Post by radha on Nov 28, 2012 10:06:07 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
பராசக்தி படிவம்
செந்தில் துறவி சுவாமிகள்Source:- Annai Darisanam Tamil Magazine
பிலாகாசம்: காமாட்சி
ஓடாகிய உடலிலும், உயிர் இறையாகிய சிவத்திலும் கலந்துறையும் உயிரே சக்தி. ஐந்தொழில் புரியும் ஈசனுடைய பரமாத்ம சக்தியாக - அறிவிற்கும் தெளிந்த கல்விக்கும் கலைமகளாகவும், திருவுக்கு திருமகளாகவும், எதிர்ப்பை அழிக்கும் சக்திக்குக் காளியாகவும், அமைதிக்கும், சாந்த நிலைக்கும் மாகேஸ்வரியாகவும், நிறைந்த இன்பத்திற்கு மனோன்மணியாகவும், ஆகாச ஸ்வரூபமாக விளங்குபவள் காமாக்ஷி. பரமேச்வரனுக்குகந்த பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாச ரூபமான ‘சிதாகாசம் - சிதம்பரத்தைப் போல் ஈச்வரிக்குகந்த பஞ்ச பீடங்களில் ஆகாச பீடமாக பிலாகாசத்தில் பிரகாசிக்கும் காஞ்சி காமகோடி காமாக்ஷி மிகச் சிறப்புடையவளாவாள். எண்ணுபவையெல்லாம் தூய்மை நிறைந்த யாவும் எண்ணற்கரிய பல கோடியாகக் குவித்தளிக்கும் கருணைக்கடல் காமகோடி அன்னை இங்கே எழுந்தருளியமையைக் ‘காமராஜ பீடம்’ என்று அழைக்கிறோம்.
பௌத்த மதம் காஞ்சியில் சிறப்புற்றிருந்தபோது, மணிமேகலா தெய்வத்திற்கு அன்று மணிமேகலை எடுப்பித்த கோயிலே இன்று காமகோட்டத்துறை காமாட்சி அம்மையின் திருக்கோவிலாக உருப்பெற்றிருப்பதாகச் சரித்திர வரலாறு கூறுகிறது. பின்னர் இவ்வாலய தெய்வத்தை உக்கிர காளியாகக் கருதி, சாக்தர்கள் வழிபட்டு தங்கள் தலையைப் பலியாக்கும் வழக்கம் தொடர்ந்தது. இப்பழக்கத்தை ஒரு முடிவிற்குக் கொண்டு வரவே ஷண்மத ஸ்தாபனம் செய்தருளிய சங்கர பகவத் பாதர்கள் காஞ்சி நகரை வந்தடைந்தார்கள். ஸ்ரீ சக்கரத்தை அம்பிகையின் எதிரில் பிரதிஷ்டை செய்து இவ்வழக்கத்தை மாற்றினார்கள். ஸௌந்தர்ய லஹரி - லலிதா திரிசதி முதலிய கிரந்தங்களை இயற்றியருளினார்கள். பகவத் பாதர்கள் கயிலாய யாத்திரை தொடங்கியது.
முன்பு பார்வதி தேவி ரிஷிகளின் சாபத்தால் பூலோகம் அடைந்து, பின்பு பரமசிவனைக் குறித்து காசியில் தவமிருந்து, காத்யாயன முனிவர் ஆணைப்படி காஞ்சியில் காமகோடி பீடத்தை அடைந்து தவமியற்றி மாமரத்தின் அடியில் மணலில் லிங்கம் அமைத்துப் பூஜித்து, ஈச்வரனுடன் இரண்டறக் கலந்தாள். இந்த தபஸ் காமாக்ஷியின் எதிரில் அமைந்துள்ளதுதான் பிலமாகிய குகை. இந்தப் பிலாகாசத்தினின்று தான் பண்டாசுரன், பந்தகாசுரன் முதலிய அரக்கர்களை அழிப்பதற்கு ஈச்வரி முற்பட்டாள். ஸ்ரீகாமகோடி காமாக்ஷியின் ஆத்ம சக்தி இந்தப் பிலாகாசத்தில் என்றும் சாந்நியத்துடன் விளங்குகிறது. ஸ்ரீகாமகோட்டத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகாமாக்ஷியின் ஸ்ரீசக்ர ராஜ கிரஹத்திற்கு அன்னத்தை வாகனமாகக் கொண்ட பிராம்மி, கருடனை உடைய நாராயணி, எருதினை உடைய மகேச்வரி, மகிஷனை உடைய காளி, யானையை உடைய இந்திராணி, மயிலையுடைய கௌமாரி, சிங்கத்தையுடைய வாராகி ஆகியோர் காவலாக இருக்கின்றனர்.
