Post by radha on Dec 16, 2012 1:06:57 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
நலம் கிட்டும் நல்நோன்பு!
மார்கழி - இறை வழிபாட்டுக்குரிய மாதம். மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையும் மார்கழி நோன்பை அடிப்படையாகக் கொண்டதே. திருவண்ணாமலை பெருமானைப் போற்றிப் பாடிய பாடல்களே திருவெம்பாவை. இப்பாடல்களில் தன்னை ஒரு பெண்ணாகப் பாவித்து மார்கழி மாதக் காலையில் பெருமானைக் குறித்துப் பாடினார் மணிவாசகர்.
மார்கழி மாதம் தட்சிணாயனத்தின் இறுதி மாதம். இப்போதில் தில்லைச் சிதம்பரத்தில் கோயில் கொண்ட நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்று கூடுவராம். தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதென்பதால், வைகறையில் பெருமானை தரிசனம் செய்வது சிறப்பு. சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை, திருவெம்பாவை நோன்பினால் பெருமை பெறுகிறது. திருவெம்பாவைக்கு சிறப்பாக விளங்குவது எம்பாவாய் என்னும் சொற்றொடர். இல்லங்களில் வாயில்களைத் தூய்மை செய்து அழகிய வண்ணக் கோலமிட்டு, அதில் பசுஞ்சாணத்தைப் பிடித்து வைத்து அதில் பூவை வைப்பது வழக்கம்.
திருவெம்பாவை விரதம், மார்கழி மாத திருவாதிரைக்கு ஒன்பது நாட்கள் முன் தொடங்கி கடைப்பிடிக்கப்படும் நோன்பு. இந்நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி தூய ஆடை அணிந்து ஆலயம் சென்று சிவகாமி உடனாய நடராஜரைக் கண்டு, வழிபாட்டு பூஜையில் பங்கு பெற வேண்டும். இந்நோன்பின் போது ஒரு நேர உணவாக அவித்த உணவை எடுத்து கொள்ளலாம்.
SRI MANICKAVACHAGAR'S THIRUVAMBHAVAI
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்
பொருள்: வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!
விளக்கம்: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி அதிகாலையில் பவனி வருகிறார். அவரைத் தரிசிக்க பெண்கள் காத்து நிற்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த இந்த நற்பேறு தங்கள் தோழிக்கும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் அவளை எழுப்புகிறார்கள்
Source:- Dinamalar
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
நலம் கிட்டும் நல்நோன்பு!
மார்கழி - இறை வழிபாட்டுக்குரிய மாதம். மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையும் மார்கழி நோன்பை அடிப்படையாகக் கொண்டதே. திருவண்ணாமலை பெருமானைப் போற்றிப் பாடிய பாடல்களே திருவெம்பாவை. இப்பாடல்களில் தன்னை ஒரு பெண்ணாகப் பாவித்து மார்கழி மாதக் காலையில் பெருமானைக் குறித்துப் பாடினார் மணிவாசகர்.
மார்கழி மாதம் தட்சிணாயனத்தின் இறுதி மாதம். இப்போதில் தில்லைச் சிதம்பரத்தில் கோயில் கொண்ட நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்று கூடுவராம். தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதென்பதால், வைகறையில் பெருமானை தரிசனம் செய்வது சிறப்பு. சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை, திருவெம்பாவை நோன்பினால் பெருமை பெறுகிறது. திருவெம்பாவைக்கு சிறப்பாக விளங்குவது எம்பாவாய் என்னும் சொற்றொடர். இல்லங்களில் வாயில்களைத் தூய்மை செய்து அழகிய வண்ணக் கோலமிட்டு, அதில் பசுஞ்சாணத்தைப் பிடித்து வைத்து அதில் பூவை வைப்பது வழக்கம்.
திருவெம்பாவை விரதம், மார்கழி மாத திருவாதிரைக்கு ஒன்பது நாட்கள் முன் தொடங்கி கடைப்பிடிக்கப்படும் நோன்பு. இந்நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி தூய ஆடை அணிந்து ஆலயம் சென்று சிவகாமி உடனாய நடராஜரைக் கண்டு, வழிபாட்டு பூஜையில் பங்கு பெற வேண்டும். இந்நோன்பின் போது ஒரு நேர உணவாக அவித்த உணவை எடுத்து கொள்ளலாம்.
SRI MANICKAVACHAGAR'S THIRUVAMBHAVAI
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்
பொருள்: வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!
விளக்கம்: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி அதிகாலையில் பவனி வருகிறார். அவரைத் தரிசிக்க பெண்கள் காத்து நிற்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த இந்த நற்பேறு தங்கள் தோழிக்கும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் அவளை எழுப்புகிறார்கள்
Source:- Dinamalar
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam