Post by radha on Nov 12, 2012 7:22:22 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
தீபாவளியின் நோக்கம்நவம்பர் 11,2012,10:11 IST
* அன்பால் பிறரைத் திருத்தி நல்வழிப்படுத்த முடியும். அன்பால் ஒருவரை திருத்தினால் தான் நமக்குப் பெருமை.
* பாவம், புண்ணியம் என்பது ஒரு செயலைப் பொறுத்தது அல்ல. செயலாற்றுபவரின் நோக்கத்தைப் பொறுத்தது. நற்செயலாக இருந்தாலும், நோக்கம் தவறானதாக இருந்தால் அது பாவமே.
* ஆசை, கோபம், துவேஷம், பயம் ஆகியவற்றை மனதை விட்டு அடியோடு அகல வேண்டும்.
* விருப்பு வெறுப்புடன் செய்யும் எச்செயலும் பாவமானது தான். விருப்பு, வெறுப்பு இல்லாமல் செயலாற்றும் போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. "நான்' என்ற அகம்பாவம் இல்லாமல் மனிதன் தன் கடமைகளைச் செய்ய வேண்டும்.
* அறியாமை என்பது வியாதிக்குச் சமமானது. அறியாமை நம்மிடம் இருக்கும்வரை நமக்கு மகிழ்ச்சி இல்லை. அறியாமை நோய் தீர ஞானமே சிறந்த மருந்து. அந்த ஞானதீபத்தை மனதில் ஏற்றவே தீபாவளி கொண்டாடுகிறோம்.
- காஞ்சிப்பெரியவர்
»காஞ்சி பெரியவர் ----சுவாமிக்கும் புதுத்துணி அணிவியுங்க!
* தீபாவளி அன்று நாம் மட்டும் எண்ணெய் தேய்த்துக் கொள்வது, புது துணிகள் கட்டிக் கொள்வது என்பதோடு நிற்காமல்,
ஏழைகளுக்கும் எண்ணெய், சீயக்காய், புதிய துணிகள் வழங்க வேண்டும்.
கோயிலிலுள்ள அறுபத்தி மூவர் உட்பட அனைத்து மூர்த்திகளுக்கும் தைலம் சார்த்தி, புது வஸ்திரம் அணிவித்தும் கொண்டாட வேண்டும்.
* நம் ஊர்க் கோயிலில் சுவாமியின் வஸ்திரம் சுத்தமாக இருக்கிறதா என்பதில் கவனம் செலுத்திவிட்டால், நம் மனசின் அழுக்கு போய்விடும்.
* தீபாவளியன்று துணியும், உடம்பும், வீடும் புதுசாக இருந்தால் போதாது. இதற்கும் மேலாக நம் மனமும்
புதிதாக அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்.
குணமும், உடலும் இணைந்து ஒன்றை ஒன்று தூய்மைப்படுத்திக் கொள்ளும் வகையில் செயல்களைச் செய்ய வேண்டும்.
* தினமும் மனதாலும், வாக்காலும், உடம்பாலும்,
பணத்தாலும் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். இதற்கு நம்மிடமுள்ள பணம் எல்லாம் எப்போதும்
நம்முடையதல்ல என்ற நினைவு இருக்க வேண்டும்.
-காஞ்சிப்பெரியவர்
( Tomorrow தீபாவளி
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
தீபாவளியின் நோக்கம்நவம்பர் 11,2012,10:11 IST
* அன்பால் பிறரைத் திருத்தி நல்வழிப்படுத்த முடியும். அன்பால் ஒருவரை திருத்தினால் தான் நமக்குப் பெருமை.
* பாவம், புண்ணியம் என்பது ஒரு செயலைப் பொறுத்தது அல்ல. செயலாற்றுபவரின் நோக்கத்தைப் பொறுத்தது. நற்செயலாக இருந்தாலும், நோக்கம் தவறானதாக இருந்தால் அது பாவமே.
* ஆசை, கோபம், துவேஷம், பயம் ஆகியவற்றை மனதை விட்டு அடியோடு அகல வேண்டும்.
* விருப்பு வெறுப்புடன் செய்யும் எச்செயலும் பாவமானது தான். விருப்பு, வெறுப்பு இல்லாமல் செயலாற்றும் போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. "நான்' என்ற அகம்பாவம் இல்லாமல் மனிதன் தன் கடமைகளைச் செய்ய வேண்டும்.
* அறியாமை என்பது வியாதிக்குச் சமமானது. அறியாமை நம்மிடம் இருக்கும்வரை நமக்கு மகிழ்ச்சி இல்லை. அறியாமை நோய் தீர ஞானமே சிறந்த மருந்து. அந்த ஞானதீபத்தை மனதில் ஏற்றவே தீபாவளி கொண்டாடுகிறோம்.
- காஞ்சிப்பெரியவர்
»காஞ்சி பெரியவர் ----சுவாமிக்கும் புதுத்துணி அணிவியுங்க!
* தீபாவளி அன்று நாம் மட்டும் எண்ணெய் தேய்த்துக் கொள்வது, புது துணிகள் கட்டிக் கொள்வது என்பதோடு நிற்காமல்,
ஏழைகளுக்கும் எண்ணெய், சீயக்காய், புதிய துணிகள் வழங்க வேண்டும்.
கோயிலிலுள்ள அறுபத்தி மூவர் உட்பட அனைத்து மூர்த்திகளுக்கும் தைலம் சார்த்தி, புது வஸ்திரம் அணிவித்தும் கொண்டாட வேண்டும்.
* நம் ஊர்க் கோயிலில் சுவாமியின் வஸ்திரம் சுத்தமாக இருக்கிறதா என்பதில் கவனம் செலுத்திவிட்டால், நம் மனசின் அழுக்கு போய்விடும்.
* தீபாவளியன்று துணியும், உடம்பும், வீடும் புதுசாக இருந்தால் போதாது. இதற்கும் மேலாக நம் மனமும்
புதிதாக அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்.
குணமும், உடலும் இணைந்து ஒன்றை ஒன்று தூய்மைப்படுத்திக் கொள்ளும் வகையில் செயல்களைச் செய்ய வேண்டும்.
* தினமும் மனதாலும், வாக்காலும், உடம்பாலும்,
பணத்தாலும் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். இதற்கு நம்மிடமுள்ள பணம் எல்லாம் எப்போதும்
நம்முடையதல்ல என்ற நினைவு இருக்க வேண்டும்.
-காஞ்சிப்பெரியவர்
( Tomorrow தீபாவளி
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam