற்கு நேரமாகி விட்டதால், கிளம்பி வந்துவிட்டேன்.
சற்று முன்னர் என் மகன் கைபேசியில் அழைத்து சொன்னான் 'அம்மா, கிடைத்துவிட்டது' என்று.
நிம்மதியோடும், நன்றியோடும் பெரியவாளை நினைத்து, என் தினசரி பணியை தொடங்க முற்பட்டபோது, இந்த அருமையான பாடல் என் கண்ணில் பட்டது. இன்று காலை கிட்டதட்ட இதே வரிகளை சொல்லி தான் பிராதித்தேன்!, என்ன அற்புதம்! I feel it is written for me only! Thank you so very much for these beautiful lines.
|
|
|
Post by Kanchi Periva on Feb 7, 2013 8:58:46 GMT 5.5
Excellent composition, thanks for sharing
|
|
|
Post by krsiyer on Feb 7, 2013 15:56:42 GMT 5.5
veery good poem ! thanks for sharing Jaya jaya sankara, hara hara sankara !
|
|