|
Post by Sumi on Jan 19, 2013 9:16:45 GMT 5.5
காஞ்சியில் கோயில் கொண்ட நம் கருணாமூர்த்தி (ராகமாலிகையில் அமைந்த பாடல்) ராகம்: சிம்மேந்திர மத்யமம் (தாளம் ஆதி)காஞ்சியில் தோன்றிய கனகமணி பீடமாம் – காமகோடி அதில் தர்மத்தைக் காக்க வேதத்தை வளர்க்க தவக்கோலம் கொண்டு தரணியில் அவதரித்தார் (காஞ்சியில்)ராகம்: ஹம்ஸா நந்தி காமாட்சி தாயாரின் அருளை நாம் பெற்றிடவே கருணை மழை பொழிந்து தரிசனம் தந்திடுவார் என்ன பிறவி என்றே மனம் நோகும் நேரத்தில் பேரொளியாய் தோன்றிடும் சிவசக்தி ஸ்வரூபம். (காஞ்சியில்)ராகம்: சிந்து பைரவிமுக்திக்கு வழி சொல்லும் முக்காலம் உணர்ந்தவராம் கண்பெற்ற பயனாகக் கண்டோம் கண் கண்ட தெய்வத்தை பிணி தீர்க்கும் அருமருந்தாய் நாம் பெற்ற பெரும் பேறாய் மோனத்தவம் செய்யும் தூயமாமணி தரும் திவ்ய தரிசனம் தெவிட்டாத பேரின்பம். (காஞ்சியில்)ராகம்: காபி
முன்னாளில் நாம் செய்த புண்ணியமே புண்ணியம் அஞ்ஞான இருளில் சிக்கி மெய்ஞானம் மறந்த நம்மை அருள்வாக்கு கூறி நல்வழிப் படுத்த நடமாடும் தெய்வமாய் நானிலத்தில் வந்துதித்தார். (காஞ்சியில்)Source: Maha Periyavaal Darisana Anubhavangal - Part 4 Special thanks to our Forum Member Shri Sankara Narayanan for typing this for us from the hard copy of the book.
|
|
|
Post by balasubramani1956 on Jan 23, 2013 17:36:14 GMT 5.5
jaya jaya sankar hara har sankara very lovable song
|
|