Post by Sumi on Oct 21, 2012 10:19:53 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
பொதுவான தர்மங்கள்
என் காரியம்
Part 7 of 11
நான் கிராக்கி செய்தது பலிக்கவில்லை. நடை உடை பாவனைகளை மாற்றிக் கொள்ள இஷ்டம் இல்லையோ? அல்லது துணிச்சல் இல்லையோ. ஆனால் என்னை வருத்தி வருத்திக் கூப்பிடுவதும் நிற்கவில்லை. கடைசீயில், நாம் சொன்னதை செய்யாவிட்டாலும்கூட இவர்கள் நம்மிடம் ஒரு பிரியம், அபிமானம், மரியாதை இருக்கிறது என்றுதான் அர்த்தம். சரி இவர்கள் ஆசைக்குத்தான் விட்டுக் கொடுத்து, பட்டணத்துக்குப் போகலாமே. அங்கேபோய் இவர்களுக்கு நடுவிலேயே உட்கார்ந்து கொண்டு நம் ஆசையைத் திரும்பத் திரும்பச் சொல்லி ஏதாவது துளி பலிக்கிறதா என்று பார்ப்போமே. மடம் என்று ஒரு ஸ்தாபனம் (institution) இருப்பதே ஜனங்களின் தோஷங்களுக்கு நிவிருத்தி சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்துவதற்குத்தானே. நமக்குக் குறையாகத் தோன்றுவதை, அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதானே நம் கடமை. என்று முடிவு பண்ணினேன். கிராக்கி பண்ணிக் கொண்டதை விட்டுக் கொண்டு மறுபடி பட்டணத்துக்குப் போக ஆரம்பித்தேன்.
ஜனங்கள் ரொம்ப சந்தோஷத்துடன் எனக்கு உபச்சாரம் பண்ணி, பேட்டைக்குப் பேட்டை கொட்டகை, பவனி எல்லாம் செய்கிறபோது, அவர்கள் மனசைப் புண்படுத்துகிற மாதிரி தோஷங்களைச் சொல்லலாமா?. அவரவருக்கும் வாழ்க்கையில் எத்தனையோ சிரமங்கள், இப்போது லோகம் முழுதும் இருக்கிற தத்தளிப்பில் ஒவ்வொருவனுக்கும் உள்ள கஷ்டங்களுக்கு எல்லையே இல்லை. இதன் நடுவே கொஞ்சம் கஷ்டத்தை மறந்திருக்கலாம் என்று இங்கே வருகிறார்கள். அவர்களிடம் இது தப்பு, அது தப்பு என்று சொல்லி மனஸைப் புன்படுத்தலாமா?. அல்லது ஏதோ வந்தவர்களெல்லாம் சந்தோஷப்படுகிறமாதிரியே (பேச்சுக்) கச்சேரி செய்துவிட்டுப் போய்விடலாமா.?
அவர்கள் வாழ்க்கைக்கு, சமூக க்ஷேமத்துக்கு நல்லதாக எதையும் சொல்லாமல், தாற்காலிக சந்தோஷமாகக் கச்சேரி செய்வதென்றால் அதற்கெற்ற சங்கீதக்காரர்கள் இருக்கிறார்கள். ஆகையால் என்னைக் கச்சேரிக்கு கூப்பிட வேண்டாம். நான் பணத்துக்குக் கச்சேரி செய்கிறேன் என்றால், அப்போதைக்கு சந்தோஷப்படுத்திவிட்டுத்தான் போக வேண்டும். ஆனால் பணம் வாங்க நான் வரவில்லை. மடத்துக்கு இவ்வளவு பணம் தேவையில்லை. அதிகமாகப் பணம் வந்தால் இன்னும் அதிகமாக ஸந்தர்பணை, ஸதஸ் என்று நடத்தி உடனே செலவாகித்தான் போகிறது. எனவே இவ்வளவு பணம் இல்லாமலே கிராமங்களில் சுற்றிக் கொண்டு மடத்தை நடத்திவிடலாம். ஆனால் ஜனசமூகம் முழுவதற்கும் நல்லதை எடுத்துச் சொல்லப் பிரயத்தனம் செய்ய வேண்டும். மடத்தின் குறிக்கோள் ( purpose ) இதுதானே.