ஸ்ரீ காமாக்ஷியின் இடது புறத்தில் வடக்கு நோக்கி அமர்ந்திருப்பவள் தான் ‘அஞ்சன காமாக்ஷி’ என்னும் அரூப லக்ஷ்மி. ஒரு சமயம் தன் கணவரான மகாவிஷ்ணுவைத் தன் அதி ஸௌந்தர்யத்தின் நினைவால் மகாலட்சுமி பரிகாசம் செய்ததால் கோபமுற்ற திருமாலும் மகாலக்ஷ்மியின் ஸௌந்தர்யம் அரூபமாய்ப் போய்விடும்படி சாபமிட்டார். அந்தச் சாப விமோசனத்திற்காகவே காமகோட்டத்தை அடைந்து மகாலட்சுமி பராசக்தியை வேண்டித் தவமிருந்தாள். காமாக்ஷி அன்னையும் பிலத்துவாரத்திலிருந்து வெளி வந்து மகாலட்சுமிக்குக் காட்சி தந்தருளினாள். இன்றும் காமாக்ஷி அம்மன் அர்ச்சனைப் பிரசாதம் அரூப லக்ஷ்மியின் மேல் போடப்பட்டு. அந்தப் பிரசாதத்தைப் பெறுவதே மரபாக இருக்கிறது. இந்த நிர்மால்யப் பிரசாதத்தின் விசேஷத்தால் மகாலக்ஷ்மிக்கு சுயரூபம் சித்திப்பதும், அம்பிகையைத் தரிசித்து வரும் பக்தர்களுக்குத் தரிசன பலன் ஏற்படும் என்பது ஈச்வரியின் ஆணை. தன்னால் சபிக்கப்பட்ட மகாலக்ஷ்மி சாபம் தீர்ந்து சுயரூபம் அடைந்தாளா என்பதைக் கண்டறியக் கள்ள வேடம் பூண்டுவந்த மகாவிஷ்ணு, ஈச்வரியின் அருள் பெற்று கள்வர் பெருமாளாக காயத்ரி மண்டபத்திலேயே அமர்ந்துள்ளார்.
அன்னையின் அன்பில் மனம் உருகிய மகாலட்சுமி,மால் கிடந்த பாற்கடலில் உள்ள சங்குகளைச் சேர்த்து, வளையாக்கி அம்மைக்கு அணிவித்து மகிழ்கிறாள் என, கவிஞர் காஞ்சி ரா.குப்புசாமி அவர்கள், காமாட்சியம்மை பிள்ளைத்தமிழில்,
‘அரி கிடந்து துயிலுஞ் சயன
மாமரவ முள்ள ஆழி
தந்த ஒளி வீசுபல சங்குகளை யுங்கொண்டு
தான் கடைந் துற்ற வளையை
எங்கு முளையாகியெம துள்ள...
என்று பாடியுள்ளார்.
புலவர் ஒருவர் வந்தார். அரசன் முன், அவர் எடுத்த எடுப்பிலே பாடும் பொருளைக் கூறியவுடன் பாடுவார். அரசன் அவரை பின்னத்தையே வைத்துப் பாடுக என்றான். (ஒன்று, முக்கால், அரை, அரைக்கால் இப்படி) உடனே காஞ்சிதான் அவருக்கு ஞாபகம் வந்ததாம். மூன்று கால்களாக கோல் ஊன்றி நடப்பதற்குள் முன்னே நரைத்தலையாக விழுவதற்குள் காலனை கால் கண்டு பயப்படுவதன் முன் விக்கி இருமி, அவதிப்படு முன்னே, ஒரு மாமரத்தின் கீழ் உறை ஏகாம்பரேச்வரனை உள்ளத்தே கொள் என்னும் பொருள்படும்படியும், அதே சமயம் பின்னங்கள் வருவதாக அமைந்த பாட்டை.
முக்காலுக் கேகாமுன், முன்னரையில் வீழாமுன்
அக்காலரைக் கால் கண்டஞ் சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி
ஒரு மாவின் கீழறை என்று ஓது.
என்று பாடினாராம். அறம் வளர்த்த நாயகி கொலு வீற்றிருக்கும் பீடம் காஞ்சி. நகரில் உள்ள மற்ற கோயில் மூர்த்திகள் வீதிவலம் புறப்பட்டால் அன்னையின் கோயிலைச் சுற்றித்தான் வரவேண்டும்.
ஆசைகள் அற்ற இடத்துக்கு வந்தால் காமகோடி அன்னையை உள்ளத்தில் கண்டு களிக்கலாம் என்று உணர்த்தும்படியாகவும், அதேசமயம் உன் அபிலாஷைகள் நிறைவுபெறவும் அன்னையை நாடு என்று பொருள்பட ‘காமகோடி’ அன்னையின் திருப்பெயர் விளங்குகிறது.
பஞ்சலிங்க க்ஷேத்திரங்களில் ப்ருத்வி ஸ்தலமான இப்பதியின் நாயகியாக பொற்சதங்கைகளும், சப்திக்கும் ஒட்டியாணமும் கொண்ட காமாட்சி தேவி பிரகாசிக்கிறாள். அன்னையின் திருநாமத்தில் உள்ள எழுத்துகள் ஆனந்தக் கடலாகத் திகழ்கிறது. ‘இதைத் திரும்பத் திரும்ப உருவப்படுத்துவதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை’ என்கிறார், அன்னையை பல்வேறு வடிவங்களில் கண்டு பேரின்பம் எய்திய காவ்ய கண்ட கணபதி.
“காஞ்சீ ரமண்யா: குருதாம் க்ருஹஸ்தே க்வாணைர்முதம்
காம கிங்கிணீனாம்
காஞ்சீ புவ: புண்யபுரீ யதீந்த்ர த்வா மம்பிகாமநாம
ரவைர் தினோது”
கவியில் சிறந்தவன் எங்கள் காளிதாசன் என்றும் இல்லை தண்டிதான் தலையாவான் என்றும் ஊர்மக்கள் கட்சி கட்டி மோதினர். எங்கும் பேச்சு. வஞ்சகம் இல்லாக் கவிஞர்கள் செவிமடுத்தனர். அதிர்ந்தது அவர்கள் மனம். ‘எம்மை விடத் தண்டியே சிறந்தவர்’ என்றான் காளிதாசன். ‘அல்ல காளிதாசனே ஏற்றமிக்கவர்’ என்றார் தண்டி. கேட்பார் இல்லை. கடைசியில் போட்டி ஒன்றும் முடிவாகியது. வேறு வழியின்றி இருவரும் அதில் கலந்தனர். நாள்கள் நகர்ந்தன. முடிவு தீர்மானமாகவில்லை. கடைசியில் காளியையே நீதி வழங்க நியமித்தனர். வெள்ளியன்று தீர்ப்பு என்றது அசரீரி. அரசர் உட்பட பெருங்கூட்டம் கூடியிருந்தது. இறைவியின் தீர்ப்பாயிற்றே! ஏற்றமான கவி யார் என்ற தீர்ப்பைக் கேட்க, திரளான மக்கள் திரண்டனர்.
குறித்த நேரத்தில் கூறியவாறு அன்னை “கவிர் தண்டி” என்றதுமே பொருமிய காளிதாசன், கூறுபவர் யார் எனவும் ஆராயாது வசைமாரி பொழிய, வாய் திறக்குமுன், ‘மூகோபவ’ என்றனள். கவிமழை சிந்திய காளிதாஸன் ஊமையாயினான்.
“கவியில் சிறந்தவன் தண்டி. நீ சாதாரண கவியல்லன். நானே நீ. இதையறியாது என்னை இகழ நினைத்தாய். அடுத்து வரும் பிறப்பில் என்னைப் போற்ற வாக்கையும் பெரும் புகழையும் அடைவாய்” எனக் கூறினாள் காளி.
தொடர்ந்து பவம் தலைதூக்க இப்படி எத்தனையோ அவதியான செய்திகள். பதியிற் சிறந்தது காஞ்சி . காளி தாஸன் ‘நகரேஷு காஞ்சீ என்றான். கூறினவன் மறப்பானா?’ பிறவியில் மூகனாக வந்தான். முன் விட்ட குறையில் தொடங்கியது தவம். காமாட்சி தேவியை உள்முகமாக ஏற்றி தவசிகள் பலர் வீற்றிருந்தனர். சாதனை புரியும் வித்தக சோதனைத் தீக்குத் தன்னைப் பலியிடாது மூகனும் மெய் மறந்து அன்னையின் பாதமலரில் சிந்தை பொதிந்திருந்தான். தேவி விளையாட்டாக கன்னியுருக் கொண்டு தாம்பூலம் தரித்து மூகன் முன் பிரசம்மமாயினன். வாயைத்திற, தாம்பூலம் துப்புகிறேன்” என்றாள். முன்னைப் புண்ணியம் உந்த வாயைத் திறந்தான். அன்னை கருணையோடு உமிழ்ந்தனள் எச்சிலை. அவ்வளவில் அன்னையின் அருட்சக்தியை மீண்டும் பெற்றான் மூகன். கவிமழை பொழியத் தொடங்கினான். பாதம், புன்சிரிப்பு இப்படி ஒவ்வொன்றையும் நூறு நூறு ஸ்லோகங்கள் ஊமைக் கவி ஐந்நூறு ஸ்லோகங்களில் பாடினான். அது இன்றும் ‘மூக பஞ்சசதி’ என்று போற்றப்படுகிறது.
அன்னையின் தாம்பூலத்தின் பெருமையை சங்கரரும் கூறுகிறார். குமரப் பெருமான், சூரசம்ஹாரம் முடித்து திரும்புகையில் அன்னையின் மாளிகைக்குச் சென்ற சமயம், அன்னை உணவு முடித்து தாம்பூலம் தரித்துக் கொண்டிருந்தாள். வெற்றியுடன் வரும் தன் செல்வக் குழந்தைக்குக் கடித்து மென்ற தாம்பூல எச்சிலைத் தந்தாளாம். அதனால்தான் தந்தைக்கு உபதேசிக்கும் திறனடைந்து ‘ஞான பண்டிதன்’ எனப் புகழ் பெற்றான் விசாகன்.
“ரணே ஜித்வா தைத்யாந்: அபஹ்ருதசிரஸ்த்ரை: கவசிபி
நிவ்ருத்தை : சண்டாம்ச த்ரிபுர ஹர நிர்மால்ய விமுகை:
விசாகேந்த்ரோபேந்த்ரை: சசிவிசத கர்ப்பூர சகலா
விலீயந்தே மாதஸ்தவ வதன தாம்பூல கபலா:”
(ஸௌந்தர்ய லஹரி)
அருணாசலத்து அபீத குசாம்பிகை
“ஞானத் தபோதனரை வாவென்று அழைக்குமலை அண்ணாமலை” என்று புகழ்பரப்பி முகில் உலாவும் வானளாவிய கோபுரத்துடன் நிமிர்ந்து கம்பீரமாக நிற்பது அண்ணாமலைத் தலம்.
விளையாட்டாக இறைவனது கண்களைக் கையினால் மூட சூரிய சந்திரர்களையே கண்களாகக் கொண்ட இறைவனின் அருளொளியின்றி உலகம் யாவும் இருண்டது. அதனால் உலகிற்கு விளைந்த துன்பம் நீங்க, தாயான தற்பரை தரணியில் வந்து காஞ்சியில் இறைவனுக்கு மணலால் திருவுருவமைத்து வழிபட்டு இறைவன் ஊக்குவித்தபடி அண்ணாமலைக்கு வந்து இடப்பாகத்தைப் பெற்று ‘அர்த்தநாரி’ என்ற பெயரை இறைவனுக்கு அளித்தாள். அருகில் பெருகும் அம்மனின் சந்நிதிக்கு வந்து அபீத குசாம்பாளைத் தரிசிக்கும் பக்தனுடைய எல்லா எண்ணங்களும் நிறைவுபெறும் என்கிறார். காவ்யகண்டம் ஞான குருவைத் தேடி அலைந்த கவி காவ்ய கண்ட கணபதி முனிக்கு தவ ச்ரேஷ்டரான ரமண பகவான் குருவாக இத்தலத்தில் கிடைத்தார் என்றால் அபீத குசாம்பிகை அபீஷ்டங்களை நிறைவு செய்பவள் என்பதற்கு வேறு சான்றே தேவையில்லை. அழகிய செப்பு வடிவத்தில் அர்த்தநாரியாக இறைவனும் இறைவியும் அமைந்ததை இத்தலத்தில்தான் காணலாம்.
“ஆலோகதே அபீதகுசாமயி த்வா மாலோல சித்தா
மருணாசலே ய:
நிர்வேதவான் பர்வஸுதாம்சுவக்த்ரே ஸர்வே வசோதஸ்ய
பவந்தி காமா!”
குகை நமசிவாயர், குரு நமசிவாயர், சேஷாத்ரி, ரமணர் முதலிய மகனீயர்கள் எல்லாரும் இத்தலத்தை அடைந்து முக்தி பெற்றனர்.
தேஜோலிங்க ரூபியான அண்ணாமலையான் பெருமையையே கொண்டு சிவக்ஷேத்திரமாக விளங்கும் இது ஒரு சக்தி பீடம் ஆகும் என்பதை நினைத்தாலே தலத்தின் பெருமையும் சிறப்பும் மனத்தைக் குளிர்விக்கிறது. அருணாசலத்தையே வாசஸ்தலமாக்கிக் கொண்ட சேஷாத்ரி ஸ்வாமிகள் மிகச் சிறந்த தேவிதாசர். குரு நமசிவாயர் என்ற தவமுனிவரோ அம்மையின் கரங்களாலேயே அமுதளிக்கப்பட்டவர்.
இச்சக்தி பீட நாயகியின் அருளால் சென்ற இட மெல்லாம் அம்மையை நினைந்து பாடுவார்.
“மின்னும்படி வந்த மேககளத்து ஈசருடன்
மன்னும் திருமுகத்து வாளியே -பொன்னின்
மலையாளே! தாயே! வன்மனத்தே நின்ற
மலையாளே! சோறு கொண்டுவா என்பார்.
அமுதளிப்பாள் அகிலாண்ட நாயகி.
ஆதிசங்கரர் தனது ஸௌந்தர்ய லஹரியில், “தவாபாங்கே லோகே பதிலும்” என்று எதேச்சையாக உனது த்ருஷ்டியில் விழுந்த மனிதன் என்று ஓர் இடத்தில் கூறுகிறார். அப்படியே அபீத குசாம்பாளின் தரிசன மாத்திரத்தில் நற்பயனை அடைகிறான் பக்தன்.
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
பராசக்தி படிவம்
செந்தில் துறவி சுவாமிகள்Source:- Annai Darisanam Tamil Magazine
பிலாகாசம்: காமாட்சி
ஓடாகிய உடலிலும், உயிர் இறையாகிய சிவத்திலும் கலந்துறையும் உயிரே சக்தி. ஐந்தொழில் புரியும் ஈசனுடைய பரமாத்ம சக்தியாக - அறிவிற்கும் தெளிந்த கல்விக்கும் கலைமகளாகவும், திருவுக்கு திருமகளாகவும், எதிர்ப்பை அழிக்கும் சக்திக்குக் காளியாகவும், அமைதிக்கும், சாந்த நிலைக்கும் மாகேஸ்வரியாகவும், நிறைந்த இன்பத்திற்கு மனோன்மணியாகவும், ஆகாச ஸ்வரூபமாக விளங்குபவள் காமாக்ஷி. பரமேச்வரனுக்குகந்த பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாச ரூபமான ‘சிதாகாசம் - சிதம்பரத்தைப் போல் ஈச்வரிக்குகந்த பஞ்ச பீடங்களில் ஆகாச பீடமாக பிலாகாசத்தில் பிரகாசிக்கும் காஞ்சி காமகோடி காமாக்ஷி மிகச் சிறப்புடையவளாவாள். எண்ணுபவையெல்லாம் தூய்மை நிறைந்த யாவும் எண்ணற்கரிய பல கோடியாகக் குவித்தளிக்கும் கருணைக்கடல் காமகோடி அன்னை இங்கே எழுந்தருளியமையைக் ‘காமராஜ பீடம்’ என்று அழைக்கிறோம்.
பௌத்த மதம் காஞ்சியில் சிறப்புற்றிருந்தபோது, மணிமேகலா தெய்வத்திற்கு அன்று மணிமேகலை எடுப்பித்த கோயிலே இன்று காமகோட்டத்துறை காமாட்சி அம்மையின் திருக்கோவிலாக உருப்பெற்றிருப்பதாகச் சரித்திர வரலாறு கூறுகிறது. பின்னர் இவ்வாலய தெய்வத்தை உக்கிர காளியாகக் கருதி, சாக்தர்கள் வழிபட்டு தங்கள் தலையைப் பலியாக்கும் வழக்கம் தொடர்ந்தது. இப்பழக்கத்தை ஒரு முடிவிற்குக் கொண்டு வரவே ஷண்மத ஸ்தாபனம் செய்தருளிய சங்கர பகவத் பாதர்கள் காஞ்சி நகரை வந்தடைந்தார்கள். ஸ்ரீ சக்கரத்தை அம்பிகையின் எதிரில் பிரதிஷ்டை செய்து இவ்வழக்கத்தை மாற்றினார்கள். ஸௌந்தர்ய லஹரி - லலிதா திரிசதி முதலிய கிரந்தங்களை இயற்றியருளினார்கள். பகவத் பாதர்கள் கயிலாய யாத்திரை தொடங்கியது.
முன்பு பார்வதி தேவி ரிஷிகளின் சாபத்தால் பூலோகம் அடைந்து, பின்பு பரமசிவனைக் குறித்து காசியில் தவமிருந்து, காத்யாயன முனிவர் ஆணைப்படி காஞ்சியில் காமகோடி பீடத்தை அடைந்து தவமியற்றி மாமரத்தின் அடியில் மணலில் லிங்கம் அமைத்துப் பூஜித்து, ஈச்வரனுடன் இரண்டறக் கலந்தாள். இந்த தபஸ் காமாக்ஷியின் எதிரில் அமைந்துள்ளதுதான் பிலமாகிய குகை. இந்தப் பிலாகாசத்தினின்று தான் பண்டாசுரன், பந்தகாசுரன் முதலிய அரக்கர்களை அழிப்பதற்கு ஈச்வரி முற்பட்டாள். ஸ்ரீகாமகோடி காமாக்ஷியின் ஆத்ம சக்தி இந்தப் பிலாகாசத்தில் என்றும் சாந்நியத்துடன் விளங்குகிறது. ஸ்ரீகாமகோட்டத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகாமாக்ஷியின் ஸ்ரீசக்ர ராஜ கிரஹத்திற்கு அன்னத்தை வாகனமாகக் கொண்ட பிராம்மி, கருடனை உடைய நாராயணி, எருதினை உடைய மகேச்வரி, மகிஷனை உடைய காளி, யானையை உடைய இந்திராணி, மயிலையுடைய கௌமாரி, சிங்கத்தையுடைய வாராகி ஆகியோர் காவலாக இருக்கின்றனர்.
ஸ்ரீ காமாக்ஷியின் இடது புறத்தில் வடக்கு நோக்கி அமர்ந்திருப்பவள் தான் ‘அஞ்சன காமாக்ஷி’ என்னும் அரூப லக்ஷ்மி. ஒரு சமயம் தன் கணவரான மகாவிஷ்ணுவைத் தன் அதி ஸௌந்தர்யத்தின் நினைவால் மகாலட்சுமி பரிகாசம் செய்ததால் கோபமுற்ற திருமாலும் மகாலக்ஷ்மியின் ஸௌந்தர்யம் அரூபமாய்ப் போய்விடும்படி சாபமிட்டார். அந்தச் சாப விமோசனத்திற்காகவே காமகோட்டத்தை அடைந்து மகாலட்சுமி பராசக்தியை வேண்டித் தவமிருந்தாள். காமாக்ஷி அன்னையும் பிலத்துவாரத்திலிருந்து வெளி வந்து மகாலட்சுமிக்குக் காட்சி தந்தருளினாள். இன்றும் காமாக்ஷி அம்மன் அர்ச்சனைப் பிரசாதம் அரூப லக்ஷ்மியின் மேல் போடப்பட்டு. அந்தப் பிரசாதத்தைப் பெறுவதே மரபாக இருக்கிறது. இந்த நிர்மால்யப் பிரசாதத்தின் விசேஷத்தால் மகாலக்ஷ்மிக்கு சுயரூபம் சித்திப்பதும், அம்பிகையைத் தரிசித்து வரும் பக்தர்களுக்குத் தரிசன பலன் ஏற்படும் என்பது ஈச்வரியின் ஆணை. தன்னால் சபிக்கப்பட்ட மகாலக்ஷ்மி சாபம் தீர்ந்து சுயரூபம் அடைந்தாளா என்பதைக் கண்டறியக் கள்ள வேடம் பூண்டுவந்த மகாவிஷ்ணு, ஈச்வரியின் அருள் பெற்று கள்வர் பெருமாளாக காயத்ரி மண்டபத்திலேயே அமர்ந்துள்ளார்.
அன்னையின் அன்பில் மனம் உருகிய மகாலட்சுமி,மால் கிடந்த பாற்கடலில் உள்ள சங்குகளைச் சேர்த்து, வளையாக்கி அம்மைக்கு அணிவித்து மகிழ்கிறாள் என, கவிஞர் காஞ்சி ரா.குப்புசாமி அவர்கள், காமாட்சியம்மை பிள்ளைத்தமிழில்,
‘அரி கிடந்து துயிலுஞ் சயன
மாமரவ முள்ள ஆழி
தந்த ஒளி வீசுபல சங்குகளை யுங்கொண்டு
தான் கடைந் துற்ற வளையை
எங்கு முளையாகியெம துள்ள...
என்று பாடியுள்ளார்.
புலவர் ஒருவர் வந்தார். அரசன் முன், அவர் எடுத்த எடுப்பிலே பாடும் பொருளைக் கூறியவுடன் பாடுவார். அரசன் அவரை பின்னத்தையே வைத்துப் பாடுக என்றான். (ஒன்று, முக்கால், அரை, அரைக்கால் இப்படி) உடனே காஞ்சிதான் அவருக்கு ஞாபகம் வந்ததாம். மூன்று கால்களாக கோல் ஊன்றி நடப்பதற்குள் முன்னே நரைத்தலையாக விழுவதற்குள் காலனை கால் கண்டு பயப்படுவதன் முன் விக்கி இருமி, அவதிப்படு முன்னே, ஒரு மாமரத்தின் கீழ் உறை ஏகாம்பரேச்வரனை உள்ளத்தே கொள் என்னும் பொருள்படும்படியும், அதே சமயம் பின்னங்கள் வருவதாக அமைந்த பாட்டை.
முக்காலுக் கேகாமுன், முன்னரையில் வீழாமுன்
அக்காலரைக் கால் கண்டஞ் சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி
ஒரு மாவின் கீழறை என்று ஓது.
என்று பாடினாராம். அறம் வளர்த்த நாயகி கொலு வீற்றிருக்கும் பீடம் காஞ்சி. நகரில் உள்ள மற்ற கோயில் மூர்த்திகள் வீதிவலம் புறப்பட்டால் அன்னையின் கோயிலைச் சுற்றித்தான் வரவேண்டும்.
ஆசைகள் அற்ற இடத்துக்கு வந்தால் காமகோடி அன்னையை உள்ளத்தில் கண்டு களிக்கலாம் என்று உணர்த்தும்படியாகவும், அதேசமயம் உன் அபிலாஷைகள் நிறைவுபெறவும் அன்னையை நாடு என்று பொருள்பட ‘காமகோடி’ அன்னையின் திருப்பெயர் விளங்குகிறது.
பஞ்சலிங்க க்ஷேத்திரங்களில் ப்ருத்வி ஸ்தலமான இப்பதியின் நாயகியாக பொற்சதங்கைகளும், சப்திக்கும் ஒட்டியாணமும் கொண்ட காமாட்சி தேவி பிரகாசிக்கிறாள். அன்னையின் திருநாமத்தில் உள்ள எழுத்துகள் ஆனந்தக் கடலாகத் திகழ்கிறது. ‘இதைத் திரும்பத் திரும்ப உருவப்படுத்துவதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை’ என்கிறார், அன்னையை பல்வேறு வடிவங்களில் கண்டு பேரின்பம் எய்திய காவ்ய கண்ட கணபதி.
“காஞ்சீ ரமண்யா: குருதாம் க்ருஹஸ்தே க்வாணைர்முதம்
காம கிங்கிணீனாம்
காஞ்சீ புவ: புண்யபுரீ யதீந்த்ர த்வா மம்பிகாமநாம
ரவைர் தினோது”
கவியில் சிறந்தவன் எங்கள் காளிதாசன் என்றும் இல்லை தண்டிதான் தலையாவான் என்றும் ஊர்மக்கள் கட்சி கட்டி மோதினர். எங்கும் பேச்சு. வஞ்சகம் இல்லாக் கவிஞர்கள் செவிமடுத்தனர். அதிர்ந்தது அவர்கள் மனம். ‘எம்மை விடத் தண்டியே சிறந்தவர்’ என்றான் காளிதாசன். ‘அல்ல காளிதாசனே ஏற்றமிக்கவர்’ என்றார் தண்டி. கேட்பார் இல்லை. கடைசியில் போட்டி ஒன்றும் முடிவாகியது. வேறு வழியின்றி இருவரும் அதில் கலந்தனர். நாள்கள் நகர்ந்தன. முடிவு தீர்மானமாகவில்லை. கடைசியில் காளியையே நீதி வழங்க நியமித்தனர். வெள்ளியன்று தீர்ப்பு என்றது அசரீரி. அரசர் உட்பட பெருங்கூட்டம் கூடியிருந்தது. இறைவியின் தீர்ப்பாயிற்றே! ஏற்றமான கவி யார் என்ற தீர்ப்பைக் கேட்க, திரளான மக்கள் திரண்டனர்.
குறித்த நேரத்தில் கூறியவாறு அன்னை “கவிர் தண்டி” என்றதுமே பொருமிய காளிதாசன், கூறுபவர் யார் எனவும் ஆராயாது வசைமாரி பொழிய, வாய் திறக்குமுன், ‘மூகோபவ’ என்றனள். கவிமழை சிந்திய காளிதாஸன் ஊமையாயினான்.
“கவியில் சிறந்தவன் தண்டி. நீ சாதாரண கவியல்லன். நானே நீ. இதையறியாது என்னை இகழ நினைத்தாய். அடுத்து வரும் பிறப்பில் என்னைப் போற்ற வாக்கையும் பெரும் புகழையும் அடைவாய்” எனக் கூறினாள் காளி.
தொடர்ந்து பவம் தலைதூக்க இப்படி எத்தனையோ அவதியான செய்திகள். பதியிற் சிறந்தது காஞ்சி . காளி தாஸன் ‘நகரேஷு காஞ்சீ என்றான். கூறினவன் மறப்பானா?’ பிறவியில் மூகனாக வந்தான். முன் விட்ட குறையில் தொடங்கியது தவம். காமாட்சி தேவியை உள்முகமாக ஏற்றி தவசிகள் பலர் வீற்றிருந்தனர். சாதனை புரியும் வித்தக சோதனைத் தீக்குத் தன்னைப் பலியிடாது மூகனும் மெய் மறந்து அன்னையின் பாதமலரில் சிந்தை பொதிந்திருந்தான். தேவி விளையாட்டாக கன்னியுருக் கொண்டு தாம்பூலம் தரித்து மூகன் முன் பிரசம்மமாயினன். வாயைத்திற, தாம்பூலம் துப்புகிறேன்” என்றாள். முன்னைப் புண்ணியம் உந்த வாயைத் திறந்தான். அன்னை கருணையோடு உமிழ்ந்தனள் எச்சிலை. அவ்வளவில் அன்னையின் அருட்சக்தியை மீண்டும் பெற்றான் மூகன். கவிமழை பொழியத் தொடங்கினான். பாதம், புன்சிரிப்பு இப்படி ஒவ்வொன்றையும் நூறு நூறு ஸ்லோகங்கள் ஊமைக் கவி ஐந்நூறு ஸ்லோகங்களில் பாடினான். அது இன்றும் ‘மூக பஞ்சசதி’ என்று போற்றப்படுகிறது.
அன்னையின் தாம்பூலத்தின் பெருமையை சங்கரரும் கூறுகிறார். குமரப் பெருமான், சூரசம்ஹாரம் முடித்து திரும்புகையில் அன்னையின் மாளிகைக்குச் சென்ற சமயம், அன்னை உணவு முடித்து தாம்பூலம் தரித்துக் கொண்டிருந்தாள். வெற்றியுடன் வரும் தன் செல்வக் குழந்தைக்குக் கடித்து மென்ற தாம்பூல எச்சிலைத் தந்தாளாம். அதனால்தான் தந்தைக்கு உபதேசிக்கும் திறனடைந்து ‘ஞான பண்டிதன்’ எனப் புகழ் பெற்றான் விசாகன்.
“ரணே ஜித்வா தைத்யாந்: அபஹ்ருதசிரஸ்த்ரை: கவசிபி
நிவ்ருத்தை : சண்டாம்ச த்ரிபுர ஹர நிர்மால்ய விமுகை:
விசாகேந்த்ரோபேந்த்ரை: சசிவிசத கர்ப்பூர சகலா
விலீயந்தே மாதஸ்தவ வதன தாம்பூல கபலா:”
(ஸௌந்தர்ய லஹரி)
அருணாசலத்து அபீத குசாம்பிகை
“ஞானத் தபோதனரை வாவென்று அழைக்குமலை அண்ணாமலை” என்று புகழ்பரப்பி முகில் உலாவும் வானளாவிய கோபுரத்துடன் நிமிர்ந்து கம்பீரமாக நிற்பது அண்ணாமலைத் தலம்.
விளையாட்டாக இறைவனது கண்களைக் கையினால் மூட சூரிய சந்திரர்களையே கண்களாகக் கொண்ட இறைவனின் அருளொளியின்றி உலகம் யாவும் இருண்டது. அதனால் உலகிற்கு விளைந்த துன்பம் நீங்க, தாயான தற்பரை தரணியில் வந்து காஞ்சியில் இறைவனுக்கு மணலால் திருவுருவமைத்து வழிபட்டு இறைவன் ஊக்குவித்தபடி அண்ணாமலைக்கு வந்து இடப்பாகத்தைப் பெற்று ‘அர்த்தநாரி’ என்ற பெயரை இறைவனுக்கு அளித்தாள். அருகில் பெருகும் அம்மனின் சந்நிதிக்கு வந்து அபீத குசாம்பாளைத் தரிசிக்கும் பக்தனுடைய எல்லா எண்ணங்களும் நிறைவுபெறும் என்கிறார். காவ்யகண்டம் ஞான குருவைத் தேடி அலைந்த கவி காவ்ய கண்ட கணபதி முனிக்கு தவ ச்ரேஷ்டரான ரமண பகவான் குருவாக இத்தலத்தில் கிடைத்தார் என்றால் அபீத குசாம்பிகை அபீஷ்டங்களை நிறைவு செய்பவள் என்பதற்கு வேறு சான்றே தேவையில்லை. அழகிய செப்பு வடிவத்தில் அர்த்தநாரியாக இறைவனும் இறைவியும் அமைந்ததை இத்தலத்தில்தான் காணலாம்.
“ஆலோகதே அபீதகுசாமயி த்வா மாலோல சித்தா
மருணாசலே ய:
நிர்வேதவான் பர்வஸுதாம்சுவக்த்ரே ஸர்வே வசோதஸ்ய
பவந்தி காமா!”
குகை நமசிவாயர், குரு நமசிவாயர், சேஷாத்ரி, ரமணர் முதலிய மகனீயர்கள் எல்லாரும் இத்தலத்தை அடைந்து முக்தி பெற்றனர்.
தேஜோலிங்க ரூபியான அண்ணாமலையான் பெருமையையே கொண்டு சிவக்ஷேத்திரமாக விளங்கும் இது ஒரு சக்தி பீடம் ஆகும் என்பதை நினைத்தாலே தலத்தின் பெருமையும் சிறப்பும் மனத்தைக் குளிர்விக்கிறது. அருணாசலத்தையே வாசஸ்தலமாக்கிக் கொண்ட சேஷாத்ரி ஸ்வாமிகள் மிகச் சிறந்த தேவிதாசர். குரு நமசிவாயர் என்ற தவமுனிவரோ அம்மையின் கரங்களாலேயே அமுதளிக்கப்பட்டவர்.
இச்சக்தி பீட நாயகியின் அருளால் சென்ற இட மெல்லாம் அம்மையை நினைந்து பாடுவார்.
“மின்னும்படி வந்த மேககளத்து ஈசருடன்
மன்னும் திருமுகத்து வாளியே -பொன்னின்
மலையாளே! தாயே! வன்மனத்தே நின்ற
மலையாளே! சோறு கொண்டுவா என்பார்.
அமுதளிப்பாள் அகிலாண்ட நாயகி.
ஆதிசங்கரர் தனது ஸௌந்தர்ய லஹரியில், “தவாபாங்கே லோகே பதிலும்” என்று எதேச்சையாக உனது த்ருஷ்டியில் விழுந்த மனிதன் என்று ஓர் இடத்தில் கூறுகிறார். அப்படியே அபீத குசாம்பாளின் தரிசன மாத்திரத்தில் நற்பயனை அடைகிறான் பக்தன்.
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam