Post by radha on Dec 1, 2012 6:47:02 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
Source:- Dinakaran --Aanmekam section
ஒளி ஏற்றி இருள் விரட்டுவோம்
பக்தித் தமிழ்
தமிழ் பக்தி இலக்கியம் பலவிதமாகத் தீபங்களைக் கொண்டாடியிருக்கிறது. அவற்றில் மிகவும் ருசியான சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்துச் சுவைக்கலாம்.
பொய்கையார், பூதத்தார், பேயார் என்ற மூன்று பேர். திருக்கோயிலூர் என்ற ஊருக்குச் சென்றார்கள். அன்றைக்கு அங்கே பெரிய மழை. முதலில், பொய்கையார் ஓர் ஆசிரமத்துக்குச் சென்றார். ‘‘மழைக்கு ஒதுங்க இடம் உண்டா?’’ என்று கேட்டார். அந்த ஆசிரமத்தில் இருந்தவர்கள் ஒரு சிறு அறையைக் காண்பித்தார்கள். ‘‘இங்கே ஒருவர் படுக்கலாம்’’ என்றார்கள். சிறிது நேரத்தில் அங்கே பூதத்தார் வந்தார். ‘‘நான் உள்ளே வரலாமா?’’ என்று கேட்டார். ‘‘இங்கே இருவர் உட்காரலாம்’’ என்றார், பொய்கையார். உடனே பூதத்தாரும் அந்த அறையினுள் நுழைந்தார். இருவரும் சௌகர்யமாக உட்கார்ந்துகொண்டார்கள்.
சற்று நேரம் கழித்து பேயாரும் அங்கே வந்து சேர்ந்தார். அவரையும் இவர்கள் உள்ளே வருமாறு அழைத்தார்கள்: ‘‘இங்கே மூவர் நிற்கலாம்.’’ உண்மையில் அது ஒரு சின்னஞ்சிறிய அறை. பொய்கையாரும் பூதத்தாரும் நினைத்திருந்தால் அவர்கள் மட்டும் அங்கே வசதியாக உட்கார்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருந்ததால், மூன்றாவது நபரையும் உள்ளே அழைத்தார்கள், பின் அவர்கள் மூவரும் அந்த இடத்துக்குள் எப்படியோ நெருக்கியடித்துக்கொண்டு சமாளித்து நின்றார்கள்.
சிறிது நேரம் கழித்து, அவர்களுக்கு ஓர் ஆச்சர்யமான உணர்வு. தங்களுக்கிடையே நான்காவதாக ஒருவர் தோன்றி நெருக்குவது போல் தோன்றியது. திகைப்புடன் யோசித்தார்கள், ‘நமக்கு நடுவே தோன்றிய அவர் யார்?’ இந்தக் காட்சியை விளக்கும் ஓர் அருமையான பழம் பாடல், வேதாந்த தேசிகர் எழுதியது, ‘தேசிகப் பிரபந்தம்’ என்ற நூலில் இடம்பெற்றது:
பாட்டுக்கு உரிய பழையவர் மூவரைப்
பண்டு ஒருகால்
மாட்டுக்கு அருள் தரும் மாயன் மலிந்து
வருத்துதலால்
நாட்டுக்கு இருள்செக நான்மறை அந்தி
நடை விளங்க
வீட்டுக்கு இடைகழிக்கே வெளிகாட்டும்
அம்மெய்விளக்கே
நம்முடைய உள்ளமாகிய செல்வத்துக்கு அருள் செய்யும் எம்பெருமான், மாயன் திருமால். இனிய பாசுரங்களைப் பாடி அவனை மகிழ்விக்கக்கூடிய முதலாழ்வார்கள் (பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்) மூவருக்கும் அருள் செய்ய நினைத்தான் அவன். அதற்காக, எங்கெங்கோ இருந்த அவர்களை ஒருநாள் திருக்கோயிலூரில் உள்ள ஒரு வீட்டில் ஒன்றாகச் சேர்த்தான் அவன், வேண்டுமென்றே அவர்களை நெருக்கி வருத்தினான். அதனால், உலகத்தின் இருளை நீக்கக்கூடிய ஒரு மெய்விளக்கு ஏற்றிவைக்கப்பட்டது. நான்கு வேதங்களின் உட்பொருள் விளங்கும்படியான ஒரு பிரகாசம் தோன்றியது.
