Post by radha on Jan 17, 2013 1:16:17 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
» கலைமகள் செய்தி
பொங்கல் பண்டிகை
உள்ளத்தை அழகாக வை
உலகம் அழகாகத் தெரியும்
இது தினமும் நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டிய வரிகள். நமது உள்ளத்தை அழகாக வைத்துக் கொள்ள எத்தனையோ வழிகள் இருந்தபோதும், நாம் பின்பற்ற வேண்டிய எளியவழி இறைவழிபாடு மட்டுமே. இறையைத் துதிக்க முன்னோர்கள் கண்டறிந்த வழி பண்டிகை. பண்டிகையை விழா என்றும் கூறலாம். பொதுவாகப் பண்டிகை என்றால் மகிழ்ச்சி என்று அர்த்தம் கொள்ளலாம். அந்த நாளில் உறவினர்களும், நண்பர்களும் கூடிக் கொண்டாடுகøயில் எழும் மனமகிழ்வுக்கு ஈடு இணை வேறு ஏது? பழங்காலத்திலிருந்து பண்டிகைகள் கொண்டாடப்படும் நோக்கமே கூடிக் களித்தல், அதேசமயம் நமது உள்ளம், இல்லம் இரண்டுமே (அகம், புறம்) தூய்மையடைவதால் ஆரோக்கியமான சூழல் உருவாகின்றது. மனதில் தெளிவு பிறக்கின்றது. தெளிவினால் மகிழ்ச்சி கிடைக்கின்றது. மகிழ்ச்சியினால் தன்னம்பிக்கை வளர்கிறது. தன்னம்பிக்கையை மூலதனமாக்கிப் பல செயல்களைச் செய்கிறோம். செய்யும் காரியங்கள் வெற்றியில் முடிகின்றன. வெற்றி பாராட்டுகளைத் தருகின்றது. மேலும் பல நற்காரியங்களையும், சாதனைகளையும் புரிய நம்மையும் அறியாமலேயே தூண்டப்படுகிறோம்.
எல்லாவிதப் பண்டிகைகளிலும் பெண்களின் பங்குதான் அதிகமாக இருக்கும். ஈடுபாடம் அவர்களுக்குத்தான் இருக்கும். பெண்கள் வீட்டின் நடமாடும் தெய்வங்கள். விளக்காக இருந்து ஒளிதருபவர்கள். தன் குடும்பத்தார் நலமாக இருக்க பூசைகளும், விரதங்களும் தவறாமல் செய்பவர்கள் பெண்களே! ஒவ்வொரு பண்டிகையையும் எவ்வாறு செய்கிறோம் என்பது பற்றி காணலாம்.
பொங்கல்பண்டிகை:
தை மாதம் முதல் தேதியில் கொண்டாடப்பட்டாலும் மார்கழி மாதத்திலிருந்து நாம் இதற்கான பணிகளைத் துவங்கிவிடுகிறோம். மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து வாசல் தெளித்து, பெரிய பெரிய விதவிதமான கோலங்கள் இட்டு, சாணிப் பிள்ளையார் பிடித்து அதன்மேல் பூசணிப் பூ வைத்து அலங்கரிப்பர்.
