Post by Sumi on Oct 24, 2012 6:44:13 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
பொதுவான தர்மங்கள்
என் காரியம்
Part 10 of 11
இதற்கான சில டிரஸ்ட்கள் இருக்கின்றன. பலர் தனித்தனியாக பூதானம் செய்திருக்கிறார்கள். விநோபா மாதிரி பூதானம் வாங்கினேன். இப்போது உச்ச வரம்புகள் சட்டங்கள் வந்துவிட்டன. இனி நில உரிமைகள் எப்படியிருக்கும் என்று சொல்வதற்கில்லை.. அதனால்தான் ஸம்பத்திதான் கேட்கிறேன்.
அதாவது ஒவ்வொருவரும் மாஸா மாஸம் தங்கள் ஜன்ம நட்க்ஷத்திரத்தன்று என்னை நினைத்துக் கொண்டு (நான் தானே கொடுக்கச் சொல்லிக் கேட்கிறேன்) ஒரு ரூபாயை ஒரு உண்டியில் போட்டுவிட வேண்டும். ஒரு வருஷம் ஆனதும் இந்த 12 ரூபாயை வேத ரக்ஷண நிதிக்கு அநுப்பிவிட வேண்டும். இப்படி அனுப்புகிறவர்களுக்கு இங்கே மடத்தில் நடக்கிற பூஜைப் பிரசாதம் விபூதி, குங்குமம், மந்திராக்ஷதை மாஸா மாஸம் அவர்கள் ஜன்ம நக்ஷத்திரத்தன்று அனுப்பி வைக்கப்படும். வருஷந்தோரும் இந்த தர்மத்தைப் புதுப்பித்துக் கொண்டிருந்தால், சந்திரமெனலீசுவரப் பிரசாதமும் நிற்காமல் அகத்தைத் தேடி வந்துகொண்டிருக்கும். எத்தனையோ செலவு செய்கிறீர்கள். வரிகள் (tax) கொடுக்கிறீர்கள். இது நான் போட்டிருக்கிற டாக்ஸ். மாஸம் ஒரு ரூபாய் எனக்காகக் கொடுக்க வேண்டும். எல்லோரும் அப்படிச் செய்தால் பல துளி பெறு வெள்ளம் என்று வேத ரக்ஷணத்துக்கும் பெரிய பலம் கிடைக்கும்.
வேதம் ஏன் இருக்க வேண்டும் என்றால், முதலில் அந்த மந்திர சப்தம் அதிலுள்ள யக்ஞாதி கர்மாக்கள் லோகத்தில் இருந்து கொண்டிருந்தாலே சகலருக்கும் பெரிய க்ஷேமம். இதனால் மழை, தன தானிய சுபிக்ஷம் உண்டாவதோடு ஜனங்களின் எண்ணங்களும் உத்தமமானதாக இருக்கும். இரண்டாவதாக உலகம் முழுவதற்குமான ஒரு மதமாக வைதிகமே இருந்திருக்கிறது என்பது சகல தேசத்தவருக்கும் தெரிந்து, இதனாலேயே ஒரு ஒற்றுமை, சாந்தி ஏற்பட வேண்டுமானால், நம் தேசத்தில் வேதத்துக்கென்றே வாழ்க்கையை அர்ப்பணித்த ( dedicate ) ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இப்படியாக இன்றைக்கும் என்றைக்கும் நம் தேசத்துக்கு மட்டுமின்றி லோகம் முழுவதற்கும் சுபிக்ஷத்தையும் ஆத்ம சாந்தியையும் உண்டாக்குவதற்காகத்தான், வேத ரக்ஷணத்தை அதி முக்கியமாகச் சொல்லி வருகிறேன்.
வேதம் படிக்காமல் அடுத்த தலைமுறையில் ஒரு பிராம்மணன்கூட இருக்கக்கூடாது. அதட்டி மற்றவர்களை அதிகாரம் செய்வதற்கான பிராம்மணன் இருக்க வேண்டும் என்று சொல்லவேயில்லை. நம் தேசம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ஒன்றாகியிருப்பதாக, இவனிடம் வந்திருக்கிற ஆதிமூலமாக தர்மத்தை இவன் காப்பாற்றிக் கொடுக்க வேண்டும் என்றே சொல்கிறேன்.
(to be continued...)
பொதுவான தர்மங்கள்
என் காரியம்
Part 10 of 11
இதற்கான சில டிரஸ்ட்கள் இருக்கின்றன. பலர் தனித்தனியாக பூதானம் செய்திருக்கிறார்கள். விநோபா மாதிரி பூதானம் வாங்கினேன். இப்போது உச்ச வரம்புகள் சட்டங்கள் வந்துவிட்டன. இனி நில உரிமைகள் எப்படியிருக்கும் என்று சொல்வதற்கில்லை.. அதனால்தான் ஸம்பத்திதான் கேட்கிறேன்.
அதாவது ஒவ்வொருவரும் மாஸா மாஸம் தங்கள் ஜன்ம நட்க்ஷத்திரத்தன்று என்னை நினைத்துக் கொண்டு (நான் தானே கொடுக்கச் சொல்லிக் கேட்கிறேன்) ஒரு ரூபாயை ஒரு உண்டியில் போட்டுவிட வேண்டும். ஒரு வருஷம் ஆனதும் இந்த 12 ரூபாயை வேத ரக்ஷண நிதிக்கு அநுப்பிவிட வேண்டும். இப்படி அனுப்புகிறவர்களுக்கு இங்கே மடத்தில் நடக்கிற பூஜைப் பிரசாதம் விபூதி, குங்குமம், மந்திராக்ஷதை மாஸா மாஸம் அவர்கள் ஜன்ம நக்ஷத்திரத்தன்று அனுப்பி வைக்கப்படும். வருஷந்தோரும் இந்த தர்மத்தைப் புதுப்பித்துக் கொண்டிருந்தால், சந்திரமெனலீசுவரப் பிரசாதமும் நிற்காமல் அகத்தைத் தேடி வந்துகொண்டிருக்கும். எத்தனையோ செலவு செய்கிறீர்கள். வரிகள் (tax) கொடுக்கிறீர்கள். இது நான் போட்டிருக்கிற டாக்ஸ். மாஸம் ஒரு ரூபாய் எனக்காகக் கொடுக்க வேண்டும். எல்லோரும் அப்படிச் செய்தால் பல துளி பெறு வெள்ளம் என்று வேத ரக்ஷணத்துக்கும் பெரிய பலம் கிடைக்கும்.
வேதம் ஏன் இருக்க வேண்டும் என்றால், முதலில் அந்த மந்திர சப்தம் அதிலுள்ள யக்ஞாதி கர்மாக்கள் லோகத்தில் இருந்து கொண்டிருந்தாலே சகலருக்கும் பெரிய க்ஷேமம். இதனால் மழை, தன தானிய சுபிக்ஷம் உண்டாவதோடு ஜனங்களின் எண்ணங்களும் உத்தமமானதாக இருக்கும். இரண்டாவதாக உலகம் முழுவதற்குமான ஒரு மதமாக வைதிகமே இருந்திருக்கிறது என்பது சகல தேசத்தவருக்கும் தெரிந்து, இதனாலேயே ஒரு ஒற்றுமை, சாந்தி ஏற்பட வேண்டுமானால், நம் தேசத்தில் வேதத்துக்கென்றே வாழ்க்கையை அர்ப்பணித்த ( dedicate ) ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இப்படியாக இன்றைக்கும் என்றைக்கும் நம் தேசத்துக்கு மட்டுமின்றி லோகம் முழுவதற்கும் சுபிக்ஷத்தையும் ஆத்ம சாந்தியையும் உண்டாக்குவதற்காகத்தான், வேத ரக்ஷணத்தை அதி முக்கியமாகச் சொல்லி வருகிறேன்.
வேதம் படிக்காமல் அடுத்த தலைமுறையில் ஒரு பிராம்மணன்கூட இருக்கக்கூடாது. அதட்டி மற்றவர்களை அதிகாரம் செய்வதற்கான பிராம்மணன் இருக்க வேண்டும் என்று சொல்லவேயில்லை. நம் தேசம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ஒன்றாகியிருப்பதாக, இவனிடம் வந்திருக்கிற ஆதிமூலமாக தர்மத்தை இவன் காப்பாற்றிக் கொடுக்க வேண்டும் என்றே சொல்கிறேன்.
(to be continued...)