Post by radha on Nov 17, 2012 1:30:15 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
Source:-MANGHAYAR MALAR
காசியில் தீபாவளி
“கங்கை’ என்றாலே நினைவுக்கு வருவது “பனாரஸ்’ என்றும். “வாரணாசி’ என்றும் அழைக்கப்படும் காசி மகா÷க்ஷத்திரம்தான்.
காசிவாழ் இந்துக்கள், தீபாவளியை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள, காசி ஷேத்திரத்தில் பல காலமாக வாழ்ந்து வரும். “வேத பண்டிட்’ ஸ்ரீகேதாரேஸ்வர சாஸ்திரிகளை அணுகினோம்.
“காசியில், தீபாவளி கங்கா ஸ்நானம், மிகவும் முக்கிமானதும், ஸ்ரேஷ்டமானதும் ஆகும்.
நரக “சதுர்த்தி’ என்று கூறப்படும் அன்றைய தினத்துக்கு முதல் நாள், “த்ரையோதசி’. அந்நாள் “தன த்ரையோதசி’ நாள் என்று கொண்டாடப்படுகின்றது.
“தன த்ரயோதசி’ முதல் நாள் மூன்று நாட்களுக்கு தங்க அன்னபூரணி பக்தர்களின் தரிசனத்துக்கு வைக்கப்படும்.
ரிசர்வ் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும் தங்க அன்னபூரணியை பலத்த காவலுடன் ஸ்ரீ அன்னபூரணி கோயிலுக்கு கொண்டு வருவார்கள்.
பலமான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குப் பிறகு, மதியம் ஒன்றரை மணி அளவில் நடை திறக்கப்படும்.
சுமார் மூன்றரை அடி உயரத்தில் கால்களை மடித்து அமர்ந்த திருக்கோலத்தில் ஸ்ரீ தங்க அன்னபூரணி அருள்பாலிக்கிறாள்.
இடக்கரத்தில் கலயத்தையும், வலக்கரத்தில் அகப்பையையும் எந்தி இருக்கும் அம்பாளும், நின்ற திருக்கோலத்தில், பிøக்ஷ கப்பரையை ஏந்தி நிற்கும் பிக்ஷõடனராக ஸ்ரீசிவபெருமானும் (இந்த விக்ரஹம் தங்கம், வெள்ளியினால் ஆனது) பக்தர்களுக்கு அனுக்கிரஹம் செய்கிறார்கள்.
ஸ்ரீ அன்னபூரணியின் இடப் பக்கத்தில் ஸ்ரீஸ்ரீதேவியும், வலப்பக்கத்தில் ஸ்ரீபூதேவியும் காட்சியளிக்கிறார்கள்.
கண்கொள்ளாக் காட்சியாகத் திகளும் இத்தரிசனத்துக்காகக் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். தரிசனத்துக்காக அனுமதிக்கப்படும் மூன்று நாட்களிலும், அம்பாளின் கையினால் தனத்தைப் பெறுவது மிகவும் விசேஷமாகும்.
மேலும், எப்படி தென் இந்தியாவில் “அக்ஷய த்ருதியை’ அன்று பொருள் வாங்குவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்களோ, அதே போல் “தன த்ரயோதசி’ அன்று தங்கம், வெள்ளி, பித்தளை ஆகிய உலோகங்களால் ஆன பொருட்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
“தனத்ரயோதசி’ அன்று முதல், இங்கு உள்ள (காசியில்) காஞ்சி காமகோடி மடத்தில் மூன்று நாட்களுக்கு, வெள்ளியினால் ஆன ஸ்ரீ விசாலாட்சி, ஸ்ரீ காமாட்சி, ஸ்ரீ மீனாட்சி தேவியர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படுவார்கள்.