(to be continued...)
பொதுவான தர்மங்கள்
என் காரியம்
Part 7 of 11
நான் கிராக்கி செய்தது பலிக்கவில்லை. நடை உடை பாவனைகளை மாற்றிக் கொள்ள இஷ்டம் இல்லையோ? அல்லது துணிச்சல் இல்லையோ. ஆனால் என்னை வருத்தி வருத்திக் கூப்பிடுவதும் நிற்கவில்லை. கடைசீயில், நாம் சொன்னதை செய்யாவிட்டாலும்கூட இவர்கள் நம்மிடம் ஒரு பிரியம், அபிமானம், மரியாதை இருக்கிறது என்றுதான் அர்த்தம். சரி இவர்கள் ஆசைக்குத்தான் விட்டுக் கொடுத்து, பட்டணத்துக்குப் போகலாமே. அங்கேபோய் இவர்களுக்கு நடுவிலேயே உட்கார்ந்து கொண்டு நம் ஆசையைத் திரும்பத் திரும்பச் சொல்லி ஏதாவது துளி பலிக்கிறதா என்று பார்ப்போமே. மடம் என்று ஒரு ஸ்தாபனம் (institution) இருப்பதே ஜனங்களின் தோஷங்களுக்கு நிவிருத்தி சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்துவதற்குத்தானே. நமக்குக் குறையாகத் தோன்றுவதை, அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதானே நம் கடமை. என்று முடிவு பண்ணினேன். கிராக்கி பண்ணிக் கொண்டதை விட்டுக் கொண்டு மறுபடி பட்டணத்துக்குப் போக ஆரம்பித்தேன்.
ஜனங்கள் ரொம்ப சந்தோஷத்துடன் எனக்கு உபச்சாரம் பண்ணி, பேட்டைக்குப் பேட்டை கொட்டகை, பவனி எல்லாம் செய்கிறபோது, அவர்கள் மனசைப் புண்படுத்துகிற மாதிரி தோஷங்களைச் சொல்லலாமா?. அவரவருக்கும் வாழ்க்கையில் எத்தனையோ சிரமங்கள், இப்போது லோகம் முழுதும் இருக்கிற தத்தளிப்பில் ஒவ்வொருவனுக்கும் உள்ள கஷ்டங்களுக்கு எல்லையே இல்லை. இதன் நடுவே கொஞ்சம் கஷ்டத்தை மறந்திருக்கலாம் என்று இங்கே வருகிறார்கள். அவர்களிடம் இது தப்பு, அது தப்பு என்று சொல்லி மனஸைப் புன்படுத்தலாமா?. அல்லது ஏதோ வந்தவர்களெல்லாம் சந்தோஷப்படுகிறமாதிரியே (பேச்சுக்) கச்சேரி செய்துவிட்டுப் போய்விடலாமா.?
அவர்கள் வாழ்க்கைக்கு, சமூக க்ஷேமத்துக்கு நல்லதாக எதையும் சொல்லாமல், தாற்காலிக சந்தோஷமாகக் கச்சேரி செய்வதென்றால் அதற்கெற்ற சங்கீதக்காரர்கள் இருக்கிறார்கள். ஆகையால் என்னைக் கச்சேரிக்கு கூப்பிட வேண்டாம். நான் பணத்துக்குக் கச்சேரி செய்கிறேன் என்றால், அப்போதைக்கு சந்தோஷப்படுத்திவிட்டுத்தான் போக வேண்டும். ஆனால் பணம் வாங்க நான் வரவில்லை. மடத்துக்கு இவ்வளவு பணம் தேவையில்லை. அதிகமாகப் பணம் வந்தால் இன்னும் அதிகமாக ஸந்தர்பணை, ஸதஸ் என்று நடத்தி உடனே செலவாகித்தான் போகிறது. எனவே இவ்வளவு பணம் இல்லாமலே கிராமங்களில் சுற்றிக் கொண்டு மடத்தை நடத்திவிடலாம். ஆனால் ஜனசமூகம் முழுவதற்கும் நல்லதை எடுத்துச் சொல்லப் பிரயத்தனம் செய்ய வேண்டும். மடத்தின் குறிக்கோள் ( purpose ) இதுதானே.
(to be continued...)