வேதாந்த தேசிகர் சொல்லும் அந்த ‘மெய்விளக்கு, நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்றும் ஆழ்வார்கள் அருளிச்செயல் என்றும் பாராட்டப்படும் பக்தி இலக்கியம். அதனை ஏற்றிவைத்த முன்னோடிகளாகிய இந்த மூவரும் ‘முதலாழ்வார்கள்’ என்று போற்றப்படுகிறார்கள். ஒரு தீபத்தை வைத்து இன்னும் பல தீபங்களை ஏற்றமுடியும். அதுபோல, மெய்விளக்காகிய அந்த நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தில் இடம் பெற்ற இரண்டு ‘தீப’ப் பாடல்கள், மிகப் பிரபலமானவை. முதலில், பொய்கையாழ்வார் பாடியது:
வையம் தகளியா, வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன்
சொல் மாலை
இடர் ஆழி நீங்குகவே
என்று இந்த உலகத்தையே ஒரு பெரிய அகலாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதில் பெரும் பகுதி நிறைந்துள்ள கடல் நீரையே நெய்யாக நினைத்துக் கொள்ளுங்கள், அந்தக் கடலில் தினந்தோறும் உதிக்கின்ற, வெப்பம் மிகுந்த சூரியனையே நெருப்பாக எண்ணிக்கொள்ளுங்கள். அப்பேர்ப்பட்ட ஒரு பெரிய விளக்கைதான் பொய்கையாழ்வார் ஏற்றிவைக்கிறார்! இங்கே விளக்கு என்பது, ‘சொல் மாலை’, அதாவது இனிய தமிழ்ப் பாடல்கள். சிறந்த, ஒளி நிறைந்த சக்கரத்தினைக் கையில் ஏந்திய திருமாலின் திருவடியில் இந்தச் சொல் மாலையைச் சூட்டி வணங்குகிறார் பொய்கையாழ்வார். தன்னுடைய துன்பமாகிய கடல் நீங்குவதற்கு அவன் அருளை வேண்டுகிறார். கிட்டத்தட்ட இதேமாதிரி இன்னொரு ‘மெகா’ விளக்கு, பூதத்தாழ்வார் ஏற்றிவைத்தது:
அன்பே தகளியா, ஆர்வமே நெய்யா
இன்பு உருகு சிந்தை இடுதிரியா, என்பு உருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்
என்னுடைய மனத்தில் உள்ள அன்புதான் அகல், இறைவன் மீது நான் வைத்திருக்கும் ஆர்வம்தான் நெய், அவனை எண்ணி உருகும் எனது சிந்தனைகள்தான் திரி, எலும்புகளெல்லாம் உருகும்படி என்னுடைய ஞானத்தைக் குவித்து அந்த விளக்கை ஏற்றிவைக்கிறேன். சிறந்த தமிழினால் அந்த நாராயணனைப் போற்றுகிறேன். தீபத்தின் மீது ஆண்களைவிடப் பெண்களுக்குதான் ஆர்வம் அதிகம். அவர்கள் செய்யும் விளக்கு பூஜையின்போது பாடப்படுகிற ஓர் இனிய தமிழ்ப் பாடல், இதற்கான காரணத்தைச் சொல்கிறது:
விளக்கே, திருவிளக்கே, வேந்தன்
உடன்பிறப்பே,
ஜோதி மணி விளக்கே, ஸ்ரீதேவி
பொன்மணியே,
அந்தி விளக்கே, அலங்கார நாயகியே,
காந்தி விளக்கே, காமாட்சித் தாயாரே,
பசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத் திரி
போட்டு
குளம்போல எண்ணெய் விட்டுக் கோலமுடன்
ஏற்றிவைத்தேன்,
ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடி விளங்க,
வைத்தேன் திருவிளக்கு எந்தன்
மாளிகையும்தான் விளங்க
ஆழ்வார்களைப்போல இந்தப் பெண்கள் அன்பையோ, ஆர்வத்தையோ, ஞானத்தையோ, சிந்தனையையோ, உலகத்தையோ, சூரியனையோ விளக்காக ஏற்றவில்லை. நிஜமான பசும்பொன் விளக்கில் பஞ்சுத் திரி போட்டு, உண்மையான எண்ணெய் ஊற்றி அழகாக ஏற்றிவைக்கிறார்கள். அந்த விளக்கையே தெய்வமாகப் போற்றுகிறார்கள். அதன்மூலம், அந்த விளக்கு ஏற்றப்படும் வீடு சிறந்து விளங்குகிறது, அந்தக் குடும்பம் முன்னேறுகிறது, ஊரில் எங்கும் நலன் பெருகுகிறது. வெளியே ஏற்றப்படும் விளக்கு இருக்கட்டும், நமக்குள் சில விளக்குகள் இருக்கின்றன, ஒன்று, இரண்டு அல்ல, முழுசாக ஐந்து விளக்குகள்,
தெரியுமா? திருமூலர் தனது திருமந்திரத்தில் விவரிக்கும் அந்த ஐந்து விளக்குகள்:
உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு
ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு!
நம் உள்ளம் ஒரு பெரிய கோயில். ஊனாகிய இந்த உடம்பு ஓர் ஆலயம். வள்ளலான கடவுளைப் புகழ்கின்ற இந்த வாய்தான் அந்தக் கோயிலுக்குக் கோபுர வாசல், தெளிவான உண்மையை உணர்ந்தவர்களுக்கு உள்ளே இருக்கும் ஆன்மா(ஜீவன்)தான் கடவுள் (சிவலிங்கம்). கோயிலுக்குள் இருட்டாக இருக்குமல்லவா? இறைவனை நோக்கிச் செல்லும் வழியில் வெளிச்சம் வேண்டாமா? அதற்காக ஐந்து மணி விளக்குகள் நமக்குள்ளேயே இருக்கின்றன. அவை, நம்மை ஏமாற்றக்கூடிய கள்ளத்தனம் நிறைந்த ஐந்து புலன்கள்!
கள்ளத்தனமா? ஏன் அப்படிச் சொல்கிறார் திருமூலர்?
கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய இந்த ஐம்புலன்களும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மை உலக இன்பங்களின் பக்கம் இழுத்துவிடக்கூடியவை. ஆகவே அவற்றைக் ‘கள்ளப் புலன்கள்’ என்று அழைக்கிறார் திருமூலர். ‘கொஞ்சம் அசந்தாலும் இவை நம்மைக் கவிழ்த்துவிடும். ஆகவே, கள்வனைக் கட்டுப்படுத்தி வைப்பதுபோல் புலன்களை அடக்கப் பழகுங்கள்’ என்று பாடம் சொல்கிறார். விளக்கை வைத்துப் பாடமும் படிக்கலாம், வீதியையும் கொளுத்தலாம். நம்முடைய வசதி எப்படி? திருநாவுக்கரசர் என்று போற்றப்படும் அப்பர் பெருமான் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி. மாற்று மதத்தைச் சார்ந்த சிலருக்கு அவர் மீது பொறாமை. எப்படியாவது நாவுக்கரசரை அழித்துவிடவேண்டும் என்று நினைத்தார்கள்.
அரசனிடம் சென்று பல பொய்ப் புகார்களைச் சொல்லிக் கோள் மூட்டினார்கள். அந்த அரசன், அதையெல்லாம் நம்பிவிட்டான். நாவுக்கரசருக்குப் பலவிதமான தண்டனைகளைக் கொடுத்தான். தெய்வ அருளால் அவர் எல்லாவற்றிலும் தப்பிப் பிழைத்தார். அரசனுக்குக் கடுப்பு. அவர் உயிர் பிழைக்கவே முடியாதபடி ஒரு வேலை செய்தான், ‘இவரைக் கல்லில் கட்டிக் கடலில் தூக்கி வீசுங்கள்!’ என்று கட்டளையிட்டான். அப்படித் தண்ணீரில் வீசப்பட்ட திருநாவுக்கரசர் ‘சொறுதுணை வேதியன்’ என்று தொடங்கி ‘நமச்சிவாய’ மந்திரத்தின் பெருமைகளைப் பாடினார், கல் லேசாகி மிதந்தது, அவரது கட்டுகள் அறுந்தன, உயிரோடு கரை மீண்டார்!
கடலுக்குள் இருந்தபடி பாடிய அந்தப் பாடல் வரிசையில் ஒன்று, விளக்கின் பெருமையைச் சொல்கிறது:
இல் அக விளக்கு அது, இருள் கெடுப்பது,
சொல் அக விளக்கு அது, சோதி உள்ளது,
பல் அக விளக்கு அது, பலரும் காண்பது,
நல் அக விளக்கு அது, நமச்சிவாயவே!
வீட்டுக்குள் உள்ள விளக்கு, அங்கே உள்ள இருளை மட்டும் போக்கும்; ஆனால், ‘நமச்சிவாய’ எனும் ஒளி நிறைந்த மந்திரம் ஒரே நேரத்தில் பல இடங்களில் பலரும் காணும்படி தோன்றும். சொல்லுக்குள்ளே இருந்து நம் அறியாமையை நீக்கித் தெளிவாக்கும். ஆகவே, நல்ல உள்ளங்களுக்கு அதுதான் வழிகாட்டும் விளக்கு! அப்பரின் இன்னொரு பாடல், இறைவனுக்குச் சேவை செய்வதால் கிடைக்கும் பலன்களைப் பட்டியல் போடுகிறது. குறிப்பாக, கோயிலில் விளக்கு ஏற்றிவைப்பதால் என்ன பிரயோஜனம் என்று தெளிவுற விளக்குகிறது:
விளக்கினால் பெற்ற இன்பம் மெழுக்கினால்
பதிற்றி ஆகும்,
துளக்கி நல் மலர் தொடுத்தால் தூய விண்
ஏறல் ஆகும்,
விளக்கு இட்டார் பேறு சொல்லின்
மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும்,
அளப்பு இல, கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம்
அருளும் ஆறே!
இங்கே முதலில் வரும் ‘விளக்கு’ வினைச்சொல். அதாவது, கோயிலைப் பெருக்கித் தூய்மைப்படுத்துதல். அதைச் செய்கிறவர்களுக்கு மிகுந்த இன்பம் கிடைக்கும். அதே கோயிலைத் தண்ணீர் போட்டு மெழுகினால், அதைப்போல் பத்து மடங்கு இன்பம் கிடைக்கும். நல்ல மலர்களைப் பறித்துத் தொடுத்து மாலையாக்கி இறைவனுக்குக் கொடுத்தால், வீடுபேறு கிடைக்கும். அடுத்து வரும் ‘விளக்கு’ பெயர்ச்சொல், அதாவது, கோயிலில் தீபங்களை ஏற்றிவைத்தவர்களுக்கு மெய்ஞ்ஞானமே வரமாகக் கிடைக்கும். நிறைவாக, இறைவன் புகழைப் பாடல்களாகப் பாடுகிறவர்களுக்கு அவன் அருள் செய்யும் விதத்துக்கு எல்லையே கிடையாது. யாராலும் கணக்கிட முடியாதபடி அள்ளி அள்ளித் தருவான் அவன். ஆக, பக்தித் தமிழால் அவன் புகழைப் பாடியபடி ஒரு விளக்கை ஏற்றி வையுங்கள், ஞானமும் செல்வமும், வீரமும் சகல வளங்களும் உங்கள் வாசலை வந்தடையும்!
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
Source:- Dinakaran --Aanmekam section
ஒளி ஏற்றி இருள் விரட்டுவோம்
பக்தித் தமிழ்
தமிழ் பக்தி இலக்கியம் பலவிதமாகத் தீபங்களைக் கொண்டாடியிருக்கிறது. அவற்றில் மிகவும் ருசியான சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்துச் சுவைக்கலாம்.
பொய்கையார், பூதத்தார், பேயார் என்ற மூன்று பேர். திருக்கோயிலூர் என்ற ஊருக்குச் சென்றார்கள். அன்றைக்கு அங்கே பெரிய மழை. முதலில், பொய்கையார் ஓர் ஆசிரமத்துக்குச் சென்றார். ‘‘மழைக்கு ஒதுங்க இடம் உண்டா?’’ என்று கேட்டார். அந்த ஆசிரமத்தில் இருந்தவர்கள் ஒரு சிறு அறையைக் காண்பித்தார்கள். ‘‘இங்கே ஒருவர் படுக்கலாம்’’ என்றார்கள். சிறிது நேரத்தில் அங்கே பூதத்தார் வந்தார். ‘‘நான் உள்ளே வரலாமா?’’ என்று கேட்டார். ‘‘இங்கே இருவர் உட்காரலாம்’’ என்றார், பொய்கையார். உடனே பூதத்தாரும் அந்த அறையினுள் நுழைந்தார். இருவரும் சௌகர்யமாக உட்கார்ந்துகொண்டார்கள்.
சற்று நேரம் கழித்து பேயாரும் அங்கே வந்து சேர்ந்தார். அவரையும் இவர்கள் உள்ளே வருமாறு அழைத்தார்கள்: ‘‘இங்கே மூவர் நிற்கலாம்.’’ உண்மையில் அது ஒரு சின்னஞ்சிறிய அறை. பொய்கையாரும் பூதத்தாரும் நினைத்திருந்தால் அவர்கள் மட்டும் அங்கே வசதியாக உட்கார்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருந்ததால், மூன்றாவது நபரையும் உள்ளே அழைத்தார்கள், பின் அவர்கள் மூவரும் அந்த இடத்துக்குள் எப்படியோ நெருக்கியடித்துக்கொண்டு சமாளித்து நின்றார்கள்.
சிறிது நேரம் கழித்து, அவர்களுக்கு ஓர் ஆச்சர்யமான உணர்வு. தங்களுக்கிடையே நான்காவதாக ஒருவர் தோன்றி நெருக்குவது போல் தோன்றியது. திகைப்புடன் யோசித்தார்கள், ‘நமக்கு நடுவே தோன்றிய அவர் யார்?’ இந்தக் காட்சியை விளக்கும் ஓர் அருமையான பழம் பாடல், வேதாந்த தேசிகர் எழுதியது, ‘தேசிகப் பிரபந்தம்’ என்ற நூலில் இடம்பெற்றது:
பாட்டுக்கு உரிய பழையவர் மூவரைப்
பண்டு ஒருகால்
மாட்டுக்கு அருள் தரும் மாயன் மலிந்து
வருத்துதலால்
நாட்டுக்கு இருள்செக நான்மறை அந்தி
நடை விளங்க
வீட்டுக்கு இடைகழிக்கே வெளிகாட்டும்
அம்மெய்விளக்கே
நம்முடைய உள்ளமாகிய செல்வத்துக்கு அருள் செய்யும் எம்பெருமான், மாயன் திருமால். இனிய பாசுரங்களைப் பாடி அவனை மகிழ்விக்கக்கூடிய முதலாழ்வார்கள் (பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்) மூவருக்கும் அருள் செய்ய நினைத்தான் அவன். அதற்காக, எங்கெங்கோ இருந்த அவர்களை ஒருநாள் திருக்கோயிலூரில் உள்ள ஒரு வீட்டில் ஒன்றாகச் சேர்த்தான் அவன், வேண்டுமென்றே அவர்களை நெருக்கி வருத்தினான். அதனால், உலகத்தின் இருளை நீக்கக்கூடிய ஒரு மெய்விளக்கு ஏற்றிவைக்கப்பட்டது. நான்கு வேதங்களின் உட்பொருள் விளங்கும்படியான ஒரு பிரகாசம் தோன்றியது.
வேதாந்த தேசிகர் சொல்லும் அந்த ‘மெய்விளக்கு, நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்றும் ஆழ்வார்கள் அருளிச்செயல் என்றும் பாராட்டப்படும் பக்தி இலக்கியம். அதனை ஏற்றிவைத்த முன்னோடிகளாகிய இந்த மூவரும் ‘முதலாழ்வார்கள்’ என்று போற்றப்படுகிறார்கள். ஒரு தீபத்தை வைத்து இன்னும் பல தீபங்களை ஏற்றமுடியும். அதுபோல, மெய்விளக்காகிய அந்த நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தில் இடம் பெற்ற இரண்டு ‘தீப’ப் பாடல்கள், மிகப் பிரபலமானவை. முதலில், பொய்கையாழ்வார் பாடியது:
வையம் தகளியா, வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன்
சொல் மாலை
இடர் ஆழி நீங்குகவே
என்று இந்த உலகத்தையே ஒரு பெரிய அகலாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதில் பெரும் பகுதி நிறைந்துள்ள கடல் நீரையே நெய்யாக நினைத்துக் கொள்ளுங்கள், அந்தக் கடலில் தினந்தோறும் உதிக்கின்ற, வெப்பம் மிகுந்த சூரியனையே நெருப்பாக எண்ணிக்கொள்ளுங்கள். அப்பேர்ப்பட்ட ஒரு பெரிய விளக்கைதான் பொய்கையாழ்வார் ஏற்றிவைக்கிறார்! இங்கே விளக்கு என்பது, ‘சொல் மாலை’, அதாவது இனிய தமிழ்ப் பாடல்கள். சிறந்த, ஒளி நிறைந்த சக்கரத்தினைக் கையில் ஏந்திய திருமாலின் திருவடியில் இந்தச் சொல் மாலையைச் சூட்டி வணங்குகிறார் பொய்கையாழ்வார். தன்னுடைய துன்பமாகிய கடல் நீங்குவதற்கு அவன் அருளை வேண்டுகிறார். கிட்டத்தட்ட இதேமாதிரி இன்னொரு ‘மெகா’ விளக்கு, பூதத்தாழ்வார் ஏற்றிவைத்தது:
அன்பே தகளியா, ஆர்வமே நெய்யா
இன்பு உருகு சிந்தை இடுதிரியா, என்பு உருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்
என்னுடைய மனத்தில் உள்ள அன்புதான் அகல், இறைவன் மீது நான் வைத்திருக்கும் ஆர்வம்தான் நெய், அவனை எண்ணி உருகும் எனது சிந்தனைகள்தான் திரி, எலும்புகளெல்லாம் உருகும்படி என்னுடைய ஞானத்தைக் குவித்து அந்த விளக்கை ஏற்றிவைக்கிறேன். சிறந்த தமிழினால் அந்த நாராயணனைப் போற்றுகிறேன். தீபத்தின் மீது ஆண்களைவிடப் பெண்களுக்குதான் ஆர்வம் அதிகம். அவர்கள் செய்யும் விளக்கு பூஜையின்போது பாடப்படுகிற ஓர் இனிய தமிழ்ப் பாடல், இதற்கான காரணத்தைச் சொல்கிறது:
விளக்கே, திருவிளக்கே, வேந்தன்
உடன்பிறப்பே,
ஜோதி மணி விளக்கே, ஸ்ரீதேவி
பொன்மணியே,
அந்தி விளக்கே, அலங்கார நாயகியே,
காந்தி விளக்கே, காமாட்சித் தாயாரே,
பசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத் திரி
போட்டு
குளம்போல எண்ணெய் விட்டுக் கோலமுடன்
ஏற்றிவைத்தேன்,
ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடி விளங்க,
வைத்தேன் திருவிளக்கு எந்தன்
மாளிகையும்தான் விளங்க
ஆழ்வார்களைப்போல இந்தப் பெண்கள் அன்பையோ, ஆர்வத்தையோ, ஞானத்தையோ, சிந்தனையையோ, உலகத்தையோ, சூரியனையோ விளக்காக ஏற்றவில்லை. நிஜமான பசும்பொன் விளக்கில் பஞ்சுத் திரி போட்டு, உண்மையான எண்ணெய் ஊற்றி அழகாக ஏற்றிவைக்கிறார்கள். அந்த விளக்கையே தெய்வமாகப் போற்றுகிறார்கள். அதன்மூலம், அந்த விளக்கு ஏற்றப்படும் வீடு சிறந்து விளங்குகிறது, அந்தக் குடும்பம் முன்னேறுகிறது, ஊரில் எங்கும் நலன் பெருகுகிறது. வெளியே ஏற்றப்படும் விளக்கு இருக்கட்டும், நமக்குள் சில விளக்குகள் இருக்கின்றன, ஒன்று, இரண்டு அல்ல, முழுசாக ஐந்து விளக்குகள்,
தெரியுமா? திருமூலர் தனது திருமந்திரத்தில் விவரிக்கும் அந்த ஐந்து விளக்குகள்:
உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு
ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு!
நம் உள்ளம் ஒரு பெரிய கோயில். ஊனாகிய இந்த உடம்பு ஓர் ஆலயம். வள்ளலான கடவுளைப் புகழ்கின்ற இந்த வாய்தான் அந்தக் கோயிலுக்குக் கோபுர வாசல், தெளிவான உண்மையை உணர்ந்தவர்களுக்கு உள்ளே இருக்கும் ஆன்மா(ஜீவன்)தான் கடவுள் (சிவலிங்கம்). கோயிலுக்குள் இருட்டாக இருக்குமல்லவா? இறைவனை நோக்கிச் செல்லும் வழியில் வெளிச்சம் வேண்டாமா? அதற்காக ஐந்து மணி விளக்குகள் நமக்குள்ளேயே இருக்கின்றன. அவை, நம்மை ஏமாற்றக்கூடிய கள்ளத்தனம் நிறைந்த ஐந்து புலன்கள்!
கள்ளத்தனமா? ஏன் அப்படிச் சொல்கிறார் திருமூலர்?
கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய இந்த ஐம்புலன்களும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மை உலக இன்பங்களின் பக்கம் இழுத்துவிடக்கூடியவை. ஆகவே அவற்றைக் ‘கள்ளப் புலன்கள்’ என்று அழைக்கிறார் திருமூலர். ‘கொஞ்சம் அசந்தாலும் இவை நம்மைக் கவிழ்த்துவிடும். ஆகவே, கள்வனைக் கட்டுப்படுத்தி வைப்பதுபோல் புலன்களை அடக்கப் பழகுங்கள்’ என்று பாடம் சொல்கிறார். விளக்கை வைத்துப் பாடமும் படிக்கலாம், வீதியையும் கொளுத்தலாம். நம்முடைய வசதி எப்படி? திருநாவுக்கரசர் என்று போற்றப்படும் அப்பர் பெருமான் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி. மாற்று மதத்தைச் சார்ந்த சிலருக்கு அவர் மீது பொறாமை. எப்படியாவது நாவுக்கரசரை அழித்துவிடவேண்டும் என்று நினைத்தார்கள்.