பிரதமையன்று மூவருக்கும் லட்டு அலங்காரம் செய்யப்படுகின்றது. (இந்த அலங்காரத்தைச் செய்பவர் “வேத பண்டிட்’ “ஸ்ரீ கேதாரேஸ்வர சாஸ்திரிகள்’ என்பது குறிப்பிடத்தக்கது). இந்த தரிசனத்தை “த்ரிதேவ்’ தரிசனம் என்று கூறுவார்கள்.’
“தீபாவளி அன்று காலையில், சிரசில் எண்ணெயை வைத்துக் கொண்ட, சீயக்காய், ஒரு சொம்பு வெந்நீருடன் எல்லோரும் கங்கைக் கரைக்கு வந்து விடுவார்கள்.
சாஸ்திரத்துக்கு வெந்நீரை தலையில் ஊற்றிக் கொண்டு, சீயக்காயையும் தேய்த்துக் கொண்டு விட்டு, ஆனந்தமாக கங்கையில் ஸ்நானம் செய்வார்கள்.
“கங்கா ஸ்நானம் ஆச்சா’ என்று விசாரித்துக் கொண்டே புது வஸ்திரத்தை அணிந்து நேராக கோயிலுக்குச் சென்று விடுவார்கள். ஸ்ரீ அம்பாள் தரிசனம் முடித்த பிறகுதான் மற்ற காரியங்கள் எல்லாம்.
அன்றைய தினம், நாட்டுக் கோட்டை சத்திரத்தில் தங்க விசாலாட்சி, ஸ்வர்ணலிங்கம் தரிசனம் செய்யப்படுகின்றது.
பிரதமையன்று, ஸ்ரீ விஸ்வநாதரின் கோயிலில் லட்டுத் தேர் வைபவம் மிகவும் பிரும்மாண்டமாக இருக்கும்.
மரத்தினால் செய்யப்பட்டிருக்கும் தேரை, லட்டுக்கøக் கொண்டு அலங்காரம் செய்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். அது மட்டுமல்லாது கிலோ கணக்கில் பட்சணங்களும், பழங்களுமாகப் படைக்கப்பட்டிருக்கும். பக்தர்கள் கொண்டு வந்து சேர்பிக்கும் ஆகார வகைகள் பிரமிக்க வைப்பதாக இருக்கும். இதை “அன்னகூட்’ என்று சொல்வார்கள்.
தீபாவளி அன்று அமாவாசை சேர்ந்து வந்தால், அன்றைய தினம் நவதுர்க்கைகளில் ஒரு துர்க்கையாகப் போற்றப்படும் “காலராத்திரி’ அம்பாளின் தரிசனத்தையும் தவற விட மாட்டார்கள்.
அதுமட்டுமல்ல. அமாவாசையன்று இங்கு இருக்கும் “சங்கட் மோக்ஷ ஹனுமான்’ கோயிலில் சிறப்பு வழிபாடுகள் இருக்கும். தென் இந்தியாவில் மார்கழி மாதத்தில் வரும் மூல நட்சத்திரம் அன்று “ஹனுமத் ஜெயந்தி’ கொண்டாடப்படும். ஆனால் இங்கு தீபாவளி அமாவாசை அன்றுதான் “ஹனுமத் ஜெயந்தி’ கொண்டாடப்படுகிறது.’
“தீபாவளி அன்று காலையில் “தன்வந்திரி பவன்’-இல் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வருடத்தில் இந்த ஒரு நாள் மட்டுமே, பொது மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
தீபாவளி அமாவாசைக்குப் பிறகு பதினைந்து நாட்கள் கிழத்து வரும் பௌர்ணமி அன்று “தேவ் தீபாவளி’ என்னும் வைபவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
“தேவ் தீபாவளி’ அன்று வானலோகத்தில் இருந்து தெய்வங்கள் பூலோகத்துக்கு இறங்கு வந்து ஆசிர்வதிப்பதாக நம்பிக்கை. தேவர்கள் கார்த்திகை பௌர்ணமி தினத்தன்று தீபாவளியைக் கொண்டாடுவதாக நம்பப்படுகின்றது.
அதாவது ஸ்ரீமாஹாவிஷ்ணு வானவர், வாமன அவதாரம் முடிந்த பின்பு வைகுண்டத்துக்கு திரும்பிய நாள் என்பதாலும், ஸ்ரீ சிவபெருமான் தேவர்களைக் காக்கும் பொருட்டு “திரிபுரம்’ எரித்து திரிபுராரியான நாள் என்பதாலும், கார்த்திகை பௌர்ணமி தினமானது தெய்வங்களால் கொண்டாடப்படும். தீபாவளி திருநாள் என்று போற்றி வழிபடப்படுகின்றது.
அன்றைய தினம், ஜைனர்களுக்கும், சீக்கியர்களுக்கும் கூட முக்கியமான திருநாளாகும்.’
““தேவ் தீபாவளி’ அன்று காலையில், கங்கையில் ஸ்நானம் செய்துவிட்டு வழிபாடுகளை முடித்துக் கொள்வார்கள்.
மாலையில், கங்கையின் எல்லா படித்துறைகளிலும் தீப வரிசைகளால் (தீபம் + ஆவளி) அலங்காரம் செய்வார்கள். கங்கையிலும் தீபங்களை மிதக்க விடுவார்கள். வேத பண்டிதர்கள் மந்திரங்களை முழங்க, பண்டாக்கள் ஸ்ரீ கங்கை மாதாவிற்கு ஆரத்தி எடுப்பார்கள்.
தேவர்களை வரவேற்க தீபங்களினால் அலங்காரங்கள் செய்வதும், கங்கா மாதாவிற்கு நன்றி நவிலும் பொருட்டு வழிபாடுகள் மேற்கொள்வதையும் பார்க்கும் பொழுது காசிவாசிகளின் அதீத பக்தியை உணர முடிகிறது.
“தேவ் தீபாவளி’யன்று கங்கா மகோற்சவம் வைபவத்தை அனைவரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது கண்டுகளிக்க வேண்டும். பொதுவாக தீபாவளி அன்று தீபதானமும், பாயச தானமும் குடும்பத்துக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்!’
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
Source:-MANGHAYAR MALAR
காசியில் தீபாவளி
“கங்கை’ என்றாலே நினைவுக்கு வருவது “பனாரஸ்’ என்றும். “வாரணாசி’ என்றும் அழைக்கப்படும் காசி மகா÷க்ஷத்திரம்தான்.
காசிவாழ் இந்துக்கள், தீபாவளியை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள, காசி ஷேத்திரத்தில் பல காலமாக வாழ்ந்து வரும். “வேத பண்டிட்’ ஸ்ரீகேதாரேஸ்வர சாஸ்திரிகளை அணுகினோம்.
“காசியில், தீபாவளி கங்கா ஸ்நானம், மிகவும் முக்கிமானதும், ஸ்ரேஷ்டமானதும் ஆகும்.
நரக “சதுர்த்தி’ என்று கூறப்படும் அன்றைய தினத்துக்கு முதல் நாள், “த்ரையோதசி’. அந்நாள் “தன த்ரையோதசி’ நாள் என்று கொண்டாடப்படுகின்றது.
“தன த்ரயோதசி’ முதல் நாள் மூன்று நாட்களுக்கு தங்க அன்னபூரணி பக்தர்களின் தரிசனத்துக்கு வைக்கப்படும்.
ரிசர்வ் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும் தங்க அன்னபூரணியை பலத்த காவலுடன் ஸ்ரீ அன்னபூரணி கோயிலுக்கு கொண்டு வருவார்கள்.
பலமான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குப் பிறகு, மதியம் ஒன்றரை மணி அளவில் நடை திறக்கப்படும்.
சுமார் மூன்றரை அடி உயரத்தில் கால்களை மடித்து அமர்ந்த திருக்கோலத்தில் ஸ்ரீ தங்க அன்னபூரணி அருள்பாலிக்கிறாள்.
இடக்கரத்தில் கலயத்தையும், வலக்கரத்தில் அகப்பையையும் எந்தி இருக்கும் அம்பாளும், நின்ற திருக்கோலத்தில், பிøக்ஷ கப்பரையை ஏந்தி நிற்கும் பிக்ஷõடனராக ஸ்ரீசிவபெருமானும் (இந்த விக்ரஹம் தங்கம், வெள்ளியினால் ஆனது) பக்தர்களுக்கு அனுக்கிரஹம் செய்கிறார்கள்.
ஸ்ரீ அன்னபூரணியின் இடப் பக்கத்தில் ஸ்ரீஸ்ரீதேவியும், வலப்பக்கத்தில் ஸ்ரீபூதேவியும் காட்சியளிக்கிறார்கள்.
கண்கொள்ளாக் காட்சியாகத் திகளும் இத்தரிசனத்துக்காகக் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். தரிசனத்துக்காக அனுமதிக்கப்படும் மூன்று நாட்களிலும், அம்பாளின் கையினால் தனத்தைப் பெறுவது மிகவும் விசேஷமாகும்.
மேலும், எப்படி தென் இந்தியாவில் “அக்ஷய த்ருதியை’ அன்று பொருள் வாங்குவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்களோ, அதே போல் “தன த்ரயோதசி’ அன்று தங்கம், வெள்ளி, பித்தளை ஆகிய உலோகங்களால் ஆன பொருட்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
“தனத்ரயோதசி’ அன்று முதல், இங்கு உள்ள (காசியில்) காஞ்சி காமகோடி மடத்தில் மூன்று நாட்களுக்கு, வெள்ளியினால் ஆன ஸ்ரீ விசாலாட்சி, ஸ்ரீ காமாட்சி, ஸ்ரீ மீனாட்சி தேவியர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படுவார்கள்.
பிரதமையன்று மூவருக்கும் லட்டு அலங்காரம் செய்யப்படுகின்றது. (இந்த அலங்காரத்தைச் செய்பவர் “வேத பண்டிட்’ “ஸ்ரீ கேதாரேஸ்வர சாஸ்திரிகள்’ என்பது குறிப்பிடத்தக்கது). இந்த தரிசனத்தை “த்ரிதேவ்’ தரிசனம் என்று கூறுவார்கள்.’
“தீபாவளி அன்று காலையில், சிரசில் எண்ணெயை வைத்துக் கொண்ட, சீயக்காய், ஒரு சொம்பு வெந்நீருடன் எல்லோரும் கங்கைக் கரைக்கு வந்து விடுவார்கள்.
சாஸ்திரத்துக்கு வெந்நீரை தலையில் ஊற்றிக் கொண்டு, சீயக்காயையும் தேய்த்துக் கொண்டு விட்டு, ஆனந்தமாக கங்கையில் ஸ்நானம் செய்வார்கள்.
“கங்கா ஸ்நானம் ஆச்சா’ என்று விசாரித்துக் கொண்டே புது வஸ்திரத்தை அணிந்து நேராக கோயிலுக்குச் சென்று விடுவார்கள். ஸ்ரீ அம்பாள் தரிசனம் முடித்த பிறகுதான் மற்ற காரியங்கள் எல்லாம்.
அன்றைய தினம், நாட்டுக் கோட்டை சத்திரத்தில் தங்க விசாலாட்சி, ஸ்வர்ணலிங்கம் தரிசனம் செய்யப்படுகின்றது.
பிரதமையன்று, ஸ்ரீ விஸ்வநாதரின் கோயிலில் லட்டுத் தேர் வைபவம் மிகவும் பிரும்மாண்டமாக இருக்கும்.
மரத்தினால் செய்யப்பட்டிருக்கும் தேரை, லட்டுக்கøக் கொண்டு அலங்காரம் செய்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். அது மட்டுமல்லாது கிலோ கணக்கில் பட்சணங்களும், பழங்களுமாகப் படைக்கப்பட்டிருக்கும். பக்தர்கள் கொண்டு வந்து சேர்பிக்கும் ஆகார வகைகள் பிரமிக்க வைப்பதாக இருக்கும். இதை “அன்னகூட்’ என்று சொல்வார்கள்.
தீபாவளி அன்று அமாவாசை சேர்ந்து வந்தால், அன்றைய தினம் நவதுர்க்கைகளில் ஒரு துர்க்கையாகப் போற்றப்படும் “காலராத்திரி’ அம்பாளின் தரிசனத்தையும் தவற விட மாட்டார்கள்.
அதுமட்டுமல்ல. அமாவாசையன்று இங்கு இருக்கும் “சங்கட் மோக்ஷ ஹனுமான்’ கோயிலில் சிறப்பு வழிபாடுகள் இருக்கும். தென் இந்தியாவில் மார்கழி மாதத்தில் வரும் மூல நட்சத்திரம் அன்று “ஹனுமத் ஜெயந்தி’ கொண்டாடப்படும். ஆனால் இங்கு தீபாவளி அமாவாசை அன்றுதான் “ஹனுமத் ஜெயந்தி’ கொண்டாடப்படுகிறது.’
“தீபாவளி அன்று காலையில் “தன்வந்திரி பவன்’-இல் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வருடத்தில் இந்த ஒரு நாள் மட்டுமே, பொது மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
தீபாவளி அமாவாசைக்குப் பிறகு பதினைந்து நாட்கள் கிழத்து வரும் பௌர்ணமி அன்று “தேவ் தீபாவளி’ என்னும் வைபவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
“தேவ் தீபாவளி’ அன்று வானலோகத்தில் இருந்து தெய்வங்கள் பூலோகத்துக்கு இறங்கு வந்து ஆசிர்வதிப்பதாக நம்பிக்கை. தேவர்கள் கார்த்திகை பௌர்ணமி தினத்தன்று தீபாவளியைக் கொண்டாடுவதாக நம்பப்படுகின்றது.
அதாவது ஸ்ரீமாஹாவிஷ்ணு வானவர், வாமன அவதாரம் முடிந்த பின்பு வைகுண்டத்துக்கு திரும்பிய நாள் என்பதாலும், ஸ்ரீ சிவபெருமான் தேவர்களைக் காக்கும் பொருட்டு “திரிபுரம்’ எரித்து திரிபுராரியான நாள் என்பதாலும், கார்த்திகை பௌர்ணமி தினமானது தெய்வங்களால் கொண்டாடப்படும். தீபாவளி திருநாள் என்று போற்றி வழிபடப்படுகின்றது.
அன்றைய தினம், ஜைனர்களுக்கும், சீக்கியர்களுக்கும் கூட முக்கியமான திருநாளாகும்.’
““தேவ் தீபாவளி’ அன்று காலையில், கங்கையில் ஸ்நானம் செய்துவிட்டு வழிபாடுகளை முடித்துக் கொள்வார்கள்.
மாலையில், கங்கையின் எல்லா படித்துறைகளிலும் தீப வரிசைகளால் (தீபம் + ஆவளி) அலங்காரம் செய்வார்கள். கங்கையிலும் தீபங்களை மிதக்க விடுவார்கள். வேத பண்டிதர்கள் மந்திரங்களை முழங்க, பண்டாக்கள் ஸ்ரீ கங்கை மாதாவிற்கு ஆரத்தி எடுப்பார்கள்.
தேவர்களை வரவேற்க தீபங்களினால் அலங்காரங்கள் செய்வதும், கங்கா மாதாவிற்கு நன்றி நவிலும் பொருட்டு வழிபாடுகள் மேற்கொள்வதையும் பார்க்கும் பொழுது காசிவாசிகளின் அதீத பக்தியை உணர முடிகிறது.
“தேவ் தீபாவளி’யன்று கங்கா மகோற்சவம் வைபவத்தை அனைவரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது கண்டுகளிக்க வேண்டும். பொதுவாக தீபாவளி அன்று தீபதானமும், பாயச தானமும் குடும்பத்துக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்!’
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam