Post by Sumi on Oct 22, 2012 8:31:03 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
பொதுவான தர்மங்கள்
என் காரியம்
Part 8 of 11
இப்படியெல்லாம் யோசித்துக் கடைசீயில் கேட்பவர்கள் காரியத்தில் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அது அவர்கள் விஷயம். அவர்களுக்குப் பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி, நம் கடமை, அப்பா இது இதுகள் ஆத்ம சிரோயசுக்கும் லோக க்ஷேமத்துககுமம் நல்லது. இவற்றைச் செய்ய உன்னாலான பிரயத்தனங்களைப் பண்ணிப் பாரப்பா என்று சொல்வதுதான், இவ்விஷயத்தைத் திரும்பத் திரும்பக் காதில் போடுவதுதான் நம் டியூட்டி (கடமை) என்ற முடிவிற்கு வந்தேன். இப்படி வெறும் வாய் வார்த்தையாக சொல்லுவதற்குமேல் நான் ஒன்றும் தண்டித்து, சி¬க்ஷ பண்ண முடியாது. எல்லாம் ஒன்ராகிவிட வேண்டும் என்கிற காட்சிகளில்கூட ஒழுக்கக் குறைவுக்கு நடவடிக்கை (disciplinary action) என்று எடுத்து, சிலரைத் தீண்டாதார் மாதிரி வெளியே தள்ளி விடுகிறார்களே (expel) அம்மாதிரி பிரஷ்டம் (excommunicate) பண்ண எனக்கு அதிகாரமில்லை. அத்தனை அதிகாரம் ரைட் நான் கேட்கவும் இல்லை. காதில் போடுவதுதான் என்னால் முடிந்ததைச் செய்யாமலிருக்ககூடாது என்றே வந்திருந்தேன்.
எங்கேயோ யாரோ ஒருத்தர் நான் சொல்வதை எடுத்துக் கொண்டு ஆரம்பித்துவிட்டால் போதும். அதுவே துளித்துளியாக வளர்ந்துவிடும். கொஞ்சம்கூட நியாயமில்லாத இயக்கங்களையெல்லாம் பத்துபேர் கட்டுப்பாட்டில் ஆரம்பித்து மகாபெரிசாக வளர்த்துவிடவில்லையா. நல்லதற்கு இப்படிப் பத்துப் பத்துப்பேர் சேர்ந்தால் போதும்.
அப்படிப்பட்டவர்கள் கிடைப்பார்கள் என்று நம்பிக் கொண்டுதான் நானும் விடாமல் சொல்கிறேன். உங்களைவிடமெல்லாம் நான் ரொம்பவும் அதிருப்திப்படுத்துவதாக நினைத்துத் துக்கப்பட வேண்டாம். நவீன வாழ்க்கை முறையின் சிக்கல், கோளாறு எனக்குத் தெரியாமலில்லை. அதிலே மாட்டிக் கொண்டால், விடுபடுவதில் உள்ள சிரமம் தெரிகிறது. இத்தனைக்கும் நடுவில் அங்கங்கே கும்பாபிஷேகம், பஜனை, பிரவசனம் என்று நீங்கள் நிறைய ஏற்பாடு செய்வதைப் பார்த்தால் இவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் சந்தோஷமாகவே இருக்கிறது. இவற்றைப் பார்த்தே, இவை எல்லாவற்றுக்கும் எது ஜீவாதாரமோ, உயிர் நிலையோ அந்த வேதரக்ஷண தர்மத்தை எடுத்துச் சொல்லலாம் என்று எனக்கே ஒரு நம்பிக்கை, தெம்பு வந்திருப்பதால்தான் இதையெல்லாம் சொல்கிறேன். சாஸ்திர விரோதமான தப்புகளுக்கு இப்போது நிறைய இடமிருந்தாலும், க்ஷேமத்துக்கான அறிகுறிகளையும் அங்கங்கே பார்க்கிறேன். எல்லாம் போய்விட்டது. பாக்கியிருப்பதும் போய்விடும் என்று அழாமல் வளர்த்து வருகிற இந்த நல்ல அம்சங்களை மேலும் விருத்தி செய்து, வளர்க்க வேண்டியதையும் எடுத்துச் சொல்லி வருவதுதான் முறை. அப்படிச் செய்தால் தப்பு வழியில் போகிறவர்களுக்கும் நாளடைவில் க்ஷேம வழியில் புத்தி வரும்.
(to be continued...)
பொதுவான தர்மங்கள்
என் காரியம்
Part 8 of 11
இப்படியெல்லாம் யோசித்துக் கடைசீயில் கேட்பவர்கள் காரியத்தில் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அது அவர்கள் விஷயம். அவர்களுக்குப் பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி, நம் கடமை, அப்பா இது இதுகள் ஆத்ம சிரோயசுக்கும் லோக க்ஷேமத்துககுமம் நல்லது. இவற்றைச் செய்ய உன்னாலான பிரயத்தனங்களைப் பண்ணிப் பாரப்பா என்று சொல்வதுதான், இவ்விஷயத்தைத் திரும்பத் திரும்பக் காதில் போடுவதுதான் நம் டியூட்டி (கடமை) என்ற முடிவிற்கு வந்தேன். இப்படி வெறும் வாய் வார்த்தையாக சொல்லுவதற்குமேல் நான் ஒன்றும் தண்டித்து, சி¬க்ஷ பண்ண முடியாது. எல்லாம் ஒன்ராகிவிட வேண்டும் என்கிற காட்சிகளில்கூட ஒழுக்கக் குறைவுக்கு நடவடிக்கை (disciplinary action) என்று எடுத்து, சிலரைத் தீண்டாதார் மாதிரி வெளியே தள்ளி விடுகிறார்களே (expel) அம்மாதிரி பிரஷ்டம் (excommunicate) பண்ண எனக்கு அதிகாரமில்லை. அத்தனை அதிகாரம் ரைட் நான் கேட்கவும் இல்லை. காதில் போடுவதுதான் என்னால் முடிந்ததைச் செய்யாமலிருக்ககூடாது என்றே வந்திருந்தேன்.
எங்கேயோ யாரோ ஒருத்தர் நான் சொல்வதை எடுத்துக் கொண்டு ஆரம்பித்துவிட்டால் போதும். அதுவே துளித்துளியாக வளர்ந்துவிடும். கொஞ்சம்கூட நியாயமில்லாத இயக்கங்களையெல்லாம் பத்துபேர் கட்டுப்பாட்டில் ஆரம்பித்து மகாபெரிசாக வளர்த்துவிடவில்லையா. நல்லதற்கு இப்படிப் பத்துப் பத்துப்பேர் சேர்ந்தால் போதும்.
அப்படிப்பட்டவர்கள் கிடைப்பார்கள் என்று நம்பிக் கொண்டுதான் நானும் விடாமல் சொல்கிறேன். உங்களைவிடமெல்லாம் நான் ரொம்பவும் அதிருப்திப்படுத்துவதாக நினைத்துத் துக்கப்பட வேண்டாம். நவீன வாழ்க்கை முறையின் சிக்கல், கோளாறு எனக்குத் தெரியாமலில்லை. அதிலே மாட்டிக் கொண்டால், விடுபடுவதில் உள்ள சிரமம் தெரிகிறது. இத்தனைக்கும் நடுவில் அங்கங்கே கும்பாபிஷேகம், பஜனை, பிரவசனம் என்று நீங்கள் நிறைய ஏற்பாடு செய்வதைப் பார்த்தால் இவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் சந்தோஷமாகவே இருக்கிறது. இவற்றைப் பார்த்தே, இவை எல்லாவற்றுக்கும் எது ஜீவாதாரமோ, உயிர் நிலையோ அந்த வேதரக்ஷண தர்மத்தை எடுத்துச் சொல்லலாம் என்று எனக்கே ஒரு நம்பிக்கை, தெம்பு வந்திருப்பதால்தான் இதையெல்லாம் சொல்கிறேன். சாஸ்திர விரோதமான தப்புகளுக்கு இப்போது நிறைய இடமிருந்தாலும், க்ஷேமத்துக்கான அறிகுறிகளையும் அங்கங்கே பார்க்கிறேன். எல்லாம் போய்விட்டது. பாக்கியிருப்பதும் போய்விடும் என்று அழாமல் வளர்த்து வருகிற இந்த நல்ல அம்சங்களை மேலும் விருத்தி செய்து, வளர்க்க வேண்டியதையும் எடுத்துச் சொல்லி வருவதுதான் முறை. அப்படிச் செய்தால் தப்பு வழியில் போகிறவர்களுக்கும் நாளடைவில் க்ஷேம வழியில் புத்தி வரும்.
(to be continued...)