|
Post by Kanchi Periva on Jan 18, 2013 8:14:05 GMT 5.5
Here is a wonderful poem on Periva, contributed by our respected member Sri S Ravisankar, K K Nagar, Chennai.
காஞ்சி மாமுனி ஓர் கருணை வாரிதி !
ஆனை முகத்தானை அன்போடு கும்பிட்டு | அவனியில் அடியெடுத்து வைத்த பாலனிவன் || இவ்வுலகில் வந்துதித்த,, அவதார புருஷனிவன் ||
குருவின்றி ,குருவே தெய்வமென வாழ்ந்த | மாசு மருவற்ற நடமாடும் தெய்வம் இவன் ||
தானெனும் அகந்தையை தனியொருவனாய் தகர்த்தெறிந்து | தரணியே இவர்தன் தாள் வணங்கும் தவமுனிவரானார் ||
உலகையெலாம் உய்விக்க உத்தம வார்த்தைகளை | பாமரனும், பகுத்தறிவாளனும், பாடமாய் கற்க, || பயமின்றி பயிற்றுவித்த பரமசிவனவன் ||
செல்வமெல்லாம் கற்களாய் காலடியில் இடர | கட்டிய கோவணமும் ,கையில் ஒரு தண்டமுமே | தன் சொத்து என்று அவனியில் வலம் வந்தவனிவன் || தரணியிலே நூறாண்டு வாழ்ந்து, தன்னலமில்லா தவமிருந்து | தான் குறித்த நாளிலே,இப்பூவுலகில் உயிர் நீத்த தெய்வமிவன் ||
முக்கோடி தேவர்கள் புடை சூழ , விண்மீன்களும் மலர் தூவ | மண்ணுக்குள் ,மண்ணாய் மறைந்த மனிதகுல மாணிக்கமிவன்||
விண்ணுலகம் சென்றாலும், விட்டுச்சென்ற ,பாதச்சுவடுகளின் வழி நடக்க, | கோடானு கோடி பக்தர்களில் பாமரனாய் நிற்கும் | இந்த கடைக்கோடி பக்தனுக்கும் அருட் பார்வை அருள வேண்டுமையா ||
|
|
|
Post by Sumi on Jan 18, 2013 8:35:55 GMT 5.5
அற்புதம்!
We are blessed to read such wonderful poems on our Mahaswami by so many members from our Forum.
|
|
|
Post by nyogeshwaran on Jan 18, 2013 10:51:41 GMT 5.5
Excellent!. Very apt.
|
|
|
Post by adiyenjr on Jan 19, 2013 2:06:47 GMT 5.5
கவிதை எழுத தெரிந்தவர்கள் எல்லோரும் காஞ்சி பெரியவா பேரிலா எழுதறா!!
ஆனாலும் இப்படிப்பட்ட செல்வத்தை தேடி பிடித்து எங்களுக்கு பரிசாக
தந்த உங்களுக்கு நமஸ்காரங்கள்.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
|
|
|
Post by krsiyer on Jan 19, 2013 13:28:51 GMT 5.5
good poem, thanks for sharing. Jaya jaya Sankara, Hara hara Sankara !
|
|