அரசனிடம் சென்று பல பொய்ப் புகார்களைச் சொல்லிக் கோள் மூட்டினார்கள். அந்த அரசன், அதையெல்லாம் நம்பிவிட்டான். நாவுக்கரசருக்குப் பலவிதமான தண்டனைகளைக் கொடுத்தான். தெய்வ அருளால் அவர் எல்லாவற்றிலும் தப்பிப் பிழைத்தார். அரசனுக்குக் கடுப்பு. அவர் உயிர் பிழைக்கவே முடியாதபடி ஒரு வேலை செய்தான், ‘இவரைக் கல்லில் கட்டிக் கடலில் தூக்கி வீசுங்கள்!’ என்று கட்டளையிட்டான். அப்படித் தண்ணீரில் வீசப்பட்ட திருநாவுக்கரசர் ‘சொறுதுணை வேதியன்’ என்று தொடங்கி ‘நமச்சிவாய’ மந்திரத்தின் பெருமைகளைப் பாடினார், கல் லேசாகி மிதந்தது, அவரது கட்டுகள் அறுந்தன, உயிரோடு கரை மீண்டார்!
கடலுக்குள் இருந்தபடி பாடிய அந்தப் பாடல் வரிசையில் ஒன்று, விளக்கின் பெருமையைச் சொல்கிறது:
இல் அக விளக்கு அது, இருள் கெடுப்பது,
சொல் அக விளக்கு அது, சோதி உள்ளது,
பல் அக விளக்கு அது, பலரும் காண்பது,
நல் அக விளக்கு அது, நமச்சிவாயவே!
வீட்டுக்குள் உள்ள விளக்கு, அங்கே உள்ள இருளை மட்டும் போக்கும்; ஆனால், ‘நமச்சிவாய’ எனும் ஒளி நிறைந்த மந்திரம் ஒரே நேரத்தில் பல இடங்களில் பலரும் காணும்படி தோன்றும். சொல்லுக்குள்ளே இருந்து நம் அறியாமையை நீக்கித் தெளிவாக்கும். ஆகவே, நல்ல உள்ளங்களுக்கு அதுதான் வழிகாட்டும் விளக்கு! அப்பரின் இன்னொரு பாடல், இறைவனுக்குச் சேவை செய்வதால் கிடைக்கும் பலன்களைப் பட்டியல் போடுகிறது. குறிப்பாக, கோயிலில் விளக்கு ஏற்றிவைப்பதால் என்ன பிரயோஜனம் என்று தெளிவுற விளக்குகிறது:
விளக்கினால் பெற்ற இன்பம் மெழுக்கினால்
பதிற்றி ஆகும்,
துளக்கி நல் மலர் தொடுத்தால் தூய விண்
ஏறல் ஆகும்,
விளக்கு இட்டார் பேறு சொல்லின்
மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும்,
அளப்பு இல, கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம்
அருளும் ஆறே!
இங்கே முதலில் வரும் ‘விளக்கு’ வினைச்சொல். அதாவது, கோயிலைப் பெருக்கித் தூய்மைப்படுத்துதல். அதைச் செய்கிறவர்களுக்கு மிகுந்த இன்பம் கிடைக்கும். அதே கோயிலைத் தண்ணீர் போட்டு மெழுகினால், அதைப்போல் பத்து மடங்கு இன்பம் கிடைக்கும். நல்ல மலர்களைப் பறித்துத் தொடுத்து மாலையாக்கி இறைவனுக்குக் கொடுத்தால், வீடுபேறு கிடைக்கும். அடுத்து வரும் ‘விளக்கு’ பெயர்ச்சொல், அதாவது, கோயிலில் தீபங்களை ஏற்றிவைத்தவர்களுக்கு மெய்ஞ்ஞானமே வரமாகக் கிடைக்கும். நிறைவாக, இறைவன் புகழைப் பாடல்களாகப் பாடுகிறவர்களுக்கு அவன் அருள் செய்யும் விதத்துக்கு எல்லையே கிடையாது. யாராலும் கணக்கிட முடியாதபடி அள்ளி அள்ளித் தருவான் அவன். ஆக, பக்தித் தமிழால் அவன் புகழைப் பாடியபடி ஒரு விளக்கை ஏற்றி வையுங்கள், ஞானமும் செல்வமும், வீரமும் சகல வளங்களும் உங்கள் வாசலை வந்தடையும்!
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam