Post by Sumi on Nov 18, 2012 16:40:29 GMT 5.5
Maha Periyavaal Darisana Anubhavangal - Part 5
மூன்று நாட்களாக காத்து கொண்டிருக்கிறார், அவர். பெரியவாளிடம் தனிமையில் ஏதோ சொல்ல வேண்டும்.
பெரியவாள் மௌனம்.
நான்காம் நாள் மௌனத்தை விட்டுவிட்டு பேச தொடங்கினார்கள் பெரியவாள். அதற்காகவே காத்து கொண்டிருந்தவர் ஓடோடி அருகில் வந்தார்.
"பெரியவாகிட்ட தனியா பேசணும். ரெண்டே நிமிஷம்..."
"அதுக்காகத்தான் மூணு நாளா காதிண்டிருந்தியோ?"
பக்தருக்கு ஆச்சரியமாக போய்விட்டது. அது என்ன, அவ்வளவு கணக்காக - முன்று நாள்? ரெண்டு-மூணு நாள் என்று சொல்லியிருகப்படாதோ ?
"குடும்ப விஷயம் .. ரகசியமாக பேசணும் .."
"என்னிடம் ரகசியமெல்லாம் வேண்டாம். இரைந்தே பேசு. மத்தவாளுக்கு தெரிஞ்சதாலே ஒண்ணும் குடி முழுகி போய்விடாது..."
பக்தரின் முன்னோர்கள் செழிப்புடனும் செல்வாக்குடனும் இருந்த காலம் ஒன்றுண்டு. ஆனால், எப்படியோ, தாங்க முடியாத கஷ்டம், பொருள் நெருக்கடி வந்துவிட்டது. தாத்தா காலத்தில் கடன் சுமையை தாங்க முடியாமல் போகவே, விளை நிலம் ஏலத்துக்கு போயிற்று. அப்படியும், கடன் கொடுத்தவர்களுக்கு முழு தொகையையும் செலுத்த முடியவில்லை. வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் பாவம் வந்து சேர்ந்து மனகஷ்டம் இரவு பகலாக துன்புறுத்துகிறது. என்னிடமும் பணமில்லை. குடும்பத்தை நடத்துவதே பெரும்பாடாக இருக்கிறது. தாத்தா காலத்து கடனை எல்லாம் அடைத்து விட்டால்தான் நிம்மதியும் சௌகிரியமும் உண்டாகும் போலிருகிறது.
"பெரியவாள் தான் வழி சொல்லணும்.."
சிறிது நேரம், கண்களை மூடி கொண்டிருந்தார்கள், பெரியவாள்.
"கோடை காலத்திலே, பல ஷேதிரங்களில் உற்சவம் நடக்கும். ரொம்ப ஜனங்கள் வருவா. எல்லாருக்கும் ரொம்ப தாகம் இருக்கும். நீ ஒரு தண்ணீர் பந்தல் போடு. பக்தர்களுக்கெல்லாம் சிவசிவ, ராமராம-ன்னு சொல்லிக்கொண்டே, "கடனை திருப்பி கொடுக்க முடியலே; தண்ணீர் கொடுக்கிறேன்" என்று சத்தமா சொல்லிண்டே - எல்லோருக்கும் தீர்த்தம் கொடு.. உனக்கு நல்ல மனசு...கடன் பட்ட பாவம் போயிடும்..."
விழுந்து விழுந்து சேவித்தார் பக்தர். கடனாளியாக வந்தவர், பயனாளியாக திரும்பி சென்றார்.
மூன்று நாட்களாக காத்து கொண்டிருக்கிறார், அவர். பெரியவாளிடம் தனிமையில் ஏதோ சொல்ல வேண்டும்.
பெரியவாள் மௌனம்.
நான்காம் நாள் மௌனத்தை விட்டுவிட்டு பேச தொடங்கினார்கள் பெரியவாள். அதற்காகவே காத்து கொண்டிருந்தவர் ஓடோடி அருகில் வந்தார்.
"பெரியவாகிட்ட தனியா பேசணும். ரெண்டே நிமிஷம்..."
"அதுக்காகத்தான் மூணு நாளா காதிண்டிருந்தியோ?"
பக்தருக்கு ஆச்சரியமாக போய்விட்டது. அது என்ன, அவ்வளவு கணக்காக - முன்று நாள்? ரெண்டு-மூணு நாள் என்று சொல்லியிருகப்படாதோ ?
"குடும்ப விஷயம் .. ரகசியமாக பேசணும் .."
"என்னிடம் ரகசியமெல்லாம் வேண்டாம். இரைந்தே பேசு. மத்தவாளுக்கு தெரிஞ்சதாலே ஒண்ணும் குடி முழுகி போய்விடாது..."
பக்தரின் முன்னோர்கள் செழிப்புடனும் செல்வாக்குடனும் இருந்த காலம் ஒன்றுண்டு. ஆனால், எப்படியோ, தாங்க முடியாத கஷ்டம், பொருள் நெருக்கடி வந்துவிட்டது. தாத்தா காலத்தில் கடன் சுமையை தாங்க முடியாமல் போகவே, விளை நிலம் ஏலத்துக்கு போயிற்று. அப்படியும், கடன் கொடுத்தவர்களுக்கு முழு தொகையையும் செலுத்த முடியவில்லை. வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் பாவம் வந்து சேர்ந்து மனகஷ்டம் இரவு பகலாக துன்புறுத்துகிறது. என்னிடமும் பணமில்லை. குடும்பத்தை நடத்துவதே பெரும்பாடாக இருக்கிறது. தாத்தா காலத்து கடனை எல்லாம் அடைத்து விட்டால்தான் நிம்மதியும் சௌகிரியமும் உண்டாகும் போலிருகிறது.
"பெரியவாள் தான் வழி சொல்லணும்.."
சிறிது நேரம், கண்களை மூடி கொண்டிருந்தார்கள், பெரியவாள்.
"கோடை காலத்திலே, பல ஷேதிரங்களில் உற்சவம் நடக்கும். ரொம்ப ஜனங்கள் வருவா. எல்லாருக்கும் ரொம்ப தாகம் இருக்கும். நீ ஒரு தண்ணீர் பந்தல் போடு. பக்தர்களுக்கெல்லாம் சிவசிவ, ராமராம-ன்னு சொல்லிக்கொண்டே, "கடனை திருப்பி கொடுக்க முடியலே; தண்ணீர் கொடுக்கிறேன்" என்று சத்தமா சொல்லிண்டே - எல்லோருக்கும் தீர்த்தம் கொடு.. உனக்கு நல்ல மனசு...கடன் பட்ட பாவம் போயிடும்..."
விழுந்து விழுந்து சேவித்தார் பக்தர். கடனாளியாக வந்தவர், பயனாளியாக திரும்பி சென்றார்.