மாதத்தின் கடைசிப் பத்து நாட்களும் “நிலாச்சோறு’ உண்ணும் வழக்க இருந்தது. (ஈரோடு மாவட்ட கிராமங்களில் 70, 80களில் நடந்தவை. நாகரீகம் வளர வளர எல்லாமே வழக்கொழிந்து போய்விட்டன) மாலையில் செய்யும் உணவில் (அரிசிச் சாதமே பிரதானம்) முதலில் தனியாகச் சிறுபாத்திரத்தில் எடுத்து வைப்பர். அதை ஊர் நடுவில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குச் சிறுமியர், இளம் பெண்களும் எடுத்துச் செல்வர். கோவில் வாசலில் பிள்ளையார் பிடித்து வைத்து அதைச் சுற்றிலும் உணவுப் பாத்திரங்களை வைத்துக் கும்மியடித்துப் பாட்டுப்பாடுவர். பிறகு பிள்ளையாரை வணங்கி, ஒன்றாக அமர்ந்து உண்டு, அதன்பின் விளையாடிவிட்டு வீடு திரும்புவார்கள். (கணினியோ, கல்விச்சுமையோ இல்லாத காலம் அது)
ஆண்களும் தாங்களாகவே பாட்டுப்பாடி ஒயிலாட்டம் நடத்துவர். அந்தப் பத்து நாட்களில் மூன்று நாள் இடைவெளிகளில் களிமன்னால் அரை அடிக்கும் சற்றுக் குறைவான உயரத்தில் சதுரமாகச் செய்வர். அதன் ஒருபுறத்தில் மாடம்போல் செய்து மண்விளக்கு தீபம் ஏற்றுவர். நாற்புறங்களில் மலர்களையும், மொட்டுகளையும் செருகி அலங்கரிப்பர். (முக்கியமாக வாதநாராயண மரப்பூ) அதன் மேற்பகுதியில் நான்கு மூலைகளில் முட்குச்சிகளை நட்டு, அதில் சுற்றிலும் பூக்களைக் குத்தி வைப்பர். இதற்கு “உக்கு’ என்று பெயர். இதை ஒரு தாம்பாளத்தில் வைத்த பூஜை செய்து, இளம்பெண்களின் தலையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று ஊர் எல்லை இருபுறத்தில் இரண்டும், பொதுக்கிணற்று மேட்டில் ஒன்றும் வைப்பார்கள். ஊருக்குள் தீய சக்திகள் வராமல் இருக்கவேண்டி ஐதீகமான ஏற்பாடு அது.
போகிப்பண்டிகை:
வீட்டினை வெள்ளையடித்து, தூய்மைப்படுத்தி வைக்கும்போது தேவையற்ற, உபயோகமற்ற, பழைய பொருட்களைத் தனியாக ஒதுக்கி வைத்துவிடுவவ்கள். மார்கழி மாதத்தின் கடைசிநாளில் கொண்டாடப்படுவது “போகி’; அன்று காலையில் வேப்ப இலை, ஆவாரம்பூ, பூலைப்பூ மூன்றும் சேர்த்து வீட்டின் கூரைகளில் வைப்பர். இதற்கு “காப்புக் கட்டுதல்’ என்று பெயர். தீயசக்திகள் வீட்டினுள் நுழையாமலிருக்க இதுபோல் செய்வர். அதாவது “காப்புகட்டு’ கிருமிநாசினியாக இருந்து நம்மைக் காக்கும். அன்று மாலை தேவையற்ற பழங்குப்பைகளைத் தீயிலிட்டு எரிப்பர். (மனத்தில் உள்ள பகைமை, சினம், பொறாமை போன்றவற்றை எரித்து உள்ளத்தூய்மை செய்து புதிய எண்ணங்களோடு செயல்படுதல் என்பதே உண்மையான போகி.)
சூரியப் பொங்கல்:
தை மாதம் முதல் நாளில் தைப்பாவையை வரவேற்று, சீரும், சிறப்புமாக இல்லம் செழிக்க வைக்கப்படும் பொங்கல் ஆகும். காலையில் நீராடி, புதுப்பானையில் திருநீறு, மஞ்சள், குங்குமம் இட்டு, இலையுடன் கூடிய மஞ்சள், இஞ்சிக் கொத்து கட்டி, மெழுகி, கோலமிட்டு புதிதாய்க் கூட்டப்பட்ட அடுப்பில் கிழக்கு முகமாக ஏற்ற வேண்டும். பச்சரிசி களைந்த நீருடன், பால் சேர்த்து, நுரைத்துப்பொங்கி வருகையில் உலக உயிரினத்திற்கெல்லாம் ஆதார சக்தியாக விளங்கும் சூரியனை வணங்கி அரிசியை இடுவர். சுற்றியிருப்பவர் “பொங்கலோ, பொங்கல்’ என்று மகிழ்ச்சியுடன் ஒலியெழுப்புவர். பொங்கல் பொங்குவது போல் செல்வமும், மகிழ்ச்சியும் வருடம் முழுவதும் பெருகவேண்டி, தோகையுடன் கூடிய புதிய கரும்பு, தேங்காய், வாழை வைத்துச் சூரியனுக்கு பூஜை செய்து வணங்குவர்.
மாட்டுப்பொங்கல்:
அடுத்த நாள் மாட்டுப்பொங்கல். உலகிற்கு உணவு தரும் உழவுக்கும், உழவனுக்கும் உதவிடும் நண்பனாம் மாடுகளுக்கு நன்றி சொல்வது இந்நாளில்தான். கிராமங்களில் “பட்டிப்பொங்கல்’ என்று கூறுவர்.
விவசாயம் செய்யும் வயலையே சுற்றிவர கம்பு நட்டு சுத்தம் செய்து பொங்கல் வைப்பர். ஆண்கள் மாடு, கன்றுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, புதுக்கயிறு, கழுத்துமணி மற்றும் பூமாலைகளில் அலங்கரிப்பார்கள். பெண்கள் அந்த வயலின் ஒருபுறமாக பெரிய பானைகளை வைத்து பால் பொங்கல் (வெண்பொங்கல்) சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை வைப்பர்.
புதிதாய் விளைந்த மஞ்சள், கரும்பு, வாழை ஆகியவற்றை வைத்து பூஜை செய்வர். வயலில் மற்றொருபுறம் களிமண்ணால் சதுரமாக, பாத்திபோல் கட்டி, அதனுள் பாலும், நீரும் கலந்து நிறைத்து வைப்பர். அதில் நிறைய சில்லரைக் காசுகளை இட்டு வைப்பர். (அந்த நாணயங்கள் அங்கு வேலைசெய்யும் மக்களுக்குக் கொடுப்பார்) அந்தப் பாத்தியைச் சுற்றிலும் தேங்காய், பழம், கரும்பு, மஞ்சள், இஞ்சி மற்றும் பூக்களாலும் அலங்காரம் செய்வார்கள். பொங்கல் படைத்து பூசை செய்து மாடுகளுக்கு தீபாராதனை காட்டுவர். அப்போது
வாய் கழுவு பட்டியாரே வாய்கழுவு
ஆசனம் பட்டியாரே ஆசனம்
சோறுண்ணு பட்டியாரே சோறுண்ணு
கைகழுவு பட்டியாரே கைகழுவு
என்று பாட்டுச் சொல்லி ஒவ்வொரு மாடுகளுக்கும் பொங்கலை ஊட்டுவர். பால் தேக்கி வைத்த பாத்தியின் ஊடாக மாடுகளை நடக்க விடுவர். அன்று வயலில் வேலை செய்யும் குடும்பங்களுக்கு புத்தாடை, உணவு அனைத்தும் வழங்கி அவர்களையும் சிறப்பிப்பர். விருந்தில் பூசணி, அவரை கட்டாயம் உண்டு.
காணும் பொங்கல்:
மூன்றாம் நாளன்று காணும் பொங்கல். மார்கழி மாதம் வைக்கப்பட்ட சாணிப்பிள்ளையார்கள், முதல்நாள் வழிபாட்டில் பயன்படுத்திய பூக்கள் அனைத்தையும் விநாயகர் கோவிலில் வைத்து பாட்டுப்பாடி, கும்மியடித்து அனைத்தையும் எடுத்துக் கொண்டு மேளம் முழங்க ஆற்றங்கரைக்குச் செல்வர், பட்சணம் தயார் செய்து எடுத்துச் செல்வார்கள். கொண்டு சென்ற, பிள்ளையார் பூக்கள் முதலியவற்றை ஆற்றில் விட்டபிறகு அனைவரும் உணவுண்டு, அளவளாவி, மகிழ்ந்து இல்லம் திரும்புவர்.
பொங்கல் தினங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு, சிறுவர்க்கும், பெண்களுக்குமான பலவித விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். காலத்தின் கட்டாயத்தில் வேலைக்காகவும், கல்விக்காகவும் நகரம் நோக்கி மக்கள் இடம்பெயர்ந்து செல்வதால் பழைய வழக்கங்கள் (முக்கியமாகப் பெண்கள் கும்மி) மாறிக்கொண்டே வருதல் சற்றே வருத்தம் கொள்ளக்கூடிய செய்தி.
இறுதியாகப் பொங்கல் செய்முறையைச் சற்றே பார்ப்போம்.
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
» கலைமகள் செய்தி
பொங்கல் பண்டிகை
உள்ளத்தை அழகாக வை
உலகம் அழகாகத் தெரியும்
இது தினமும் நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டிய வரிகள். நமது உள்ளத்தை அழகாக வைத்துக் கொள்ள எத்தனையோ வழிகள் இருந்தபோதும், நாம் பின்பற்ற வேண்டிய எளியவழி இறைவழிபாடு மட்டுமே. இறையைத் துதிக்க முன்னோர்கள் கண்டறிந்த வழி பண்டிகை. பண்டிகையை விழா என்றும் கூறலாம். பொதுவாகப் பண்டிகை என்றால் மகிழ்ச்சி என்று அர்த்தம் கொள்ளலாம். அந்த நாளில் உறவினர்களும், நண்பர்களும் கூடிக் கொண்டாடுகøயில் எழும் மனமகிழ்வுக்கு ஈடு இணை வேறு ஏது? பழங்காலத்திலிருந்து பண்டிகைகள் கொண்டாடப்படும் நோக்கமே கூடிக் களித்தல், அதேசமயம் நமது உள்ளம், இல்லம் இரண்டுமே (அகம், புறம்) தூய்மையடைவதால் ஆரோக்கியமான சூழல் உருவாகின்றது. மனதில் தெளிவு பிறக்கின்றது. தெளிவினால் மகிழ்ச்சி கிடைக்கின்றது. மகிழ்ச்சியினால் தன்னம்பிக்கை வளர்கிறது. தன்னம்பிக்கையை மூலதனமாக்கிப் பல செயல்களைச் செய்கிறோம். செய்யும் காரியங்கள் வெற்றியில் முடிகின்றன. வெற்றி பாராட்டுகளைத் தருகின்றது. மேலும் பல நற்காரியங்களையும், சாதனைகளையும் புரிய நம்மையும் அறியாமலேயே தூண்டப்படுகிறோம்.
எல்லாவிதப் பண்டிகைகளிலும் பெண்களின் பங்குதான் அதிகமாக இருக்கும். ஈடுபாடம் அவர்களுக்குத்தான் இருக்கும். பெண்கள் வீட்டின் நடமாடும் தெய்வங்கள். விளக்காக இருந்து ஒளிதருபவர்கள். தன் குடும்பத்தார் நலமாக இருக்க பூசைகளும், விரதங்களும் தவறாமல் செய்பவர்கள் பெண்களே! ஒவ்வொரு பண்டிகையையும் எவ்வாறு செய்கிறோம் என்பது பற்றி காணலாம்.
பொங்கல்பண்டிகை:
தை மாதம் முதல் தேதியில் கொண்டாடப்பட்டாலும் மார்கழி மாதத்திலிருந்து நாம் இதற்கான பணிகளைத் துவங்கிவிடுகிறோம். மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து வாசல் தெளித்து, பெரிய பெரிய விதவிதமான கோலங்கள் இட்டு, சாணிப் பிள்ளையார் பிடித்து அதன்மேல் பூசணிப் பூ வைத்து அலங்கரிப்பர்.
மாதத்தின் கடைசிப் பத்து நாட்களும் “நிலாச்சோறு’ உண்ணும் வழக்க இருந்தது. (ஈரோடு மாவட்ட கிராமங்களில் 70, 80களில் நடந்தவை. நாகரீகம் வளர வளர எல்லாமே வழக்கொழிந்து போய்விட்டன) மாலையில் செய்யும் உணவில் (அரிசிச் சாதமே பிரதானம்) முதலில் தனியாகச் சிறுபாத்திரத்தில் எடுத்து வைப்பர். அதை ஊர் நடுவில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குச் சிறுமியர், இளம் பெண்களும் எடுத்துச் செல்வர். கோவில் வாசலில் பிள்ளையார் பிடித்து வைத்து அதைச் சுற்றிலும் உணவுப் பாத்திரங்களை வைத்துக் கும்மியடித்துப் பாட்டுப்பாடுவர். பிறகு பிள்ளையாரை வணங்கி, ஒன்றாக அமர்ந்து உண்டு, அதன்பின் விளையாடிவிட்டு வீடு திரும்புவார்கள். (கணினியோ, கல்விச்சுமையோ இல்லாத காலம் அது)
ஆண்களும் தாங்களாகவே பாட்டுப்பாடி ஒயிலாட்டம் நடத்துவர். அந்தப் பத்து நாட்களில் மூன்று நாள் இடைவெளிகளில் களிமன்னால் அரை அடிக்கும் சற்றுக் குறைவான உயரத்தில் சதுரமாகச் செய்வர். அதன் ஒருபுறத்தில் மாடம்போல் செய்து மண்விளக்கு தீபம் ஏற்றுவர். நாற்புறங்களில் மலர்களையும், மொட்டுகளையும் செருகி அலங்கரிப்பர். (முக்கியமாக வாதநாராயண மரப்பூ) அதன் மேற்பகுதியில் நான்கு மூலைகளில் முட்குச்சிகளை நட்டு, அதில் சுற்றிலும் பூக்களைக் குத்தி வைப்பர். இதற்கு “உக்கு’ என்று பெயர். இதை ஒரு தாம்பாளத்தில் வைத்த பூஜை செய்து, இளம்பெண்களின் தலையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று ஊர் எல்லை இருபுறத்தில் இரண்டும், பொதுக்கிணற்று மேட்டில் ஒன்றும் வைப்பார்கள். ஊருக்குள் தீய சக்திகள் வராமல் இருக்கவேண்டி ஐதீகமான ஏற்பாடு அது.
போகிப்பண்டிகை:
வீட்டினை வெள்ளையடித்து, தூய்மைப்படுத்தி வைக்கும்போது தேவையற்ற, உபயோகமற்ற, பழைய பொருட்களைத் தனியாக ஒதுக்கி வைத்துவிடுவவ்கள். மார்கழி மாதத்தின் கடைசிநாளில் கொண்டாடப்படுவது “போகி’; அன்று காலையில் வேப்ப இலை, ஆவாரம்பூ, பூலைப்பூ மூன்றும் சேர்த்து வீட்டின் கூரைகளில் வைப்பர். இதற்கு “காப்புக் கட்டுதல்’ என்று பெயர். தீயசக்திகள் வீட்டினுள் நுழையாமலிருக்க இதுபோல் செய்வர். அதாவது “காப்புகட்டு’ கிருமிநாசினியாக இருந்து நம்மைக் காக்கும். அன்று மாலை தேவையற்ற பழங்குப்பைகளைத் தீயிலிட்டு எரிப்பர். (மனத்தில் உள்ள பகைமை, சினம், பொறாமை போன்றவற்றை எரித்து உள்ளத்தூய்மை செய்து புதிய எண்ணங்களோடு செயல்படுதல் என்பதே உண்மையான போகி.)
சூரியப் பொங்கல்:
தை மாதம் முதல் நாளில் தைப்பாவையை வரவேற்று, சீரும், சிறப்புமாக இல்லம் செழிக்க வைக்கப்படும் பொங்கல் ஆகும். காலையில் நீராடி, புதுப்பானையில் திருநீறு, மஞ்சள், குங்குமம் இட்டு, இலையுடன் கூடிய மஞ்சள், இஞ்சிக் கொத்து கட்டி, மெழுகி, கோலமிட்டு புதிதாய்க் கூட்டப்பட்ட அடுப்பில் கிழக்கு முகமாக ஏற்ற வேண்டும். பச்சரிசி களைந்த நீருடன், பால் சேர்த்து, நுரைத்துப்பொங்கி வருகையில் உலக உயிரினத்திற்கெல்லாம் ஆதார சக்தியாக விளங்கும் சூரியனை வணங்கி அரிசியை இடுவர். சுற்றியிருப்பவர் “பொங்கலோ, பொங்கல்’ என்று மகிழ்ச்சியுடன் ஒலியெழுப்புவர். பொங்கல் பொங்குவது போல் செல்வமும், மகிழ்ச்சியும் வருடம் முழுவதும் பெருகவேண்டி, தோகையுடன் கூடிய புதிய கரும்பு, தேங்காய், வாழை வைத்துச் சூரியனுக்கு பூஜை செய்து வணங்குவர்.
மாட்டுப்பொங்கல்:
அடுத்த நாள் மாட்டுப்பொங்கல். உலகிற்கு உணவு தரும் உழவுக்கும், உழவனுக்கும் உதவிடும் நண்பனாம் மாடுகளுக்கு நன்றி சொல்வது இந்நாளில்தான். கிராமங்களில் “பட்டிப்பொங்கல்’ என்று கூறுவர்.
விவசாயம் செய்யும் வயலையே சுற்றிவர கம்பு நட்டு சுத்தம் செய்து பொங்கல் வைப்பர். ஆண்கள் மாடு, கன்றுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, புதுக்கயிறு, கழுத்துமணி மற்றும் பூமாலைகளில் அலங்கரிப்பார்கள். பெண்கள் அந்த வயலின் ஒருபுறமாக பெரிய பானைகளை வைத்து பால் பொங்கல் (வெண்பொங்கல்) சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை வைப்பர்.
புதிதாய் விளைந்த மஞ்சள், கரும்பு, வாழை ஆகியவற்றை வைத்து பூஜை செய்வர். வயலில் மற்றொருபுறம் களிமண்ணால் சதுரமாக, பாத்திபோல் கட்டி, அதனுள் பாலும், நீரும் கலந்து நிறைத்து வைப்பர். அதில் நிறைய சில்லரைக் காசுகளை இட்டு வைப்பர். (அந்த நாணயங்கள் அங்கு வேலைசெய்யும் மக்களுக்குக் கொடுப்பார்) அந்தப் பாத்தியைச் சுற்றிலும் தேங்காய், பழம், கரும்பு, மஞ்சள், இஞ்சி மற்றும் பூக்களாலும் அலங்காரம் செய்வார்கள். பொங்கல் படைத்து பூசை செய்து மாடுகளுக்கு தீபாராதனை காட்டுவர். அப்போது
வாய் கழுவு பட்டியாரே வாய்கழுவு
ஆசனம் பட்டியாரே ஆசனம்
சோறுண்ணு பட்டியாரே சோறுண்ணு
கைகழுவு பட்டியாரே கைகழுவு
என்று பாட்டுச் சொல்லி ஒவ்வொரு மாடுகளுக்கும் பொங்கலை ஊட்டுவர். பால் தேக்கி வைத்த பாத்தியின் ஊடாக மாடுகளை நடக்க விடுவர். அன்று வயலில் வேலை செய்யும் குடும்பங்களுக்கு புத்தாடை, உணவு அனைத்தும் வழங்கி அவர்களையும் சிறப்பிப்பர். விருந்தில் பூசணி, அவரை கட்டாயம் உண்டு.
காணும் பொங்கல்:
மூன்றாம் நாளன்று காணும் பொங்கல். மார்கழி மாதம் வைக்கப்பட்ட சாணிப்பிள்ளையார்கள், முதல்நாள் வழிபாட்டில் பயன்படுத்திய பூக்கள் அனைத்தையும் விநாயகர் கோவிலில் வைத்து பாட்டுப்பாடி, கும்மியடித்து அனைத்தையும் எடுத்துக் கொண்டு மேளம் முழங்க ஆற்றங்கரைக்குச் செல்வர், பட்சணம் தயார் செய்து எடுத்துச் செல்வார்கள். கொண்டு சென்ற, பிள்ளையார் பூக்கள் முதலியவற்றை ஆற்றில் விட்டபிறகு அனைவரும் உணவுண்டு, அளவளாவி, மகிழ்ந்து இல்லம் திரும்புவர்.
பொங்கல் தினங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு, சிறுவர்க்கும், பெண்களுக்குமான பலவித விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். காலத்தின் கட்டாயத்தில் வேலைக்காகவும், கல்விக்காகவும் நகரம் நோக்கி மக்கள் இடம்பெயர்ந்து செல்வதால் பழைய வழக்கங்கள் (முக்கியமாகப் பெண்கள் கும்மி) மாறிக்கொண்டே வருதல் சற்றே வருத்தம் கொள்ளக்கூடிய செய்தி.
இறுதியாகப் பொங்கல் செய்முறையைச் சற்றே பார்ப்போம்.
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam